Posts filed under ‘நான் விரும்பிய தரிசனங்கள்’
மயிலத்திலிருந்து திருவருணை–6
மயிலத்திலிருந்து திருவருணை மனதின் ஆசா பாசங்கள். இடையே நல்ல தரிசனங்களும். எனக்கு இதில் ஒரு திருப்தி.
Continue Reading ஜூன் 24, 2016 at 12:54 பிப 2 பின்னூட்டங்கள்
மயிலத்திலிருந்து திருவருணை–5
திருவண்ணாமலை தரிசனத்துடன் இன்னும் இரண்டொரு தரிசனம் இங்கேயே பாக்கி உள்ளது.
மயிலத்திலிருந்து திருவருணை—4
குலதெய்வம்கோவிலும்அடுத்த, ஊர், விசேஷ மாரியம்மன், வாலீசுவரரையும் தரிசியுங்கள்மு
மயிலத்திலிருந்து திருவருணை–3
வண்டி விரைகிறது புதுவையை நோக்கி.மதியம் ஒரு மணிக்கு கோவில் நடை சாற்றி விடுவார்கள். மூன்று மணிக்குள் வளவனூரில் இருக்க வேண்டும்.
கண்டேன் சீதையை என்ற கணக்கில் கோவிலை நெருங்கி விட்டோம். வண்ணவண்ண மலர்கள்,அருகம்புல் மாலைகள்,தாமரை மொட்டுக்கள்,பூஜா திரவியங்கள் என கடைகளும்,கூட்டத்திற்கும் குறைவில்லை.
மூலவரே வினாயகர். கச்சிதமான கோவில். நேராக கோவில் படிகளை மிதித்து ஏறும் போதே இப்படி,அப்படி. இதோ,அதோ என்று கணேஷர் காட்சிதருகிறார்.வேகவேகமாக தரிசனத்திற்கு விரைகிறோம்.
பிரெஞ்சுக்காரர் ஆட்சியின் போது 1688 இலேயே இவ்விடம் அவர்கள் கோட்டையை அமைத்திருந்தனர். அந்தக் கோட்டைக்குப் பின் புறம் மணலும்,குளமுமாக இருந்தது. ஸமுத்திரக் கரைக்கு அருகிலிருந்ததால் மணல் அதிகமாக இருந்தது. உடன் குளமுமிருந்தது. அதனாலேயே மணலும் ,குளமும் சேர்ந்து மணற்குளமாயிற்று.இக் குளமிருந்த கீழ்க்கரையில் தான் இந்த ஆலயமிருந்தது. ஆதலால் மணக்குள வினாயகர் என்ற பெயர் பிரபலமாயிற்று.
பிரெஞ்சு பிரபலங்களுக்கும் இவ்வினாயகர் மீது பக்தி உண்டு. அரவிந்தாசிரம அன்னையும் இக்கோவிலை விரிவு படுத்த பக்தர்கள் சிரமமின்றி வலம்வர இடம் ஒதுக்கிக் கொடுத்தார்கள் என்பர்.
வினாயகர் அருகில் இப்பொழுதும் ஒரு பள்ளத்தில் அதில் எப்போதும் தண்ணீர் ஊறிக்கொண்டே இருக்கிறதென்றும்,கூட்டமில்லாத காலமானால்,அந்தத் தண்ணீரையும், பக்தர்களின் மீது தெளிப்பதுண்டு என்றும் கேள்விப் பட்டிருக்கிறேன்..
எந்தக் கோவிலிலும் இல்லாத முறையில் வினாயகருக்கு இங்கு பள்ளியறை உண்டு. பிரகாரத்திலேயே இருக்கிறது. வினாயகரின் தாய் சக்தி தேவியும் உடனிருப்பதாக ஐதீகம். இதனால் பாதம் மட்டுமே இருக்கும் வினாயகரின் உற்சவ விக்கிரகம் இங்கு கொண்டு செல்லப் படுகிறது.
கீழே இருப்பது மணக்குள வினாயகரின் தங்கத்தேர்
கடைசிப்பேர்வழிகளாக நாங்கள் இருந்ததால் தரிசனம் நல்ல முறையில் ஆயிற்று. யாவருக்கும் எல்லா வரங்களையும் அளித்து மன அபீஷ்டங்களை நிறைவேற்றுவார் இந்த கணநாயகர். நமக்காக மட்டும் இல்லை எல்லோருக்கும் நன்மையைக் கொடு என்று நினைத்துக் கொண்டேன்.
கோவிலைச் சுற்றி ஆங்காங்கே தொன்னையில் தயிர்சாதப் பிரஸாதம் ஒவ்வொருவர்கையிலும்.சாப்பிட்டு மகிழ்ந்து கொண்டு இருந்தனர். பிரஸாத வினியோகம் நடப்பதும் தெரிந்தது. மூன்று வேளையும் கோவிலில் பிரஸாத வினியோகம் உண்டாம். நாங்கள் பிரதக்ஷிணம் முடிந்து வரும்போது, இடம் காலி செய்யும் மும்முரத்தில் இருந்தனர்.
பிரஸாதம் சாப்பிடுபவர்களைப் பார்த்தே சென்ற முறைகளில் சாப்பிட்ட குழைவான தயிர் சாதம் நாக்கில் ருசித்தது. ஐந்து நிமிஷம் தாமதித்திருந்தால் தரிசனமே கிடைத்திருக்காது. தரிசனமே பெரிய வரபிரஸாதமல்லவா?
வண்டி மாப்பிள்ளையின் ஸஹோதரியின் வீட்டை நோக்கிச் சென்றடைந்தது. எனக்குக் குழைய வடித்து மசித்த சாதம் கூடவே வருகிறது . விசாரமில்லை.
மயிலத்திலிருந்து நாங்கள் வருவதாகத் தகவல் கொடுத்ததால் அவர்களும் வாசலிலேயே இன்னும் வரவில்லையே என்று பார்க்க வந்தனர் போலும்.!
வாங்கவாங்க என்று வரவேற்பு கொடுத்தனர். நான் வராது போகமாட்டேன் என்று எனக்கு இரண்டொரு வார்த்தைகள் அதிகமாகச் சொல்லி வரவேற்றனர்.
எங்கள் மாப்பிள்ளையின் தங்கை புருஷரும் எங்கள் ஊர்தான். அவர்களுக்கெல்லாம் சிறுவயதில் பாடம் சொல்லிக் கொடுத்தவள்நான்.. அவரம்மா வயதில் பெரியவரானாலும் அவருக்கு நான் நல்ல சிநேகிதி. அவர்கள் மருமகள்கள். நான் அந்த ஊர் பெண் அல்லவா? அதனால் பல விதங்களிலும் நான் அவர்களுக்கு ஸிநேகிதி. எங்கள் ஊரின் நட்பு அவ்வளவு பெயர் போனது.
என் பெண்ணிற்கும் அவள்சினேகிதி. மாப்பிள்ளையின்அண்ணா,மன்னிகொடுத்தனுப்பிய புடவை ரவிக்கை,வந்த அண்ணா மன்னியின் அன்பளிப்புகள் என மஞ்சள் குங்கும மகிமை விசாரிப்புகளுடன் முடிந்தது.
அம்மா நீ சாப்பிடு. உன் நேரம் ஆகி விட்டது என்றாள் கொஞ்சம் மோர் வாங்கிக் கொண்டு கரைத்துக் குடித்தேன் என் பிரதான உணவை.எதுவும் சாப்பிடுவதில்லை.குழம்புத்தான் சிறிது கொடு போதும் என்றேன் அவள் பயந்து கொண்டே ஒரு முருங்கைக்காய் தானைப் போட்டாள். கேஸரி செய்திருந்தாள். மிக்க நன்றாக இருந்தது. அவர்களின் சாப்பாடும் முடிந்தது.
பரஸ்பரம் புதிய,பழைய கதைகளைப் பேசிக்கொண்டே மணி ஆகி விட்டது. வளவனூரில் அம்மைச்சார் அம்மன் மாரியம்மனுக்கு அபிஷேக ஆராதனைகளுக்கு நண்பர் ஒருவர் மூலம் ஏற்பாடு செய்திருந்தது. அதனால் கிளம்பி விட்டோம். பரஸ்பரம் போன் நம்பர்கள் வாங்கிக் கொண்டு. எப்போது போனாலும் எனக்கு புடவை ரவிக்கை அன்பளிப்பு இல்லாமல் அனுப்புவதே கிடையாது. வயதான ஸுமங்கலி என்ற மரியாதையைக் கொடுத்து விடுவதால் என்ன செய்வது.
ஸரியாக மூன்று மணிக்கு வளவனூர் வந்து சேரும்போதே ஒவ்வொன்றையும் ஞாபகப்படுத்திக் கொண்டே நேராக கோவிலுக்கு வந்து சேர்ந்தோம். நண்பர் அவரும் எல்லா ஏற்பாடுகளும் செய்திருந்ததுடன் ,கோவிலுக்கும் வந்திருந்தார்,. ஆக வளவனூர் வந்து விட்டோம்.அடுத்து மற்ற இடங்களுக்குப் போவோம்.
எங்கு சென்றாலும் நம் மும்பைப் பிள்ளையாரும் உடன் வருகிரார்.இது சொல்லுகிறேன் பிள்ளையார்தான்.
படங்கள் சில கூகல்..மிக்க நன்றி
மயிலத்திலிருந்து திருவருணை 2
பெண்ணும் பிள்ளையும் உட்கார்ந்து சாப்பிட நியூஸ் பேப்பர் ஆஸனம்போலுள்ளது. அடேடே ஃபோட்டோ கிராபரும் இருக்கிறார். அதெல்லாம் அவர் எடுத்துக் கொள்ளட்டும். நாம் முன்னாடி தரிசனம் பண்ணலாம். திரும்பிப்பார்த்துக் கொண்டே மேலே கோவிலுக்கு நடைபோட வேண்டியதாயிற்று.
சொல்லமுடியாத கூட்டம் இருக்கும் என்ற நினைப்புடன் பார்த்தால், ராகுகாலத்திற்கு முன் விவாகங்கள் முடிந்து அவரவர்கள் தெருவோர அமைப்பிற்குப் போய் விட்டதால், அடுத்த நல்ல நேரத்தை நோக்கி ஏற்பாடுகள் நடப்பது ஓரளவு யூகிக்க முடிந்தது. கோவிலுள்ளே கட்டண தரிசன டிக்கெட் வாங்கிக் கொண்டு ஓரளவு கூட்டமின்றியே ஸன்னிதானத்தை அடைய முடிந்தது.
லக்ஷணமாக ஓரளவு நபர்களாக தரிசனத்திற்கு அனுமதித்ததால் தெரிந்த குருக்கள் அவர்களும் இருந்தபடியால், நல்ல தரிசனமும்,அர்ச்சனையும் செய்து பிரஸாதம் பெற்றுக் கொள்ள முடிந்தது. ஒரு சுற்று சுற்றி விட்டு நான் ஓரிடத்தில் தங்கிக் கொண்டு, பெண்,மாப்பிள்ளை இருவரையும் நிதானமாக எவ்வளவு பிரதக்ஷிணம் செய்ய வேண்டுமோ, செய்து கொண்டு வாருங்கள் என்று சொல்லி விட்டேன்.
அவர்களுக்கு அடிக்கடி எங்காவது கோவில்களுக்குப் போய்க்கொண்டே இருப்பது வழக்கம். மயிலம் வந்து சேருமுன்னரே வழியில் காரை நிறுத்தி டிபனும் உட்கொண்டாயிற்று. அந்த விசாரமும் இல்லை. ஒரு வழியாக எல்லோரும் வெளியே வந்தால் ஆங்காங்கே காது குத்தும் வைபவங்களுக்கான வைபோகங்கள். தனித்தனி கும்பல், இராகுகாலம் கழித்து முகூர்த்தம் வைத்துக்கொண்டிருப்பவர்கள் என்று நினைக்கிறேன். இப்படிப் பலதரப்பட்ட வைபவங்கள் கண்ணிற்குக் குளிர்ச்சியாகக் காத்திருந்தது.
மயிலத்திலிருந்து பாண்டிச்சேரி சென்று என்பெண்ணின் நாத்தனாரையும் பார்ப்பதாக நிரல். அது காரில்தானே போகிறோம். இவ்விடநிகழ்ச்சிகள் படம் வேண்டும். நீங்கள் யார் எடுத்துக் கொடுத்தாலும் ஸரி, இதை எடுங்கள்,அதை எடுங்கள் என்று விரைவாக இயங்க முடியாததால் சொல்லி விட்டேன்.
தட்டுத் தட்டாய்ப் பக்ஷணங்கள், எல்லாதினுஸு பழவகைகள், இனிப்பு பக்ஷணங்கள் பல தினுஸில், என்ன இல்லை என்று வேண்டுமானால் ஆராய்ச்சி செய்யலாம். சீர் வகைகள் போலும்.! பரப்பப் பட்டிருந்தது. குலையோடு வாழைப்பழம். ஆப்பிள்,அன்னாஸி, ஆரஞ்ச்,சாத்துக்குடி. கவனித்துப் பார்த்தால் நேர்ந்து கொண்டு மொட்டையடித்துக் காது குத்தும் வைபவம். இரண்டு குழந்தைகளுக்கு. ஓஹோ இதுவும் நான் பார்த்து கண்டு களிப்பதற்காகவே என்று நினைத்துக் கொண்டேன். இந்தியாவை விட்டு வெளியிலிருந்தால் எல்லா நிகழ்ச்சிகளுமே அபூர்வம்தான். அதுவும் கோவில் போன்ற புண்ணிஸ்தலங்களில். வகைவகையான சீர் வரிசைகளுடன் பாருங்கள் இரண்டு குழந்தைகள் மழித்த தலையில் சந்தனப் பூச்சுடன். இதுவும் ஒரு அழகுதான்.
ஒன்றோடொன்று சிரித்துக் கொண்டே குழந்தைகள் மாமாமடியில். தாத்தா பிள்ளையார் பூஜை செய்து கற்பூர மேற்றும் தாத்தா போலும் பக்ஷணம் பழம் இன்னும் வரும் பாருங்கள் மாலை போட்டுக் கொள்ள வேண்டாமா? அடுத்து
அழாமல் சமத்தாக காது குத்திக் கொள்கிறதா? கொஞ்சம் பார்க்கலாம்.
பக்கத்திலேயே இன்னொரு வசதியான சீர் வரிசையுடன் ஆனால் அழகான எவர்ஸில்வர் தவலை,ஜோடுதவலைகளுடன் என்னென்ன பக்ஷணங்களோ? பார்க்க ரம்யமாக, முடிந்த கல்யாணம் போலத் தோன்றுகிறது. மங்களகரமாக விளக்கு பூஜை ஸாமான்களுடன் சும்மா ஒன்றிரண்டு படங்கள். பார்க்கலாமா? பெண்ணின் தலை மட்டும் படத்தில் என்று நினைக்கிறேன்.
வெளியில் முருகருக்குப் பொங்கலிடுவதைப் பார்க்க வேண்டாமா?வாருங்கள்.

பொங்கல்[/caption
]எல்லா வைபவங்களும் பார்த்தாயிற்று. வீல்சேர்தான் வரும்போது பார்த்தாயிற்று.படி வழி இறங்க முடியுமா?மெல்ல இறங்கினால் ஆயிற்று. நாங்களும் பிடித்துக் கொள்கிறோம் என்றனர். நானே மாற்றி இரண்டு கைகளாலும் பற்றிக் கொண்டு இறங்கி விடுவேன். இந்த வழிதான் இறங்கியாயிற்று.
[caption id="attachment_8393" align="aligncenter" width="455"] மயிலத்துப் படிகள்
தரிசனம் நல்லபடி முடித்து விட்டோம். அடுத்து கோவில் மூடுமுன் மணக்குள வினாயகரைத் தரிசிக்க புதுவையை நோக்கி வண்டி விரைகிறது. மானஸீகமாக நீங்கள் யாவரும் உடன் வருகிறீர்கள். போவோம் யாவரும் புதுவைக்கு. முருகா,முருகா!!!!!!!!!!!!
மயிலத்திலிருந்து திருவருணை.
நகரங்களில் வயதான முதியவர்களுக்கு வெளியுலகம் மாடி வீடுகளாயின் ஜன்னல் மூலமும், உடம்பு அஸௌகரியங்களின்போது, டாக்டரிடம் போகும்போதும்,வரும்போதும் தரிசனமாகிறது. போன இடத்தில் பலவித நோயாளிகளைப் பார்க்கும் போது இன்னும் மனது இடிந்து போகிறது. எல்லாம் அவரவர்களுக்கு விதித்தது நடக்கும் என்று மனதிற்குத் தெரிந்தாலும் ஸமயத்தில் யாவும் மறந்து விடுகிறது. படிக்கும் விஷயங்களும், கேட்கும் விஷயங்களும் கொஞ்சமா,நஞ்சமா? எதற்கு இவ்வளவு பீடிகை.கோவில்களுக்குப் போவதானாலும் கூட ஒருவர் துணை வேண்டியுள்ளது. நகர வாஸங்களிள் நம்மை நாமே பார்த்துக் கொள்ள வேண்டும். யாவரும் அவ்வளவு பிஸி.
ஒரு நாற்பது தினங்கள் நானும் சென்னை சென்று தாற்காலிகமாக தங்க வந்த பெண்,மாப்பிள்ளையுடன் தங்கி சற்று வெளியூர்கள் பார்த்து வந்தேன். அவர்கள் மழை வெள்ளத்தில் சிக்கிய வீட்டின் கீழ்த்தளத்தைச் சீர் செய்ய நியூ ஜெர்ஸியிலிருந்து வந்தார்கள். குலதெய்வம் மயிலம் கோவிலுக்குப் போகவேண்டும் உன்னால் முடியுமா என்றார்கள். நான் இரண்டு மணிக்கொருதரம் சிறிது ஆகாரம் உண்டு கொண்டு முன்னே,பின்னே என்று மருந்துகளுடன் அப்போது, இப்போது மாத்திரம் என்ன இருந்து கொண்டு இருந்தேன். ஸெரிலாக் கணக்கில் சாதத்தை மோருடன் கரைத்து, அல்லது ஸத்துமாக்கஞ்சி என்று ஆகாரம் வரையறுக்கப் பட்டிருந்தது.
பரவாயில்லை வீட்டுக் காரில்தானே போகிறோம் என்று காலையிலேயே எனக்கு ஆகாரம் தயாரிக்கப்பட்டு,அவர்களுக்கான சிற்றுண்டியுடன் அதிகாலை ஆறு மணிக்கு வீட்டை விட்டுப் புறப்பட்டோம்.
மும்பையினின்றும் ப்ளைட்டில் கூட தனியாக வர முடியாது என மருமகள் உடன் வந்து மறு ப்ளைட்டில் மும்பை சென்றாள். ஜெனிவா பத்து வருஷங்களாகத் தனி
யாகவே போய்வந்தவள். அமெரிக்காவும் அப்படியே! இப்போது ஞாபகப்படுத்திக் கொள்ளதான் முடிகிறது
காரில் போகிறோம். கோவில் வாசலில் இறங்கி உள்ளே போய் ஸ்வாமி தரிசனம் செய்தால் போதும். அத்துடன் வேறு சில இடங்களும் போக வேண்டும்.
வளவனூர் மாரி அம்மன் கோவிலில் அபிஷேக ஆராதனை செய்யணும். கோலியனூர் போகணும். எங்காவது ஹோட்டலில் இரவு தங்கி விட்டு மறுநாள் நான் பிறந்து வளர்ந்த திருவண்ணாமலையும் போக வேண்டும். இப்போது முடியாவிட்டால் இனி எப்போதுமே முடியாது என்று என் மனதின் ஆசைகளைச் சொன்னேன்.
எல்லாம் ஸரி என்ற முடிவுடன் இரவு நேரத்தில் அதிகப்படியாக உயரம் வேண்டுமென்று ரிஃப்ளெக்ஸ் இருப்பதால் மூன்று குஷன்களுடன் வண்டி. மயிலத்தை நோக்கி விரைந்தது. மயிலம் என்றஇவ்வூரின் பெயர் வரக்காரணம் சொல்வார்கள் அது ஞாபகம் வந்தது.
திருச்செந்தூரில் சூர ஸம்ஹாரத்திற்குப் பிறகு, சூர பத்மன் தன்னை முருகப் பெருமானுக்கு வாகனமாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று விரும்பினான். அப்போது முருகப் பெருமான் இத்தலத்தில் மயில் வடிவத்தில் அமர்ந்துதவம் புரியும்படி அருளினார். அதன் பிரகாரம் சூரபத்மன் இங்கு தவம் புரிந்து மயிலாக மாறி முருகப்பெருமானுக்கு வாகனமாக மாறினான். அதனால் இத்தலம் மயிலம் என்ற பெயரால் அழைக்கப் படுகிறது.
இது சிறிய குன்றம்தான்.பெரியமலை இல்லை. மலை ஏறும்போதே குளத்தின் கரையில் குழந்தைகளும்,வேண்டுதல் செய்து கொண்ட பெரியவர்களும் தலையை மழித்துக் கொள்ளும் காட்சிகள். .இன்னும் மேலே நிறைய கல்யாண கோஷ்டிகோவிலில் கல்யாணத்தை முடித்துக் கொண்டுவேன்களிளிருந்து இறங்கி ரோடோரத்திலேயே சில ஸம்பிரதாயங்கள் செய்வித்துக் கொண்டே பளிச்சென்று சுத்தம் செய்யப்பட்ட வீதி ஓரங்களில் மரத்தினடியில் ஸம்ப்ரமமாக நுணி வாழையிலைச் சாப்பாடும் நடந்து கொண்டு இருந்தது.இவையெல்லாம்கல்யாணத்தை முடித்துவிட்ட கோஷ்டி. ஆற அமற சாப்பாடு. பேச்சுகள், விமரிசனங்கள்.
பெரியபெரிய அகலமான அடுக்குகளிள் சமைத்ததை அப்படியே மூடி வேனில் ஏற்றி இருப்பார்கள் போலும். கீழிறங்கி இவைகளை எல்லாம் பார்க்க படம் பிடிக்க ஆவல். நீ கீழிறங்கினால் உனக்கும் சாப்பாடு போட்டு விடுவார்கள். இன்னும் கோவிலிலும் கல்யாணம் பாக்கி இருக்கும். அங்கு போய் விஸ்தாரமாகப் பார். முன்னே கோவிலுக்குப் போவதைப்பார் என்றாள் என் பெண். எங்கோ தூரதேசத்தில் இருந்த படியால் ஸம்ஸாரியகவும் இருந்ததால் நான் பார்த்த கல்யாணங்கள் மிகக் குறைவு.இம்மாதிரியான கல்யாணங்கள் பார்க்கவும் ஆசை.ஆச்சு வீல்சேருக்கு வருவோம்.
மயிலத்தில் வயதானவர்களுக்காக வீல்சேர் வசதி இருந்தது. கார்களில் செல்பவர்கள் ஒரு இடத்திலிருந்து அதில் போகலாம். மற்றபடி அவ்வளவாக செங்குத்தானபடிகளில்லை. வேறு இடத்திலிருந்து படிகளேறியே செல்வது வழக்கம். கடினமானது ஒன்றுமில்லை.
மேலே இருப்பது சென்ற முறை சென்ற வீல்சேர்.. மண்ரோடு. இந்தமுறை ரோடு நல்லது. இருந்த ஒரு வீல்சேர் சக்கரங்கள்,அப்படி,இப்படி மக்கார் செய்தது. ஏர்போர்ட்டில் ட்ராலி தள்ளுவதுபோல நடை வண்டி மாதிரி அதைப் பிடித்துகைகொண்டே மேலே போய்விட்டேன்..
எனக்காக காத்திருந்தது போல ஒரு கல்யாணசாப்பாடு, அலங்கரிக்கப்பட்ட மண் கலசங்கள்,இலை. மனிதர்கள், பெண்,மாப்பிள்ளை, எளிய திருமண உடையில் பார்ப்போமா? உண்ட இலைகள் ஒரு புறம், உண்ணும் இலைகள் ஒருபுறம்.பாலிகைக் குண்டான்கள் . இன்னும் சாப்பாடு பூராவும் முடியவில்லை.
இன்னும் கோவிலுக்குள்ளே போகலை. வேஷ்டி கட்டினவர்களைவிட பேண்ட்போட்டவர்களையே நிறைய பார்க்க முடிந்தது. கட்டம்போட்ட எளிய வழக்கமான கூரைப்புடவையில் பெண். கோவிலுக்கு போய்விட்டு , அங்கும் சில காட்சிகளைக் காணலாம். தொடர்ந்து வாருங்கள்.