Posts filed under ‘டிபன் வகைகள்’

மினுமினு முருங்கைக்கீரை அடை

தொடர்ந்து ப்ளாக் போஸ்ட்செய்ய ரிப்ளாக்தான் உபயோகமாகிறது. தின்க அலுக்காதது முருங்கைக்கீரை அடை. திரும்பவும் செய்யுங்கள்.ருசிக்கும். அன்புடன்.

சொல்லுகிறேன்

View original post 304 more words

ஜூன் 17, 2015 at 7:34 முப 10 பின்னூட்டங்கள்

தாய்லாந்து ஸ்டைல் நூடுல்ஸ்.

நூடல்ஸில் பனீர் சேர்த்துச்,செய்யும் விதமிது..ஸ்ப்ரவுட்ஸ்,வேர்க்கடலை முதலானது சேர்த்துச் செய்ததை மருமகள் அனுப்பிய குறிப்பிது. நம் விருப்பப் படி சற்று மாற்றியும் செய்யலாம். உங்கள் திறமைகளும், வெளிக் கொணறலாம். பாருங்கள்,செய்யுங்கள்.

Continue Reading மார்ச் 31, 2014 at 7:19 முப 19 பின்னூட்டங்கள்

நொய் புளி உப்புமா அல்லது புளிப் பொங்கல்.

கிராமங்களில் அடிக்கடி செய்யக்கூடியது இந்தவகை. யாவரும் நெல்லை

மிஷினி்ல் கொடுத்து அரிசியாக செய்து வரும்போது எப்படியும் சிறிதளவாவது

அரிசி இடிந்து நொய்யாக அதாவது குருணையாக மாறும். அதைத் தனியாக

எடுத்துப் பல விதங்களில் உபயோகப் படுத்துவார்கள். புழுங்கலரிசியில் அதிகம்

நொய் விழுவதில்லை. நான் எழுத ஆரம்பித்ததிலிருந்தே இந்தப் புளி உப்புமாவை

எழுத நினைத்தும் ஒன்று நொய் கிடைப்பதில்லை. இவ்விடம்

வரும்போது கவனத்தில் வருவதில்லை. இந்த ஸமயம் எல்லாம்

கூடி வந்தது. வகையாகவும் அமைந்தது. இது என்ன மஹாப்பெறிய

வஸ்துவென்று நினைக்கலாம். இங்கே சென்னையில் வீட்டைச் சுற்றி

பெயின்டிங் வேலை நடைபெற்றது. வேலையாட்கள் மிகவும் தூரத்திலிருந்து

வருவதால் அவர்களுக்கு டிபன், சாப்பாடு வீட்டிலேயே செய்து

கொடுத்தார்கள். இதில் நானும் இந்த உப்புமாவைச் செய்யும்படி சொல்லி

ஞாபகப்படுத்திக் கொண்டேன். எனக்கு உங்கள் யாவருடனும் அதைப்

பகிர்ந்து கொள்வதுதானே முக்கியக் காரணம். புளிப்பொங்கல் எனக்கு

ரொம்பவே பிடித்திருந்தது. கதையில்லை நிஜம் இது. சிறிய அளவில்

வேண்டியதைப் பார்ப்போம்.

வேண்டியவைகள்—

அரிசி நொய்–2 கப்

புளி—ஒரு கெட்டியான பெரிய நெல்லிக்காயளவு.

நல்லெண்ணெய்—2 டேபிள்ஸ்பூன்

கடுகு—அரை டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு—வகைக்கு 2டீஸ்பூன்கள்

மிளகாய்வற்றல்—3

வெந்தயம்–கால் டீஸ்பூன்

பெருங்காயம்–ஒரு சிறிய கட்டி

ருசிக்கு—உப்பு

தேவைக்கேற்ப—வெங்காய, பூண்டுத் துண்டங்கள்

கறிவேப்பிலை—10 அல்லது 15 இலைகள்

சிறிது மஞ்சள்ப் பொடி

செய்முறை—

நாம் இதை ரைஸ் குக்கரிலேயே செய்வோம். மிகவும் சுலபம்

அரிசி நொய்யைக் களைந்து கல்லில்லாமல் அறித்தெடு்த்து தண்ணீரை

வடிக்கட்டவும்.

புளியைத் தண்ணீரில் ஊற வைத்து 2,3 முறை தண்ணீர்விட்டுக்

கறைத்துச் சக்கையை நீக்கவும்.

புளித்தண்ணீரை அளந்து விடவும்.மேற்கொண்டு தண்ணீர் சேர்த்து

ஒரு பங்கு நொய்யிற்கு 3 பங்கு தண்ணீரென மொத்தக் கணக்கில்

அளந்து விடவும்.

வாணலியில் நல்லெண்ணெயைக் காயவைத்து, கடுகு,வெந்தயம்,மிளகாய்,

பருப்புகள், பெருங்காயம் இவைகளைத் தாளித்துகறிவேப்பிலை,பூண்டு,

வெங்காயத் துண்டுகள் இவைகளையும் சேர்த்து வதக்கி புளித்தண்ணீருடன்

கூடிய நொய்யில் சேர்க்கவும்.

வேண்டிய உப்பு, மஞ்சள்ப்பொடி சேர்த்து ரைஸ் குக்கரில் இவைகளை

மாற்றி குக்கரை ஆன் செய்யவும்.

பதமாக வெந்து முடிந்ததும், குக்கரைத் திறந்து கரண்டிக் காம்பினால்

வெந்த கலவையை நன்றாகக் கிளறி மூடவும்.

5 நிமிஷங்கள் கழித்துத் தயாரான புளிப் பொங்கலை சுடச்சுடப்

பகிர்ந்து உண்ண வேண்டியதுதான்.

புளி, காரம் இரண்டுமே அதிகப்படுத்தலாம். இஞ்சி, பச்சை மிளகாய்

சேர்க்கலாம். வேர்க்கடலை தாளிக்கலாம். ரிச்சாக தயாரிப்பதானால்

இருக்கவே இருக்கிறது முந்திரி.

பாஸ்மதி அரிசியின் நொய் ஆனால் 2 பங்கு ஜலமே போதும்.

இது ஸிம்பிள் தயாரிப்பு.

பொங்கலோ, உப்புமாவோ எந்த பெயர் வேண்டுமானாலும் நாம்

சொல்லலாம்.

4 கப் செய்ததை அப்படியே போட்டிருக்கேன். யார் வேண்டுமானாலும்

எடுத்துச் சாப்பிடலாம்.

நொய் புளிப் பொங்கல் அல்லது உப்புமா.

.

சேர்த்துப்

பிப்ரவரி 28, 2012 at 10:09 முப 13 பின்னூட்டங்கள்

புழுங்கலரிசி சேவை

பிழியும் நிலையில் சேவை

சேவை என்பது    இடியாப்பம்.  எனக்கு இந்த பெயர்   முன்பெல்லாம்

தெரியாது.    சேவை என்றே  சொல்லி வழக்கம்.

இந்தப் பெயரும் நன்றாகவே இருக்கிறது.  இதனுடன் கலக்கும் பொருளைக்

கொண்டு பெயர் சொல்லுவோம்.  தேங்காய்,   எள்,   எலுமிச்சை,வெல்லம்,

தயிர்,காய்கறி,   மோர்க்குழம்பு,   தேங்காய்ப் பால் என பட்டியல் நீளும்.

இப்போது   இடியாப்பம்  குருமா தான்   முதலிடத்தில் இருக்கிறது.

நாம் முதலில்   ப்ளெயின்   சேவை தயாரிப்பதைப் பற்றி அதுதான்

புழுங்கலரிசியில்   தயாரிப்பதைப் பற்றி பார்ப்போம்.

வேண்டியவைகள்

புழுங்கலரிசி—3கப்.      இட்டிலிக்கு  உபயோகிக்கும்  அ ரிசி

இடியாப்பம் செய்ய உபயோகிக்கும் —    சேவை நாழி

அரிசியைக்  களைந்து  நன்றாக    ஊறவைக்கவும்.

செய்முறை-

கிரைண்டரில் ,  ஊறிய அரிசியை ப்  போட்டு  அதிகம்  ஜலம் விடாமல்

கெட்டியாகவும்,    நைஸாகவும்   அரைத்தெடுக்கவும்.

இட்டிலி வார்ப்பது போல     குழித்தட்டுகளில்   எண்ணெய்  தடவி  மாவை

விட்டு ரெடி செய்யவும்.

சேவை  நாழியில்   உட்புறம் லேசாக எண்ணெய்   தடவி வைக்கவும்.

குக்கரில் அளவாக   தண்ணீர்விட்டு     இட்டிலி ஸ்டேண்டை வைத்து,

வெயிட் போட்டு    இரண்டு  விஸில் வரும் வரை  மிதமான தீயில்

இட்டிலிகளாக  வார்க்கவும்.

சாதாரண  இட்டிலி   வார்க்க வெயிட் போட மாட்டோம்.

நீராவி அடங்கிய பின்  இட்டிலிகளை ஒன்றன்  பின்  ஒன்றாக

எடுத்து  அச்சில் போட்டு    அழுத்தி   சேவைகளாகப்  பிழிந்து

எடுக்கவும்.  சூட்டுடன்   பிழியவும்.

திருகு  முறையிலும்,  ப்ரஸ் செய்து பிழியும் முறையிலும்

சேவை நாழிகள் கிடைக்கின்றன.

ப்ளெய்ன்  சேவை   ரெடி.

இதனுடன்  குருமா சேர்த்து    சாப்பிடலாம்.

தேங்காய் சாதத்திற்கு தயாரிப்பது போல  தாளிதம் செய்து

தேங்காயை  வறுத்து சேர்க்கலாம். இது தேங்காய் சேவை.

எலுமிச்சை சாற்றில்    தாளித்துக் கலக்கலாம். இது எலுமிச்சை

சேவை.

தயிரில் தாளித்து  தயாரித்தால்   தயிர் சேவை.

எள்ளில் தயாரித்தால் எள்ளு சேவை.

வெல்லப் பாகு சேர்த்து தயாரித்தால் வெல்ல சேவை.

மோர்க் குழம்பு,   தேங்காய்ப் பாலுடனும்,  சாப்பிடும்

வழக்கம் உண்டு.

எல்லா காய் கறிகளுடனும்,   உப்பு சேர்த்து வதக்கி

ஸோயா ஸாஸ் கலந்தும்  தயாரிக்கலாம்.

தக்காளியை உபயோகப் படுத்தலாம்.

குருமா தயாரித்து   உடன் உபயோகிப்பதுதான் பிரபலமாக

உள்ளது.

நம்முடைய ரஸனைக்கு ஏற்றவாறு  பலவிதங்கள்.

சுலபமாக   மாவை அறைத்து     முதல்நாளே  பிரிஜ்ஜில்

வைத்துக் கொண்டு   வேண்டும் போது  தயாரித்து

உபயோகிக்கலாம்.

குருமா செய்முறை முன்பே   இருக்கிறது.

சேவை படங்கள் சில.

இட்டிலியாக

பிழியும் நிலையில் சேவை

புழுங்கலரிசி சேவை

எந்த விதமான  ருசி வேண்டுமோ    அந்த விதமான மேல் சாமான்கள்

கலவையைத் தயார் செய்து     தக்கபடி   ப்ளெயின் சேவையுடன்,

திட்டமாகக்  கலந்தால்    விருப்பமானது தயார்.

குருமா,  தேங்காய்ப்பால்,  மோர்க்குழம்பு வகைகளை   கிண்ணங்களில்

ஸ்பூனுடன்  கொடுத்து    ப்ளேட்டில்   ப்ளெயின் சேவையைக் கொடுக்கவும்.

மற்ற வகைகளைக்  கலந்த நிலையிலே  சித்ரான்னங்கள்  டைப்பில்

அழகாகக்  கொடுக்கலாம்.

மே 3, 2011 at 8:15 முப 22 பின்னூட்டங்கள்

தோசையும் சுலப சட்னியும்.

இதுவும்    வழக்கமான   தோசைதான். நான் எந்த விகிதத்தில் அரிசி,

பருப்பு,  கலந்து செய்கிறேனென்பதுதான்     சொல்ல வந்த விஷயம்

என்று கூடத் தோன்றும்.  கரகரவென்று தோசை குழந்தைகளுக்குப்

பிடிக்கிரது. அதனால் நான் எப்படிச் செய்கிறேனென்று சொல்லுகிறேன்.

வேண்டியவைகள்.

இட்டிலிக்கு  உபயோகிக்கும்   புழுங்கலரிசி—3 கப்

பச்சரிசி—–1 கப்

துவரம்பருப்பு—-கால்கப்

வெந்தயம்—5 டீஸ்பூன்

நல்ல விழுது காணும் உளுத்தம் பருப்பு—-1 கப்

தேவைக்கு—-உப்பு

செய்முறை

அரிசிவகைகள்,   துவரம்பருப்பு,   வெந்தயம் இவைகளைத்   தண்ணீர்-

-விட்டுக் களைந்து  சுத்தம் செய்து   நல்ல ஜலம் விட்டு ஊற வைக்கவும்.

இதே போல் உளுத்தம் பருப்பையும்    நன்றாகக் களைந்துத் தனியாக

ஜலம் விட்டு ஊறவைக்கவும்.

அரிசி நன்றாக  ஊறினால்   சீக்கிரம் அரைபடும்.

குறைந்த பக்ஷம்   5,   6 மணிநேரம் ஊறினால் நல்லது.

பருப்பு 2,  3 மணி நேரம் ஊறினால் கூட போதும்.

கிரைண்டரை  நன்றாகச்  சுத்தம்  செய்து  அலம்பி  முதலில்

உளுத்தம் பருப்பைப் போட்டு    திட்டமாக ஜலம்  தெளித்து நன்றாக

அரைக்கவும்.   பஞ்சுப் பொதி  மாதிரி,  நன்றாகக்   குமிழ்கள் வரும்படி

அரைக்கவும். நல்ல கிரைண்டரானால்   40 நிமிஷமாவது ஆகும்.

உளுந்து  மாவைப்   பூரவும்   எடுத்துவிட்டு,  அரிசியைச் சிறிது,சிறிதாகக்

கிரைண்டரில் போட்டு தண்ணீர் திட்டமாகச் சேர்த்து   நன்றாக  மசிய

வெண்ணெய் போல  அறைக்கவும். இட்டிலி மாவைப்போல அல்ல.

நைஸாக அறைக்கவும்.   இப்போது வேண்டிய உப்பையும் சேர்க்கவும்.

2, 3 சுற்றுகள் சுற்றி    முதலில் அறைத்து வைத்த உளுந்து விழுதையும்

சேர்த்து அறைக்கவும்.

இரண்டு  மூன்று  நிமிஷத்தில்  மாவுக்கலவை ஒன்று சேர்ந்துவிடும்.

நல்ல சுத்தமான   பாத்திரத்தில்   மாவை எடுக்கவும்.சிலவுக்குத் தக்கபடி   மாவைக் கொஞ்சம் வெளியில் வைத்தும்,

மிகுதியை   ப்ரிஜ்ஜில் வைத்தும்   உபயோகிக்கலாம்.

மாவு சற்று  பொங்கி வருமளவிற்கு   முதல்உபயோக  மாவு வெளியில்

இருக்கலாம்  .   மிகுதி பிரிஜ்ஜில் இருந்தால்கூட   மாவை  2,  3, மணி நேரம்,

தோசை வார்க்குமுன்னர் வெளியே எடுத்து வைத்தால் கூட போதும்.

மாவு பதமாக இருக்கும்.

தோசை வார்ப்பதற்கு நான் ஸ்டிக் தோசைக் கல்தான் சுலபமாகவுள்ளது.

கல்லில்  எண்ணெய்  தடவ,  உருளைக் கிழங்கை பாதியாக  நறுக்கி

எண்ணெயில் தோய்த்து உபயோகிக்கலாம்.

மாவைச்  சற்று  கெட்டியாகவே  கறைத்து வைத்துக் கொள்ளவும்.

கல்லில் எண்ணெய் தடவி   சூடாக்கவும்.

தீயை ஸிம்மில் வைத்து  ஒரு கரண்டி மாவைக் கல்லில் விட்டு அடி-

-தட்டையான  கரண்டியினால்  மாவைச் சுழற்றி தோசையாகப்

பரப்பவும்.

தீயை அதிகமாக்கி,   தோசையைச் சுற்றிலும்   ஒரு டீஸ்பூன் எண்ணெய்

விடவும்.

தோசையின் மேல் பல   பொத்தல்களுடன்  ஈரப்பதம் குறையும்.

பதமாக தோசையைத் திருப்பிப் போட்டு  தீயைக் குறைக்கவும்.

அடிபாக தோசை சிவக்க ஆரம்பித்தவுடன்,  திருப்பிப்  போட்டு

மடித்து எடுக்கவும்.

கரகரஎன்று  தோசை நன்றாக வரும்.

எண்ணெய் தடவி   தோசையைப்பரப்பி, தீயை அதிகமாக்கி சுற்றிலும்

எண்ணெய்விட்டு , மேலே சொன்னபடிதான்  மிகுதியும்.

இதுவே ஹாட் ப்ளேட்டானால்    தீயைக் குறைத்தால் கூட  ஒரு

தோசையின்இடைவெளியில் மற்றொன்று வார்க்குமுன்  சிறிது

தண்ணீரைத் தெளித்து கல்லைத் துடைத்து வார்த்தால்  தோசை

ஸரியாக   எடுபடும்.

ஸரியாக புரிந்து கொண்டால் தோசை பட்டு பட்டாக வரும்.

தோசைத் திருப்பியை  நுணியில் மாவு ஒட்டாமல் சுத்தமாக

வைத்துக்  கொள்ளுதல் அவசியம்.

பசங்களுக்கு   சட்டென்று   அரைத்துப் போட ஒரு சட்னியும் கூட இதோ.

1வெங்காயம்,  ஒரு தக்காளிப்பழம், 1 பச்சைமிளகாய் நறுக்கிக்கொண்டு

எண்ணெயில் வதக்கவும்.

3டேபிள்ஸ்பூன்   வேர்க்கடலையையும் சிவக்க வறுத்து கூட வைத்து

உப்பு சேர்த்து அரைத்தால்   திடீர் சட்னியும் தயார்.   வேறு என்ன சேர்க்க

நினைக்கிறீர்களோ   அதையும் சேர்த்து அரையுங்கள்.

வீட்டில் தோசை மாவு இருந்தால் துணைக்கு ஒருவர் இருப்பது போல

என்பது வசனம்.   வசனம் ஸரியாகத்தான் இருக்கும். இல்லையா

உருளைக்கிழங்கு   கறி வைத்த மஸால் தோசை செய்யலாம்.

லேசாக சீஸ் தூவி  தோசையை  மடிக்கலாம்.

டொமேடோ,  வெங்காயம்   வதக்கி வைத்து  தோசையை மடிக்கலாம்.

தோசையை மடக்கும் போது   சிறிது  வெண்ணெயைத் தடவி துப்பா-

-தோசை   தயாரிக்கலாம்.

ஊத்தப்பம்,  நமது ரஸனைக்கேற்ப    பொருள்களைக் கூட்டி விதவிதமாக

தயாரிக்கலாம்.

சுடச்சுட சாப்பிட கரகரதோசையும்,   எடுத்துப் போக   மெத்தென்ற

மிருதுவான தோசையும்   தயாரிக்கலாம்.

பலவித    சட்டினி வகைகளும்,   மிளகாய்ப் பொடி தயாரிப்பும்  ஏற்கெனவே

கொடுத்திருக்கிறேன்.

பிப்ரவரி 25, 2011 at 10:45 முப 22 பின்னூட்டங்கள்

அரிசி உப்புமா

வேண்டியவைகள்—

பச்சரிசி—–2கப்

துவரம் பருப்பு–2 டேபிள் ஸ்பூன்

கடலைப் பருப்பு-1 டேபிள் ஸ்பூன்

வெந்தயம் —கால் டீஸ்பூன.

இந்த அளவு செய்வதற்கு வீட்டிலேயே மிக்ஸியில் ரவை தயாரித்துக்

கொள்ளலாம்.

அரிசியில2 ஸ்பூன் ஜலம் சேர்த்துப் பிசறி வைத்து  ஒரு மணி நேரம்

கழித்து   மிக்ஸியில்  பெறிய   ரவையாகப் பொடித்துக் கொள்ளவும்.

பருப்பு வகைகளைச் சற்று சூடாக்கி    ஒன்றிரண்டாக பொடிக்கவும்.

வெந்தயமும் சேர்த்துப் பொடிக்கவும்

தாளிக்க வேண்டிய   ஸாமான்கள்

நல்ல எண்ணெய்—3 டேபிள் ஸ்பூன்

கடுகு–1 டீஸ்பூன்

வற்றல் மிளகாய் —3

உளுத்தம் பருப்பு—-3 டீஸ்பூன்

பெருங்காயப்பொடி—அரை டீஸ்பூன்

தேங்காய்த் துருவல்—முக்கால் கப்

மிளகு சீரகம்–தலா அரைடீஸ்பூன்

நெய் –2 டீஸ்பூன்

ருசிக்கு உப்பு

வாஸனைக்கு–கறிவேப்பிலை

செய் முறை

முன்பெல்லாம் எல்லோர் வீட்டிலும்   வெண்கலப்பானை, உருளி,போசி,

கோதாவரிகுண்டு என, அளவைகளுடன்    கால்படி,   அரைபடி, பட்ணம்படி

என அடை மொழிகளுடன்    பாத்திரங்கள் உண்டு.

அவைகளில் செய்வதுதான்  வழக்கம்.

இப்போது எல்லா அளவுகளையும்  ப்ரஷர் குக்கர்கள் ஏற்றுக்

கொண்டு விட்டது.  நாம் இப்போது குக்கரிலேயே செய்வோம்.

ப்ரஷர் பேனோ அல்லது குக்கரையோ  காஸில் வைத்து எண்ணெயைச்

காயவைத்து  மிளகாய்,கடுகு,   உளுத்தம் பருப்பு, பெருங்காயம்

இவைகளைத் தாளித்து,கறிவேப்பிலை  சேர்த்து வதக்கி,

தண்ணீர்    சேர்ப்போம்.

அளவு    ஒரு பங்கு ரவை என்றால்    இரண்டரை பங்கு ஜலம்

சேர்க்கலாம்.       மிளகு,சீரக ம் உடைத்தது

உப்பு, தேங்காய்த்துருவல் சேர்த்துக்       கொதிக்க விடவும்.

நன்றாகக் கொதிக்கும் போது தீயைச் சற்றுக் குரைத்து,

அரிசி பருப்புரவையைச்   சேர்த்து நிதானமாகக் கிளறவும்.

கலவை, வெந்து சேர்ந்து வரும் சில நிமிஷங்கள்

இரண்டொருதரம் நன்றாகக் கிளறி விட்டு நெய் சேர்த்துக் கிளறி,

குக்கரை மூடவும்.    தீயை  ஸிம்மில் வைத்து    7,    8,   நிமிஷங்கள்

வேகவைத்து    இறக்கி       5, 6, நிமிஷம் கழித்து உபயோகிக்கவும்.

வெந்தயம் சேர்ப்பது    உப்புமா  மெத்தென்று மென்மையாக

இருப்பதற்காக.வாஸனையாகவும் இருக்கும்.

சாதம் காணும் பழைய அரிசியாக இருந்தால்  உப்புமா  உதிர்உதிராக

வரும்.

காய் வகைகள்,    வெங்காயம்,   தக்காளி,     இஞ்சி, பச்சைமிளகாய்

சேர்த்தும் செய்யலாம்.சாதாரணமாக தேங்காய் சேர்த்து  செய்வது

சுலபமாகவும், பழக்கமாகவும்  இருக்கிறது.

உடன் சாப்பிட  சட்னி, ஊறுகாய்கள்,     தயிர், வெல்லம், சர்க்கரை

என எல்லாமே    ஸரியாக இருக்கும்.

மாகாளிக்கிழங்குசேர்த்த தயிர்  பச்சடிமாதிரி சுவை கொடுக்கும்.

மொத்தமாக அரிசியில்,  பருப்பு, வெந்தயம் சேர்த்து மிஷினில்

உடைத்து வைத்துக் கொண்டால்    வேண்டும்போது செய்ய இன்னும்

சுலபமாக இருக்கும்.

வாணலியில் கிளறி      மைக்ரோவேவ் பாத்திரத்தில்   மாற்றி

ஹைபவரில் 6,7   நிமிஷங்கள் மைக்ரோவேவில் வைத்தும்

எடுக்கலாம்.

சாதாரணமாக உப்புமாவை வேக வளைய நன்றாகக் கிளற வேண்டும்

என்ற சொல்    புழக்கத்தில் உள்ளது.

நவம்பர் 26, 2010 at 2:48 பிப 3 பின்னூட்டங்கள்

பூரி

செனா மஸாலாவுடனும்,—–ஆலுதாம்  கறி வகைகளுடனும் சாப்பிட

பூரியும் செய்வோமா?

வேண்டியவைகள்——கோதுமைமாவு—–2கப்

ருசிக்கு உப்பு

பூரி பொரிக்க —

வேண்டுமான எண்ணெய்.

செய்முறை—-நன்றாகச்    சலித்தெடுத்த கோதுமை மாவில்

4 டீஸ்பூன் எண்ணெயும்,   ருசிக்கு  உப்பும் சேர்த்து  நன்றாகக் கலக்கவும்.

திட்டமாக ஜலம்விட்டு கெட்டியாக மாவை நன்றாகப்   பிசையவும்.

தளர இருக்கக் கூடாது.

நன்றாகப் பிசைந்த  மாவை திரட்டி  ஒரே அளவு உருண்டைகளாகப்

பிரித்து  உருட்டிக் கொள்ளவும்.

ஜலம் குரைவாக சேர்ப்பதால் இப்படி எழுதுகிரேன். உருண்டைகளை

அழுத்தமாக உருட்டினால் பூரி   விரியாமல் வட்டமாக வரும்.

ஒவ்வொரு உருண்டையாக சிறிது எண்ணெயில்  தொட்டுக்

குழவியினால்   வட்டமான  பூரிகளாக   இடவும்.

மாவு தோய்த்து இடுவதில்லை.   ஒரு தட்டைக் கவிழ்த்துப்

போட்டு  அதன்மேல் பூரிகளைப் பரத்தலாக வைத்துக்

கொள்ளவும்.

வாணலியில் எண்ணெயைக் காய வைத்து   நல்ல

சூடான எண்ணெயில்  பூரிகளை சற்று  சட்டுவத்தால்

லேசான அழுத்தம் கொடுத்து திருப்பி விட்டு பூரிகளைப்

பொரித்தெடுத்து  டிஷ்யூ பேப்பரில் போட்டு  உபயோகிக்கவும்.

இந்த முறையில் செய்த பூரிகள் எண்ணெய் அதிகம்

இழுப்பதில்லை.

வாணலியில் எண்ணெயும்  குழம்புவதில்லை.

பூரியும்  நன்றாக உப்பிக்கொண்டு  நன்றாகவே இருக்கிறது.

இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது  மேல்மாவு தோய்த்து

பூரியை இடும் முறை.

இந்த முறைக்கு  மாவில்  சற்று ஜலம் அதிகம் சேர்க்கிரோம்.

இது எண்ணெய் தொட்டு இட்ட பூரிகள்

செய்யச் செய்ய யாவும் நன்றாக பழக்கமாகி விடும்.

நவம்பர் 22, 2010 at 2:50 பிப பின்னூட்டமொன்றை இடுக

ஜெவ்வரிசி கிச்சடி

என்னுடைய மருமகள் சுமன் செய்யும்  விசேஷமான

சிலவகைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

வேண்டியவைகள்——ஜெவ்வரிசி(பெறியவகை)-1கப்

வேர்க் கடலை—-1கப்

எண்ணெய்—-2  டேபிள் ஸ்பூன்.

நறுக்கிய பச்சை மிளகாய்—-2

ஜீரகம்—–அரை டீஸ்பூன

பொடியாக நறுக்கிய உருளைக் கிழங்கு-முக்கால்கப்

நல்லமோர்—அரைகப்

நறுக்கிய கொத்தமல்லி– ஒரு டேபிள் ஸ்பூன்

ருசிக்கு—உப்பு,    அரை டீஸ்பூன்    சர்க்கரை

செய்முறை——தயாரிப்பதற்கு 5, 6 மணிநேர முன்பே

ஜவ்வரிசியை நன்றாகக் களைந்து தண்ணீரை ஒட்ட

வடித்துவிட்டு மோரைக் கலந்து ஊற விடவும்.

ஊறின ஜெவ்வரிசி உதிர், உதிராகவும்,நன்றாக

ஊறியும் இருக்க வேண்டும்.

வேர்க் கடலையை சிவக்க வறுத்து தோல் நீக்கி

ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி ஜீரகத்தைத்

தாளித்து, பச்சைமிளகாய்  ,கிழங்குத் துண்டங்களைச்

சேர்த்து வதக்கவும்.

கிழங்கு வதங்கியதும்,   ஊறின ஜெவ்வரிசியை

சேர்த்து உப்பும்  சர்க்கரையும்   கலந்து வதக்கவும்.

தீ மிதமாக இருக்கட்டும்.

நன்றாகச் சூடேறி வதங்கியபின் வேர்க்கடலைப்

பொடியை சேரத்துக் கிளறி சூடாக இறக்கவும்.

விருப்பத்திற்கு ஏற்ப எலுமிச்சை சாறு சேர்த்து

பச்சைக் கொத்தமல்லியைத் தூவவும்.

விரத நாட்களில் அன்னம் சேராத உணவாக இதைக்

கருதி உண்பதால்  வெங்காயம் சேர்ப்பதில்லை..

எண்ணெய் வேண்டுமானால் அதிகம் சேருங்கள்.

காரமும் அப்படியே.

ஒக்ரோபர் 4, 2010 at 1:11 பிப 11 பின்னூட்டங்கள்

திடீர் தோசை

எண்ணினால்  உடனே செய்ய முடியும்.

வேண்டியவைகள்     அரிசி மாவு—1 கப்

மைதா அல்லது கோதுமை மாவு—-1கப்

மோர்—அரை கப்பிற்கு அதிகம்   விருப்பப்படி

ருசிக்கு உப்ப

 பச்சைமிளகாய்-1   நீளமாகக் கீறிக் கொள்ளவும்.

பொடியாக நறுக்கிய வெங்காயம்  –கால் கப்பிற்கு குறையாமல்

வேண்டிய அளவு—–எண்ணெய்

செய் முறை—-மாவுகளை மோர்,உப்பு ஜலம் சேர்த்து

தோசைமாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.

மிளகாய் வெங்காயத்தை லேசாக வதக்கி  ஆற வைத்து

மாவுடன் கலக்கவும்.

நானஸ்டிக் தோசைக் கல்லில் எண்ணெய் தடவி மிதமான

சூட்டில், தோசையை வார்க்கும் போதே பரவலாக மாவை

வீசிவிட்டு  வார்க்கவும். .ஸாதா தோசையைப் போல் பரப்புவது

சரிவராது.

சுற்றிலும் எண்ணெய் விட்டு  திருப்பிப் போட்டு நன்றாக

 வேகவைத்து   எடுக்கவும்.

 சற்று முறுகலாக எடுத்தால் கூடுதலான டேஸ்டுதான்.

மிகுந்த  தோசைமாவு [அறைத்தது]   போதாது போனால்

 இம் முறையில்  மாவுகளைச் சேர்த்தும் வார்க்கலாம்.

 ஸாதா தோசையைவிட மாவு சற்று நீர்க்க இருக்கலாம்.

துணைக்கு எது வேண்டுமோ அதைச் சேர்த்துச் சாப்பிடுவது

உங்கள் விருப்பம்.

ஜூலை 22, 2010 at 1:17 பிப பின்னூட்டமொன்றை இடுக

காஞ்சீபுரம் இட்லி

வேண்டியவைகள்

பச்சரிசி—–முக்கால் கப்

புழுங்கலரிசி—-முக்கால்கப்

நல்ல வெள்ளை உளுத்தம் பருப்பு—1 கப்

முந்திரிப் பருப்பு—10   சிறியதாக உடைத்துக் கொள்ளவும்.

கடுகு—-1 டீஸ்பூன்

கடலைப் பருப்பு—1டேபிள் ஸ்பூன்

மிளகு, சீரகம்–ஒவ்வொரு  டீஸ்பூன்

பெருங்காயப் பொடி—-கால் டீஸ்பூன்

இஞ்சித் துண்டுகள்—-1 டீஸ்பூன்

தேவைக்கு—உப்பு

நல்லெண்ணெய்—-2 டேபிள்  ஸ்பூன்

நெய்——-2 டேபிள் ஸ்பூன்

கரிவேப்பிலை—–சிறிது. 

  தயிர்  1 ஸ்பூன்

செய்முறை.   

அரிசி,  பருப்பைக் களைந்து தனித் தனியே   ஊற வைக்கவும்.

மிக்ஸியிலோ,    கிரைண்டரிலோ அரிசியை   ரவைபோலவும்,

பருப்பைக் கெட்டியாகவும்  அதிகம் தண்ணீர் விடாமல் நன்றாக

அரைத்துக் கொள்ளவும்.

ஒரு ஸ்பூன்,   தயிரும் திட்டமாக   உப்பும் சேர்த்து மாவுகளை

ஒன்றாகச் சேர்த்துக் கரைத்து 7,   8   மணி நேரம்  ஊற விடவும்.

இட்லி வார்ப்பதற்கு முன் மிளகு சீரகத்தை  ஒன்றிரண்டாகப்

பொடித்துச் சேர்க்கவும்.

எண்ணெயில்  கடுகு,பருப்பு வகைகளைத் தாளிக்கவும்.

நெய்யில் முந்திரியை வறுத்து இஞ்சி, கறிவேப்பிலை,

பெருங்காயம் சேர்த்து வதக்கி மாவில் கலக்கவும்

மிகுதி எண்ணெய், நெய்யையும்  மாவில் கலக்கவும்.

சாதாரணமாக இட்லி   வார்ப்பது போல   எண்ணெய் தடவிய

ஸ்டேண்டில்  மாவை வார்த்து ஸ்டீம் செய்து எடுக்கலாம்.

ஸ்டீம்  செய்யும்  நேரம் குறைந்தது 20    நிமிஷங்கள் வேண்டும்.

தட்டையாக   விளிம்புள்ள தட்டில் எண்ணெய் தடவி மாவை

விட்டு ஸ்டீம் செய்து எடுத்து,  இட்லியைத் துண்டு செய்தும்

உபயோகிக்கலாம்.  ஸ்டீல் டம்ளர்களில் ,   கப்புகளில் எண்ணெய்

தடவி மாவை விட்டு ஸ்டீம் செய்தும் துண்டு செய்யலாம்.

ஆக மொத்தம்  மாவை இட்லிகளாகச் செய்து விருப்பமான

சட்னிகளுடன் சேர்த்து உபயோகிக்கவும்.

மே 6, 2010 at 10:35 முப பின்னூட்டமொன்றை இடுக

Older Posts


ஜூன் 2023
தி செ பு விய வெ ஞா
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 293 other subscribers

பிரபலமான இடுகைகள்

வருகையாளர்கள்

காப்பகம்

பிரிவுகள்

Blogs I Follow


சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

Chitrasundar's Blog

நாங்களும் சமைப்போமில்ல!!!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com News

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.