அன்னையர் தினப் பதிவு—24
ஜூன் 28, 2021 at 11:40 முப பின்னூட்டமொன்றை இடுக
அம்மாவின் நினைவான பதிவுகளும் வேறு வழியாகத் திரும்புகிறது. பாருங்கள் படியுங்கள். அன்புடன்
பசங்களுக்கு படிப்பு சொல்லிக் கொடுத்ததே அவர்தானாம்.
பூராவுமே அவர்கள் பள்ளிக்கூடத்தில்தானாம் படித்தது..
இதெல்லாம் முன்னாடியே தெரிந்து கொள்ள வேண்டாமா?
நான் ஒரு அசடு. .
எப்படி என்னால் இப்படியெல்லாம் சொல்ல முடிந்தது?
அம்மா மனதில் இப்படியெல்லாம் நினைத்துக்கொண்டிருப்பாள்.
காட்மாண்டுவில் ஸெயின்ட் ஜேவியர்ஸ் பள்ளியை அடுத்து
எங்களின் வீடு.
இரண்டாவது மாடி நாங்கள் இருப்பது. அவர்கள் ஸ்கூலில் நடப்பது
ஒவ்வொன்றையும் பார்க்க முடியும்.
பிள்ளைகள் அவ்விடம் படித்ததால், அடிக்கடி அவர்களைப் பார்ப்பது,
பேசுவது,அவர்களும் நம் வீட்டிற்கு வந்து போவது,யாராவது
தமிழ் ஃபாதர்கள், பிரதர்கள் வந்தால் தமிழ்க்குடும்பம், நாம்
அவர்களுக்கு வேண்டியவர்கள், என்ற முறையில் அறிமுகப்
படுத்துவது, அவர்களைச் சாப்பிட அழைத்து வருவது என்ற முறையில்
யாவரும் வந்து போவது எல்லாம் வழக்கமானது.
இதெல்லாம் நேரில் சொல்ல, நினைத்தபோது போனில் சொல்ல
வசதிகளும் கிடையாது.
என்ன செய்யலாம் பசங்களிடம் அம்மாவின் கேள்வி.
நீ எதெல்லாம் செய்கிறாயோ அது போதும்.
நம்மாத்தில் சாப்பிட்டு அவர்களுக்கு வழக்கம்.
ரஸம் இரண்டு டம்ளர் வாங்கிக் குடிப்பார்கள். கவலையே வேண்டாம்.
எது செய்தாலும்,தோசை,இட்லி தெரியாதது ஒன்றுமே இல்லை.
ஃபாதரும் வந்தார். ஃபில்டர் காஃபி.
இட்லி,சட்னி,மிளகாப்பொடி எண்ணெய் எல்லோரும் சாப்பிட்டோம்.
ஒரு ரூம் வீட்டில் சேர்தான் உண்டு. மேஜை கிடையாது.
அவரும் விசேஷ ஸௌகரியங்கள் எதுவும் எதிர்பார்க்க மாட்டார்.
அவர்கள் தங்கும் இடத்தில் எல்லா ஸௌகரியங்களும் உண்டே தவிர
கையில் சிலவு செய்ய அதிக பணம் கிடையாது. கிடைக்காதோ என்னவோ?
எங்கு…
View original post 500 more words
Entry filed under: Uncategorized.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed