Posts filed under ‘கதைகள்’

தொட்டில்–16

தொட்டில்

தொட்டில்

பண்டிட் எங்கிருந்து வந்தான்?

அது ஒரு டீக்கடை. வரும்வழியில் ரொம்பகுளிர். ஸரி வீட்டில் முதியவளும் இல்லே போனவுடன் டீகொடுக்க ஒரு டீசாப்பிடலாம்.டீவருகிறது.

ஓ ராம்தாயீ எனக்கும் ஒரு டீ. குரல் வந்த திசையில் ஒரு வயதான பெண்மணி. நீ எங்கே இங்கே வந்தே. ஹஜூர் இந்த பையனுக்கு ஏதாவது வேலை வாங்கிக் கொடுக்கலாம் என்று வந்தேன்.
பஹினி இது யாரு?

தாயி, எல்லாம் சொல்றேன். வீட்டிற்குப் போன பிறகு.

பையனுக்கும் சாய் ஒன்று.

இல்லே அவன் ஒண்ணும் குடிக்க மாட்டான். பாவுன்கா சோரா. பிராமணப்பிள்ளையாம். ஏதோ புதியகதை. வீட்டை அடைந்தாகி விட்டது.
பாவுஜு மன்னி பேரு நேபாலியில்.

வாவா பஹினி என்று வரவேற்கிறாள் பாவுஜு. தாயி என்றால் அண்ணா

. தீதி என்றால் அக்கா.பாயி என்றால் தம்பி. யாரையும் உறவு சொல்லிதான் அழைப்பார்கள்.bபுவாரி என்றால் மருமகள்.அம்மாவிற்கு    ஆமா என்று பெயர் அப்பாவிற்ரு புவா.

பாவுஜு இந்த பிள்ளை நல்லவன். அப்பா,அம்மா இரண்டுபேரும் பிரிஞ்சுபோயி வெவ்வேரெ வாழ்வு. இது நம் வீட்டோடு இருக்கு. ஆத்தா,அப்பன் இரண்டும் ஸரியில்லே.

நம் வீட்டிலே இருந்தா இரண்டு பேரும் தொந்திரவு கொடுக்கராங்கோ. இது அங்கே போகமாட்டேன்னு நம் வீட்டோடு கிடக்கறது. அங்கே வேண்டாம்,உனக்கும் உதவிக்கு ஆள் கேட்டாயே என்று அழைத்து வந்தேன்.

அதன் ஆத்தாகாரியும் ஸரி கண் முன்னாலே இல்லாமல் இருக்கட்டும் என்றாள்.
என்ன சொல்கிறாய்? அவ ரொம்பவருஷ பழக்கம்.
இல்லாவிட்டால் சாய் துகானில் கேட்டார்கள். விட்டுவிடணும். அந்த தீதியும் நல்லவள்.
பேசிக்கொண்டே சாப்பாடு முடிகிரது. பையன் சுருசுருப்பா கூடமாட பழக்கப்பட்டவன்போல் ஒட்டிக்கொண்டு எல்லாவேலையும் செய்கிரான்.
ஸரி நான் பாத்துக்கறேன். மனதுக்கு பிடிக்கலைன்னா அனுப்பிடறேன் உங்கிட்டயேபஹினி..

வேலை செய்யும் சிறுவர்கள் காஞ்சா. சிறுமிகள் காஞ்சி.
இவன் பாவுன் என்றே அழைக்கப்பட்டான்.

அவனையும்  மாலை நேர பள்ளியில் சேர்த்து விட்டனர். சொல்லிக்கொடுத்த எளிய வேலைகளை சிக்கென பிடித்துக் கொண்டு, மேற்கொண்டு வேலைகளையும் தானே வலிய தெரிந்துகொண்டும்,     செய்து கொண்டும்  நன்மதிப்பைப் பெற்றுக் கொண்டு விட்டான்.அதிகம் படிப்பு ஏறவில்லை.
இதெல்லாம் பிள்ளைகளுக்கும் தெரிந்த விஷயம்தான்.

அவனும் பெரியவனானபோது அவனுக்கும் காதல் வந்தது. இவனைமாதிரியே அதுவும் ஒரு தாய்தந்தையரின் பிரிவால் கைவிடப்பட்ட அனாதைப் பெண்.
திரும்பவும் ஆள்தேடி அலைவதைவிட இவர்களையே நாம் நமதென பாவிக்கவேண்டும் என்ற கொள்கையுடன் , ஒரு சின்னஸ்வயம்வரம் வைத்து இருவருக்கும் மணம் முடித்து வைத்து, வீட்டிலேயே ஒருபகுதியில் தனிக்குடும்பம் நடத்தவும் ஏற்பாடு செய்து விட்டனர்.

பாசமான பிள்ளை மருமகள்போல் அவர்களின் உதவி இன்றிமையாதது என்ற நிலையும் வயோதிகத்தில் ஏற்பட்டு விட்டது. இதோ அந்த பெண்ணின் பெண் எப்படி பாசத்தைக் காட்டுகிறது. பார்த்தாயா?

கலர்க்கலர்

கலர்க்கலர்

தூங்கி எழுந்து வந்த பிள்ளைகளிடம் விவரித்து விட்டு, முன்போல் எங்களுடைய ஸொந்த காரியங்களையும், நாங்களாகவே செய்து கொள்ள முடிவதில்லை. அடிக்கடி டாக்டரிடம் போக வேண்டியுள்ளது. உங்கள் பெண் பிள்ளைகளும் பெரியவர்களாகி விட்டார்கள். அவர்களின் வேறு கல்ச்சரில் வளர்ந்த மனப்பான்மையே வேறு விதமாக உள்ளது.

அவர்கள் விஷயத்திலும் நீங்களும் எவ்வளவோ ஈடு கொடுக்கும்படி உள்ளதையும், மன உளைச்சலையும் அறிய முடிகிறது.

எங்களுக்கு இங்கிருந்தால் எல்லாவித ஸௌகரியங்களையும் நாங்களே பார்த்துக் கொள்ள முடியும். உங்கள் மனைவிகளும் வேலைக்குப் போகிறவர்கள். யாரையும் குறை சொல்லவில்லை.

பண்டிட்டிற்காக சேர்ந்த பணத்திலேயே அவனுக்கும் வீடு வாங்கி வைத்து விட்டேன்.நிறைய உறவினர்கள் வரபோக இருக்கிரார்கள். பண்டிகை,பருவம் என எல்லோரும் வரபோக தனிமை அதிகம் வாட்டுவதில்லை.
ஸொந்த வீடு. நம் இஷ்டப்படி இருக்க முடிகிறது. தாழ்வு மனப்பான்மை குறைகிறது.

நம் ஸொத்து ஸுதந்திரத்தைப் பார்த்துக் கொள்ளும் வகையில் அவனுக்கும் சில ஏற்பாடுகள் செய்து விட்டேன்.
எங்களுக்குப் பிற்காலம் உஙகளிருவருக்கும் எல்லா ஸொத்துக்களும் பிரித்து எழுதப்பட்டு விட்டது.

பண்டிட்டின் பெண்ணிற்கும் கல்யாணம் ஏற்பாடு செய்து விட்டேன். நீங்கள் யாவரும் வாருங்கள்.
உங்களுக்கும் வயதானகாலத்தில் இங்கு வந்து ஸெட்டிலாக எண்ணம் தோன்றும்.
யோசனை செய்வதற்கே ஒன்றுமில்லை.

பிள்ளை குறுக்கிடுகிறான்.
பண்டிட் மட்டும் உங்களைப் பார்த்துக் கொள்வான் என்பது என்ன நிச்சயம்.

தேசம்,கலாசாரம்,சுற்றம்,அவனின் சூழ்நிலை. எங்களிடம் இதுவரை காட்டிய நேசம்,பணிவு எல்லாமாக எங்களை இந்த முடிவுக்கே கொண்டு வந்துள்ளது.

சில முடிவுகள் ஆண்டவனால் எடுக்கப்படுபவை. அதை மாற்ற யாராலும் முடியாது.
எங்கும்,யாருடனும்,எப்பொழுதேனும் எதுவும் மாறலாம். அதுவே தவிர வேறு என்ன செய்ய முடியும்.?

தீர்மான முடிவு. பார்ப்போம். பிள்ளைகளும் இப்படியே இரண்டு வருஷம் வந்துபோயினர்.

அவர்கள் பெண்ணுக்கும் அங்கேயே லவ் மேரேஜ் நடந்தது. அடுத்து பிள்ளையும் வரிசையில்

வருஷங்கள் உருளுகிறது. பண்டிட் மாறவேயில்லை.  வயதான பெற்றோரை அவன் பார்த்துக் கொள்ளும் விதமும்   அக்கரையாகவே இருக்கிறது..

பிள்ளைகள் வருவதாகப் போன் வருகிறது.    பண்டிட்டிற்குப் பேரன் பிறந்துள்ளது. அவர்கள் வரும் தேதியும் ஒத்துப் போகிறது.

பலூன்களுடன்

பலூன்களுடன்

தொட்டிலுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

காலை எட்டு மணி ப்ளைட்டில் பிள்ளைகளின் குடும்பம்  வருகிறது.   ஏக குதூகலம்.
சொல்லாத தகவல். பேரன்மனைவியும்,கையில் குழந்தையும்.

புதியதாக  பெரிய பிள்ளையின் பேரன். அன்னியதேசக் கொள்ளுப்பேரன், இதுவரை சொல்லாத ஸஸ்பென்ஸ்    கோபம்,ஸந்தோஷம்,உண்மை கூறாததின் வருத்தம்  பல சுவைக் கதம்ப கூட்டலும்,மகிழ்ச்சியும்,கூடவே  கண்ணீரும். மருமகளை ஏற்றுக்கொள்ள வேண்டுமே.அதற்கும் உடனே ஏற்பாடு.

புதியதாக வரும் மருமகளை ஆசீர்வதித்து , இருவருக்கும் டீக்கா எனப்படும் ,தயிரில்அக்ஷதைகலந்த சந்தன குங்குமப்பொட்டை திலகமிட்டு ஆசீர்வதித்து இனிப்பூட்டி பெரியவர்கள் ஏற்றுக் கொண்டால்தான் அவர்கள் குடும்பத்து நபர் ஆவார்கள்.

இன்று இரட்டைத் தொட்டில் அலங்கரித்து எல்லோரையும் கூப்பிட்டு, விருந்துதான்.

மருமகளுக்கு  முதலில்  டீக்கா கொடுத்து வாழ்த்தி ஏற்றுக் கொண்டனர்.

அடுத்து  கணவன் வீட்டில் வைத்து நாரண்.

நாம்புண்யாசனம் என்று சொல்லும் தூய்மைப்படுத்தலும்,பேரிடுதலும்.     அது கட்டாயமானது. வம்சத்து பெயர்கள் அதாவது ஸர்நேம் கொடுப்பது.  இரண்டு குழந்தைகளுக்கும்    செய்து விடலாம்.இதுவும் கட்டாயமானது.

விரைதானம் இந்துக்களின் வழக்கம் நேபாலி   வாத்தியார் வந்து  யாவற்றையும் இனிதாக நிறைவேற்றினார்.ஸூர்யகிருஷ்ணா ஒன்று, யுவகிருஷ்ணா மற்றொன்று.

மருமகள்கள், பேரன் பேத்திகள்,பிள்ளைகள்,உற்றார் உறவினர்களுடன்
பூக்களலங்காரத்துடன் இரட்டைத் தொட்டில்.
குழந்தைகளைக் கொண்டு வருகின்றனர் தொட்டிலில் கிடத்த

ஆடும் தொட்டில்

ஆடும் தொட்டில்

படங்கள் யாவும்  கூகல் உபயம்.  மிக்க நன்றி.

லாலிலாலய்யலாலி. ஓம்கார லாலிமால் மருகலாலி

லாலி சிவ புத்ர லாலீ  செந்தில் வளர் லாலி சிருங்காரலாலி.  என்று மனதில் பாட்டு தோன்றியது.

இரண்டொரு வருஷத்தில் நாங்களும் இங்கே வந்து விடுகிறோம் என்ற மகன்களை

ஆளுக்கொருவராக அணைத்துக் கொண்டனர் பெற்றோர்கள். தொட்டில்கள் நிதானமாகஆடுகின்றன!!!!!!!!!!!

நவம்பர் 8, 2016 at 1:12 பிப 19 பின்னூட்டங்கள்

தொட்டில்—15

நேபாளத்துச் சூழ்நிலையில் அமைந்த கதை.

Continue Reading ஒக்ரோபர் 15, 2016 at 11:45 முப 15 பின்னூட்டங்கள்

தொட்டில்—14

இந்தத் தொட்டிலும் அழகானதே

Continue Reading செப்ரெம்பர் 15, 2016 at 10:50 முப 20 பின்னூட்டங்கள்

தொட்டில்—13

முகூர்த்தம் பாத்தாச்சு. வெளியில் சொல்லவில்லை. ராஜுவின் சித்திதானே ஸூத்ரதாரி.
பின்னல் தொட்டில்

முகூர்த்தம் பார்த்த தினத்தில்தான் குளத்தங்கரையிலுள்ள வேம்பிற்கும்,அரசிற்கும் கல்யாணம். மரங்கள்தான் அவைகள். வனபோஜனம். ஊரே கோலாகலமாக இருக்கும். குளக்கரையில் விவாகம் முடிந்த பின்னர் ஊரில் பெரிய வீட்டில் சாப்பாடு. வைதீகர்கள் அந்த வரும்படியில் இருப்பார்களே!

இம்மாதிரி நல்ல காரியங்கள் பார்த்துப் பார்த்துச் செய்யும் பாட்டி ஒருவர் இருந்தார்.
அவரிடமே விஷயங்கள் சொன்ன போது, இதுக்கென்ன விசாரம்? முதல் முகூர்த்தம் இதைப் பண்ணிவிட்டு மாலையும் கழுத்துமா அவர்களையும் அழைத்துக் கொண்டு போனால் போயிற்று. மீதி நாள் பூரா இருக்கே. எனக்கும் கொஞ்சம் நல்ல காரியம் செஞ்சோம் என்ற திருப்தியும் கிடைக்கும்.

எல்லா விஷயங்களும்தான் நீ சொல்லி விட்டாய். கார்த்தாலே ஏதாவது காபிடிபன் போரும். சாப்பாடெல்லாம் நான்தான் செய்யறேனே. அப்புறம்அவாளுக்கு என்ன செய்ய இஷ்டமோ தாராளமாக செய்து கொள்ளுங்கோ. மறுநாள்வரை  ஜமாய்க்கலாமே.

செலவு செய்ய முடியாத கஷ்டமெல்லாம் இல்லை அவாளுக்கு.
ஸரி எங்காத்திலேயே பந்தல்போட்டு நான் எல்லாம் செய்யறேன்.

மாப்பிள்ளை ராஜு போய் அவன் அண்ணாவிடம் சொன்னான். ஆகாசத்திற்கும்,பூமிக்குமாக குதிக்காத குறைதான்.
பெண் ஒண்ணு இருக்கு,  இதெல்லாம் அவசியமா? என்ன இருக்கோ எல்லாவற்றையும் அந்தப் பெண்மேலே எழுதி வைச்சுட்டு அப்புறம் எக்கேடு வேண்டுமானாலும் கெட்டுப்போ. இவ்விடம் வராதே. என்றனராம்.

எழுதி வைத்திருப்பதும்,இதுவரை நான் கொடுத்திருப்பதும் உங்களிடம் இருப்பதை எண்ணிப் பாருங்கள்.இப்போதும் என்னால் முடிந்ததை நான் கொடுப்பேன்.

வருவதும்,வராததும் உங்கள் இஷ்டம் என்று சொல்லி வந்து விட்டான். ஒரே சாபம்தான். கூடவும் நான்கு வேண்டிய மனிதர்களை அழைத்துப் போயிருந்தான். சித்திக்கும் சேர்ந்து அர்ச்சனை. காச்சு மூச்சு  கத்தல்தானாம்.

இங்கே பெண் வீட்டிலும் அவளுடைய அப்பாவிற்கு பாட்டிக்கிழவி எவ்வளவு காலம் இருந்து விடப் போகிறாள்? கிழவி போன பிறகு ஸொத்தில் உன் பெண்ணையும் கையெழுத்துப் போடச் சொல்லி உனக்கு ஆதாயமாகவே உன் பெண் இருப்பாள் என்ற உறுதி மொழியும் கொடுத்து, வாயடைத்து வைத்தனர்

. குடிப்பான் போல இருக்கு. அதான் அவனுக்கு நியாய அநியாயம் எதுவும் தெரியலே. பிசாசு புளிய மரத்திலே ஏறாது இருக்கணும். பாட்டிக்கு பிற்காலம் ஸொத்து நம்முது என்ற என்ற அளவில் ஓய்ந்தது .
அப்பாவிற்கு உறுதி மொழி கொடுக்கும்படியான நிலை

பரோபகாரப் பாட்டியும், சித்தியும் ஏர்பாடுகளைச் செய்தனர். ஊர் பூராவிற்குமே அழைப்புதானே. முக்கியமான உறவுக்காரர்கள் மட்டிலும்   கல்யாணத்திற்கு வந்தனர்.  கல்யாணம் நன்கு முடிந்தது.,

அரசு வேம்பு கல்யாணத்தில்  சாவகாசமாக  அவர்களிடம்  எல்லாம் பார்த்துக் கொள்ளலாம்.என்று   யாவரும் அலங்காரங்களுடன்   சீர் சுமந்துகொண்டு போக பாட்டி வீட்டில் கூடி விட்டனர். வைதீகர்கள்,லௌகீகர்கள் உட்பட.

கல்யாணிக்கும் அவள் பாட்டி எதுவும் குறை வைக்கவில்லை.    கொட்டுமேளம் கொட்ட ராஜு,கல்யாணி தம்பதிகளின் ஊர்வலம்போல   சீர்வரிசைகளுடனும், பூஜா திரவியங்களுடனும்   எல்லோரும்   குளக்கரை நோக்கிப்போனது அவ்வளவு கண்கொள்ளாக் காட்சிதான் என்று தெரிந்தவர்கள்  சொல்வார்கள்.

ஸம்ரதாய பூஜைகள் நடந்து    கல்யாணம்  வேம்பு,அரசுக்கு முடிந்து  ,யாவரும் வீடு திரும்பும்போது யாவர் வீட்டிலும்  ஆரத்திசுற்றி திருஷ்டி கழித்து,   சாப்பாடுதான் எப்படிப்பட்டது,   வேதியர்கள்   திண்ணையில் உட்கார்ந்து பஞ்ஜாதி ஓத,   சந்தனப்பூச்சும்,பனை விசிறியும் யாவரின் கையில்,   ஸம்பாவனைகளும்,  யாவருக்கும்   தாம்பூலமுமாக ஒரு கோலாகலத் திருமணமுமாக முடிந்தது.

பின்னிப் பிணைந்ததாக  அரசங்கன்றையும்   வேப்பங்கன்றையும் வளர்த்து   ஏதோ  அரச இலை இவ்வளவு  என்று தோராயமாக ஒரு காலம் கணக்கிட்டு, அவை இரண்டிற்கும் முறையே பூணூல் கல்யாணம் என்று செய்வார்கள். பிறகுதான் அந்த மரம் பூஜைக்குரியதாகக் கணக்கிடப்பட்டு,அரசப் பிரதக்ஷிணம் முதலானது செய்யவும், நாகப் பிரதிஷ்டை முதலானது செய்து   வழிபடவும் உகந்ததாகக்  கருதப்படும். எனக்கு ஞாபகத்தில் இவ்வளவுதான் இருக்கிறது.

கல்யாணி சில மாதங்கள்  சித்தியுடன் இருக்கட்டும். பிறகு மாப்பிள்ளையும் இதே ஊரில் வேலை கிடைத்து வந்து விட்டால்,  என்னுடனே வந்து தங்கட்டும். அவளுக்கில்லாதது  என்ன?   நான் ஒருவள்  இவ்வளவு பெரிய  வீட்டில் என்ன செய்வது?

இப்படி,அப்படி அண்டர் கிரவுண்ட் ஏற்பாடுகளுடன் கல்யாணி புக்ககம் போனாள். அடுத்த இரண்டொரு மாதத்தில் ஜெயாவின் கல்யாணம் என்று தெரிந்து, ராஜு மட்டும் தானாகவே சென்று, முடிந்த  அளவு பணம் கொடுத்து விட்டு ஏச்சு பேச்சுகளைக் கேட்டுக்கொண்டு வந்து சேர்ந்தான்.

நல்ல வேளை ராஜுவிற்கும் ஊரிலேயே வேலை கிடைத்து விட்டது. மாதங்கள் ஓடியது. கல்யாணியை மசக்கைக்காக பாட்டி வீட்டிற்கு வந்தாள். சித்தி இங்கும்,அங்குமாக இருக்கட்டும். பிரஸவத்திற்குப் பின் தனிக் குடித்தனம் வைக்கலாம் என்று பேசிக் கொண்டனர். கொள்ளுப்பேரன்   என்றால் மகிழ்ச்சி

நடைமுறைகளெல்லாம் அவ்வப்போது குளக்கரையில்  வேண்டியவர்களால் அலசப்படுவது கிராம வழக்கம்.. வம்பென்று நினைப்பதில்லை. அன்றும் அப்படியே. கல்யாணிக்கு எல்லாம் நன்றாக ஆகிவிட்டது. அவ அம்மாவுக்குதான் பிடுங்கல் ஜாஸ்தியாப் போச்சு. ராஜு அப்படித் தாங்குகிறான்.பாவம் அவம்மா

எவ்வளவு காலம் உங்கம்மா இருப்பாள்? எவ்வளவு காலம் இருந்தா என்ன நாம்தானே  வரும்படியை அனுபவிக்கிறோம் என்று சொல்லப்போக, அதிலிருந்து  சண்டையும் சாடியும் பதில் சொன்னால் அமக்களம்.  அவளுக்கு உடம்பு நன்னா இல்லே. அடிக்கடி தலை வலிவந்து துடித்துப் போகிறாள்.   படபடப்பு. ஊரிலேந்து வந்திருக்காள். நிலபுலன்களை விற்க ஏற்பாடு செய் என்று சொல்கிறானாம்.

யார் வாங்குவா இந்த ஸொத்தை?  பாவம் மில்லையா மாமி.இந்த பிளட் பிரஷர் எல்லாம் யாருக்கும் தெரியாது. டாக்டரிடம் போனால்தானே. அவரும் பெயர் சொல்லி விளக்கும் காலமில்லை அது. ரொம்பப் படுத்தரான். கலங்கிப் போயிருக்கா. கல்யாணிக்கு  பிரஸவம்  பார்க்க வந்திருக்காள்.

பேரன் பிறந்து ஸந்தோஷத்தைக் கொஞ்ஜம் அனுபவித்ததுடன்ஸரி. அன்னிக்கும் ஏதோ வாக்குவாதம். அப்படியே கீழே உட்கார்ந்ததுடன் ஸரி. மகராஜி என்ற பட்டத்துடன் போய்ட்டா. என்ன பண்றது.?  மன்னிதான் உடைஞ்சு போயிட்டா. இதெல்லாம் முடிந்து அவனுக்கு இங்கே ஒண்ணும் இல்லே என்று ஆகிவிட்டது.

இப்போ புது விஷயம் பொண்டாட்டி செத்தா புது மாப்பிள்ளைதானே. அவனும் கல்யாணம் பண்ணிண்டு ஒரு பிள்ளையும் பிறந்தாச்சு.  அந்த குழந்தைதான் வாரிசு என்று சொல்லி வந்திருக்கிறானாம்.

ஊரில் எல்லோருமாக எடுத்துச்சொல்லி அவனுக்கு எந்த பாத்யதையும் இல்லை என்று சொல்லி ,கையில் சிறிது கணிசமாகப் பணம் கொடுத்து அனுப்பி வைத்தார்களாம் இப்படி கதை மாறியது.

காலஓட்டத்தில் பாட்டிக்காக  விரத ஸுகங்களும் நடந்தது.பாட்டியும் நல்ல கதி அடைந்தாள். கல்யாணிக்கு எல்லாம் ஆண் குழந்தைகள். பெண்ணும் வரபோக இருக்கிராள்.    தொட்டில்கள் அழகாக ஆடுகின்றன. குடும்பத்தை கௌரவமாக வகிக்கும்   கல்யாணி, மூத்தாள்பெண், சித்தி என எல்லா குடும்பங்களிலும்  விதவிதமான தொட்டில்கள் ஆடிக் கொண்டிருக்கின்றன. வாரிசு என்னவோ கல்யாணிதான். இப்படியும் தொட்டில்கள்.
மரத்தொட்டில்
படம் உதவி கூகல்

ஓகஸ்ட் 24, 2016 at 8:52 முப 9 பின்னூட்டங்கள்

தொட்டில் 12

தொட்டில் 12

வீட்டுக்குள்ள நுழைந்தப்புறம் எல்லாம் நமக்குத் தெரிந்தது ஓர்ப்படிக்கும் தெரியும். புதுசா சொல்ல என்ன இருக்கு? நீலாவையே போய்ப்பார்த்து மீதி ஸமாசாரங்களையும் கேட்டு எதை, எப்படிச் சொல்லலாம் என்று அவளையே யோசித்துச் சொல்லச் சொல்லணும்.

என்ன பாட்டி நீவேறெ எனக்குப் மாப்பிள்ளை பார்க்கிறயா என்று கேட்டு விடும்அந்தப் பெண்.
நீலாவாத்து சாப்பாடெல்லாம் ஆகட்டும். யோசனை முடிந்து ஈரப்புடவையை ஓர்ப்படியிடம் கொண்டு கொடுத்து விட்டு மத்தியானமா வரேன். நீலா என்னவோ சொன்னா. ஸரியா கேட்டுண்டு வரேன். நீயும் தினம் கேக்கரே மன்னி.
ஸரி ஏதாவது நல்லதா வரணும்.

என்ன ஒரு வத்தக் குழம்பும்,சுட்டஅப்ளாமும். இரண்டுநாளா தோசை ராத்தரியில். மாவு புளிச்சு வழியறது. ஊறுகாமிளகாயும்,கடுகு பெருங்காயம் தாளிச்சுக்கொட்டி வாணலியில் இரட்டை விளிம்பு தோசையாக இராத்திரி இரண்டு வார்த்தால் மாவும் காலியாகும். எண்ணெய் நிறைய விட்டு வார்த்தால் தானே ருசி கொடுத்துவிடும்.
இரவு ஆகாரத்தையும் கற்பனையில் செய்தாகிவிட்டது.

ifஊரில் அக்ரஹாரம்
நன்றி கூகல். படம் ஒரு மாதிரிக்கு.

பானுவின் புக்ககம் ஒரு கூட்டுக் குடும்பமாக இருந்தது ஒரு காலத்தில். அவள் மாமனார் இராமாயணம்,பாரதம், பாகவதம் என்று கதை வாசிப்பவர். மனைவி இல்லை. பிள்ளைகள் மூன்று பேர்.

அக்கால முறைப்படி காலாகாலத்தில் பிள்ளகளுக்குக் கல்யாணமாகி ஒரே கூட்டுக் குடும்பம். கடைசி பிள்ளைக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. மற்றவர்களுக்கு ஸந்தானம் ஏற்படவில்லை. நாகப்பிரதிஷ்டை,ராமேசுவரம்போய் திலஹோமம், சாந்திகள் எல்லாம் காலா காலத்திலேயே செய்து விட்டனர். அந்தகாலத்து அரசப்ரதக்ஷிணம் என்று எல்லாம் வரிசைக்கிரமாக நடந்தது.
மனதில் அசைபோட்டுக்கொண்டு நீலாவாத்திற்குப் போனால் அவளும் மிகுதியைக் கூட சேர்த்து அசைபோட்டாள்.

முன்னாள் கதைகளென்றால் மருத்துவ வசதி குறைவு,அகால மரணம் இவையெல்லாம் தவிர்க்க முடியாதவை . இவைகளைப் படிப்பவர்கள் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும். சின்ன நாட்டுப்பெண் திடீரேன்ற ஜுரத்தில் போய்விட்டாள்.

ஜெயா எல்லோருக்கும் அருமைப் பெண் ஆகிவிட்டாள். பெற்றவன் மறு கல்யாணம் வேண்டாமென்ற விரக்தி.
என்பெண்,உன் பெண் என்று போட்டா போட்டியில் ஓரகத்திகளுக்குள் சண்டை.
நமக்கென்று ஏதாவது செய்து கொள்ள வேண்டுமே தவிர இவளுடன் இருக்க முடியாது என்று பெரியவள் தனிக்குடும்பம் போய்விட்டாள்.

பெரியவர் அதான் குடும்பத்தலைவர் பேத்திக்கும் பங்கு கொடுத்து பத்திரம் எழுதிவிட்டுப் போய்ச் சேர்ந்து விட்டார். சொத்து விஷயமாக கோர்ட் கேஸ் என்று அண்ணந்தம்பிக்குள் மனஸ்தாபம்.

பெண் குழந்தை நடு பிள்ளையின் பராமரிப்பில் இருந்து ஒட்டுதலும் ஏற்பட்டு விட்டது. விவரமறிந்த வயதாகவும் ஆகிவிட்டது. பெண் குழந்தைக்கு பராமரிப்பில் பெண் துணையும் அவசியம். ஸமாதானமாகப் போங்கள் உரிமை  உங்களுக்குத்தான். என்று ஜட்ஜ் தீர்ப்பு கூறிவிட்டார்.

பிரிந்து வாழ்ந்தாகி விட்டது.  பெண்ணையும் ஒட்டவிடவில்லை. அவர்களுடன் சேர்ந்து இருக்கவும்  முடியவில்லை.  தனக்கென்று எதுவும்  ஒரு பைஸா கூட வைக்கவும் முடியவில்லை.

இது யார்,யார் யாருக்கு என்னென்ன தூண்டி விடுவார்களோ? எப்படி இக்குடும்பம் இம்மாதிரி ஆகியதோ? எல்லாம் புதிராக இருந்தது.   இதெல்லாம் அறிந்த விஷயம். இப்போதைய நிலவரம் என்ன அதைச்சொல்லு. அதுதானே முக்கியம்.

அவனுடைய சித்திதான் கூப்பிட்டிருந்தாள் போயிருந்தேன்.   அவனைக் கல்யாணம் செஞ்சுக்கோ. என்ன வயஸாயிடுத்து உனக்கு நாப்பது இருக்கும். இப்படி தனியாக அலைகிராயே! உன் பெண்ணிற்கும்  அவர்கள் வரன் பார்த்திருக்கிரார்கள். உன்னிடம் சொல்லவில்லை.
எனக்கு  எதற்கு கல்யாணம் என்று   திட்டுவார்கள் என்றான்.  போக்கு வரத்தே இல்லை. பெரியவளும் ஏதோ தூர உறவில் ஸ்வீகாரத்திற்கு ஏற்பாடாம்.

நான் சொன்னேன் உனக்குன்னு குடும்பம் வேணும். வேலையில் இருக்கே. ஸம்பாதிக்கிறே! அவனுக்கும் மனதில் தோன்ற ஆரம்பித்து இருக்கு. நான் பார்க்கிறேன் என்றேன். ஹூம் கொட்டி இருக்கிறான்.
பொருப்பான பொண்ணா இருந்தா போரும். ஒண்ணும் பண்ண வேண்டாம். மீதியை நான் பாத்துக்கறேன் என்றேன்.

சித்தியும் வயதானவள்தான். ஸ்டேட்மென்ட் கொடுக்க ஒரு ஆஸாமி, வேண்டுமே. யாரையும் கூப்பிடவேண்டாம். அவன் அண்ணாமார்களுக்கு ஒரு மரியாதையாக சொன்னால் போதும் என்ற அளவிற்கு சொல்லி வைத்திருக்கேன். என்றார்.

நீங்க ஊருக்கு போவதற்கு முன் உங்க மன்னியைக் கேட்டு விவரம் சொல்லுங்கள். நானும் போய்ச் சொல்றேன். அந்தப் பெண்ணிற்கும் நான் போய் ஸம்மதமா என்று கேட்கிறேன்.
அவன் ஒன்றும் ஊருக்குப் புதியவனில்லை. எல்லாருமே தூரத்து உறவாகத்தான் இருக்கும். ஸரி நான் போய் விசாரிக்கிறேன்.
மாமி தேங்காத் துகையல் அரைச்சேன் நிறைய இருக்கு . கொஞ்சம் எடுத்துண்டு போங்கோ. சின்ன கிண்ணத்தில் துண்டு இலையைப் போட்டு மூடித் துகையல் தூது போகிறது.

மன்னிக்கு ஸமாசாரம் அஞ்ஜலாகிறது. மாப்பிள்ளை ,பெண்ணை வரச்சொல்லி ஆளனுப்புகிராள். அவர்களும் வந்தார்கள்.
நீலா பெண்ணோடு பேசி மனதை ஆராய்கிராள். பளிச்சென்று சொல்லாவிட்டாலும் இந்த அடைந்து கிடக்கும் தளையிலிருந்து, வெளியே போனால் போதும் என்ற மனநிலை பளிச்சிட்டது. ஆனாலும் அங்கும் உறவுகள் தொல்லை கொடுக்காமல் இருப்பார்களா என்பதை உறுதிப்படுத்திச் சொல்லுங்கள் என்ற வார்த்தையே பதிலாக வந்தது. பெண் ,பிள்ளை பார்க்க என்ற ஸம்பிரதாயத்திற்கு அவசியமில்லை. எல்லோரும் தெரிந்தவர்களே!

இக்காலத்தில் பெண்கள் பிள்ளைக்கு லக்கேஜ் இருக்கா என்று விஜாரிக்கிறார்களாம். அதாவது அப்பா,அம்மா கூட இருப்பார்களா என்பதற்கு. அக்காலத்திலும் இந்தச் சுவடுகள் ஆங்காங்கே இருந்திருக்கிறது.

ஏராளமான வாக்கு வாதங்களிடையே அப்பாவின் எக்கேடு கெட்டுப்போங்கோ என்ற கோபமான ஸிக்னல்.
அப்புறம் என்ன ஆச்சு?
பெண்ணுக்கு கல்யாணம் பேச்சு ஆரம்பித்ததிலிருந்து புருஷனுடைய ஏச்சும்,பேச்சும் மனஸு வெறுத்தே போச்சு அம்மாவுக்கு. தான் சொன்ன பிள்ளையையே கொண்டு வந்து பலவந்தமாகத் தாலி கட்டவைக்கிறேன் என்ற புருஷனின் ஸவால் வெளியே சொல்ல முடியாமல் பயமுறுத்தியது.
இங்கேயும் ஒற்றுமை இல்லை. வாயளவில் கல்யாணம் நிச்சயித்தாயிற்று. வெளியில் எங்கும் சொல்லவில்லை. மிக்க வேண்டியவர்களுக்குதான் தெரியும்.
மன்னி விசாரப்படாதே. கல்யாணிக்கு எல்லாம் ஸரியா நடக்கும். தொடரும்.

ஓகஸ்ட் 19, 2016 at 10:20 முப 20 பின்னூட்டங்கள்

தொட்டில் 11

பின்னல் தொட்டில்

பின்னல் தொட்டில்

பொழுது புலர ஆரம்பித்து விட்டது.   இப்பொழுதே போனால்  நிதானமாக குளித்து விட்டு,  ஆரஅமர  துணிகளைப் புழிந்து கொண்டு  கரையிலுள்ள மாமரப் பிஞ்சுகள்  உதிர்ந்துள்ளதைப் பொறுக்கிக் கொண்டு நிதானமாகக்  கதைபேசிக்கொண்டு வரலாம்.முதல்நாள் இரவே  யார் யார் வருகிரார்கள் என்று கேட்டுக் கொண்டாயிற்று. 
குளத்தில்  இறங்கி அமிழ்ந்து உட்கார்ந்து விட்டால்  கரை ஏறவே மனம் வராது.
புருஷர்களுக்கு ஒரு பக்கம். பெண்களுக்கு ஒரு பக்கம் படிக்கட்டுகள். புருஷாள் வருவதற்கு முன்னால்ப்போனால் யோசனை இல்லாமல் குளிக்கலாம். இரங்கி விட்டால் முதலில்

துருதுருவென்றுமீன் குஞ்சுகள்   காலை   கிசுகிசு மூட்டுவதுபோல   நெளிந்து,நெளிந்து  தொட்டுவிட்டுத் தண்ணீரில் மறையும்.   கல் படிக்கட்டுகளில் துணியைத் துவைத்துக்    கசக்கிக் கசக்கி   தண்ணீரில்  இரண்டு முறை அலசி விட்டால் பளிச்சென்று  எந்தப் புடவை,வேஷ்டி துணிகளானாலும்   புதுத்துணியை முதல் முறை தண்ணீரில் நினைத்தது போலத் தோன்றும். ஸோப்பாவது,மண்ணாவது எதுவும் அவர்களுக்குத்  தெரியாது.

தனி நபரானாலும் அக்கம்,பக்கம் உள்ள உறவினர்கள்,வயதானவர்களின்   துணிகளையும் கேட்டு வாங்கிக் கொண்டு வந்து   துவைத்துக் கொண்டு கொடுப்பது வழக்கம்.

ஓர்ப்படி குளத்துக்குப் போறேன்.  புடவை இருந்தா குடு.    நான் கிளம்பிவிட்டேன். நீ வரியா?  நான் போயிண்டே இருக்கேன். மீனா, பட்டு எல்லாரும் வந்துட்டா.

நீங்க போயிண்டே இருங்க. ஒரு எட்டுலே உங்களைப் பிடிச்சூடுவேன். கரையில் விபூதி ஸம்படம்,குங்குமச் சிமிழ் மரத்தில்,தேய்த்துக் குளிக்க  நல்லதாக குண்டு மஞ்சள்.

யராவது ஒத்தர் எடுத்துண்டா போதும்.

அவரவர்கள் முடிந்த அளவு துணியுடன்   பேசிக்கொண்டே குளத்தை அடைவார்கள்.

கிராமத்துக் குளம்  இப்படிதான்

படமுதவி—-கூகல் மிக்க நன்றி

குளத்தில் பல் தேய்த்துத் துப்பக்கூடாது. ஸோப்பெல்லாம் போடவே கூடாது. மாகஸ்னானம்,துலாஸ்னானம் என்றால்   தினம் வெற்றிலை,பாக்கு,பழங்கள் என அது ஒரு மூட்டை கூடவரும்.  விதரணையாக குளித்து  நிவேதனம்செய்து வேண்டியவர்களைத் தேடிப் பிடித்து,   மஞ்சள் குங்கும   வினியோகம்.  துணி அலசும்போது   யாருக்காகிலும் அதிகம் துணி இருந்தால்,எங்கிட்ட இரண்டு புடவையைக்கொடு . நான் அலசித் தரேன்.  வேளையோடு கிளம்பினாத்தான்  மீதி காரியம் ஓடும்.

துணி விலகாமல்  தேய்த்துக் குளித்து ,   பிழிந்த புடவையை லாவகமாக இடுப்பைச் சுற்றி அரை வட்டமாக   பின்னும் இரண்டு சுற்று சுற்றி   மேலாக்கையும் ஸரிவர கழுத்தைச் சுற்றவைத்து,பிழிந்த புடவை,பாவாடை என எல்லாவற்றையும், ஸரிவர இரண்டு தோளிலுமாகப் போட்டுக்கொண்டு, ஜலக்கிரீடை முடிந்து,  கும்பலாக  கிளம்பி பேசிக்கொண்டே அன்றைய நிகழ்ச்சி நிரல்களைப் பறிமாறிக் கொண்டு வந்தால்தான் மற்ற காரியங்களே ஓடும்.  அன்றைய கிராமங்களில்  சற்று முன்னேறிய பின்னும் இந்த வழக்கம் இருந்தது.

ஒரு வயதானவள் பேச ஆரம்பித்தாள்.   என்னவோ போ.  சின்ன வயஸிலே கல்யாணமே தேவலைபோல இருக்கு.

எங்க ஓர்ப்படியைத்தான் சொல்கிறேன்.   எனக்குத்தான்  எதுவுமே இல்லை. ஏதோ  கிருஷ்ணாராமான்னு காலம் போறது.    கால் நடக்க முடியாத ஓர்படி.  மாப்பிள்ளைதான் ஸரியில்லை.  பேத்திக்கு கல்யாணம் பண்ணணும்னு விசாரம். நிலம்,நீர்,வீடு வாசல்   எல்லாம் இருக்கு.   எதையும் எதுவும் செய்ய முடியாது.

ஏன் என்ன அப்படி. எதையாவது வைத்து வாங்கி   ஸமாளிக்கலாமே.  அதுதானே இல்லை.    அண்ணா அப்படி எல்லாம் செய்ய முடியாதபடின்னா எழுதி வைத்து விட்டார்.   என்னிதும் அப்படிதான்.    விக்க வாங்க முடிந்தா யாராவது ஏமாத்தி விடுவா. ஆயுஸு வரைக்கும்   இருக்கிறதை வைச்சிண்டு அரை வயிறு கஞ்சியாவது  குடிக்கட்டும்னு   ஸ்வாதீனம் கொடுக்க மாட்டா.

அண்ணாவுக்கோ மாப்பிள்ளை பேரிலேயே நம்பிக்கை இல்லை. அதனாலே பெண்டாட்டி,பெண்   அவளின்  பிற்காலத்திற்குப் பின்னாலே  வாரிசுகளாமே. அவர்கள்தான் எது வேண்டுமானாலும் செய்யலாமாம். பத்திரம் பதிஞ்சுட்டுப் போயிட்டாராம்!
மாப்பிள்ளைஸரியில்லே. பொண்ணு என்ன பண்ணுவா? ஏதோ ஸுமாரான இடமாவது வேண்டும். நாளைக்கே எல்லாம் அவளுக்கும்தானே.
ஏதோ உறவில் பார்க்றதாகச் சொல்லலே. ஆமாம். அது ஒன்று விட்ட உறவு. பையன் ராஜா மாதிரி இருக்கான்.. வயஸுப் பிள்ளைகள். இப்படி அப்படி ஏறத்தாழ இருக்குமோன்னோ. எங்கோயோ ஹோட்டல்லே வேலை செய்யறான் போல இருக்கு.. பேத்திக்கு துளிகூட இஷ்டமில்லே. பேச்செடுத்தாலே அழுகையும் அமக்களமாகவும் ஆயிடறது. உனக்குத் தெரிந்தவா உறவுலே யாராவது இருந்தா விசாரி.

நம்ம ஊரிலேயும் யாராவது அந்தத் தெருவில் இருக்காளா விசாரி. ஓர்ப்படிதான் விசாரிச்சு சொல்லுன்னா. அதான் சொல்றேன்.

நாளைக்கு வரச்சே பேசலாம். அவரவர்கள் வீட்டு விசாரப்பட ஆத்தை நெருங்கியாச்சு. ஏழெட்டுநாள் இந்தப் பேச்சே எடுக்காமல் குளித்துக் கரை ஏறியாகி விட்டது.

ஏண்டீ உன்னிடம் சொன்னேனே. ஏதானும் விஜாரிச்சயா? பாவம் எங்க ஓர்ப்படி. பொண்ணு ஊரிலே இருக்கா. பேத்திதான் கூட இருக்கா. யாரானும் விஜாரிச்சுச் சொன்னாதானே உண்டு. உங்கிட்டே சொன்னேன்னேன்.
ஏதாவது சொன்னாளா என்று கேட்டுக் கொண்டே இருக்கா.

நானும் விஜாரித்தேன். அசலூரா இருந்தாகூட பரவாயில்லை என்று.
இங்கேயே இருக்கிறவாளோட உறவுகூட புதுசா மனது மாறி இருக்காளாம்.

கல்யாணமே வேண்டாம் நாலு பசங்களாயிடுத்துன்னு சொன்னவாளும் புதுசா ஹூம் கொட்ட ஆரம்பிச்சிருக்காளாம். இன்னொண்ணு பிக்கல் பிடுங்கல் இல்லே. ஒரு பொண்ணுதான். அதுவும் குழந்தை இல்லை. பெரியபொண்ணாயிடுத்து. வெளியூரில் இருந்தாளே பானு அவபுருஷன்.

இதெல்லாம் நாம் சொன்னால் நன்னாயிருக்காது. காசு பணம் அதிகம் செலவாகாது.
நானும் கேள்விப்பட்டேன். எதுக்கும் அப்பன்காரன் ஸரி சொல்லணும். கல்யாணம் ஆகாம எத்தனை வருஷம் வீட்டில் அடைந்து கிடக்கணும் இந்தப் பொங்க.

அதனால்தான் அந்தப் பெண்ணும் யோசித்துக் கொண்டு இருக்கு. இந்த அப்பா, இந்தப் பணம் காசு எதுவும் மாறப்போவதில்லை.
வரவனாவது கண்ணியமானவனாக இருக்கணும். அந்த உறவுக்காரப்பிள்ளை வேண்டவே வேண்டாம். அதிலே மன உறுதியாக இருக்கு.

நானும் இன்னிக்குப் போய்ச் சொல்லுகிறேன். நல்லதா ஏதாவது முடிவு எடுக்கட்டும். இன்னும் இரண்டுநாள் நான் குளத்துக்கு வரலே. எங்க அக்காவாத்துக்குப் போறேன். இதெல்லாம் விசாரிக்கச் சொல்லுகிறேன்.
ஸரியா.
பானுவின் புருஷன் வீட்டு ஸமாசாரங்கள் மனதில் அசைபோட ஆரம்பித்து விட்டது. தொடருவோம்.

 

ஓகஸ்ட் 16, 2016 at 10:23 முப 14 பின்னூட்டங்கள்

தொட்டில்—10

தொட்டில்காலங்கள்  வேகமாக இல்லாவிட்டாலும் அதன்   போக்கில் சுழன்றுகொண்டுதானிருந்தது.

வயதாகிவிட்டது. யாருக்காக இன்னும் ஸொத்து சேர்க்க வேண்டும் என்ற எண்ணம்  யாருக்கும் ஏற்படுவதில்லை.  நான் என்ன எனக்காகவா சேர்க்கிறேன்  உங்கள் எல்லோருக்கும்தானே என்ற சொல்தான் யாவரின் தாரக மந்திரமாகவும் இருந்தது.

மெள்ள மெள்ள   நம் பையனில் ஒருவனை ஸ்வீகாரம் கொடுக்க நான் முடிவு  பண்ணி விட்டேன்.   இதில் யாரும் ஆக்ஷேபணை சொல்ல நான் அனுமதிக்க மாட்டேன்.என்ற பாணியில் போர்க்கொடி உயரலாயிற்று.
நஞ்சைநிலம்

நான் ஸம்மதிக்கவே மாட்டேன்.  நான் பெற்ற பிள்ளைகள் எனக்குதான்.  அவர்கள் முன்னுக்கு வந்திருக்கிரார்கள். இருப்பது போதும்.நான் ஸம்மதிக்கமாட்டேன்.   பதில் பேசியாயிற்று.

போ. இந்த வீட்டை விட்டு. எங்கு வேண்டுமானாலும்போ. என் பேச்சு கேளாது பதில் சொல்ல உனக்கு என்ன தைரியம்.  பேச்சு வலுத்து,  அடி அமக்களத்துடன் வெளியே மனைவியைத் தள்ளும்படியான நிலைக்கு உச்ச கட்டங்கள் நடைபெற ஆரம்பித்து விட்டது.

வீட்டைவிட்டுப் போகும் வயதா?  ஆக்கினைகளுக்குக் கட்டுப்பட்டே காலம் கடத்தியவள். ஊர் சிரிக்கும். நாலுபேர்  இரண்டு பேருக்கும் நீ சொல்வதுதான்ஸரி என்பார்கள்.   மூன்று தலைமுறைகளை சபித்துக் கொண்டு ஒரு புருஷன்.  அழலாம் மனதோடு மருகலாம்.

அம்மா படும்பாட்டைப்பார்த்து பிள்ளை எங்காவது சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டால். அவனுக்கும் இஷ்டமில்லை. இரண்டாம் கெட்டான் வயது.

பிள்ளையை என்ன காக்காயா தூக்கிக் கொண்டு போய்விடும்?    அவன் என்ன அவர்கள் வீட்டிற்கா போகப் போகிரான்?    வாயடைப்பு.நிர்பந்தம். மௌனம்.

இன்னும் எட்டு நாட்கள் இருக்கு. நாள் பார்த்தாகி விட்டது. ஸ்வீகாரம்,பூணூல் இரண்டும் ஒரே நாளில். யாரும் மூச்சு பேச்சு காட்டக்கூடாது.

அவர்களிடமும் நான் எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டேன். இரண்டு நாள் முன்னால்   யாருக்குச் சொல்லணுமோ சொல்லிக் கொள்ளலாம்.

அசட்டு அக்காவிற்கு  சற்று யோசனை வலுத்தது.ஐயோ நமக்கு ஸரிப்படுமா.

எல்லாம் ஸரியாகிவிடும். நமக்கு சாப்பாடே அவர்கள் வீட்டிலிருந்து அனுப்புவதாகச் சொல்லி விட்டார்.  இதைவிட நமக்கு என்ன வேண்டும்.?

நான் ஸரி சொன்னதால்தான் இந்த ஏற்பாடு. எனக்கும் உடம்பு நன்றாக இல்லை. அதைப் புரிந்துகொள்.
நான் அசடு. எது சொன்னாலும்ஸரி.

ஊரே அதிசயித்தது. இது என்ன காதும்,காதும் வைத்தாற்போல ஸ்வீகாரமாம்,பூணூலாம். அதிகம் யாரையும் கூப்படவில்லை. தங்கையே உறவு இல்லை. மற்றவாளைப் பற்றி என்ன?
பத்திரம் பெற்ற பிள்ளைக்குண்டான எல்லா அதிகாரமும் ஸ்வீகாரப்பிள்ளைக்கு. ஸொத்தை விற்பதானால்கூட பிள்ளயின் அனுமதி வேண்டும்.
ஸொரத்தா ஒன்றும் இல்லை. யாருடனும் யாரும் அதிகம் பேசவில்லை. அம்மாக்காரி அழுத மூஞ்சியுடன்தானிருந்தாள். போய் வந்தவர்களின் குசுகுசுப்பான பேச்சு. ஆக ஸ்வீகாரம் ஆயிற்று. கதை இத்துடன் முடியவில்லை.

பிள்ளை வீட்டுக்கு வரவில்லை. அவர்கள் வீட்டிற்கு இவர்கள் பண்டிகை பருவங்களுக்குப் போய்ச் சாப்பிட்டுவிட்டும் வந்தனர். இப்படியே காலம் போகும்போதே ஸ்வீகாரத் தகப்பனாரும் போய்ச் சேர்ந்தார். பையன் பெரியவனாகி வெளியூருக்கு வேலைக்கும் போய் விட்டான்

இனிமேல்தான் அசட்டு அக்கா காலந்தள்ள வேண்டும். நீ ஒருத்திதானே. ஒரு அரிசி வைத்துக் கொண்டு சாப்பிடு. ஸாமான் வாங்கித் தரேன். இப்படி அப்படி அரிசியாகக் கொடுப்பதும்,சிலவுக்கு பத்து ரூபாய் படியளப்பதுமாக ரேஷன் அமுலுக்கு வந்தது. அசடு.கொடுத்ததை வாங்கிக் கொண்டு பணம் போரலே. இன்னும் இரண்டு ரூபாய் வேண்டும் என்று கேட்கும் லெவலுக்கு வந்து விட்டது.

அடுத்த தெருவில் தங்கை பணக்கஷ்டம் நீங்கி நல்ல நிலையே. அக்கா புருஷன் சாவிற்கு போகக்கூட அனுமதிக்காத குடும்பத்தினரின் ஆக்கினையில். அவளின் பெரிய பையன்  அவ்வளவாகப் பணம் ஸம்பாதிக்கவில்லை. தியாகு உஷார்.வாங்கும் ஸொத்துக்களைத் தன் பணம் கொண்டே வாங்கி,   தன்பேரிலேயே  பத்திரங்களையும் தயார் செய்து கொண்டு மிகவும் உஷார் ஆஸாமியாக வலம் வந்தான்.

தானும் கல்யாணம் செய்து கொண்டு   ஊராரைப்போல ஒழுங்காக வாழ ஆசை. பெரியவன் நமக்கு வருமானம் போதாது.  நாம் இப்படியே வாழ்ந்து விட்டால் போதும். தம்பியை நீ வேண்டுமானால் செய்து கொள் . நம் வீட்டுச் சூழ் நிலையில்  இன்னும் சங்கடங்கள்   அதிகமாகும்.  கல்யாணம் வேண்டாம் என்ற தங்கை ஒருத்தி,ஆகாத அக்கா,  ஆதரவில்லாத அப்பா,   வேண்டாம்பா.

நீ செய்து கொண்டால்கூட நிம்மதி இருக்காது.முடிவு சொல்லி விட்டான்.  அங்கும் வயதான பெரியவர்கள்.

வாழத்துடித்தவனுக்குப் பெண்ணா கிடைக்காது? தெரிந்தவர்கள் மூலம்  பெண் ஏற்பாடு ஆகியது.   கல்யாணமும் ஆகியது.  வீட்டில் வழக்கம்போல  சண்டை,வாக்குவாதங்கள் தொடங்கியது.   இரண்டு மூன்று மாதங்களுக்குள்ளேயே   தனிக்குடித்தனம். அம்மா மட்டிலும்   போகவர இருந்தாள்  பக்கத்து வீடே. இவர்கள் இருந்ததும் தியாகுவின் பேரிலான வீடே.

இரண்டு வருஷங்களிலேயே  குழந்தை பிறக்கவில்லையே என்ற குறையில், தம்பதிகள்  அயலூருக்குப் போய்  வைத்தியம் செய்து கொள்ள ஆரம்பித்தனர். என்ன அவஸரம்? அம்மா சொன்னாலும்  கேட்கவில்லை.

சண்டைக்கார அப்பா போய்விட்டார்.   தியாகுவிற்கு உடம்பு ஸரியில்லை. என்ன ஏது கேட்டால், நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?   நான் பார்த்துக் கொள்கிறேன் என்ற பதிலே வந்தது.    அக்கா தங்கைகள்  பேச்சு வார்த்தை இல்லை.   என்ன நடக்கிறது என்றே கண்டு பிடிக்க முடியவில்லை.   டாக்டர் வந்து விட்டுப் போகிரார்.
என்னடா உடம்பு என்று கேட்டால் அவனும் ஒன்றும் இல்லேம்மா. நீ ஏன் விசாரப்படறே? என்கிறான்.
இரண்டு மூன்று தலைமுறைகளில் விஷயங்கள் கேட்கும்போது பெரியவர்கள், அவரவர்களின் காலம் ஏதோ ஒருவிதத்தில் முடிந்து விடுகிறது. ஸ்வீகாரம் கொடுத்தவரும் போயாச்சு.
அக்காக்காரியும் அசடாக இருந்ததால் கடவுள் நல்லபடியாகவே அழைத்துக் கொண்டு விட்டார் போலும்.
பிள்ளையாக நிர்ணயிக்கப் பட்டவன் வந்தான். காரியங்களைச் செய்தான். நிலம்,வீடுவாசல்,மாந்தோட்டம் எல்லாவற்றையும் விற்றான். நேராக அனாதைக்குழந்தைகளைக் காப்பாற்றும் ஸர்க்கார் காப்பகத்திற்குச் சென்று அவர்களின் நலனுக்காக இதை ஃபண்டாக எழுதிக் கொடுத்துவிட்டுப் போய்விட்டான்.

குழந்தைகள் காப்பகம்

Nurses tend to nstate of Tamil Nadu June 20, 2013. These unwanted infant girls in southern India’s Tamil Nadu state are considered the fortunate ones. They are India’s “Cradle Babies,” products of a government scheme that permits parents to give their unwanted baby girls anonymously to the state, saving them from possible death in a region where daughters are seen as a burden and where their murder is a common reality. Picture taken June 20, 2013. To match INDIA-CRADLEBABIES/ Thomson Reuters Foundation/Mansi Thapliyal (INDIA – Tags: SOCIETY)


படம் உதவி—-கூகல்…நன்றி.

தங்கை. பிள்ளையின் பக்கத்திலேயே கவலையுடன் இருக்கிராள். யாரோ வக்கீல் அயலூரிலிருந்து வந்துள்ளனர். ஏதோ பத்திரம் எழுதி கையெழுத்து வாங்குகிரார்கள்.
தியாகு சொல்கிரான்.அம்மா எனக்கு மனைவி அவள். நீங்கள் இருக்கும் வீட்டில் நீங்கள் யாவரும் இருக்கும் வரையில் இருக்கலாம். விற்க வாங்க முடியாது.
ஓரளவு பணமும் உனக்கு எழுதி வைத்திருக்கிறேன். மீதியாவும் என் மனைவிக்கே. அவள் உன்னைப் பார்த்துக் கொள்வாள். நான் மீளமுடியாத அளவிற்கு ரத்தப் புற்றுநோயால் கடைசி நிலையில் இருக்கிறேன்.
தாய்க்குத் தாளமுடியவில்லை. மூர்ச்சையானவள் ஸாதாரணநிலைக்குத் திரும்பவே மூன்று நாட்களாயிற்று. அதிக வைத்திய முன்னேற்றமில்லை. கேன்ஸர் வந்தவர்கள் பிழைப்பதில்லையா?இப்போதைக்கு இந்த வார்த்தை ஸரியாக இருக்கலாம்.

முடிவு உங்களுக்கே விளங்கி இருக்கும். அவ்வளவு தெரிந்த மனிதர்கள் கூட்டம் தியாகுவை வழியனுப்பக் கூடியது. இரண்டொரு வருஷங்கள் நகர்ந்தது.

தியாகுவின் மனைவிக்கு வேண்டியவர்கள் அவளுக்கு மறுமணம் செய்வித்து விட்டனர். இருந்த எல்லாவற்றையும் விற்றுப் பணமாக்கிக் கொண்டு போய்விட்டாள். இரட்டையும் ஒற்றையுமாக அவளுக்கு மூன்று குழந்தைகள்.
குழந்தைகள்
படம் உதவி கூகல். மிக்க நன்றி

தியாகுவின் அம்மா,அக்கா என்று யாவரும் துக்கத்தின் பிடியில் போனார்கள்.
இருந்த பெரியபிள்ளை போனது வேலைக்காரி காலையில் பார்த்த போதுதான் தெரிந்தது. விவரிக்க இஷ்டமில்லை.
அந்த வீடும் தியாகுவின் மனைவியாக இருந்தவளுக்குதான். நம்ப முடிகிறதா?

தொட்டில்கள் ஆடுகிறது. அனாதை இல்லத்திலும், முன்னாள்மனைவியாக இருந்த தியாகுவின் மனைவியின் இந்நாள் குடும்பத்திலும். கதையாகப் படியுங்கள். நீண்ட கதை.நிதானமாகப் படியுங்கள்.

 

ஜூலை 26, 2016 at 2:06 பிப 11 பின்னூட்டங்கள்

தொட்டில்—9

தொட்டில்வேலைக்குப் போக ஆரம்பிக்கு முன்னர்  வீட்டில் இந்த சண்டை சச்சரவுகள் எல்லாம் பூணூலை  முன்னிறுத்தியே  ஆரம்பமாகியுள்ளது. உண்மையில் பூணூலில் ஒருவருக்கும் அக்கறை இல்லை. சொத்து. நம் ஏழ்மை.

இனி இவர்கள்  இதைப்பற்றி பேச விடாமல் நாம் அதிரடியாக ஏதாவது செய்ய வேண்டும்.  மஹா பெரியவாள் பிறந்த ஊர் அருகிலுள்ளது. அங்கும் ஒரு பெரியவர்   ஏழைப் பையன்களுக்குப் பூணூல் போட்டு வைக்கிரார்.  அவ்விடம் போய் நாம்  குடும்ப நிலவரத்தைச் சொல்லிக் கேட்போம்.

யாருமே வேண்டாம். அவர்களாகவே  போட்டு விடட்டும்.   பிறகு இந்தப் பேச்சே வராது.   முடிவெடுத்து விட்டனர்.

நிலம் நீச்சு மேற்பார்வை பார்க்க   ஏதோ வேலையும் கிடைத்தது.  வீட்டில் இரண்டு சமையலும்.   பெரிம்மாவை திட்டுதலுமாக  எப்போதும்   சச்சரவு நீடித்தது.

தியாகு ஒருநாள்    பூணூல் போட்டு வைக்கும் பெரியவரைப் பார்த்து பேசிவிட்டு வந்தான். பெற்றவர்கள் வராமல் செய்வதற்கு மறுப்பு  தெரிவித்தாலும் வயதையும் வீட்டு சூழ்நிலையையும் உத்தேசித்து நல்ல நாள் ஒன்று குறிப்பிட்டு சொல்லி விட்டார்.

விடியற்காலமே   நிலத்தில்  சில ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டுப் போன இரண்டு பிள்ளைகளும்    புது வேஷ்டியும்,  பூணலும்,    மாலையும் கழுத்துமாக வீட்டிற்கு வந்து    சாயங்காலம்  அம்மாவிற்கு  நமஸ்காரம் செய்கிரார்கள்.  என்னடா இது  தாய் விக்கித்துப் போய்  ஒரு கணம்  அப்படியே நிற்கிறாள்.    அடக்க முடியவில்லை அழுகையை. என்ன அம்மாடா நான்.   இன்னும் என்ன வெல்லாம்  ஆகப்போகிறதோ?

அந்த மனுஷன் கத்துவாரே.   நன்னா இருங்கடா. காலம் விடியணும்.  கதறல்தான்.

பெரியபெண் கத்துகிராள். வெளியில் போங்கடா. அப்பாகாரரும் வந்து விட்டார். அடிக்கப்போய் பசங்கள் தடுத்து நாங்கள் தப்பு ஒன்றும் செய்யவில்லை. இனி உங்கள் அடியெல்லாம் மறந்து விடுங்கள். ஏக ரகளை. பக்கத்து வீட்டுப் பாட்டி வருகிராள். விஷயம் தெரிகிறது.

நகருங்கள் எல்லாம்.  மஞ்சபொடி இருந்தா கொண்டுவா. ஆரத்தியைக் கரைத்து  பிள்ளைகளை நிற்க வைத்து ஆரத்தி எடுத்து வாசலில் கொட்டிவிட்டு வருகிறாள். போதும் உங்கள் சண்டை. ஊர் சிரிக்கும்.கௌரவமாக இருங்கள் என்று பல விதத்திலும் சொல்லி பெருத்த சண்டையை    குறைக்கிராள்.  சாப்பாடு,அப்படியே கிடந்தது. ஸந்தோஷமான நாள்   மூலைக்கொருவராக முடங்கினர்.ஊரெல்லாம் இதே பேச்சு.

நாட்கள் ,மாதங்களாக நகருகிறது. பிரும்மசர்ய ஆசிரமம் நல்ல கல்வியை கற்கும் நேரம்.  இந்தப் பிள்ளைகளும், அக்கம் பக்க நிலங்களையும் கவனித்து, அவர்களுக்கு இலாபகரமாக நெல்லை விற்றுக் கொடுத்துத்,தாங்களும் அதிலும் தியாகுவும்  பொருளீட்ட ஆரம்பித்தனர்.
பெரியபெண்ணுக்கு வயது அதிகம். கல்யாணமில்லை. இன்னொரு பெண் ஏதோ இரண்டாந்தாரமாக கோவிலில் வைத்து கல்யாணம்.

எதற்கும் யாரையும் கூப்பிடுவதில்லை. வன்மம் அதிகமாகிக் கொண்டே போனது. தியாகு சின்னதாக வீடுகூட வாங்கி விட்டான்.

அக்கா குடும்பம். பெரிப்பா திடீரென உடல்நலம் குன்ற ஆரம்பித்தது. போக்குவரத்து பேச்சு வார்த்தை இல்லை.பிரயோஜனமுமில்லை. அவருக்கு தன்நிலத்தையே பார்க்கப் போகக் கூட முடியவில்லை. அவருடைய நிலத்தின் பக்கத்து நிலக்காரரும் அவருக்கு ஸொந்தமானவர். அவர்தான் நிலத்தை கவனித்தார்.

அவருக்கும் இந்த நிலத்தின்மீது ஒரு கண். அக்கா,தங்கை குடும்பமும் விரோதிகளாக இருக்கிரார்கள். நல்ல சான்ஸ்தான் என்று கணக்குப் போட ஆரம்பித்து விட்டது.

அவருடைய வழக்கமே நிலமுள்ளவர்களுக்கு ஏதாவது கஷ்டம் வந்தால் வலியபோய் பணம் கொடுப்பது. அவர்களுக்கு முடியாத ஸமயங்களில் கஷ்டம் கொடுத்து எழுதி வாங்குவது,மேன்மேலும் பாரம் சுமத்தி விற்கும் நிலைக்கு ஆளாக்கி தானே வாங்குவது என்பதில் கை தேர்ந்த நிபுணர். நிலத்தை ஆர்ஜிதம் செய்வதில் நிபுணர்.

பெரிப்பாவிற்கு தான் போய் விட்டால் இந்த அசட்டு மனைவி தெருவில் நிற்பாளே! யோசனைகளே ஆளை உலுக்கியது. என்ன செய்யலாம் யோசனையை பக்கத்து நிலக்காரரையே ஆத்மார்த்தமாக நம்பி கேட்க ஆரம்பித்தார். அவருடைய புத்தி இன்னும் தீட்சண்யமாக வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது.

நாமே நம்முடைய பிள்ளையை ஸ்வீகாரம் கொடுத்து ஸொத்தை அடைந்து விடலாமே. மெள்ள மெள்ள யோசனை வலுத்தது.

நான் இருக்கும் போது உனக்கேன் கவலை. உனக்கு ஒன்றும் ஆகாது. உன் மனைவி எனக்குக் கூடப் பிறந்தவள்மாதிரி. நீ கவலையே படாதே. பங்காளிகளால் கஷ்டம் வரலாம். நான் அதற்கும் யோசனை வைத்துள்ளேன் கவலைப்படாதே.
வார்த்தைகள் தேனாக இனித்தது.

செயல்படுத்த வேண்டுமே. வீட்டிற்கு வந்ததும் அவர் மனைவியிடம் நான் ஒரு நல்ல காரியம் செய்யப் போகிறேன். யாரும் மறுப்பு சொல்லக்கூடாது. என்றாவது மறுப்பு சொல்ல அந்தக்கால மனைவிகளுக்கு உரிமை இருந்ததா என்ன?

யார் ஸொத்தை குறைந்த விலைக்கு வாங்கப் போகிராரோ? யார் சாபம் இடப் போகிரார்களோ? எதற்கு இந்தப் பேராசையோ? மனைவி ஸந்தோஷப்படவில்லை.
என்ன ஏது என்றும் கேட்கவில்லை.
நான் ஒருவருக்கு வாக்கு கொடுத்திருக்கிறேன். என்ன ஏது என்று யாரும் கேட்கவில்லை.
கதையில் பெரியப்பாவாக வருபவரிடம் சென்று உனக்கு இகம்,பரம் இரண்டிற்கும் உங்கள் குடும்பத்திற்கு நான் இருக்கிறேன். என் பிள்ளைதான் உன் பிள்ளை. யாருக்கும் இப்போது சொல்ல வேண்டாம். கொஞ்சம் பொறு.

என்ன இவன் இப்படிச் சொல்லுகிறான். புரியவில்லையே. புரியும் பிறகுதான். ஓ.இவனுக்கும் ஒரு பிள்ளை இருக்கிரான். நமக்கு அதெல்லாம் ஸரிப்படுமா?

கண்ணான நிலம். பிள்ளையைக் கொடுத்தாலென்ன பெயரளவிற்குதானே. மனதில் பதிந்தாகி விட்டது.

தியாகு இன்னுமொரு வீடு வாங்கி இருக்கானாம். இதுவும் அவருக்கு ஒரு செய்தியாகத் தெரிவித்து அவர்களெல்லாம் எக்காலத்திலும் திரும்பியும் பார்க்க மாட்டார்கள் உங்களை. நானிருக்கப் பயமேன்? தொடரலாம்.

ஜூலை 24, 2016 at 12:56 பிப 14 பின்னூட்டங்கள்

தொட்டில்—8

8 வதுதொட்டிலை ஆட்டுவதற்கு ஆ.யத்தம். பாருங்கள் உங்களுக்கும் இப்படி ஏதாவது கதைகள் ஞாபகத்திற்கு வரலாம்.

Continue Reading ஜூன் 21, 2016 at 12:29 பிப 9 பின்னூட்டங்கள்

தொட்டில்–7

தொட்டில்களாகவே ஆட்டிக் கொண்டிருக்கிறேன். வண்ணவண்ணத் தொட்டில்கள். இது நம்பர் ஏழு.

Continue Reading ஜூன் 11, 2016 at 12:56 பிப 21 பின்னூட்டங்கள்

Older Posts


ஜூன் 2023
தி செ பு விய வெ ஞா
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 293 other subscribers

வருகையாளர்கள்

  • 547,505 hits

காப்பகம்

பிரிவுகள்


சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

Chitrasundar's Blog

நாங்களும் சமைப்போமில்ல!!!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com News

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.