எப்படியிருக்கு.?
ஓகஸ்ட் 30, 2021 at 12:00 பிப பின்னூட்டமொன்றை இடுக
யாவருக்கும் கோகுலாஷ்டமி வாழ்த்துகள்.
மீள் பதிவு செய்ய பத்து வருஷங்களாகத் தொடர்கதையாகப் போய்க்கொண்டிருக்கும் கதைகளில் இது முதல் அனுபவம். எவ்வளவு உஷாராக இருந்தாலும் அனுபவங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.பத்து வருஷங்களாக. அன்புடன்
எங்கே அனில் வந்தாச்சா?
அவன் வந்து பத்து நிமிஷத்துக்கு மேலே ஆச்சே!
என்ன பண்ரான் பாரு. ஃபேன் பலமா சுத்தறது. சாப்டப்றம்
தூக்கம்தான் வரும். தடார்னு ஓசை கேக்கறதே.
ஓடிப் போய்ப் பார்த்தால் நான் ஓடலே. வேலை செய்யும்
மாதவி பார்க்கிறாள்.
அம்மா, அம்மா அந்த அனில்தான் மோடாவோட கீழே
விழுந்துட்டான். தூக்கக் கலக்கம்போல!
விழுந்தவனுக்கு ஒரு உணர்ச்சியுமில்லை.
ஸந்தேகப்பட்டது ஸரியாப் போச்சு. மத்தியானத்திலேயே
ஏதோ குடிச்சிருக்கான்.
ஏஜன்ஸி,ஏஜன்ஸி. எதுக்கெடுத்தாலும் ஏஜன்ஸி.
நல்லவனா அனுப்பு. நல்லவனாகத்தான் கிடைத்திருக்கிறான்
நம்பிக்கையோடு பணம் கட்டி, நல்லவனா நினைத்தவன்
விழுந்து கிடக்கிறான்.
அவன் ஒரு பிஹாரைச் சேர்ந்தவன். ஆறு குழந்தைகள்
அவனுக்கு. வயதானவரைப் பார்த்துக் கொள்ள வந்தவன்.
ஸந்தேகம் ஸரியாக இருக்கு. அவன் இப்படி, இவன் இப்படின்னு
சொன்னால் ஆள் கிடைக்குமா? மனதில் தோன்றியது ஸரி
ஆக இருக்கு. நடு ராத்ரியில் எட்டிப் பாத்தா ஸெல்லெ தாளமாக்கி
அதுவும் பாடரது, இவனும் படுத்துண்டே பாடறான். வெளியில்
யாரோ பாடரதா நினைச்சுண்டு.
இரண்டு வார்த்தை ஜோரா ஹிந்தியிலே கோவமா சொன்ன பிறகு
பேசாத இருந்தான்.
ராத்ரி பத்து மணிக்கு வரச்சே வாயிலே பான் அது இது , கேட்டா
குச் நஹி, தோடா சுபாரி, வாஸனை மறைக்க பாக்காம்.
இன்று ப்ரத்யக்ஷ்க்ஷமாக கண் காட்சி.
ஸரி வேற ஆள் ஏஜன்ஸி அனுப்புவதாக, எல்லாம் ஒண்ணோட
ஒண்ணு கண்ணான கண்ணாக இப்படி.
தேர்வுக்கு வந்தான் ராஜேஷ் கன்னாவோட இருந்த ஆள்.
View original post 351 more words
Entry filed under: Uncategorized.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed