அன்னையர்தினப் பதிவு—-30
ஓகஸ்ட் 9, 2021 at 11:50 முப பின்னூட்டமொன்றை இடுக
அன்னையர் தினப்பதிவின் 30 வது பதிவு அவரின் கதையின் முடிவுரையாக அமைந்துவிட்டது. எப்போதோ எழுதியதுதான். மீள் பதிவுக்கு வந்து ஆதரவுகொடுத்தவர்களுக்கு மிகவும் நன்றி. அன்புடன்
ஓ. நாளைக்கு அன்னையர் தினமா? / யாவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள். அம்மா போன விவரம் தெரிந்து தலைக்குளியல்தான் போட்டிருக்கிறேன். எப்படி போனாள்,எந்த விவரமும்கூட பிறகு கேட்கும் படியான ஒரு நிலை. சொல்லு இப்போது சொல்லு. அக்கா அத்திம்பேர் பெங்களூர் போய் வந்தார்கள்.வந்து ஸமாசாரங்கள் சொல்லியுள்ளார்கள். ஸரி பாட்டிக்கு என்ன ஆயிற்றென்று சொல்.
எங்களுக்கும் தந்தி வந்தது. கணேஷ் உடனே ஏர் டிக்கட் புக்செய்து சென்னை போனான். நேற்று அந்த ஏர் ஹோஸ்டஸ் சினேகிதி வந்திருந்தாள். அவளும் போயிருந்தபடியால் விஷயங்கள் விவரமாகச் சொன்னாள்.எல்லா நாட்களும் போலதான் காலையில் குளித்து சமையல் செய்து பாட்டி எல்லாம் செய்திருக்கிறாள். அக்கா அவஸரத்தில் பாட்டியிடம் போய்வருகிறேன் என்று சொல்லக்கூட மறந்து விட்டு அவஸரமாகப் போய்விட்டாளாம்.
அத்திம்பேர் பாதி வழி போனவர் திரும்பி வந்து பாட்டி பீரோவில் பணம் வைத்திருக்கிரது. வாசலில் தாழ்ப்பாள் போடாது உட்கார்ந்து விடப் போகிறீர்கள். கதவை சாத்திவிட்டு உள்ளே போங்கள். என்று சொல்லி விட்டுப் போயிருக்கிறார்.
லேட்டாக தலை பண்ணிக்கொண்டு க்ஷவரம்.குளித்து சாப்பிட்டு, எல்லாம் செய்திருக்கிறாள். சாயங்காலம் உலர்த்தின புடவையை மடிக்கும்போது மேலேருந்துசாந்தாபாட்டியைக்கூப்பிட்டு முருக்கு மாவு அரைப்பதற்கு கணக்கு கேட்டிருக்கிறாள். அதைச் சொல்லி முடிப்பதற்குள் வாசலில் தபால்க்காரர் ரிஜிஸ்டர் தபால் பாகீரதி அம்மாவுக்கு. கூப்பிட்டிருக்கிறான். அழகாக டைட்டிலோடு அழகர பாகீரதி அம்மாள் என்று கையெழுத்துப் போட்டு ரிஜிஸ்டர் தபாலை வாங்கி ஷெல்பின்மேலே கீழே விழுந்து விடாமல் பாரம் ஒன்றும் வைத்திருக்கிறாள். பக்கத்திலேயே மற்றவர்கள்கொடுத்துப்போயிருந்த சாவிகளும்…
View original post 508 more words
Entry filed under: Uncategorized.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed