அன்னையர்தினத்தொடர்வு 6
பிப்ரவரி 22, 2021 at 11:09 முப பின்னூட்டமொன்றை இடுக
ஓரளவு வயதிற்குப் பின்னர் பிள்ளைகளுக்கு அவரவர்களின் நிலையும் மாறி விடுகிறது. சொந்த விருப்பங்கள். எதிற்கும் குணம் வந்து விடுகிறது. எல்லா காலத்திலும் அது ஒரே மாதிரிதான் போலும்! ஆராவது பகுதி இது.பாருங்கள். படியுங்கள். அன்புடன்
எல்லோரும் நல்லபடியாக உடல் நலம் தேறினார்கள். வீட்டில்
சுபகாரியங்கள் செய்ய வேண்டும். யாவருமாகத் திருப்பதி போய்
பூணூல் நடத்தி வருவதென்று முடிவாகி, நல்ல நாள் பார்த்து
திருப்பதியில் , உற்றார் உறவினர்கள் சூழ நல்ல காரியங்களும் நன்றாக
நடந்தது.
நித்ய அனுஷ்டானங்கள் யாவும் கடை பிடிக்கும் நேரத்தில் ஒரு நாள்
பார்த்தால் பிள்ளை தலைக் குடுமியைக் கத்தரித்துக்கொண்டு வந்து
நிற்கிரான்.
கிராப்பு வைத்துக்கொள்ள. வீட்டில் பூகம்பம்தான் நடக்கப்போகிறது.
கூடப் படிக்கும் சிநேகிதர்கள் யாருக்கும் குடுமி கிடையாது.எல்லாரும்
கிராப்புக்கு மாறியவர்களல்ல. குடுமி வழக்கமே இல்லாதவர்கள்.
அவ்வளவு பிள்ளைகள் மத்தியில் உடன் படிக்கும் பிள்ளைகள் அளித்த
தைரியம். இவன்கையால் எனக்கு எதுவுமே
வேண்டாம்.
சொல்லாமல் எனக்குப் பிடிக்காத காரியம் செய்தவன் என் பிள்ளையே
இல்லை. எதிரில் வரக்கூடாது போகட்டும் வீட்டை விhttps://chollukireen.wordpress.com/wp-admin/ட்டு.
எனக்கு க் கொள்ளிகூட இவன் போடக்கூடாது.
இப்படி அப்பா பிள்ளை போர்க்கொடி.
ஒருவர் அறியாமல் ஒருவருக்கு எல்லாம் செய்து யுத்தகளத்தில்
வெகுநாள்.
ஏதோ தகாத காரியம் செய்து விட்டு வந்த மாதிரி அப்பாவின் கோபம்.
எல்லோரும் உடந்தை என்ற ஸந்தேகம். எல்லோரும் எதற்கும் மௌனம்.
ஏதாவது பேசினாலும் கடைசியில் வந்து நிற்கும் , இந்த க்ராப் தலையன்
எனக்கு ஏதும் செய்ய வேண்டாம் என்ற பேச்சே முடிவாக வரும் வார்த்தை.
காலங்கள் இரண்டொரு வருஷங்கள் ஓடியது.
பெண் குழந்தைக்கு அடிக்கடி, ஜுரம்,கபம்,இருமல் என்று தொடர்ந்து வந்து
கொண்டே இருந்தது.
ஆஸ்த்மாவா இருக்குமோ சங்கை.
View original post 420 more words
Entry filed under: Uncategorized.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed