சுரைக்காய் கோப்தா
பிப்ரவரி 25, 2021 at 11:19 முப பின்னூட்டமொன்றை இடுக
பத்து வருஷங்களுக்குமுன் ஜெனிவாவில் என் மருமகள் செய்தது இது. வேண்டாதவர்கள் பூண்டை நீக்கிவிட்டுச் செய்யுங்கள். அன்புடன்
வேண்டியவைகள்
சுரைக்காய்—திட்டமாக –1
மிளகாய்ப்பொடி—1 டீஸ்பூன்
தனியாப்பொடி—1 டீஸ்பூன்
மஞ்சள்ப் பொடி—அரை டீஸ்பூன்
புதியதாய்ப் பொடிக்க
லவங்கம்—4
மிளகு—–அரை டீஸ்பூன்
சீரகம்—-1 டீஸ்பூன்
அரைக்க
வெங்காயம்—2அல்லது 3
இஞ்சி—-சிறியதுண்டு
பூண்டு இதழ்—4
பழுத்தத் தக்காளி—3 திட்டமான சைஸ்
ருசிக்கு உப்பு
கடலைமாவு—கால்கப். வேண்டிய அளவு உபயோகிக்க
மாவு மீதி இருக்கும்.
எண்ணெய்—-பொறிப்பதற்கு வேண்டிய அளவு
பிரிஞ்சி இலை —சிறியது ஒன்று.
செய்முறை
சுரைக்காயைத் தோல் சீவிக் கொப்பரைத் துருவியில்த்
துருவலாகத் துருவிக் கொள்ளவும்.
சற்று நீருடன் கூடியதாகத் துருவல் இருக்கும்.
வெங்காயம், பூண்டு. இஞ்சியை நறுக்கி மிக்ஸியில் தண்ணீர்
விடாமல் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
தக்காளியையும் தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
மிளகு.சீரகம், லவங்கத்தைப் பொடித்துக் கொள்ளவும்.
சுரைக்காய்த் துருவலுடன் திட்டமாகக் கடலைமாவைச் சேர்த்துக்
கலக்கவும்.
துருவலே தண்ணீருடன் இருப்பதால் தண்ணீர் அவசியமில்லை.
வடைமாவு மாதிரி சற்றுத் தளரவே மாவு இருக்க வேண்டும்.
அடுத்து எண்ணெயைக் காய வைத்து கலவையை சிறிய வடை
போலவோ, பகோடாக்கள் மாதிரியோ போட்டுபொறித்தெடுக்கவும்.
இரண்டு பக்கமும் சிவக்க வேகும்படி நிதானமாகத் திருப்பிவிட்டு
எடுக்கவும்.
இதுவே கோப்தாவின் முதல்ப்படி.
அகலமான நான்ஸ்டிக் வாணலியில் 5,6 ஸ்பூன் எண்ணெயைச்
சூடாக்கி பிரிஞ்சி இலையுடன் ,வெங்காய விழுதைச் சேர்த்து
வதக்கவும்.
வெங்காயம் நிறம் மாறி நன்குவதங்கியபின்பொடிகளைச்சேர்த்து
பிரட்டி தக்காளி விழுதைச் சேர்க்கவும்.
உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.
எண்ணெய் பிறிந்து கலவை நன்றாகக் …
View original post 51 more words
Entry filed under: Uncategorized.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed