மூலிபரோட்டா என்று அழைக்கப்படும் முள்ளங்கி சேர்த்த ரொட்டி
ஜூலை 28, 2021 at 11:51 முப பின்னூட்டமொன்றை இடுக
மூலி பரோட்டா மீள் பதிவு செய்து இருக்கிறேன். பாருங்கள் செய்து. இது ஒருவகை. அன்புடன்
நாம் இதுவரை பலவித ரொட்டிகள் செய்திருக்கிறோம். அதில்
மூலி பரோட்டாவும் ஒன்று.
இது செய்முறை சற்று மாறுபட்டது. நல்ல நவம்பர்,டிஸம்பர்
மாதங்களில், குளிர் காலத்தில் செழுமையான நல்ல முள்ளங்கி
கிடைக்கும். நீரோட்டமாக ருசியும் நன்றாக இருக்கும்.
நம் பக்கத்தில் ஸாம்பார்,கறி,கோசுமல்லி என்று செய்தாலும்
அதிகம் பரோட்டா செய்வதில்லை.
வடஇந்தியாவில் இருந்ததால் எனக்குச் செய்துக் கொடுப்பது,
என்பது வழக்கமாகப் போய்விட்டது.
ஸரி,முள்ளங்கியைப் பாரத்ததும், இதை இதுநாள் வரை
எழுதவில்லையே என்றுத் தோன்றியது.
மாவுடன் முள்ளங்கியைச் சேர்த்துப் பிசைந்துச் செய்வது உண்டு.
இப்பொழுதெல்லாம் முள்ளங்கித் துருவலை உள்ளடக்கித்தான் செய்கிறேன்.
மைதா,கோதுமைமாவு எதில் வேண்டுமானாலும் செய்யலாம்.
இரண்டு மாவைக் கலந்தும் செய்யலாம்.
வேண்டிய ,ஸாமான்கள்
நல்ல பருமனான முள்ளங்கி—-1
சீரகப்பொடி—-அரை டீஸ்பூன்
தனியாப்பொடி—அரைடீஸ்பூன்
பச்சைமிளகாய்—காரத்திற்குத் தகுந்த மாதிரி. 1
இலையாக ஆய்ந்த பச்சைக் கொத்தமல்லி—-சிறிது
கோதுமைமாவு—2கப்
ருசிக்கு—உப்பு
எண்ணெய்—2 டேபிள்ஸ்பூன்
மேல்மாவு—சிறிது.
செய்முறை.
முள்ளங்கியைச் சுத்தம் செய்து, தோலைச் சீவிவிட்டு, சற்றுப்
பெரியதான சைஸில் கொப்பரைத் துருவலில் துருவிக் கொள்ளவும்.
துருவிய முள்ளங்கித் துருவலை நன்றாகப் பிழிந்து ஒரு கிண்ணத்தில்
சாற்றை எடுத்துக் கொள்ளவும்.
மெல்லிய தேங்காய்த் துருவல்போல முள்ளங்கி இருக்கட்டும்.
பச்சை மிளகாயைக் கீறி விதை நீக்கி,கண்ணிற்குத் தெரியாத அளவிற்குப்
பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கொத்தமல்லி இலையையும் நறுக்கிக் கொள்ளவும்.
மிளகாய்,பொடிகள்,,கொத்தமல்லி சேர்த்துத் துருவலைக் கலந்து
வைத்துக் கொள்ளவும்.
பிழிந்தெடுத்த முள்ளங்கித் துருவல்,அதனுடைய
சாரும்
மாவுடன்,உப்பு,எண்ணெய் கலந்துபிழிந்து வைத்திருக்கும் முள்ளங்கிச்
சாற்றை விட்டு…
View original post 186 more words
Entry filed under: Uncategorized.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed