அன்னையர்தினம். 11
மார்ச் 29, 2021 at 11:18 முப பின்னூட்டமொன்றை இடுக
அம்மாவின் அனுபவங்கள் இது ஒரு மாதிரி. முடிகிரதோ முடியவில்லையோ ஏதோ முயற்சிகள்.படியுங்கள்.அன்புடன்
வேளைக்கீரை அம்மாவின் மனதில் புகுந்து விட்டது.
ஊரிலுள்ளவர்கள்கூடவேளைக்கீரை விளைச்சலை நம்புபவர்கள்.
ஏதோ பார்த்துக்கொண்டே இருந்தால்தானே டக்குனு ஏதாவது வரும்.
வேளையும் வரும்,ப்ராப்தமும் வரு்ம் மனதில் இப்படி தோன்றியது.
அம்மாவிற்கு ஊரிலுள்ள பிள்ளைகளெல்லாம் மனதின் தணிக்கைக்
குழுவில் வந்து போயினர்.அடுத்தத் தெரு பூரா பணக்காரர்கள்.
ஜிவி மாமா அந்தத் தெருவின் பெரியமனிதர். யாவரும் சுலபமாக அணுகிப்
பேசக் கூடியவர். சின்னச் சின்ன வைத்தியத்திற்கு பேர்போனவர்.
குறைகளைச் சொன்னாலும் தீர்த்து வைக்கக் கூடியவர். ஸரி
அவரையணுகிதான் தீர்வு காணவேண்டும். அவர் உறவிலும்
இரண்டொரு பிள்ளைகள் ஞாபகத்திற்கு வந்தது. ஸாயங்காலம் வாசத்
திண்ணையில், ஈஸிசேரில் படுத்திருக்கும் ஸமயம் போவதென்று
தீர்மானமாகியது.
புடவையை இழுத்து தலைப்பை ஸரியாக மடித்து சொருகிக் கொண்டு
ஒழுங்காக தலைப்பால் போர்த்திக்கொண்டு, வாயில்படி ஏறும் போதே
வாம்மா,வாவா.
எப்படி இருக்கேள் இரண்டுபேரும். அவரே வந்து விடுகிறார்.
இல்லே உங்களைப் பார்க்கத்தான் வந்தேன்.
உள்ளே போகலாம் வா,வா.
இல்லே இங்கேயே திண்ணையிலே உட்காரலாம்.
அதிகமாக பேச ஒன்றும் இல்லே.
ஸரிஸரி.உட்காரு. ராஜு மாமிக்கு தீர்த்தம் கொண்டுவா.
என்னம்மா யாருக்கானும் உடம்புகிடம்பு ஸரியில்லையா?
அதெல்லாம் ஒண்ணுமில்லே. எங்காத்திலே இரண்டு பொண் பசங்க
ஓ. தெரியுமே அம்மா. புத்திசாலிப் பொண்கள்
கலியாணம் பண்ணணுமே. அவர் ஒன்றும் முயற்சியே எடுக்கவில்லை.
பையன் போன பின் அவர் மாதிரியே போயிடுத்து.
அதிகம் பேசினாலும் கோபம் வரது.
விடும்மா. அதெல்லாம் ஸுபாவங்கள். தெரிந்த விஷயம் தானே.
நீங்க ஏதாவது…
View original post 406 more words
Entry filed under: Uncategorized.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed