அன்னையர் தினப்பதிவு—26
ஜூலை 12, 2021 at 11:28 முப பின்னூட்டமொன்றை இடுக
தொடரும் திருவண்ணாமலைப் பயணங்கள். மீள்பதிவு செய்ய முடியாது என்றே நினைத்தேன். செய்துவிட்டேன். படியுங்கள். அன்புடன்
பிறந்த நாள் குறிப்பிடுவதற்கு கார்த்திகை உற்சவத்தின் போதுதீபத்தின்
இரண்டாவது நாள் மிருகசீரிஷ நக்ஷத்திரம், வந்தவர்கள் யாவருக்கும்
வடைபாயஸத்துடன் வருஷா வருஷம் சமைத்துப்போட்டு ,அப்பாவின்
பிறந்தநாளைக் கொண்டாடுவது ஞாபகம் வந்தது.
தேதிகள் மாறிதான் நக்ஷத்திரங்கள் வரும். இருப்பினும், மாதத்தையும்
ஷஷ்டியப்த பூர்த்தி நடந்ததை வைத்து ஓரளவு தோராயமாகக் கொடுத்தது.
நல்ல வேளை பர்த் ஸர்டிபிகேட் கொண்டுவா என்றால் எங்கு போவது?
அடுத்து கல்வி எங்கு கற்றார்? என்ன படிப்பு?
ஒரு பதின்மூன்று வயது சிறுமி. நாற்பதுக்கு அதிகம் மாப்பிள்ளை.
மாப்பிள்ளை என்ன படித்தார், என்ன என்று விசாரித்தா கொடுத்தார்கள்.
அல்லது பெண்ணிற்குதான் அதை எல்லாம் கேட்கத்தான்
தெரியுமா?
ஊரைச் சுற்றிவா. இவ்வளவு படித்து வேலையிலுள்ள எவரையாவது
காண்பி.இங்லீஷும்,தமிழும் படிச்சு சொக்கா போட்டுண்டு வேலைக்குப்
போகும்பிள்ளை யாராவது காண்பி என்றுதான் சொல்லி இருப்பார்கள்.
ட்ரெயினிங் படித்தவரா?
இந்த வார்த்தைக்கே அர்த்தம் தெரியாது.
டேனிஷ் மிஷின் பள்ளியில் தனியாக ஆளை நியமித்தே
ஐம்பதுவருஷரிகார்டுகளைத் தேடினார்களாம்.
அங்கும் ரிகார்டுகளே இல்லாமற் போயிருந்தது.
அதற்குப் பிந்தைய இரண்டொரு வருஷ ரிகார்டுகள் கூட
இல்லாமலிருந்ததுதான் கண்டுபிடிக்கப் பட்டிருந்தது.
இப்படி,அப்படி என்று எல்லாத் தேடல்களையும் ஒருவாராக
முடித்து அனுப்பினால் அது ஸரியில்லை,இதுஸரியில்லை என்ற
கடிதப்போக்கு தொடர்ந்து கொண்டே இருந்தது.
நல்ல முறையில் பணம் கிடைத்தால், இதற்கெல்லாம் பாடு பட்டவர்க்கு
எந்த முறையிலாவது கணிசமாக உதவ வேண்டும்என்ற
இம்மாதிரி எண்ணங்கள் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.
காங்கிரஸ் தியாகி அவர்களின் முயற்சி சென்னை மந்திரி ஸபை
View original post 468 more words
Entry filed under: Uncategorized.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed