பலாக்காய் பொடித்தூவல்
செப்ரெம்பர் 5, 2022 at 11:09 முப 2 பின்னூட்டங்கள்
பலாக்காய் பொடித்தூவல் காய் கிடைக்கும்போதுதான் செய்கிரோம். விசேஷமானகாய் இது. என்னுடைய பதிவுகளில் மிகவும் விசேஷமாக இன்று கிடைத்தது. வட இந்தியாவில் கோப்தாவும் செய்கிரார்கள்.பாருங்கள் இதையும். அன்புடன்
பிஞ்சு பலாக்காய்—1 அரைக்கிலோஎடை
.பச்சைமிளகாய்—3
இஞ்சி—1சிறியதுண்டு
தேங்காய்த் துருவல்—அரைகப்.
கடுகு—அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு—ஒரு டீஸ்பூன்
எண்ணெய்—3டேபிள்ஸ்பூன்
ருசிக்கு—உப்பு
துளி மஞ்சள் பொடி
கொத்தமல்லி, கறிவேப்பிலை—சிறிது
செய்முறை.
காயை 2 துண்டங்களாக வெட்டவும்.
பால்போல பிசின் வெளிப்படும். நிறைய தண்ணீர்விட்டு
காயை அலம்பவும்.
கடைகளிலேயே காயை ஒழுங்காக தோல் நீக்கி துண்டங்களாக
வெட்டியும் கொடுக்கிறார்கள்.
சின்ன காயானால் நாமே பட்டை பட்டையாக தோலைச்
சீவிக் கொட்டிவிட்டு உள் பாகத்தை சற்று பெறியதுண்டுகளாக
நறுக்கி தண்ணீரில் போட்டு அலம்பிக் கொள்ளவும்.
வாணலியில் துண்டுகள் அமிழத் தண்ணீர் விட்டுமஞ்சள்ப்பொடி
சேர்த்து திட்டமான தீயில் வேகவைத்துக் கொள்ளவும்.
காய் முக்கால்பதம் வெந்ததும் இறக்கி வடிக்கட்டவும்.
காய் ஆறியவுடன் மிக்ஸியிலிட்டு வைப்பரில் 2 ,3 முறை
சுற்றி எடுக்கவும்.
இப்பொழுது உதிர் உதிராக காய் பக்குவமாக இருக்கும்.
திரும்பவும் வாணலியில் எண்ணெயைக் காயவைத்து
கடுகை வெடிக்கவிட்டு பருப்பை சிவக்க வறுத்து நறுக்கிய
இஞ்சி, பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும்.
உதிர்த்த காயைக் கொட்டி உப்பு சேர்த்து வதக்கவும்.
தேங்காயைச் சேர்த்து வதக்கி இறக்கவும்.
கொத்தமல்லி, கறிவேப்பிலையைச் சேர்க்கவும்.
பொடித்தூவல் தயார். தினப்படி சாப்பாட்டில் இதுவும்
ஒரு கறிதான்.எலுமிச்சை சாறு துளி சேர்க்கலாம்
இது சிரார்த காலங்களில் விசேஷமான ஒருகறிகாயாக
தேடி வாங்கப்படும்.1008 கறிகளுக்கு சமானமான காயிது.
கேரளாவில் இது பரவலாக எல்லோராலும் சமைக்கப்படும்
காய்.
பலா முசு என்று சிறிய வகைக் காய்கள் சமைப்பதற்கு
மிகவும் ஏற்றது.
வட இந்தியாவிலும் …
View original post 17 more words
Entry filed under: Uncategorized.
2 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
geetha | 12:01 பிப இல் செப்ரெம்பர் 6, 2022
அருமையான செய்முறை அம்மா
பலாக்காய் வைத்து நம் வீட்டிலும் பல செய்முறைகள் உண்டு இடிச்சக்கை என்று சொல்லுவதுண்டு நம்மூர் பக்கங்களில்
கீதா
2.
chollukireen | 12:48 பிப இல் செப்ரெம்பர் 6, 2022
உங்களைக் குறிப்பிட்டு ஸ்ரீராம் பதிலிலேயே எழுத நினைத்தேன் நினைத்தபடி நீங்கள் வந்து பின்னோட்டம் கொடுத்து இருக்கிறீர்கள் மிக்க சந்தோஷம் பல விதங்களில் நீங்கள் இதைச் செய்வீர்கள் அதையும் நினைத்தேன் அடுத்து கீதா சாம்பசிவத்தின் பதிலும் இம்மாதிரி குறிப்புகள் எழுதி பதிலிடுவார்கள் பார்ப்போம் மிக்க நன்றி அன்புடன்