Posts filed under ‘மசியல்கள்’

அரைக்கீரை மசியல்.

இந்தக்கீரையும்  ருசியானதுதான்.பார்ப்போம்.

அரைக்கீரை

வேண்டியவைகள்

அரைக்கீரை—ஒருகட்டு

கீரையை ஆய்ந்து   அலசி ப் பொடியாக   நறுக்கிக் கொள்ளவும்.

தக்காளிப்பழம்—ஒன்று

பச்சைமிளகாய்—2

நறுக்கிய வெங்காயம்—சிறிது

பூண்டு இதழ்—-4

மிளகு—அரை டீஸ்பூன்

சீரகம்—-1 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு—1 டீஸ்பூன்

பயத்தம் பருப்பு—-2 பிடித்தபிடி

எண்ணெய்—-1டேபிள்ஸ்பூன்

செய்முறை.

பருப்பைச்  சற்று வறுத்துக்  களைந்து  கீரையையும்  வடிக்கட்டிச்

சேர்த்து  திட்டமான  தண்ணீருடன்  ப்ரஷர்  குக்கரில் வேக

வைத்து  இறக்கவும்.

2 விஸிலே  போதுமானது.

உளுத்தம் பருப்பையும்,  மிளகையும்   சிறிது எண்ணெயில் வறுத்து

நறுக்கிய தக்காளி,   பச்சைமிளகாய்,பூண்டு, வெங்காயம் சேர்த்து

வதக்கவும்.

சீரகம் சேர்த்து   மிக்ஸியில்   அறைத்துக் கொள்ளவும்.

வெந்த   பருப்புடன் கூடிய   கீரையை   நன்றாக  மசிக்கவும்.

அறைத்த விழுதைக் கொட்டி   உப்பு  சேர்த்துக் கொதிக்க

விடவும்.  மசியலாக    பதத்தில்   இறக்கவும்.

கடுகு  தாளித்துக்   கொட்டவும்.

தேங்காயும்   வேண்டுமானால்   அறைக்கும் போது சேர்க்கவும்.

வெந்த கீரையும்பருப்பும், வதக்கி ய , அறைக்கும் ஸாமான்களும்.

அரைக்கீரை மசியல்

மே 26, 2012 at 2:30 பிப 8 பின்னூட்டங்கள்

பிடிகருணைக் கிழங்கு மசியல்.

வேண்டியவைகள்

துவரம் பருப்பு—-அரைகப்பிற்கு  அதிகம்.

பிடிகரணை—கால் கிலோ

பச்சைமிளகாய்—-2  விருப்பம்போல   நறுக்கவும்.

இஞ்சி-தோல்நீக்கிப் பொடியாக  நறுக்கியது  1டேபிள்ஸ்பூன்

ஸாம்பார் வெங்காயம்,நறுக்கியது—-அரைகப்பிற்கு அதிகம்.

ரஸப்பொடி—2 டீஸ்பூன்அல்லது   தனியா,மிளகாய், மிளகும்

பொடித்துப் போடலாம்.

மஞ்சள்பொடி—சிறிது

தாளித்துக்கொட்ட

கடுகு அரை டீஸ்பூன்,வெந்தயம்அரை டீஸ்பூன்,க.பருப்பு,உ.பருப்பு

வகைக்கு  1 டீஸ்பூன்,

பெருங்காயம்—சிறிது

எண்ணெய்—2 டேபிள்ஸ்பூன்

கொத்தமல்லி,  கறிவேப்பிலை விருப்பத்திற்கு

ருசிக்கு–உப்பு

எலுமிச்சம் பழம்—2

தக்காளியும்    போடலாம்.

செய்முறை

பருப்பைக் களைந்து   தண்ணீர், மஞ்சள்பொடி சேர்த்து  ப்ரஷர்

குக்கரில் பருப்பை நன்றாக   வேக வைத்து எடுக்கவும்.

கருணைக் கிழங்கை நன்றாக   அலம்பிச் சற்றுப் பெறிய

துண்டங்களாக நறுக்கவும்.

சின்ன குக்கரில்  கிழங்கு அமிழத் தண்ணீர்  வைத்துத் துளி

புளியையும் அதில்  உருட்டிப்போட்டு   ப்ரஷர் குக்கரில்

நிதானத் தீயில்   3 விசில் வரும்வரை வைத்து  வேகவிடவும்.

நீராவி  போனவுடனே   தண்ணீரை வடித்துவிட்டு குளிர்ந்த

தண்ணீரைவிட்டுத்   தோலை  உறிக்கவும்.

நன்றாக  வெந்த  கிழங்கை ஆறியபின்    மிக்ஸியில்,  வைப்பரில்

2,   3,    சுற்று  சுற்றி    மசிக்கவும்

உருளைக்கிழங்கு மசிப்பது போல   கரண்டியினாலும் மசிக்கலாம்.

குழம்புப் பாத்திரத்திலோ,   வாணலியிலோ   எண்ணெயைக் காய

வைத்து     தாளிக்கக்  கொடுத்தவைகளைத்  தாளித்து,     வெங்காயம்,

ப.மிளகாய்,இஞ்சியை  நன்றாக   வதக்கி,  இரண்டு கப்பிற்கு  அதிகமாகவே

தண்ணீரைச் சேர்த்து,  உப்பு, ரஸப்பொடி போட்டு,  கொதிக்க விடவும்.

வேகவைத்துள்ள  பருப்பையும்,   மசித்த   கிழங்கையும்  கொதிக்கும்

கலவையுடன்  சேர்த்து நிதான தீயில்   அடிக்கடி  கிளறிவிட்டு  அடி

பிடிக்காமல் குழம்புப் பதத்தில்  இறக்கி வைக்கவும்.

எளுமிச்சம்  சாற்றைப்  பிழிந்து  சேர்த்து     கொத்தமல்லி கறி

வேப்பிலையால்   அழகைக்    கூட்டவும்.

கெட்டியாகவோ,   சற்று நீர்க்கவோ  இருப்பதற்கு  நீங்கள்

கொதிக்கும் போதே  சேர்க்கும்    தண்ணீரின்  அளவைக் கூட்டிக்

குறைக்கவும்.

மசியல்  ருசியாக  இருக்கும்.   சாதத்துடன்,கலந்து சாப்பிடவும்,

மற்றவைகளுடன்   தொட்டுக் கொள்ளவும்   ஏற்றது.

கருணைக் கிழங்கு   காரும்  தன்மையுடையது.

புளியுடன்    வேகவைப்பதாலும்,    பிறகு   எலுமிச்சை சாறு

சேர்ப்பதாலும்,     காரும் தன்மை   குறைந்து  ருசியாக

இருக்கும்.

இந்தக்கிழங்கும்   மருத்துவ  சக்தி   அதிகம் கொண்டது.

புதிய கிழங்கைவிட   சற்று  நாட்களான  கிழங்கு நல்லது.

கிராமங்களில்   நெல்  புழுக்கும்போது   அதில் வைத்துப்

புழுக்கி எடுத்து  உபயோகிக்கும் வழக்கம்  உண்டு.

காறல்  இருக்காது.

பிடி கருணைக் கிழங்கு.

மசியலுக்கு வேண்டிய சில ஸாமான்கள்

பிடி கருணைக்கிழங்கு மசியல்

ஏப்ரல் 30, 2012 at 7:56 முப 4 பின்னூட்டங்கள்

முளைக்கீரை மசியல்.

இந்தக்கீரை  எல்லா வயதினரும்  சாப்பிடக்கூடிய  ஆரோக்கிய சத்து  மிகுந்த  ஒரு  நல்ல  கீரை. இதை

பருப்பு  சேர்த்தும்  சேர்க்காமலும் சமைக்கலாம்.

வேண்டியவைகளைப் பார்க்கலாமா/?

முளைக்கீரை—2கட்டு

அவசியமானால்  பூண்டு—4 இதழ்

மிளகு—அரை டீஸ்பூன்

சீரகம்–1 டீஸ்பூன்

மிளகாய்—1

துவரம்பருப்பு—1டேபிள்ஸ்பூன்.  ஊறவைக்கவும்.

தேங்காய்த்துறுவல்—2 டேபிள்ஸ்பூன்

உப்பு

தாளித்துக் கொட்ட—1ஸ்பூன்  நெய்

சிறிது கடுகு,உளுத்தம்பருப்பு,பெறுங்காயம்.

செய்முறை—–கீரையை நன்றாக  சுத்தம் செய்துப்

பொடியாகநறுக்கி தண்ணீரில்  2, 3,முறை  அலசித்

தண்ணீரைவடியவிடவும்.

துவரம்பருப்பை  முன்னதாகவே ஊறவைத்து அதனுடன்

தேங்காய்,மிளகு ,சீரகம்,மிளகாய் சேர்த்து  மிக்ஸியில்

மசியஅரைத்துக் கொள்ளவும்.

நிதான தீயில் வடியவைத்த கீரையுடன்,  பூண்டைத் தட்டிப்

போட்டு கால்கப் ஜலத்துடன்  பாத்திரத்தில் சேர்த்து   வேக

வைக்கவும். ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்தால்  பச்சென்று

கீரை நிறம் மாறாமலிருக்கும்.

கீரை  வெந்ததும்    குழிக் கரண்டியாலோ,  மத்தாலோ

நன்றாக மசிக்கவும்.

அறைத்த கலவையுடன்  உப்பு சேர்த்து  கீரையில்க்

கொட்டிக் கலக்கி   பின்னும் இரண்டொரு கொதி விடவும்.

இறக்கி வைத்து   கடுகு,  உளுத்தம்பருப்பு,பெறுங்காயம்

முதலியவைகளை   நெய்யில்  தாளித்துக் கொட்டவும்.

துவரம்பருப்பு அரைப்பதற்குப் பதில்  வேகவைத்த   பயத்தம்

பருப்போ  அல்லது துவரம் பருப்போ ஒருகரண்டி சேர்க்கலாம்.

சின்னவெங்காயம்வேண்டியவர்கள்சேர்த்துக்கொள்ளுங்கள்

சாதத்துடன் கலந்துசாப்பிடவும்மற்றவைகளுடன்தொட்டுக்

கொள்ளவும் நன்றாக இருக்கும்.கீரை மசியல் ரெடி.

முளைக்கீரை மசியல்

முளைக் கீரைக் கட்டுகள்

மார்ச் 22, 2012 at 9:09 முப 20 பின்னூட்டங்கள்

பாலக்கீரை மசியல்

இதுவும்  ஸாதாரண கீரை மசியல் போல்தான்.  கொஞ்சம்

வித்தியாஸம்     தாளித்துக் கொட்டுவதில் தான்.

வேண்டியவைகள்

பாலக் கீரை—-400 கிராம்வரை. முன்னே பின்னே இருந்தாலும்

பரவாயில்லை. நன்றாக  நறுக்கி அலம்பி நீரை வடிக்கவும்.

உறித்த பூண்டு—5 அல்லது 6 இதழ்கள்.பொடியாக நறுக்கவும்.

மிளகாய்ப் பொடி—காரத்திற்கேற்ப  கால் டீஸ்பூனிற்கு அதிகம்

தனியாப்பொடி—-அரை டீஸ்பூன்

மஞ்சள்ப்பொடி—அரைடீஸ்பூன்

தாளித்துக் கொட்ட—2 டீஸ்பூன் நெய்

சீரகம்–அரை டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய  தக்காளிப் பழம்–1

ருசிக்கு–உப்பு

சோளமாவு—-ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை—அடி கனமான  வாணலியில்  நெய்யைச் சூடாக்கி

சீரகத்தை வறுத்து,   பொடியாக நறுக்கிய  பூண்டை வதக்கி,

சிறிதளவு

நறுக்கிய கீரையும்,பொடிகளையும் போட்டுப் பிரட்டிப் பின்பு

எல்லா கீரையையும்  சேர்த்து  நன்றாக வதக்கவும்.

கால் டம்ளர் ஜலம் சேர்த்து    ருசிக்கு உப்பு,   ஒரு சிட்டிகை

சர்க்கரை, நறுக்கிய  தக்காளித் துண்டுகள்  சேர்த்து   நன்றாக

மூடிவைத்து   நிதான தீயில்  வேகவைத்து மசிக்கவும்.சோள

மாவைக் கெட்டியாக கரைத்துவிட்டு   இரண்டு கொதி  விட்டு

மசித்து இறக்கவும்.

இந்த மாதிரி என் போபால் சம்பந்தி செய்த கீரை மசியலிது.

சாதாரணமாக    கீரையை   நன்றாக வேகவைத்து  மிளகாய்,

சீரகம்,  சிறிது தேங்காய்,  துளி அரிசியை    மிக்ஸியில்

அரைத்துசேர்த்து மசித்து,  கடுகு உளுத்தம் பருப்பை நெய்யில்

தாளித்துக் கொட்டிஉப்புப் போட்டாலும்  கீரை ருசிதான்.

இதேமாதிரி  வெங்காயம், பச்சைமிளகாய்  பூண்டையும்

வதக்கிச் சேர்த்தும்,    அரைத்துவிட்டும் செய்யலாம்.

நாம் கீரை  சேர்ந்தாற்போல இருக்க துளி அரிசிமாவு கரைத்து

விடுவோம்.

பாலக்கிற்கு சிறிது தக்காளி சேர்த்தால்  ருசி கூடும்.

பெருங்காயம்    அதுவும்   வேண்டியவர்கள் சேர்க்கலாம்.

கீரை குறைவாக  இருந்தால்  வேகவைத்த பயத்தம் பருப்பு,

அல்லது  துவரம் பருப்பு சிறிது சேர்த்தும்   மசிக்கலாம்.

பருப்பு சேர்த்து மசிக்கும் போது ஒரு பச்சை மிளகாயை

காரத்திற்காக சேர்த்து  மசிக்கலாம்.

சோளமாவு சேர்த்த பாலக் மசியல்

ஜூன் 24, 2011 at 9:46 முப 2 பின்னூட்டங்கள்


ஜூன் 2023
தி செ பு விய வெ ஞா
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 293 other subscribers

வருகையாளர்கள்

  • 547,488 hits

காப்பகம்

பிரிவுகள்


சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

Chitrasundar's Blog

நாங்களும் சமைப்போமில்ல!!!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com News

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.