என்னைப் பற்றி. காமாட்சி வ்கிரைd

ஒரு விஷயம் தெரியுமா? எனக்கு ஒரு வருஷம் முன்வரை கணினி உபயோகிக்கத் தெரியாது, இப்பொழுது  சிறிது தெறிகிறது. முன்பு சுதேசமித்திரன் பாரததேவி, போன்ற பத்திரிக்கைகளில்,கதைகளும், பலவகை சமையல் கு றிபபுக்களும் எழுதி சன்மானங்களும் வாங்கி இருக்கிறேன்.

கலலியாண வாழ்க்கைக்குப்பின்னர்  எழுத்துத் தொடர்புகள் அறவே விட்டு விடப்பட்டு  ஒரு குடும்பத்தின் எல்லா பொறுப்புகளும், நேரமின்மையும் ஏற்பட்டு விட்டது. நேபாளத்திலிருந்து, ஒரு விஷயம், கடிதம், அநுப்பினால் கூட, போய்ச சேரும், அல்லது சேராது சமயத்தில்  பல வாரங்கள் ஆகும். வரும் கடிதங்களுக்கு டோர் டெலிவரியும் கிடையாது. மி

க்க வசதியான சூழ் நிலயுமில்லை.. ஐந்து குழந்தைகளை படிக்க வைத்து ஆளாக்கியதே காலத்திற்கும் நேரத்திற்கும் சரியாகி விடடது.

 

இப்பொழுது 7,8 வருஷங்களாக  கடைசி பிள்ளை, மருமகளுடன் ஜெனீ வாவில்  இருக்கிரோம்மற்றும் யாவரும்  நன்றாக  இருக்கிரார்கள். எதிர் நீ ச்சல், என்ன செய்வது, எப்படி ஆகும் என்ற  எண்ணங்களைத்  திட்டமிட்டு திட்டமிட்டே காலம்  ஓடிவிட்டது. சமயம் வரும்போது அவர்களைப் பற்றியும் எழுதுவேன்.

    

விகடனின்  எல்லா விகடனின பதிபபுகளிலும் பினனூட்டம் எழுதுவது  எனக்கு பிடித்தமான விஷயம். எழுதியும் வருகிறேன்உடனுக்குடன்  படிக்க வேண்டியே ஓரளவு  என் மகன் கணினியை இயக்க சொல்லிக கொடுத்தான் துகம்யூட்டரில் உன்னால்  கெடுப்பதற்கு ஒன்றுமிலலை. பயமிலலாமல் முயற்சி செய் என்பான். பின்னூட்டம் எழுத  தமிங்லீஷ் முயற்சி செய்தேன். முதலில கொள் கொல்லாகத்தான் வந்தது. ரொமனைஸ் கீ போர்ட் விகடன் தந்து  உதவியது.

 

எனககு வயது78.  .இந்த வயதிற்குறிய நலக்குறைவுகள்  சர்க்கரை தவிர  மீதி எலலாவற்றையுமே  பெயருடன் தகுதியாகப் போடடுக கொள்ளலாம் நடை ஜாஸ்தி  இல்லை. சமயல் நேரம் போக கணினியே.

 

     ப்ளாக் வலைப் பதிவைப் பற்றி எலலாம் தெரிந்து கொள்ளவேயில்லை.. நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் பெரிய  ஊரே தவிர 8வகுப்புக்கு மேல்படிக்க வசதி கிடையாதுவெளி ஊருக்கு பெண்களை அனுப்பவும் மாட்டார்கள்ஆங்கிலமும கிடையாது.

                          

     ஒரு ஸ்வாரஸ்யமான விஷயம். 12 வயதில்E.S.L.C    முடித்த கையோடு அதே ஸ்கூலில  எனக்கு டீச்சர் வேலை கிடைத்தது. 1945. கம்பல்ஸரி எஜுகேஷன் ஸிஸ்டம் தமிழ் நாட்டில் அறிமுகம். பள்ளிகளில் கட்டாயமான சேர்க்கை.மாணவ மாணவிகள்டீச்சர் வேண்டுமே? சம்பளம் தெரியுமா25ப்ளஸ்16  41.  2வருஷம் வேலை செய்தேன்.குழந்தைத் தொழிலாளிமாதிரி குழந்தைப் படிப்பாளியா?

 

எங்கள் தெருவில்  உள்ளவர்களுக்கு  அதிலும் வயதானவர்களுககு கதை புராணங்கள், விகடன் போன்ற கதை புத்தகங்கள் படிக்க, கடித்ம் படிக்க எழுத எலலாமே நானதான்.. நானும் மிகவும்  அன்புடனும்  அர்ப்பணிப்புடனும்  செய்வேன்இதனால் சகலரின் விஷயமும் அத்துபடிவேறு வேலை வேண்டுமே?

 

யூத் விகடனில்   வலைப்பூ பற்றி தற்செயலாய்ப் படித்தேன், பார்த்தேன். விசாரித்தேன். உனக்கு முடிந்ததை தெரிந்ததை  எழுது, மனதும் நேரமும  உபயோகமாக இருக்கட்டும் என மகன் ஊக்கம் கொடுக்க நான் வந்துள்ளேன்  இவர்கள்  தமிழ் பேசுவாரகள். நான் யூனிகோட் முயற்சியில் நிதானமாக எழுதியிருக்கிறேன்.

 

இதைப் படிக்கும் யாவரும்தாய்,அத்தை,பாட்டி மாமி  எந்த முறையில்  என்னை நினைத்தாலும் சரி. மேலும்   எனக்குத் தெரிந்து கொள்ள  உதவுங்கள். சாதாரண சமையலில் ஆரம்பித்து எவ்வெப்படி எழுதி வரமுடியுமோ வருகிரேன். ஊக்கம் கொடுங்கள், வலைப் பதிவை எப்படியெல்லாம்உபயோகிக்கலாம்? ஆசானாகவும் இருங்கள். வாருங்கள் என்றுதான் கூப்பிடுவீரகளலலவா?

 

.நம்பி அவர்களுக்கும், சிவச்சந்திரன் அவர்களுக்கும் நனறி.

 
 

சொல்லுகிறேன் காமாட்சி

“>

184 பின்னூட்டங்கள் Add your own

  • 1. yum1yum2's avatar yum1yum2  |  6:11 பிப இல் ஏப்ரல் 18, 2009

    Good luck. enjoy blogging

    மறுமொழி
  • 2. mannu's avatar mannu  |  2:53 பிப இல் ஜூலை 12, 2009

    wow! very nice paati!
    -suresh family

    மறுமொழி
  • 3. mannu's avatar mannu  |  2:55 பிப இல் ஜூலை 12, 2009

    paati is soooooo cute! i love the background!
    love you lots,
    chellon kutti,
    mannu

    மறுமொழி
  • 4. Prabu's avatar Prabu  |  3:15 பிப இல் ஓகஸ்ட் 14, 2009

    மாமி, கலக்கறேள் …

    இன்று தான் உங்களது ப்லோக்-இ படித்தேன். (பாபு அண்ணா சொல்லி)

    மறுமொழி
    • 5. chollukireen's avatar chollukireen  |  9:23 பிப இல் செப்ரெம்பர் 18, 2009

      கலக்கலே. எழுதுகிரேன். தொடர்ந்து கமென்ட் கொடு.லதாவிற்கும் நன்றி.மாமி

      மறுமொழி
  • 6. NATARAJAN (Raju)'s avatar NATARAJAN (Raju)  |  9:29 முப இல் செப்ரெம்பர் 10, 2009

    Anbulla Mamikku

    Rajuvin namaskarangal.

    Sorry. I am not able to continue in Tamil.

    I am very happy to see your blog and the picture. Continue the work.

    I will ask Lakshmi to refer all this notes before she attempts any new dish.

    I will contact you again

    Namaskarams

    மறுமொழி
    • 7. chollukireen's avatar chollukireen  |  9:18 பிப இல் செப்ரெம்பர் 18, 2009

      உபயோகமாக இருந்தால் யாவருக்கும் நன்றிதான்.பரவாயில்லை. இங்லீஷில் பதிலெழுதிநால் போதும்.மாமி

      மறுமொழி
  • 8. NATARAJAN (Raju)'s avatar NATARAJAN (Raju)  |  9:36 முப இல் செப்ரெம்பர் 10, 2009

    Mami

    You are expert in rasam.

    Give simple receipe for rasam. Let every one benefit from it.

    Thanks

    மறுமொழி
    • 9. chollukireen's avatar chollukireen  |  9:12 பிப இல் செப்ரெம்பர் 18, 2009

      நீ கேட்ட மாதிரி எழுதுவேன் தொடர்ந்து கரு்த்து தெரிவித்தால் சந்தோஷம் பன்மடங்காகும்

      மறுமொழி
  • 10. Sheela Sarma's avatar Sheela Sarma  |  6:53 முப இல் செப்ரெம்பர் 11, 2009

    Mami
    Namaskaram. Netrudan lata solli nan padithen. Romba santhosham. Perumai.
    Meendum ungalai neril parpathu pol ulladu.
    Pls innum niraya ezuthungo. Ini engalukku kavalai illai. Edu vendum enralum ungalai ketkalam.

    romba kashta pattu Tamizil ezudigiren. Becos tamil marande poi vittadu. Neengal en kalyanathin bodu sonnadudan ninaivu varugiradu. Thirumbavum tamil ezuda romba santosham. Aduvum ungaludun pesa.

    We are very happy to know you, and proud of you. You have been always a symbol of support & strength to all who know you. But now you have become the pedestal of hope to one and all.

    Regards
    Sheela

    Sheela

    மறுமொழி
    • 11. chollukireen's avatar chollukireen  |  9:08 பிப இல் செப்ரெம்பர் 18, 2009

      ,உ ன்னுடைய அன்பிற்கும், கருத்திற்கும் நன்றி.
      தொடர்ந்து எழுதி வரவும்.மாமி

      மறுமொழி
  • 12. Sheela's avatar Sheela  |  9:03 முப இல் செப்ரெம்பர் 19, 2009

    Mami

    Navaratrikku ellam ready agi vittada/

    Pls easily puttu seyia sollungulen.

    Regds

    மறுமொழி
    • 13. chollukireen's avatar chollukireen  |  1:38 பிப இல் ஒக்ரோபர் 2, 2009

      நவராத்திரி சமயம் நியூயார்க் முதலிய இடங்கள் போய் விட்டதால் எதுவுமே எழுதவில்லை. ஜெநீவா இன்று வந்தேன். அன்புடன் மாமி

      மறுமொழி
    • 14. chollukireen's avatar chollukireen  |  2:11 பிப இல் ஒக்ரோபர் 7, 2009

      நான் நியூயார்க் போய்விட்டதால் எதுவுமே செய்ய எழுத முடியவில்லை.பிறகு எழுதுகிறேன்.
      உன் அன்பிற்கு நன்றி அன்புடன் மாமி

      மறுமொழி
  • 15. Kannan's avatar Kannan  |  2:09 முப இல் ஒக்ரோபர் 1, 2009

    வருக வருக

    மறுமொழி
    • 16. chollukireen's avatar chollukireen  |  1:40 பிப இல் ஒக்ரோபர் 2, 2009

      நன்றியைச் சொல்லுகிறேன்

      மறுமொழி
    • 17. chollukireen's avatar chollukireen  |  2:24 பிப இல் ஒக்ரோபர் 2, 2009

      தொடர்ந்த கருத்துக்களுக்கு சந்தோஷமும் நன்றியும்.

      மறுமொழி
  • 18. Sheela's avatar Sheela  |  9:23 முப இல் ஒக்ரோபர் 16, 2009

    Mami

    Namaskaram. Ellorukkum happy Diwali.

    Diwalikku enna special?

    Regds

    மறுமொழி
    • 19. chollukireen's avatar chollukireen  |  5:12 முப இல் மார்ச் 22, 2010

      ரொம்ப நாள் கழித்து கமென்டுகள் பார்த்தேன்.காரணம் தெரியவில்லை.
      அடுத்த மாதம் டெல்லியில் பார்க்கலாம் மாமி

      மறுமொழி
  • 20. Sheela's avatar Sheela  |  9:11 முப இல் திசெம்பர் 18, 2009

    Mami

    Inrudhan ungalin updates padithen. Mumbai vandirukirirgala? Eppadi erukirirgal?

    மறுமொழி
  • 21. Anandh's avatar Anandh  |  2:36 பிப இல் ஜனவரி 25, 2010

    Hi amma thanks for rava kesari tips

    மறுமொழி
    • 22. chollukireen's avatar chollukireen  |  7:56 முப இல் ஜனவரி 26, 2010

      உங்கள் நன்றிக்கு என் அன்பு வாழ்த்துக்கள்.
      அடிக்கடி பின்னூட்டங்கள் எழுதலாமே.
      எழுதுபவர்களுக்கு ஊக்கம் கிடைக்கும்.

      மறுமொழி
    • 23. chollukireen's avatar chollukireen  |  9:45 முப இல் மார்ச் 17, 2011

      எப்படி பதில் எழுதாமலிருந்தேன். உங்கள் வரவிற்கும். கமென்ட்டிற்கும் மிகவும் நன்றி.

      மறுமொழி
  • 24. Sheela's avatar Sheela  |  9:01 முப இல் பிப்ரவரி 9, 2010

    Mami

    Namaskarams. Eppidi erukel?

    mami enaku pls edavadu easiest parupu thengai (Preferably Manogaram) panna solli thango.

    Regards

    மறுமொழி
    • 25. chollukireen's avatar chollukireen  |  10:08 முப இல் மார்ச் 21, 2010

      ஆசிகள். உன் கமென்ட் இப்பொழுதுதான் பார்த்தேன். கட்டாயம்
      எழுதுகிறேன் அன்புடன் மாமி

      மறுமொழி
  • 26. vallamsenthil's avatar vallamsenthil  |  1:51 பிப இல் மார்ச் 28, 2010

    அம்மா உங்கள் முயற்சி நன்றாயிருக்கிறது.

    மறுமொழி
    • 27. chollukireen's avatar chollukireen  |  4:27 முப இல் மார்ச் 29, 2010

      இந்த முயற்சிக்கு ஏப்ரலுடன் ஒரு வருஷம் முடிகிரது. பாராட்டி எழுதி இருப்பது
      மிகவும் ஸந்தோஷமப்பா. நன்றியும் கூட. பாராட்டுகளால் முயற்சிகள் கூடும்.
      அன்புடன் அம்மா.

      மறுமொழி
  • 28. Sheela's avatar Sheela  |  8:43 முப இல் ஏப்ரல் 12, 2010

    Mami

    Ellorukkum Puthandu Vazthugal.

    Mami, start another segment also in this new year. Apart from these recepies, pls start telling about all festivals & puja.

    Pls explain what are all the rituals to be followed, how ,, etc…

    Regards

    மறுமொழி
    • 29. chollukireen's avatar chollukireen  |  9:57 முப இல் ஏப்ரல் 13, 2010

      மிகவும் ஸந்தோஷம். உங்கள் யாவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். பருப்புத் தேங்காய் விஷயம் கேட்டிருந்தாய்.அதை எழுதின பிறகு மற்றவைகளைப் பற்றி யோசிக்கிறேன். உன்னுடைய கருத்துக்களுக்கு மிக்க நன்றி.
      தொடர்ந்து எழுதி வா.

      மறுமொழி
  • 30. `shini's avatar `shini  |  11:02 முப இல் ஏப்ரல் 19, 2010

    very good amma all the best

    மறுமொழி
    • 31. chollukireen's avatar chollukireen  |  10:46 முப இல் ஏப்ரல் 20, 2010

      பாராட்டுகளுக்கு மிகவும் மகிழ்ச்சி,நன்றியும்கூட. ஒரு வருஷமாக தொடர்ந்துகொண்டு இருக்கிறேன். அன்புடன் காமாட்சி

      மறுமொழி
  • 32. shini's avatar shini  |  11:06 முப இல் ஏப்ரல் 19, 2010

    kali flower poriyal seiya solli thanga

    மறுமொழி
    • 33. chollukireen's avatar chollukireen  |  10:49 முப இல் ஏப்ரல் 20, 2010

      ஸந்தோஷங்கள். சொல்லுகிறேன்.

      மறுமொழி
    • 34. chollukireen's avatar chollukireen  |  1:20 பிப இல் ஏப்ரல் 20, 2010

      நீங்கள் கேட்ட காலி ப்லவர் கறி பதிவாகி விட்டது. அன்புடன்
      சொல்லுகிறேன்

      மறுமொழி
  • 35. usha's avatar usha  |  4:56 பிப இல் ஜூன் 16, 2010

    Inaikku thaan first time ungaloda kuripukali parthen.En veetukarar velinattil sondha samayal seidhu kondu velaikku porar. Avarukku ungal kuribugal romba use aagum adalal odaney phone panni soliyachu.

    Ungala parkkum bodu en mamiyari parpadhu pola irundhadhu (avar ippo illai) enakku samayalil ovar than guru.
    Namaskarams
    Usha

    மறுமொழி
    • 36. chollukireen's avatar chollukireen  |  9:28 முப இல் ஜூன் 18, 2010

      உஷா உனது பதில் மனதை மிகவும் நெகிழ வைத்தது. இனனும் எழுத வேண்டும் என்ற எண்ணத்தை, ஊக்கத்தைக்
      கொடுக்கிறது. என்னைப் பார்க்கும் போது உன் மாமியாரைப்
      பார்த்த மாதிரி என்றும், அவர்தான் சமையல் குரு என்றும்
      எழுதியிருக்கிராய். எவ்வளவு பாசமான உணர்வுள்ள வார்த்தைகள்?. பெண்ணே உனக்கும், உன் குடும்பத்தினருக்கும்
      என் அன்புகளும் ஆசிகளும். தொடர்ந்து பதிலெழுதிக்கொண்டிரு.
      அன்புடன் காமாட்சி

      மறுமொழி
  • 37. Gowri, Bangalore's avatar Gowri, Bangalore  |  1:33 பிப இல் ஓகஸ்ட் 28, 2010

    I am happy to read your blog. I have not learnt still. Now after reading your blog, I am feeling more inspired to do so.

    மறுமொழி
    • 38. chollukireen's avatar chollukireen  |  11:14 முப இல் செப்ரெம்பர் 6, 2010

      உனது பதில் பார்த்து எனக்கும் சந்தோஷமாக இருந்தது. நீகூட ஏதாவது குறிப்புகள் எழுத விரும்பினால் தெரிவி. வயதானவர்களுக்கு தெறிந்ததைப் பகிர்ந்து கொள்ள இதுவும் ஒரு நல்ல வழி எனத் தோன்றியது.தொடர்ந்து கொண்டு இருக்கிறேன். நன்றி அன்புடன் காமாட்சி

      மறுமொழி
  • 39. sheela's avatar sheela  |  8:15 முப இல் செப்ரெம்பர் 16, 2010

    Mami

    Namaskarm. Eppidi / engu erukel?

    Mami Navaratri varugiradu. Pls easy sundals (something different), easy Aval kesari panna solli thangal.

    convey my enquries to Suman, Vilsu.

    Regds
    Sheela

    மறுமொழி
    • 40. chollukireen's avatar chollukireen  |  9:13 முப இல் செப்ரெம்பர் 17, 2010

      ஆசிகள். நான் நியூஜெர்ஸி போய்விட்டு ஜெனிவா வந்து விட்டேன். சுண்டல் வகைகள் சில எழுதி இருக்கிறேன். காப்ஸிகம். டொமேடோ. ஸேலட் வகை கீரைகள், முளைவிட்ட தாநியங்கள்
      இவைகள் எல்லாம் சேர்த்துக் கூட சுண்டல்கள் செய்யலாம்.வெந்த
      தானியங்களும், பருப்புகளும்தான் அடிப்படை. சில்லிசாஸ், ஸோயாசாஸ், டொமேடோசாஸ் என கலந்து ருசியில் வித்தியாஸம் கொண்டு வரலாம். மிளகுப் பொடி இதுவும் கூட டேஸ்ட்டில் வித்தியாஸம் கொடுக்கும். உன் விசாரிப்புகளுக்கு நன்றி. அவல் கேஸரி எழுதுகிறேன்.

      மறுமொழி
  • 41. Sheela's avatar Sheela  |  10:32 முப இல் ஒக்ரோபர் 4, 2010

    Mami

    Namaskarma. Avil puttu kooda ezuthungo.

    thanks & regds

    மறுமொழி
    • 42. chollukireen's avatar chollukireen  |  8:23 முப இல் ஒக்ரோபர் 7, 2010

      2, 3 நாட்களாக கணினி வேலை செய்யவில்லை. எல்லோருக்கும் நவராத்திரி.தசரா வாழ்த்துகள். அன்புடன் மாமி

      மறுமொழி
  • 43. டி.எஸ்.ஜெயந்தி's avatar டி.எஸ்.ஜெயந்தி  |  11:38 முப இல் ஒக்ரோபர் 7, 2010

    காமாட்சி மாமி நமஸ்காரம்.
    நான் சென்னையில் இருக்கிறேன். இன்றுதான் முதலில் உங்கள் தளத்தைப் பார்த்தேன்.
    நான் அறுசுவை.காமில் கதைகள் எழுதி வருகிறேன்.
    நீங்கள் அந்தத் தளத்திற்கு வந்து பார்வையிட்டு உங்கள் கருத்துக்களைக்கூறுங்கள்.

    உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தைத்தர ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.
    அன்புடன்
    ஜெயந்தி

    மறுமொழி
    • 44. chollukireen's avatar chollukireen  |  8:38 முப இல் ஒக்ரோபர் 15, 2010

      ஆசிகள் ஜெயந்தி.உன் பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. நீசொன்ன படியே உன் பதிவுகளைப் பார்த்து
      கருத்துகளை எழுதுகிறேன். தொடர்ந்து நட்பை வளர்த்துக் கொள்வோம். அன்புடன் காமாட்சிமாமி.
      வேண்டியவர்களுக்கு சொல்லுகிறேனை அறிமுகம் செய் .

      மறுமொழி
    • 45. chollukireen's avatar chollukireen  |  9:02 முப இல் ஒக்ரோபர் 15, 2010

      நவராத்திரி வாழ்த்துகள் உனக்கும், உன் குடும்பத்தினருக்கும் ஜெயந்தி. ஆசிகள் அன்புடன் மாமி

      மறுமொழி
  • 46. shobana's avatar shobana  |  4:54 முப இல் ஒக்ரோபர் 9, 2010

    Maami, Subhash gave me your blog details and i happen to c this today…Hope you would remember me, i am shobana- daughter-in-law is Manjula Kannan, K.k.Nagar. You have done such a wonderful work and future generations would defn be thankful to you…..i cannot forget the kaaparisi which u had bring for Akshara’s thottil……Keep going maami….!!!! Regards.

    மறுமொழி
    • 47. chollukireen's avatar chollukireen  |  8:59 முப இல் ஒக்ரோபர் 15, 2010

      ஆசிகள். சோபனா பெயரைப் பார்த்தவுடன் நீதான் என்று மனதில் தோன்றியது. தொடர்ந்து உன் தன்னறிமுகம்.
      உணர்ந்து எழுதிய பாராட்டும் நன்றிகள், அசத்திவிட்டாய் மருமகளே. பாராட்டுகள் உனக்கும்.
      நவராத்திரி வாழ்த்துகள் அக் க்ஷராவிற்கும் உன் குடும்பத்தின் அனைவருக்கும். உனக்கு வேண்டியவர்களுக்கு
      சினேகிதிகளுக்கு, சொல்லுகிறேனை அறிமுகம் செய். அன்புடன் மாமி

      மறுமொழி
  • 48. gowri's avatar gowri  |  9:27 முப இல் ஓகஸ்ட் 25, 2011

    I am new to your blog amma.It is really usefull and descriptions are very clear.

    மறுமொழி
    • 49. chollukireen's avatar chollukireen  |  12:42 பிப இல் ஓகஸ்ட் 25, 2011

      உன்னுடைய பாராட்டும், வரவும் எனக்கு மிக்க மகிழ்ச்சியைக் கொடுத்தது. அடிக்கடி வந்து அபிப்பிராயங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கவும். திரும்பவும் பார்க்கலாமா. அன்புடன்

      மறுமொழி
  • 50. sundar's avatar sundar  |  10:16 முப இல் செப்ரெம்பர் 29, 2011

    அன்புள்ள மாமிக்கு
    சுந்தரின் வணகங்கள்
    மாமா விரைவில் குணமடைய அருணாச்சலேஸ்வரரை
    வேண்டுகிறேன்

    இந்த வலை தலித்தை இப்போதுதான் பார்கிறேன்
    மற்றவை பின்
    tiruvnanamalai சுந்தர்

    மறுமொழி
  • 51. Mohamed thariq's avatar Mohamed thariq  |  12:38 பிப இல் ஜனவரி 9, 2012

    அம்மா உங்கள் முயற்சி பல பேர்க்கு உக்கமாக இருக்கும்….

    மறுமொழி
    • 52. chollukireen's avatar chollukireen  |  5:07 முப இல் ஜனவரி 10, 2012

      உங்களின் பதில் எனக்கும் மிக்க ஊக்கம் கொடுக்கும்வகையாக இருக்கிரது. மிக்க ஸந்தோஷம். வருகைக்கு மிக்க நன்றி சொல்லுகிறேன்.

      மறுமொழி
  • 53. Chandrasekaran's avatar Chandrasekaran  |  5:41 முப இல் ஜனவரி 13, 2012

    anbulla kamakshi mamikku aneka namaskarangal. Naan intruthan ungal blog i padithen. Mikka santhosham. Naan railway yiliruthu reire agi 1 varsham agirathu. Tharpothu Trichyil nanum yengathu mamiyum irukkirom. Pongal namaskarangal. Pinnar virivakhaa eazhuthukiren. Segar

    மறுமொழி
    • 54. chollukireen's avatar chollukireen  |  6:20 முப இல் ஜனவரி 13, 2012

      பொங்கல் வாழ்த்துக்களும், ஆசீர்வாதங்களும். உங்களையும் அறிமுகம் செய்து எழுதுங்கள். ஸந்தோஷமாயிருக்கும். உங்கள் வரவிற்கு மிகவும் நன்றி.
      சொல்லுகிறேன் காமாட்சி.

      மறுமொழி
  • 55. Chandrasekaran's avatar Chandrasekaran  |  2:26 பிப இல் ஜனவரி 19, 2012

    மாமிக்கு சேகர் மாலதி அநேக நமகரங்கள். உங்களுக்கு ச்ரமம் தர வேண்டாம் என்று மெயில் அனுப்பவில்லை . பொங்கல் நன்றாக நடந்ததா? இங்கு யாவரும் சௌக்கியம் . நமஸ்காரங்கள் . சேகர்

    மறுமொழி
    • 56. chollukireen's avatar chollukireen  |  12:40 பிப இல் ஜனவரி 21, 2012

      எதுவுமே சிரமமில்லை. எங்கிருந்தோ நீங்கள் விசாரித்து எழுதுகிறீர்கள்.. ஸந்தோஷம். தொடர்ந்து நிரைய சமையல் குறிப்புகள் எழுதியும் வருகிறேன். சும்மா அதையும் படித்துப் பார்க்கலாம்.. வித்தியஸமான கேட்ட, செய்த குறிப்புகளவை..
      கொஞ்சம், பூண்டு, வெங்கயத்தைத் தவிர்த்துப் படிக்கலாம்.முடிந்த
      கருத்துக்களை எழுதுங்கள்.. ஆசிகள். அன்புடன் மாமி.

      மறுமொழி
  • 57. சந்திரமால்யா's avatar சந்திரமால்யா  |  4:49 பிப இல் பிப்ரவரி 3, 2012

    அன்பு நிறைந்த அம்மா!
    அம்மா என்று உங்களை அழைப்பதில் என் மனது சொல்லமுடியாத ஆனந்தத்தை உணருகிறது. நீங்கள் விடயங்களை இங்கு சொல்லும்விதம் அப்படியே என் அம்மாவை எனக்கு நினைவுபடுத்துகிறது.

    பசியால் வருந்துவோர்க்கு பரிவோடும் பாசத்தோடும் பசிதீர்க்கும் அன்னபூரணியாக காசியில் இருந்த தாய்தான் காஞ்சியில் காமாட்சி என்று அழைக்கப்பட்டதாக படித்திருக்கிறேன்.

    அதனால்தானோ என்னவோ காமாட்சி என்னும் பெயரில் இங்கும் இந்த இணையதளத்தின் மூலம் எமக்கு உங்களின் அனுபவத்துடன் அன்பையும் சேர்த்து ஒவ்வொரு குறிப்புகளையும் பார்த்துப்பார்த்து மிக நேர்த்தியாக தருகிறீர்கள். மிக்க நன்றி அம்மா.

    நான் ஜேர்மனியில் கணவர் பிள்ளைகளுடன் வசிக்கிறேன். வெளி நாட்டில் வசிக்கும் எமக்கு இங்குள்ள காலநிலைக்கும் தக்கவாறு எமது பாரம்பரிய உணவுகளை மறந்திடாமல் சுலபமாக செய்திட உங்கள் குறிப்புகள் உதவுகின்றது. இன்றுதான் உங்களின் இந்த இணையதளத்தை பார்த்தேன்.
    நிதானமாக பார்த்து செய்ய நிறைய விடயங்கள் இருக்கிறது.

    மிக்க நன்றி அம்மா! மீண்டும் வருகிறேன்.

    மறுமொழி
    • 58. chollukireen's avatar chollukireen  |  10:33 முப இல் பிப்ரவரி 5, 2012

      அன்புப் பெண்ணே ஆசிகள்.
      அம்மா என்ற அழைப்பும், மீண்டும் வருகிறேன் என்ற
      வார்த்தையும் மனதிற்கு மிக்க நிறைவைத் தருகிறது.

      மறுமொழி
  • 59. chollukireen's avatar chollukireen  |  10:53 முப இல் பிப்ரவரி 5, 2012

    மிக்க ஸந்தோஷமம்மா விறிவாக பதில் மறுபடி எழுதுகிறேன். தொடர்ந்து எழுது. அம்மா

    மறுமொழி
  • 60. சந்திரமால்யா's avatar சந்திரமால்யா  |  10:22 முப இல் பிப்ரவரி 26, 2012

    அன்பு அம்மா. உங்களின் அன்பான பதிலுக்கு மிகவும் நன்றி
    தொடர்ந்து சில பல இடையூறுகளால் மீண்டும் வருகிறேன் என்றேனே ஒழிய உடனேயே இங்கு வரமுடியாது போய்விட்டது. வெளிநாட்டு இயந்திர வாழ்க்கை, குடும்பம், கவனிப்பு என பொழுதே போதாமல் இருக்கிறது.
    நேரம் ஒதுக்கி வர முயல்கிறேன்.

    மறுமொழி
    • 61. chollukireen's avatar chollukireen  |  9:42 முப இல் பிப்ரவரி 27, 2012

      சந்திரமால்யா மிகவும் மகிழ்ச்சி. என்னம்மா நீ திருச்சியில் இருப்பதாகத்தான் நான் நினைத்தேன். குடும்பம்,கவனிப்பு இவைகள்தானே நம்
      அத்யாவசியமான வேலை. இயந்திர வாழ்க்கையானாலும் சுய தேவைகளை தாமே செய்து கொள்ளும்படியான எல்லாம் வல்லவராக ஓரளவாவது வாழ்க்கையை மாற்றுகிறதல்லவா. அதைநினைத்து ஸந்தோஷப்பட வேண்டும். முடிந்தபோது நேரம் சேமித்து பதிலேழுது. இதிலும் ஒரு ஸந்தோஷம் இருக்கிறது. அன்புடன் அம்மா.வெளிநாட்டு இயந்திர வாழ்க்கை ஸரியான வர்ணனை.

      மறுமொழி
  • 62. Sheela sarma's avatar Sheela sarma  |  11:49 முப இல் மார்ச் 10, 2012

    Mami

    Namaskaram.

    Pachai Sundaikai vaithu enna ellam pannalam. Pls sollungal. (Incl pitla.) Last week Shanti’s elder son got engaged & I was there. I got sundaikai from south and prepared pitla. H/e want to know more.

    Matrabadi ningal ippodhu Chennai la / Mumbai la.

    On return, pls stay in Delhi and come home pls.

    Regards

    மறுமொழி
    • 63. chollukireen's avatar chollukireen  |  9:57 முப இல் மார்ச் 11, 2012

      உனக்குமெயில்அனுப்பிஇருக்கிறேன்.பச்சை
      சுண்டைக்காயை வாங்கி வந்த பிறகு
      ப்ளாகில் குறிப்புகள் போடுகிறேன். உனக்கு நான் அனுப்பிய பேஸிக் குறிப்புகள் உபயோகமாயிருக்கும் என்று நம்புகிறேன். பேஸ்புக் வழியா டாலு கல்யாண விஷயம் எனக்குத் தெறியும்.

      மறுமொழி
  • 64. பிரபுவின்'s avatar பிரபுவின்  |  6:49 முப இல் ஏப்ரல் 3, 2012

    இன்று தான் உங்கள் வலைப்பதிவிற்கு வருகிறேன். இவ்வளவு நாளும் உங்களுக்கு வலைப்பதிவு இருப்பதே எனக்குத் தெரியாது. இனி உங்கள் வலைப் பதிவை தொடர்ந்து தரிசிப்பேன். நன்றி சொல்லுகிறேன்.

    pirabuwin@wordpress.com

    மறுமொழி
    • 65. chollukireen's avatar chollukireen  |  7:15 முப இல் ஏப்ரல் 3, 2012

      ஆரம்பத்தில் நீங்கள் அதென்ன சொல்லுகிறேன் என்ற பெயர்?
      என்னைக் கேள்வி கேட்டிருந்தீர்கள். ப்ளாக் என்றாலே என்ன என்ற கேள்விக்கு ஒரு ப்ளாகை ஆரம்பித்துக் கொடுத்து அதற்குப் பெயர் சொல்லச்சொன்ன என் மகனுக்கு சொல்லுகிறேன் என்ற பெயரைச்
      சொன்ன விஷயம் உங்களுக்கு எழுதியிருந்தேன். உங்கள் பிஸியான வேலைகளில் ஞாபகம் இருக்க வாய்ப்பில்லை.
      உங்களின் முதன்முதலான வரவிற்கு என்னுடைய மகிழ்ச்சி
      அளவில்லாதது. தொடர்ந்து பங்கு கொள்வீர்கள் என்பது
      குறித்து மிக்க நன்றி. அன்புடன் சொல்லுகிறேன்.

      மறுமொழி
  • 66. ranjani135's avatar ranjani135  |  11:04 முப இல் ஏப்ரல் 14, 2012

    அன்புள்ள திருமதி காமாட்சி அம்மாவிற்கு,
    புத்தாண்டு வாழ்த்துக்கள்!
    முதல் முதலாக உங்கள் பதிவுகளை இன்றுதான் பார்க்க நேர்ந்தது. உடனே தோன்றிய எண்ணம் இத்தனை நாளாக தவற விட்டுவிட்டோமே என்பதுதான். ஒன்றும் தெரியாது என்று சொல்லிக் கொண்டே இத்தனை எழுதியிருக்கிறீர்கள்! அருமை அருமை.
    நானும் உங்களைப்போல்தான். பத்திரிகைகளில் எழுதி வந்த நான் இப்போது சில இணையதளங்களுக்கு எழுதி வருகிறேன். அதில் வெளி வருவதை அப்படியே இங்கும் பதிவு செய்கிறேன்.
    நல்வாழ்த்துக்கள்! அடிக்கடி சந்திப்போம்!

    மறுமொழி
    • 67. chollukireen's avatar chollukireen  |  7:20 முப இல் ஏப்ரல் 15, 2012

      அன்புள்ள ரஞ்சனி ஆசிகள் . உங்கள் பின்னூட்டம் பார்த்து உடனே பதிலெழுதுகிறேன்.உங்களுடைய என்னைப்பற்றி விவரமும் படித்தேன்.
      மிக்க ஸந்தோஷமாக இருந்தது. கதைகளை நானும் படித்திருக்கலாம். திரும்பவும் படித்தால் ஞாபகம் வந்துவிடும். வேர்ட் ப்ரஸ்ஸில் படிக்க முயற்சிக்கிறேன். ப்ளாகிற்கு என்ன பெயர்? உங்கள் பின்னூட்டம் பார்த்து மனது ஸந்தோஷத்தில் இருக்கிறதா, பறக்கிறதா? தெறியவில்லை.
      உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். இன்னும் என்னைப் பற்றி நிறைய எழுதலாம் . அடிக்கடி ஸந்திக்கலாம் என்பது
      வரவேற்கக் கூடியது. அநுபவங்களைப் பகிரலாம் என்பதில் மிக்க மகிழ்ச்சி. அன்புடன் சொல்லுகிறேன்.

      மறுமொழி
  • 68. ranjani135's avatar ranjani135  |  1:38 பிப இல் ஏப்ரல் 15, 2012

    அன்புள்ள திருமதி காமாக்ஷி,
    பதில் எழுதியதற்கு நன்றி. எனது ப்ளாக் ranjaninarayanan.wordpress.com. எனது கதைகள் தவிர சில இணையதளத்திற்கு எழுதுவதையும் இங்கு பதிவு செய்து வருகிறேன். பத்திரிகைகளில் படிப்பதை மொழிபெயர்ப்பு செய்தும் எழுதுகிறேன். வேறு நல்ல இணையதளம் இருந்தால் சொல்லுங்கள்.
    இந்த ப்ளாக் எழுதுவது என்பது மிக அருமையான நல்ல பொழுதுபோக்கு இப்போது எங்கு இருக்கிறீர்கள்? நாங்கள் பெங்களூரில் இருக்கிறோம்.
    அன்புடன்,
    ரஞ்ஜனி

    மறுமொழி
  • 69. ranjani135's avatar ranjani135  |  11:30 முப இல் ஏப்ரல் 18, 2012

    அன்புள்ள திருமதி காமாட்சி,
    உங்களுக்காக நான் எழுதிய சில கட்டுரைகளின் link:

    தாஜ் மஹால் – தெரியாத விஷயங்கள்

    பாட்டியின் மரபணு!

    பருப்புசிலி ஜீன்!

    ஸ்ரீபுரம்


    உங்களது பின்னூட்டத்திற்காக காத்திருக்கும்
    ranjani

    மறுமொழி
    • 70. chollukireen's avatar chollukireen  |  10:38 முப இல் ஏப்ரல் 19, 2012

      அன்புள்ள ரஞ்சனி ஒவ்வொன்றாக எழுதுகிறேன். தொடருவோம். அன்புடன் சொல்லுகிறேன்

      மறுமொழி
  • 71. Asha varadan's avatar Asha varadan  |  2:58 பிப இல் ஓகஸ்ட் 24, 2012

    Thanks for sharing your experiences, Mammi.

    மறுமொழி
    • 72. chollukireen's avatar chollukireen  |  12:24 பிப இல் செப்ரெம்பர் 15, 2012

      ரொம்பவும் நன்றியம்மா. அடிக்கடி வாம்மா. அன்புடன்சொல்லுகிறேன்

      மறுமொழி
  • 73. cheenakay's avatar cheenakay  |  5:15 முப இல் செப்ரெம்பர் 3, 2012

    அன்புள்ள காமாட்சி அம்மா – அருமையான அறிமுகம் – நேபாள் , ஜெனீவா, – சமையல் க்லையினைப் பற்றி எழுதும் பதிவுகள் – ப்த்திரிகைகளில் பிரசுரம். – ஒவ்வொன்றாகப் படிக்கிறேன் – நட்புடன் சீனா

    மறுமொழி
    • 74. chollukireen's avatar chollukireen  |  9:53 முப இல் செப்ரெம்பர் 3, 2012

      உங்கள் முதல் வரவிற்கும், பாராட்டுதலுக்கும் மிகவும் ஸந்தோஷம். உங்களுக்கு சற்று காலந்தாழ்ந்த என்னுடைய அன்பும், ஆசிகளும்
      கலந்த திருமணநன்னாள் வாழ்த்துகளையும் சொல்லுகிறேன்.

      மறுமொழி
  • 75. nagarajan's avatar nagarajan  |  6:43 முப இல் செப்ரெம்பர் 4, 2012

    அன்புள்ள காமாட்ச்சி அம்மாள் அவர்களுக்கு,
    வணக்கம். எனக்கும் கணிணி பற்றி ப்ளாக் பற்றி எதுவும் தெரியாது.சின்ன வயதில் குரங்கு பெடல் போட்டு சைக்கிள் பழகும் சிறுவனை போல் இவைகளை கற்றுக் கொண்டேன்.உங்களின் பொருமையும் இன்றும் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற ஆர்வமும் எனக்கு சந்தோஷத்தையும் புத்துணர்வயும் தருகிறது.பெண் இனம் உக்கிராண் உள் விடுத்து வெளி வரவேண்டும் என்பதில் நான் பிடிவாதம்மாய் இருப்பவன். சமையல் குறிப்புகளுடன் நீங்கள் உங்கள் பள்ளி நாடகள், குடும்பத்தலைவியாய் தெரிந்து கொண்ட இனிப்பு கசப்பு அணுபவகள்.உங்கள் நாட்களில் இருந்த ஆண் ஆதிக்க உலகம்- என விரிந்து பரந்த உங்கள் அணுபவங்களை எழுதவும். சுவாரஸ்யமாய் எழுதுவது இயல்பிலேயே உங்களுக்குள் அமைதுள்ளது.கான் என்ற நண்பர் நிறைய கம்ப்யூட்டர் பற்றி தமிழில் எழுதியுள்ளார். அவரது வலைபதிவி முகவரியையும் தருகிரேன். அவர் முலம் போட்டோ ஷாப் பற்றிய பாடங்களை கற்று வருகிறேன்.வாழ்த்துக்கள்
    அன்புடன் நாகராஜன்.
    பி.கு- என் மின் அஞ்சல்-anagarajan08@gmail.com
    வலை பதிவு-a-nagarasan2000.blogspot.com

    மறுமொழி
    • 76. chollukireen's avatar chollukireen  |  12:40 பிப இல் செப்ரெம்பர் 15, 2012

      அன்புள்ள நாகராஜன்..என்னுடைய தாமதமான பதில். மன்னிக்கவும். நல்ல யோசனைகள் கொடுத்திருக்கிறீர்கள். நல்ல எண்ணங்களையும் பிரதிபலிக்கிறீர்கள். உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. சமையல் யோசனையை கொஞ்சம் விட்டுவிட்டு எழுத
      முயற்சி செய்கிறேன். பாராட்டுதலுக்கும் நன்றி. அடிக்கடி பின்னூட்டமிடுங்கள். உற்சாகமாக இருக்கும். அன்புடன்

      மறுமொழி
  • 77. Geetha Sambasivam's avatar Geetha Sambasivam  |  8:11 முப இல் செப்ரெம்பர் 4, 2012

    வணக்கம், அம்மா, நானும் ஆறு வருடங்களாக ஏதோ எழுதி வருகிறேன். இயன்றபோது வந்து பாருங்கள். நண்பர் ஒருவர் மூலம் உங்கள் வலைப்பதிவின் அறிமுகம் கிடைத்தது. மிகவும் சந்தோஷம். உங்கள் அனைவரின் நீண்ட ஆயுளுக்கும், ஆரோக்கியத்திற்கும் எங்கள் மனமார்ந்த பிரார்த்தனைகள். தற்சமயம் ஸ்ரீரங்கத்தில் இருக்கிறோம். இந்தியா வந்தால், திருச்சி வந்தால், கட்டாயம் எங்கள் வீட்டுக்கும் வாருங்கள். நன்றி.

    மறுமொழி
    • 78. chollukireen's avatar chollukireen  |  12:19 பிப இல் செப்ரெம்பர் 15, 2012

      நன்றியம்மா .அன்புடன் சொல்லுகிறேன்

      மறுமொழி
  • 79. வெங்கட்'s avatar வெங்கட்  |  2:06 முப இல் செப்ரெம்பர் 5, 2012

    சிறப்பான அறிமுகம் அம்மா.. உங்கள் வலைப்பக்கம் பற்றி ரஞ்சனிம்மா எழுதிய பதிவு படித்து உங்கள் பக்கம் வந்தேன். இனி தொடர்ந்து வருவேன்….

    மறுமொழி
    • 80. chollukireen's avatar chollukireen  |  12:09 பிப இல் செப்ரெம்பர் 15, 2012

      நன்றி. ரஞ்ஜனி அம்மாவுக்கும் தேங்ஸ். தொடர்ந்து வந்தால் மிக்க ஸந்தோஷமாக இருக்கும். அன்புடன் சொல்லுகிறேன்

      மறுமொழி
  • 81. Deepa's avatar Deepa  |  11:30 பிப இல் செப்ரெம்பர் 11, 2012

    Came to know about your blog through vikatan. You are doing such an excellent job. Your recipe resembles more of my Patti’s. Thanks so much

    மறுமொழி
    • 82. chollukireen's avatar chollukireen  |  12:16 பிப இல் செப்ரெம்பர் 15, 2012

      தீபா விகடன் மூலம் என்னைத் தெறிந்து கொண்டு வந்து பாராட்டியதற்கு மகிழ்ச்சி. பாட்டியை ஞாபகப்படுத்தும் குறிப்புகள். கிரீடம் சூட்டினமாதிறி உன்னுடைய வாக்கியம். நன்றியுடனும் அன்புடனும் சொல்லுகிறேன்.

      மறுமொழி
  • 83. sathiya's avatar sathiya  |  1:32 முப இல் செப்ரெம்பர் 12, 2012

    Hi maami, just now i came to know about your blog from aval vikatan.i saw your posts by catagory. no poriyal items? how to type in tamil?

    மறுமொழி
    • 84. chollukireen's avatar chollukireen  |  5:42 முப இல் செப்ரெம்பர் 12, 2012

      அன்புள்ள ஸத்யா என்னுடைய நடையில் பொரியல்கள் என்று சொல்லப்படுவதெல்லாம்
      கறி வகைகளாக இருக்கும். பழக்கப் பட்ட
      வார்த்தைஅது. உனக்கும் அது புறிந்து விடும். பின்னூட்டம் எழுதியதற்கு மிகவும்
      நன்றி. அடிக்கடி வா. ஸந்தோஷமாக இருக்கும். அன்புடன் சொல்லுகிறேன்.
      ஆசிகள்.

      மறுமொழி
      • 85. sathiya's avatar sathiya  |  7:23 முப இல் செப்ரெம்பர் 12, 2012

        thankyou maami 🙂

      • 86. chollukireen's avatar chollukireen  |  9:55 முப இல் செப்ரெம்பர் 12, 2012

        அன்புடன் வரவேற்கிறேன்.

  • 87. umasathish's avatar umasathish  |  4:07 பிப இல் செப்ரெம்பர் 12, 2012

    Anbu amma,netru than thangal blogai parthen.mikavum arumai. neril parthu pesuvathupola erukirathu.ethuve ungalin vertri ragasiyam.badham halwa seithen.arumaiyaha erunthathu.thanksma.

    மறுமொழி
    • 88. chollukireen's avatar chollukireen  |  11:45 முப இல் செப்ரெம்பர் 15, 2012

      பாதாம் ஹல்வாவுடன் உன்னைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. பெரிய ரகஸியம் ஒன்றுமில்லை. ரஸித்து சமைத்தால் ருசித்து மகிழும்படி அமையும். தேங்ஸ் சொல்லிவிட்டு போகாமல் அடிக்கடி வா. ஆசிகளுடனும் அன்புடனும் சொல்லுகிறேன்.

      மறுமொழி
  • 89. subhasini's avatar subhasini  |  4:51 முப இல் செப்ரெம்பர் 13, 2012

    Hi Aunty,
    Very nice & useful blog…keep rocking…

    மறுமொழி
    • 90. subhasini's avatar subhasini  |  4:52 முப இல் செப்ரெம்பர் 13, 2012

      Very nice & useful blog…keep rocking…

      மறுமொழி
      • 91. chollukireen's avatar chollukireen  |  11:30 முப இல் செப்ரெம்பர் 15, 2012

        சுபாஷிணி உன்னுடைய பின்னூட்டம் அதிக பலத்தைக் கொடுக்கும்போலத் தோன்றுகிறது. வந்துகொண்டே இருந்தால் விடமின் B12க்கு அவசியமே இருக்காது. வந்து கொண்டே இரு. ஸந்தோஷத்துடன் ஆசிகளும்
        அன்புடன் சொல்லுகிறேன்.

  • 92. kamakshinarayani's avatar kamakshinarayani  |  5:26 பிப இல் செப்ரெம்பர் 13, 2012

    i love you mami

    மறுமொழி
    • 93. chollukireen's avatar chollukireen  |  11:13 முப இல் செப்ரெம்பர் 15, 2012

      மிக்க நன்றி. என் அன்பான வாழ்த்துக்கள் உனக்கும் உன் குடும்பத்தாருக்கும். அடிக்கடி வா. அன்பைப் பகிர்ந்து கொள்ளுவோம். ப்ளாக் உபயோகமாக இருக்கா? அன்புடன் சொல்லுகிறேன்.

      மறுமொழி
  • 94. nithya's avatar nithya  |  12:43 பிப இல் செப்ரெம்பர் 14, 2012

    Hello Amma Vanakam…ungal blog patri vikatan via therinthu konden…nirampa santhosam…kandipaga inimel en karuthukalum ungal blog l idamperum..

    மறுமொழி
    • 95. chollukireen's avatar chollukireen  |  10:47 முப இல் செப்ரெம்பர் 15, 2012

      நித்யா ஆசிகள். விகடன் வழி தெறிந்து கொண்டு எழுதியதற்கு மிகவும் ஸந்தோஷம். தொடர்ந்து கருத்துக்கள் எழுதினால் என் மகிழ்ச்சி அளவிடமுடியாததாக இருக்கும். உன் அன்பிற்கு மெத்த மகிழ்ச்சி. நன்றியுடனும் அன்புடனும் சொல்லுகிறேன்.

      மறுமொழி
  • 96. sundaresan's avatar sundaresan  |  4:17 பிப இல் செப்ரெம்பர் 14, 2012

    மாமிக்கு நமஸ்காரம். தங்கள் ப்ளாக்கை பற்றி அவள் விகடனில் படித்தேன்.
    தங்கள் வலைப்பூ ப்ரமாதமாக உள்ளது.தாங்கள் வலைப்பூவில் சுலபமாக தமிழ் உள்ளீடு செய்ய தமிழ்99 கீ போர்டு பயன்படுத்தலாம். இது உங்களுக்கு தெரிந்திருந்து பயன்படுத்தினால் இந்த ஆலோசனையை தப்பாக எடுத்துகொள்ளவேண்டாம்.உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
    சுந்தரேசன்

    மறுமொழி
    • 97. chollukireen's avatar chollukireen  |  10:58 முப இல் செப்ரெம்பர் 15, 2012

      ஆசிகள்.உங்கள் பின்னூட்டத்தை வரவேற்கிறேன். நான் உபயோகிக்கும் கீபோர்ட்
      தமிழ் கீபோர்ட் 99ற்கும் முந்தியதான கீ போர்ட் என்று நினைக்கிறேன். யூனிகோட் என்பதாக ஞாபகம். இதில் பழகி விட்டதால் வழக்கம் ஆகிவிட்டது. சில குறிகள் வரவில்லை.முதலில்
      தமிழ் எழுத்துகளை ஒட்டி வைத்து உபயோகித்தேன். உங்கள் பாராட்டுதல், யோசனை, வாழ்த்துக்களுக்கும் நன்றி. மீண்டும்,மீண்டும் வருக என்று வரவேற்கும்
      அன்புடன் சொல்லுகிறேன்.

      மறுமொழி
  • 98. Lakshmi's avatar Lakshmi  |  6:14 முப இல் செப்ரெம்பர் 15, 2012

    இன்று அவள் விகடன் படிக்கும் போது உங்கள் பதிவு பற்றி தெரிந்தது. உடனே ஆர்வத்துடன் படிக்க ஆரம்பித்து விட்டேன். உஙகளை அறிமுகப்படுத்திய அவள் விகடனுக்கு நன்றிகள். மிக மிக உதவியாக இருக்கிறது. எங்க அம்மா சொல்லித் தர மாதிரியே இருக்கு. நன்றி

    மறுமொழி
    • 99. chollukireen's avatar chollukireen  |  11:08 முப இல் செப்ரெம்பர் 15, 2012

      அம்மா சொல்லித்தரமாதிறியே இருக்கு. இந்த வாக்கியம் ஒன்றேபோதும் ஸந்தோஷப்பட. அவள் விகடனுக்கு நானும் நன்றி சொல்கிறேன். நிறைய பேருக்கு நானும் அறிமுகமானதற்கு. அடிக்கடி
      இந்த அம்மாவையும் பார்க்க வந்தால் நன்றாக இருக்கும். நன்றி. அன்புடன் சொல்லுகிறேன்.

      மறுமொழி
  • 100. Hema raman's avatar Hema raman  |  12:40 பிப இல் செப்ரெம்பர் 15, 2012

    பிரியமான காமாட்சி பாட்டிக்கு ,
    நமஸ்காரம் !
    நான் ஹேமா ராமன் சென்னையில் இருந்து. அவள் விகடன் புரட்டிய போது தங்களின் போட்டோ மற்றும் செய்தி படித்தேன்.வியந்தேன்.அடுத்து நான் செய்தது தங்களின் 2 வருட பதிவுகளை படித்தது தான்.இயல்பாகவே சமைக்க ,படிக்க பிடிக்கும் …உங்கள் பதிவில் இரண்டும் இருக்கிறது …ஆச்சரியங்கள் அதிகமாகியது..வித விதமான சமையல் குறிப்புகள் படங்களுடன் ,பல நல்ல விஷயங்கள் பதிவு,அழகிய நடை …அட இப்படி ஒரு உற்சாகமான மனுஷியை நாம் பார்க்கவில்லையே என்ற ஏக்கம்… ஜெயா டிவி ,சன் டிவி சமையல் போட்டியில் கலந்து கொண்டாலே பரிசு நிச்சயம்…. இதோ உங்கள் வலை பகுதியில் நான் ….நிறைய எழுதுங்கள் ,நிறைய பகிர்ந்து கொள்ளுங்கள்… வாழ்கை வாழ்வதற்கு தான் என உணர்த்துகிறது உங்களது வலை பூ..வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன் .
    நன்றி அவள் விகடன்
    ப்ரியமுடன்
    ஹேமா ராமன்

    மறுமொழி
    • 101. chollukireen's avatar chollukireen  |  1:46 பிப இல் செப்ரெம்பர் 16, 2012

      அன்புள்ள ஹேமா ஆசிகள். உன்னுடைய கருத்துக் கடிதம் பார்த்து
      பிரம்மித்து விட்டேன். அவ்வளவு அழகாக உணர்ச்சிக் குவியலாக
      ஒரு அன்பு மடல். இதைவிட வேறு என்ன வேண்டும்.? இது போதும்.
      ஒரு,உற்சாகமான பெண்ணை, பேத்தியை, மருமகளை,எல்லாமாக அன்பான ஒரு பெண்ணை உன்னில் கண்டு மகிழ்ச்சி. அடைந்தேன்.
      அவள் விகடன் மூலம் என்னைக் கண்டு கொண்டதில் மிகவும் ஸந்தோஷம். நீ குறிப்பிடற அளவுக்கெல்லாம் எனக்கு தகுதி இருக்கோ இல்லையோ உன் அன்பிற்கு என்ன சொல்வது என்று
      யோசித்துக்கொண்டு இருக்கிறேன்.நிறைய வாழ்த்துக்கள் சொல்லி
      அன்புடனும் ஆசியுடனும் சொல்லுகிறேன்.

      மறுமொழி
  • 102. marin's avatar marin  |  10:24 முப இல் செப்ரெம்பர் 16, 2012

    aachi unga updates ellam superb!!

    மறுமொழி
    • 103. chollukireen's avatar chollukireen  |  1:48 பிப இல் செப்ரெம்பர் 16, 2012

      அன்புள்ள பெண்ணே நன்றியும் ஆசிகளும். அன்புடன் சொல்லுகிறேன்

      மறுமொழி
  • 104. sundaresan's avatar sundaresan  |  11:15 முப இல் செப்ரெம்பர் 16, 2012

    மாமிக்கு நமஸ்காரம்.தங்கள் ப்ளாக்குக்கு வரும் விமர்சனங்களுக்கு பதில் அளிக்கவே தங்களுக்கு நேரம் போதாது என நினைக்கிறேன்!!!
    தங்களது விடாமுயற்ச்சியும் வழிகாட்டலும் எங்களுக்கெல்லாம் ஒரு ஊக்க டானிக் என்றே சொல்லவேண்டும். வாழ்த்துக்களுடன்
    சுந்தரேசன்

    மறுமொழி
  • 105. Hema raman's avatar Hema raman  |  2:17 பிப இல் செப்ரெம்பர் 16, 2012

    பிரியமான காமாட்சி பாட்டிக்கு ஹேமா அனேக நமஸ்காரங்கள்!
    முதலில் நிறைய வாழ்த்துக்கள் தந்ததற்கு மிக்க நன்றி ! வாழ்த்துக்களும்,ஆசிர்வாதங்களும் தான் உலகின் எந்த ஒரு சூப்பர் மார்க்கெட்களில் விற்பனைக்கு இல்லை.அது தான் தேவை இப்போது…வாழ்த்த நல்ல உள்ளங்கள் குறைந்து கொண்டே வருகிறது….நிறைய தாருங்கள் வாழ்துக்கள்/ஆசிர்வாதங்கள் ஏற்றுகொள்ள காத்திருக்கிறேன்…”இன்று என்ன சமையல் ”
    என்று இனி இல்லை யோசனை…எனக்கு தெரிந்த வாழை தண்டு கூட்டு உங்கள் ரெசிபியில் வேறு விதமாக மணக்கிறது…தினமும் இனி உங்கள் ரெசிபி
    தான் செய்ய போகிறேன் …செய்து சாப்பிட்ட பிறகு மற்றவர்களின் விமர்சங்களை மறக்காமல் பதிவு செய்கிறேன் …..அது வரை விடை பெறுகிறேன்…
    பிரியமுடன்
    ஹேமா ராமன்

    மறுமொழி
    • 106. chollukireen's avatar chollukireen  |  10:31 முப இல் செப்ரெம்பர் 22, 2012

      அன்புள்ள ஹேமா ஆசிகள். உன் விமர்சனங்களை எதிர் பார்க்கிறேன். மிக்க இனிமையாக இருக்கு உன் பதில். வயதில்ப் பெறியவர்களிடம் கொடுப்பதற்கு ஆசிகள்தான் அதிகமிருக்கும். இப்படி பின்னூட்டமிடுபவர்களுக்கு ஆசியை அடிக்கடி கொடுத்துதான் எழுதுகிறேன். வாவா வந்துகொண்டே இரு.அன்புடன் பாட்டி.

      மறுமொழி
  • 107. bhavani's avatar bhavani  |  2:29 பிப இல் செப்ரெம்பர் 16, 2012

    maami super! vikatan paarthu ungal blog therinjunden. tamil software innum instal pannalla!ungalukkagave instal panna poren

    மறுமொழி
    • 108. chollukireen's avatar chollukireen  |  10:19 முப இல் செப்ரெம்பர் 19, 2012

      அன்புள்ள பவானி ஸந்தோஷமும் நன்றியும்.அடிக்கடிவா. அன்புடன்

      மறுமொழி
    • 109. chollukireen's avatar chollukireen  |  10:37 முப இல் செப்ரெம்பர் 22, 2012

      ஆசிகள் பவானி. இப்போது என் ப்ளாகைப் பார்க்க அடிக்கடி வருவாய் என்று நினைக்கிறேன். எனக்காகவே
      தமிழ் ஸாஃப்ட்வேர் வைக்கப்போகிறாய் என்று கேட்க எவ்வளவு ஸந்தோஷம் தெறியுமா?ஸந்தோஷம் அன்புடன் சொல்லுகிறேன்.

      மறுமொழி
  • 110. JAYASHREE SATHYAMURTHY.'s avatar JAYASHREE SATHYAMURTHY.  |  12:13 பிப இல் செப்ரெம்பர் 17, 2012

    DEAR AMMA,
    ONLY TODAY I CAME TO KNOW ABOUT YOUR WEBSITE.IT IS REALLY GOOD.PLEASE TEACH ME AS HOW TO MAKE ADHIRASAM.I WILL BE VERY HAPPY TO LEARN FROM U.
    THANK U,AMMA.

    மறுமொழி
    • 111. chollukireen's avatar chollukireen  |  10:17 முப இல் செப்ரெம்பர் 19, 2012

      நான் செய்து ரொம்ப வருஷமாச்சு. செய்து விட்டு எழுதுகிறேன். உங்கள் பாராட்டு மனதிற்கு இதமாக இருக்கு. மிகவும் நன்றி. அடிக்கடி பின்னூட்டங்கள் மூலம் ஸந்திக்கலாம்.அன்புடன்

      மறுமொழி
    • 112. chollukireen's avatar chollukireen  |  10:40 முப இல் செப்ரெம்பர் 22, 2012

      அன்புள்ள பெண்ணே ஆசிகள். அதிரஸம் செய்துவிட்டு உனக்குச் சொல்லுகிறேன். நன்றி அன்புடன் அம்மா

      மறுமொழி
  • 113. bharathi's avatar bharathi  |  1:11 பிப இல் செப்ரெம்பர் 17, 2012

    hi amma,nice to see your page

    மறுமொழி
    • 114. chollukireen's avatar chollukireen  |  10:43 முப இல் செப்ரெம்பர் 22, 2012

      அன்புள்ள பாரதி என்னைத் தெறிந்து கொண்டதற்கு மிக்க மகிழ்ச்சி. இப்படியே வந்துகொண்டிரு.அன்புடன்அம்மா

      மறுமொழி
  • 115. பத்மாசூரி.'s avatar பத்மாசூரி.  |  3:12 பிப இல் செப்ரெம்பர் 17, 2012

    தங்களின் பதிவுகுறித்து இங்கு “அவள் விகடனில்”[25-09-2012 இதழ்] கண்டேன். தங்களை ஃப்பாலோ செய்கிறேன்.
    நேரம் இருப்பின் பார்க்க: http://thamaraimalar-chandrasekar.blogspot.in/
    http://thamaraimalar-chandrasekar.blogspot.in/

    மறுமொழி
  • 116. பத்மாசூரி.'s avatar பத்மாசூரி.  |  3:14 பிப இல் செப்ரெம்பர் 17, 2012

    தங்களின் பதிவுகுறித்து இங்கு “அவள் விகடனில்”[25-09-2012 இதழ்] கண்டேன். தங்களை ஃப்பாலோ செய்கிறேன்.
    நேரம் இருப்பின் பார்க்க: http://thamaraimalar-chandrasekar.blogspot.in/

    மறுமொழி
  • 117. பத்மாசூரி.'s avatar பத்மாசூரி.  |  3:16 பிப இல் செப்ரெம்பர் 17, 2012

    தங்களின் பதிவுகுறித்து இங்கு “அவள் விகடனில்”[25-09-2012 இதழ்] கண்டேன். தங்களை ஃப்பாலோ செய்கிறேன்.
    நேரம் இருப்பின் பார்க்க: http://thamaraimalar-chandrasekar.blogspot.in

    மறுமொழி
    • 118. chollukireen's avatar chollukireen  |  1:40 பிப இல் செப்ரெம்பர் 22, 2012

      அன்புள்ள பத்மா ஃப்பாலோ செய்வதாக எழுதியிருந்தாய்,மட்டற்ற மகிழ்ச்சி. தாமரைமலர் பதிவுக்கும் வந்து படித்தேன்.ரஸித்தேன்.பின்னூட்டமிட்டது ஸரியாக போகலை.
      எவ்வளவு நல்ல விஷயங்கள். படிக்கப் படிக்க இன்னும் படிக்கணும் என்ற ஆர்வம். சில சமயங்களில் இப்படிதான்
      பின்னூட்டங்கள்எழுதியும் ஏதாவது தடங்கல். திரும்பவும் முயற்சி
      செய்கிறேன். நன்றியுடனும் அன்புடனும் சொல்லுகிறேன்

      மறுமொழி
  • 119. பத்மாசூரி.'s avatar பத்மாசூரி.  |  6:46 முப இல் செப்ரெம்பர் 18, 2012

    ONLY TODAY I CAME TO KNOW ABOUT YOUR WEBSITE.IT IS REALLY GOOD.PLEASE TEACH ME AS HOW TO MAKE ADHIRASAM.I WILL BE VERY HAPPY TO LEARN FROM U.

    மறுமொழி
  • 120. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்'s avatar ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்  |  4:45 முப இல் செப்ரெம்பர் 19, 2012

    வணக்கம்
    காமாட்சி(அம்மா)

    உங்களின் ஒவ்வெரு சமயல் குறிப்புக்களும் அனைவருக்கும் பயன் உள்ளவாறு.அமைந்துள்ளது.சமைக்க தொரியாத மனிதன் கூட உங்கள் வலைப்பூவை பார்த்துக் கொண்டு மிக பிரடமாட்டமா சமையல் செய்யளாம் இதில் முக்கிய விடயம் என்னவென்றால் இந்த வலைப்பூவைப் பாத்து எங்கள் அம்மா கூட சிலசமையல் செய்திருக்கின்றாய் உங்கள் இந்த பயணம் தொடர எனது வாழ்த்துக்கள் அம்மா.மேலும் மேலும் புதிய புதிய படைப்புக்கள் வெளிவரவும் எனது வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    மறுமொழி
    • 121. chollukireen's avatar chollukireen  |  10:52 முப இல் செப்ரெம்பர் 19, 2012

      ஆசிகள் ரூபன். உங்களம்மாவிற்கும் என்நன்றிகள். குறிப்பு பார்த்து செய்ததற்கு.பாராட்டுகளுக்கு யாருக்காவது உபயோகமிருந்தால் எனக்கு அதில் ஸந்தோஷம். நிறைய வலைப்பதிவுகளுக்குச் சென்று படித்து ரஸிக்க ஆசை. உங்களுக்கு என் வாழ்த்துகள். அன்புடன்

      மறுமொழி
  • 122. Hema raman's avatar Hema raman  |  3:16 முப இல் செப்ரெம்பர் 20, 2012

    பிரியமான காமாட்சி பாட்டிக்கு ஹேமா அநேக நமஸ்காரம் !
    கடந்த இரண்டு நாட்களாக நான் சமைய்தது புடலங்காய் கறி,வாழை தண்டு பிட்லை ….இரண்டும் மிக அருமையான ருசியாக இருந்தது..வீட்டில் அனைவரும் விரும்பி மிச்சம் இல்லாமல் சாபிட்டர்கள்….மற்றவைகளை சமைத்து விட்டு பின்னுட்டம் எழுதுகிறேன் ….என்னது முந்திய பின்னுட்டத்தை படித்தீர்களா?
    நன்றி,வணகங்களுடன்
    ஹேமா ராமன்

    மறுமொழி
    • 123. chollukireen's avatar chollukireen  |  1:55 பிப இல் செப்ரெம்பர் 22, 2012

      ஆசிகள் ஹேமா. விரும்பி சாப்பிட்டார்கள். இந்த வார்த்தைகள்
      அக்கறையாக நீ சமையல் செய்ததைப் புறிந்துகொள்ள முடிந்தது.
      இன்னும் பல கமென்டுகளை எதிர்பார்க்க வைக்கிறது. எந்த பின்னூட்டங்களையும் நான் படிக்காது விடுவதில்லை. சில ஸமயங்கள் பதில் தாமதமாக எழுதுகிறேன், உன் அன்பான பதிலுக்கு நன்றிகள். ஆசிகளுடனும் அன்புடனும் பாட்டி.

      மறுமொழி
  • 124. gayathri gajendran's avatar gayathri gajendran  |  3:28 பிப இல் செப்ரெம்பர் 21, 2012

    vanakkam kamatchi paatti. en peyar gayathri gajendran. unga sojji appam seidhu sappitom. super taste. ennoda 3 vayasu paiyan raajeshvar virumbi sappitan . thanks paati. en kitta tamil key board illa. sorry paati. ennala tamilil type panna mudiyala.

    மறுமொழி
    • 125. chollukireen's avatar chollukireen  |  2:20 பிப இல் செப்ரெம்பர் 22, 2012

      அன்புள்ள காயத்ரி என் பதிவு வெளிவந்தவுடன் ஸொஜ்ஜி அப்பம்
      சுடச்சுட செய்திருக்கிறாய். எல்லோரையும்விட ராஜேஷ்வர் என்ற
      குட்டிச் செல்வம் விரும்பி சாப்பிட்டு கொள்ளுப்பேரனாய் அறிமுகம்
      ஆகியுள்ளான். இதைவிட என்ன ஸந்தோஷம் இருக்க முடியும்.
      என்னாலே நீங்கள் எழுதுவதைப் படித்து புரிந்துகொள்ள மு டியும்.
      கவலையில்லை.நீங்கள் எழுதுவதே ஸந்தோஷம். யாவருக்கும்
      அன்புடனும், ஆசிகளுடனும் சொல்லுகிறேன். நன்றி.
      என் அன்பும் ஆசியும் உங்கள் எல்லோருக்கும்.

      மறுமொழி
  • 126. akila's avatar akila  |  6:37 பிப இல் செப்ரெம்பர் 21, 2012

    i saw ur blog after read about you from vikatan.its simply super.

    மறுமொழி
  • 127. Deepa's avatar Deepa  |  8:30 பிப இல் செப்ரெம்பர் 21, 2012

    Hi mami,
    how r u? am staying in kenya,
    i saw ur web address thru aval vikatan, u r receipes r too good. if any doubts i follow ur receipes. thnak u.

    மறுமொழி
    • 128. chollukireen's avatar chollukireen  |  2:01 பிப இல் செப்ரெம்பர் 22, 2012

      தீபா அன்பும் ஆசிகளும். வாவா. எனக்குத் தெறிந்ததைச் சொல்லுகிறேன் உன்னைத் தெறிந்து கொண்டதில் அவள் விகடனுக்கு நன்றி. அடிக்கடி ஸந்திப்போம். அன்புடன்

      மறுமொழி
  • 129. JAYASHREE SATHYAMURTHY.'s avatar JAYASHREE SATHYAMURTHY.  |  3:02 பிப இல் செப்ரெம்பர் 22, 2012

    amma seekhiramae adhirasam seivadhai patri edhir parkiren.

    மறுமொழி
  • 130. deepa's avatar deepa  |  3:24 பிப இல் செப்ரெம்பர் 24, 2012

    Hi mami,

    Thanks for y r reply. Pl tell how to make sundakkai parupusili.

    மறுமொழி
  • 131. ganesan, thanjavur's avatar ganesan, thanjavur  |  3:16 முப இல் செப்ரெம்பர் 29, 2012

    அன்பான அம்மா,

    வணக்கம். உங்களை அவள் விகடனில் வெளியான தகவல் மூலம் தொடர்புகொள்கிறேன். உங்கள் முயற்சி மிக அருமை. உடல் நலம் பற்றி நான் அறிந்த தகவலை உங்களுடன் பகிர விரும்புகிறேன். உடலின் மொழி என்ற புத்தகத்தை வசிக்க இந்த இணையதளத்தை சொடுக்கவும். நன்றி acuhome.org (e book – udalin mozhi)

    கணேசன்,
    தஞ்சாவூர்.

