Posts tagged ‘பண்டிட்’

தொட்டில்–16

தொட்டில்

தொட்டில்

பண்டிட் எங்கிருந்து வந்தான்?

அது ஒரு டீக்கடை. வரும்வழியில் ரொம்பகுளிர். ஸரி வீட்டில் முதியவளும் இல்லே போனவுடன் டீகொடுக்க ஒரு டீசாப்பிடலாம்.டீவருகிறது.

ஓ ராம்தாயீ எனக்கும் ஒரு டீ. குரல் வந்த திசையில் ஒரு வயதான பெண்மணி. நீ எங்கே இங்கே வந்தே. ஹஜூர் இந்த பையனுக்கு ஏதாவது வேலை வாங்கிக் கொடுக்கலாம் என்று வந்தேன்.
பஹினி இது யாரு?

தாயி, எல்லாம் சொல்றேன். வீட்டிற்குப் போன பிறகு.

பையனுக்கும் சாய் ஒன்று.

இல்லே அவன் ஒண்ணும் குடிக்க மாட்டான். பாவுன்கா சோரா. பிராமணப்பிள்ளையாம். ஏதோ புதியகதை. வீட்டை அடைந்தாகி விட்டது.
பாவுஜு மன்னி பேரு நேபாலியில்.

வாவா பஹினி என்று வரவேற்கிறாள் பாவுஜு. தாயி என்றால் அண்ணா

. தீதி என்றால் அக்கா.பாயி என்றால் தம்பி. யாரையும் உறவு சொல்லிதான் அழைப்பார்கள்.bபுவாரி என்றால் மருமகள்.அம்மாவிற்கு    ஆமா என்று பெயர் அப்பாவிற்ரு புவா.

பாவுஜு இந்த பிள்ளை நல்லவன். அப்பா,அம்மா இரண்டுபேரும் பிரிஞ்சுபோயி வெவ்வேரெ வாழ்வு. இது நம் வீட்டோடு இருக்கு. ஆத்தா,அப்பன் இரண்டும் ஸரியில்லே.

நம் வீட்டிலே இருந்தா இரண்டு பேரும் தொந்திரவு கொடுக்கராங்கோ. இது அங்கே போகமாட்டேன்னு நம் வீட்டோடு கிடக்கறது. அங்கே வேண்டாம்,உனக்கும் உதவிக்கு ஆள் கேட்டாயே என்று அழைத்து வந்தேன்.

அதன் ஆத்தாகாரியும் ஸரி கண் முன்னாலே இல்லாமல் இருக்கட்டும் என்றாள்.
என்ன சொல்கிறாய்? அவ ரொம்பவருஷ பழக்கம்.
இல்லாவிட்டால் சாய் துகானில் கேட்டார்கள். விட்டுவிடணும். அந்த தீதியும் நல்லவள்.
பேசிக்கொண்டே சாப்பாடு முடிகிரது. பையன் சுருசுருப்பா கூடமாட பழக்கப்பட்டவன்போல் ஒட்டிக்கொண்டு எல்லாவேலையும் செய்கிரான்.
ஸரி நான் பாத்துக்கறேன். மனதுக்கு பிடிக்கலைன்னா அனுப்பிடறேன் உங்கிட்டயேபஹினி..

வேலை செய்யும் சிறுவர்கள் காஞ்சா. சிறுமிகள் காஞ்சி.
இவன் பாவுன் என்றே அழைக்கப்பட்டான்.

அவனையும்  மாலை நேர பள்ளியில் சேர்த்து விட்டனர். சொல்லிக்கொடுத்த எளிய வேலைகளை சிக்கென பிடித்துக் கொண்டு, மேற்கொண்டு வேலைகளையும் தானே வலிய தெரிந்துகொண்டும்,     செய்து கொண்டும்  நன்மதிப்பைப் பெற்றுக் கொண்டு விட்டான்.அதிகம் படிப்பு ஏறவில்லை.
இதெல்லாம் பிள்ளைகளுக்கும் தெரிந்த விஷயம்தான்.

அவனும் பெரியவனானபோது அவனுக்கும் காதல் வந்தது. இவனைமாதிரியே அதுவும் ஒரு தாய்தந்தையரின் பிரிவால் கைவிடப்பட்ட அனாதைப் பெண்.
திரும்பவும் ஆள்தேடி அலைவதைவிட இவர்களையே நாம் நமதென பாவிக்கவேண்டும் என்ற கொள்கையுடன் , ஒரு சின்னஸ்வயம்வரம் வைத்து இருவருக்கும் மணம் முடித்து வைத்து, வீட்டிலேயே ஒருபகுதியில் தனிக்குடும்பம் நடத்தவும் ஏற்பாடு செய்து விட்டனர்.

பாசமான பிள்ளை மருமகள்போல் அவர்களின் உதவி இன்றிமையாதது என்ற நிலையும் வயோதிகத்தில் ஏற்பட்டு விட்டது. இதோ அந்த பெண்ணின் பெண் எப்படி பாசத்தைக் காட்டுகிறது. பார்த்தாயா?

கலர்க்கலர்

கலர்க்கலர்

தூங்கி எழுந்து வந்த பிள்ளைகளிடம் விவரித்து விட்டு, முன்போல் எங்களுடைய ஸொந்த காரியங்களையும், நாங்களாகவே செய்து கொள்ள முடிவதில்லை. அடிக்கடி டாக்டரிடம் போக வேண்டியுள்ளது. உங்கள் பெண் பிள்ளைகளும் பெரியவர்களாகி விட்டார்கள். அவர்களின் வேறு கல்ச்சரில் வளர்ந்த மனப்பான்மையே வேறு விதமாக உள்ளது.

அவர்கள் விஷயத்திலும் நீங்களும் எவ்வளவோ ஈடு கொடுக்கும்படி உள்ளதையும், மன உளைச்சலையும் அறிய முடிகிறது.

எங்களுக்கு இங்கிருந்தால் எல்லாவித ஸௌகரியங்களையும் நாங்களே பார்த்துக் கொள்ள முடியும். உங்கள் மனைவிகளும் வேலைக்குப் போகிறவர்கள். யாரையும் குறை சொல்லவில்லை.

பண்டிட்டிற்காக சேர்ந்த பணத்திலேயே அவனுக்கும் வீடு வாங்கி வைத்து விட்டேன்.நிறைய உறவினர்கள் வரபோக இருக்கிரார்கள். பண்டிகை,பருவம் என எல்லோரும் வரபோக தனிமை அதிகம் வாட்டுவதில்லை.
ஸொந்த வீடு. நம் இஷ்டப்படி இருக்க முடிகிறது. தாழ்வு மனப்பான்மை குறைகிறது.

நம் ஸொத்து ஸுதந்திரத்தைப் பார்த்துக் கொள்ளும் வகையில் அவனுக்கும் சில ஏற்பாடுகள் செய்து விட்டேன்.
எங்களுக்குப் பிற்காலம் உஙகளிருவருக்கும் எல்லா ஸொத்துக்களும் பிரித்து எழுதப்பட்டு விட்டது.

பண்டிட்டின் பெண்ணிற்கும் கல்யாணம் ஏற்பாடு செய்து விட்டேன். நீங்கள் யாவரும் வாருங்கள்.
உங்களுக்கும் வயதானகாலத்தில் இங்கு வந்து ஸெட்டிலாக எண்ணம் தோன்றும்.
யோசனை செய்வதற்கே ஒன்றுமில்லை.

பிள்ளை குறுக்கிடுகிறான்.
பண்டிட் மட்டும் உங்களைப் பார்த்துக் கொள்வான் என்பது என்ன நிச்சயம்.

தேசம்,கலாசாரம்,சுற்றம்,அவனின் சூழ்நிலை. எங்களிடம் இதுவரை காட்டிய நேசம்,பணிவு எல்லாமாக எங்களை இந்த முடிவுக்கே கொண்டு வந்துள்ளது.

சில முடிவுகள் ஆண்டவனால் எடுக்கப்படுபவை. அதை மாற்ற யாராலும் முடியாது.
எங்கும்,யாருடனும்,எப்பொழுதேனும் எதுவும் மாறலாம். அதுவே தவிர வேறு என்ன செய்ய முடியும்.?

தீர்மான முடிவு. பார்ப்போம். பிள்ளைகளும் இப்படியே இரண்டு வருஷம் வந்துபோயினர்.

அவர்கள் பெண்ணுக்கும் அங்கேயே லவ் மேரேஜ் நடந்தது. அடுத்து பிள்ளையும் வரிசையில்

வருஷங்கள் உருளுகிறது. பண்டிட் மாறவேயில்லை.  வயதான பெற்றோரை அவன் பார்த்துக் கொள்ளும் விதமும்   அக்கரையாகவே இருக்கிறது..

பிள்ளைகள் வருவதாகப் போன் வருகிறது.    பண்டிட்டிற்குப் பேரன் பிறந்துள்ளது. அவர்கள் வரும் தேதியும் ஒத்துப் போகிறது.

பலூன்களுடன்

பலூன்களுடன்

தொட்டிலுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

காலை எட்டு மணி ப்ளைட்டில் பிள்ளைகளின் குடும்பம்  வருகிறது.   ஏக குதூகலம்.
சொல்லாத தகவல். பேரன்மனைவியும்,கையில் குழந்தையும்.

புதியதாக  பெரிய பிள்ளையின் பேரன். அன்னியதேசக் கொள்ளுப்பேரன், இதுவரை சொல்லாத ஸஸ்பென்ஸ்    கோபம்,ஸந்தோஷம்,உண்மை கூறாததின் வருத்தம்  பல சுவைக் கதம்ப கூட்டலும்,மகிழ்ச்சியும்,கூடவே  கண்ணீரும். மருமகளை ஏற்றுக்கொள்ள வேண்டுமே.அதற்கும் உடனே ஏற்பாடு.

புதியதாக வரும் மருமகளை ஆசீர்வதித்து , இருவருக்கும் டீக்கா எனப்படும் ,தயிரில்அக்ஷதைகலந்த சந்தன குங்குமப்பொட்டை திலகமிட்டு ஆசீர்வதித்து இனிப்பூட்டி பெரியவர்கள் ஏற்றுக் கொண்டால்தான் அவர்கள் குடும்பத்து நபர் ஆவார்கள்.

இன்று இரட்டைத் தொட்டில் அலங்கரித்து எல்லோரையும் கூப்பிட்டு, விருந்துதான்.

மருமகளுக்கு  முதலில்  டீக்கா கொடுத்து வாழ்த்தி ஏற்றுக் கொண்டனர்.

அடுத்து  கணவன் வீட்டில் வைத்து நாரண்.

நாம்புண்யாசனம் என்று சொல்லும் தூய்மைப்படுத்தலும்,பேரிடுதலும்.     அது கட்டாயமானது. வம்சத்து பெயர்கள் அதாவது ஸர்நேம் கொடுப்பது.  இரண்டு குழந்தைகளுக்கும்    செய்து விடலாம்.இதுவும் கட்டாயமானது.

விரைதானம் இந்துக்களின் வழக்கம் நேபாலி   வாத்தியார் வந்து  யாவற்றையும் இனிதாக நிறைவேற்றினார்.ஸூர்யகிருஷ்ணா ஒன்று, யுவகிருஷ்ணா மற்றொன்று.

மருமகள்கள், பேரன் பேத்திகள்,பிள்ளைகள்,உற்றார் உறவினர்களுடன்
பூக்களலங்காரத்துடன் இரட்டைத் தொட்டில்.
குழந்தைகளைக் கொண்டு வருகின்றனர் தொட்டிலில் கிடத்த

ஆடும் தொட்டில்

ஆடும் தொட்டில்

படங்கள் யாவும்  கூகல் உபயம்.  மிக்க நன்றி.

லாலிலாலய்யலாலி. ஓம்கார லாலிமால் மருகலாலி

லாலி சிவ புத்ர லாலீ  செந்தில் வளர் லாலி சிருங்காரலாலி.  என்று மனதில் பாட்டு தோன்றியது.

இரண்டொரு வருஷத்தில் நாங்களும் இங்கே வந்து விடுகிறோம் என்ற மகன்களை

ஆளுக்கொருவராக அணைத்துக் கொண்டனர் பெற்றோர்கள். தொட்டில்கள் நிதானமாகஆடுகின்றன!!!!!!!!!!!

நவம்பர் 8, 2016 at 1:12 பிப 19 பின்னூட்டங்கள்


மார்ச் 2023
தி செ பு விய வெ ஞா
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 293 other subscribers

வருகையாளர்கள்

  • 546,880 hits

காப்பகம்

பிரிவுகள்


சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

Chitrasundar's Blog

நாங்களும் சமைப்போமில்ல!!!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com News

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.