    மறுமொழி
    • 132. chollukireen's avatar chollukireen  |  10:59 முப இல் ஒக்ரோபர் 2, 2012

      ஆசிகள். என்னைப் பாராட்டி எழுதியுள்ளீர்கள். நன்றிகள். நீங்கள் குறிப்பிட்டுள்ள தளத்தைப் பார்த்தேன். மிகவும் நன்றி. விவரமாக ப்
      படித்துத் தெறிந்து கொள்ள முயற்சிக்கிறேன். அன்புடன் சொல்லுகிறேன்.

      மறுமொழி
      • 133. padmakshi govind's avatar padmakshi govind  |  1:08 பிப இல் ஒக்ரோபர் 6, 2012

        nice. i also came to know about mami thro aval vikatan.i want to more interesting web sites

        2012/10/2 “சொல்லுகிறேன்”

        > ** > chollukireen commented: “ஆசிகள். என்னைப் பாராட்டி எழுதியுள்ளீர்கள். > நன்றிகள். நீங்கள் குறிப்பிட்டுள்ள தளத்தைப் பார்த�¯” >

      • 134. chollukireen's avatar chollukireen  |  12:34 பிப இல் ஒக்ரோபர் 7, 2012

        அன்புள்ள பத்மாக்ஷி உன் பின்னூட்டம் மிகவும் அழகாக இருக்கு.அவ்வப்போது வந்து பின்னூட்டங்களிடவும். ஆசிகளுடனும் அன்புடனும் சொல்லுகிறேன்.

  • 135. Meera's avatar Meera  |  3:41 முப இல் ஒக்ரோபர் 1, 2012

    dear mami, i came to know u thro aval vikatan. Really very great. I m Meera 6 mugham, working as an advocate, chennai. but learning a,b,c,d in cooking. so i used to see your blog everyday to prepare a healthy food. i feel so happy… i pray god to give u more strength to teach us mma,.
    Keep continuing……… Thanks a lot..
    Meera

    மறுமொழி
    • 136. chollukireen's avatar chollukireen  |  11:37 முப இல் ஒக்ரோபர் 1, 2012

      அன்புள்ள மீராவிற்கு ஆசிகள். உன் பின்னூட்டம் பார்த்து மிகவும் ஸந்தோஷமாக இருக்கு. ஏதாவது செய்து உங்களுக்குப் பிடித்ததா?அதைத் தெறிந்து கொள்ள ஆவலாக இருக்கு. உன்னுடைய பண்பான கடிதம் மீரா எப்படி இருப்பாள் என்று
      கற்பனை செய்யத் தோன்றியது. படித்து சட்டம் தேர்ந்து, தொழில் முறை செய்பவள்,கெட்டிக்காரியாகவும்,பிறரை மதிப்பவளாகவும், அன்புடையவளாகவும், உருவகமாகியது. அடிக்கடிவா. அன்புடன்
      சொல்லுகிறேன்.

      மறுமொழி
  • 137. padmavathy sharma s.'s avatar padmavathy sharma s.  |  2:20 பிப இல் ஒக்ரோபர் 7, 2012

    namaskarams mami. naan innaikuthan aval vikatanil ungalai parthen. ashirasam seivadhu eppadi enru ungal valaipadhivil parthen. naan try panni parkiren. adhaiye deepavalikum seiyya pohiren. thanks.enakku muthsarai karakarappaha pannatheriya villai please solli tharungal.

    மறுமொழி
  • 138. Nagajothi.P's avatar Nagajothi.P  |  7:14 முப இல் ஒக்ரோபர் 8, 2012

    Great .வணக்கம்! பாட்டி “முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்”

    மறுமொழி
  • 139. sindhuja's avatar sindhuja  |  8:19 முப இல் ஒக்ரோபர் 31, 2012

    vanakkam patti,
    vigadan la vantha news padichu therinchukiten. u r very great. na MCA padikura student, intha website neenga kuduthuruka ellam enakku romba usefull ah
    irukku. tnkz a lot.

    மறுமொழி
    • 140. chollukireen's avatar chollukireen  |  10:58 முப இல் ஒக்ரோபர் 31, 2012

      அன்புள்ள ஸிந்துஜா பாட்டிக்கு நீ எழுதிய பின்னூட்டம் பார்த்து ரொம்ப பெருமையாக இருக்கு.
      பாராட்டி எழுதியிருக்கிறாய். நன்றாக படித்து முன்னுக்கு வருவதுடன் சமையலும் தெறிந்திருந்தால்
      உபயோகமாகவே இருக்கும். முதல்த் தரமாக mca பாஸ் செய்து நல்ல ஒரு நங்கையாகப் ப்ரகாசிக்கவும். அன்புடன்

      மறுமொழி
  • 141. Jeyanthi's avatar Jeyanthi J  |  7:21 முப இல் நவம்பர் 14, 2012

    Respected Aachi, i come across ur site address in Aval Viktan, Mikka arumai 🙂

    மறுமொழி
  • 142. anusrini's avatar anusrini  |  5:59 முப இல் நவம்பர் 27, 2012

    கண்டுபிடிச்சுட்டேன்……..அழகா இருக்கேள்…..
    எவ்ளோ …………..எழுதிருக்கேள் …அம்மாடி… படிக்கிறேன் மெதுவா…

    உங்களை தெரிஞ்சுண்டுதல ரொம்ப சந்தோஷம்.

    அனுராதா

    மறுமொழி
    • 143. chollukireen's avatar chollukireen  |  7:01 முப இல் நவம்பர் 27, 2012

      அனு 80 முடிந்த பாட்டி அழகாயிருக்கேனாம். அது 4 வருஷ முந்தைய படம். நான் தற்போது மும்பையில் இருக்கிறேன். மெள்ள படி. இப்போது எழுதுவதைப் படித்துப் பார். நன்றி அனு
      அன்தேரி என்ற இடத்தில் மில்லட்நகரின் எதிர்ப்பகுதியில்
      பிள்ளையின் குடும்பத்தோடு இருக்கிறோம். அன்புடன்

      மறுமொழி
  • 144. anusrini's avatar anusrini  |  7:44 முப இல் நவம்பர் 27, 2012

    நானும் மும்பையில் இருக்கிறேன் முலுண்ட் என்ற இடத்தில
    உங்கள் தொலைபேசி என்னை தங்கள் நான் கூப்பிடுகிறேன்  

    மறுமொழி
  • 145. VAI. GOPALAKRISHNAN's avatar VAI. GOPALAKRISHNAN  |  7:14 முப இல் திசெம்பர் 14, 2012

    அன்புள்ள காமாக்ஷி மாமிக்கு அடியேனின் நமஸ்காரங்கள்.

    இந்த வயதிலும் தங்களின் ஆர்வமும் உற்சாகமும் என்னை மிகவும் மகிழ்ச்சியடையச்செய்கிறது.

    நானும் என் சிறுவயதில் படிக்க மிகவும் ஆர்வம் இருந்தும், மேற்படிப்புகள் படிக்க நிறைய மதிப்பெண்கள் வாங்கியிருந்தும், என் குடும்பப் பொருளதார சூழ்நிலைகளால் என்னால் 11th Std. SSLC க்கு மேல் படிக்க முடியாமல் போனது.

    பிறகு என்னுடைய 40 வயதுக்கு மேல் 47 வயதுக்குள் என் படிப்பினை நானே தொடர்ந்து மூன்று வெவ்வேறு பல்கலைக்கழங்கள் மூலம் மூன்று வெவ்வேறு பட்டங்கள் [அதில் ஒன்று முதுநிலைப்பட்டம்] பெற்றேன்.

    அவையெல்லாவற்றையும் “மீண்டும் பள்ளிக்குப்போகலாம்” என்ற தலைப்பில் சிறுசிறு 7-8 பகுதிகளாக பதிவிட்டுள்ளேன். நேரம் இருந்தால் படித்துப்பாருங்கோ.

    இணைப்பு இதோ:

    http://gopu1949.blogspot.in/2012/03/1.html பகுதி 1/7

    http://gopu1949.blogspot.in/2012/03/blog-post_17.html

    தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துகளும்.

    நமஸ்காரங்களுடன்
    கோபாலகிருஷணன்
    gopu1949.blogspot.in

    மின்னஞ்சல் முகவரி: valambal@gmail.com

    மறுமொழி
  • 146. VAI. GOPALAKRISHNAN's avatar VAI. GOPALAKRISHNAN  |  6:14 முப இல் திசெம்பர் 15, 2012

    அன்புள்ள மாமிக்கு, அநேக நமஸ்காரங்கள். வணக்கம்.

    இன்று என் வலைத்தளத்தில்

    அடடா என்ன அழகு! …. ‘அடை’யைத் தின்னு பழகு!!

    என்ற தலைப்பில் ஒரு புதிய பதிவு வெளியிடப்பட்டுள்ளது.

    புதிய இணைப்பு இதோ: http://gopu1949.blogspot.in/2012/12/blog-post_14.html

    ஏனோ இது டேஷ் போர்டில் இணைக்கப்படாமல் / தோன்றாமல் விட்டுப்போய் உள்ளது.

    அதனால் இந்தத் தகவல் தங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    எனவே தங்களுக்கு விருப்பம், நேர அவகாசம், தங்கள் உடல்நிலை, தங்கள் கணினியின் உடல்நிலை, மின்சார விநியோகம் மற்ற இதர சூழ்நிலைகள் எல்லாம் சாதகமாக அமைந்திருக்கும் நேரத்தில், என் பதிவுப்பக்கம் வருகை தந்து கருத்துக்கூறி ஆசீர்வதித்தால் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.

    நன்றி,

    அன்புடன் தங்கள்.
    கோபாலகிருஷ்ணன்
    gopu1949.blogspot.in

    மறுமொழி
    • 147. chollukireen's avatar chollukireen  |  9:00 முப இல் திசெம்பர் 15, 2012

      மிகவும் ஸந்தோஷம். இந்த மாதிரி ஒரு குறிப்பு அனுப்பினால் படிக்க சுலபம். போனேன்,படித்தேன்,பதிலும் எழுதினேன். சுலபமாயிருக்கு. மனதுக்கு திருப்தியாகவும் இருக்கு. இதைவிட என்ன வேண்டும். எல்லாருமே இம்மாதிரி லின்க் கொடுத்தால் எவ்வளவு சௌகரியமாக இருக்கும் என்று
      நினைத்துக் கொள்கிறேன். உங்களுடைய மரியாதை கொடுக்கும் விதம் தனிவிதம். ஆசிகளுடனும்,
      அன்புடனும் சொல்லுகிறேன்.

      மறுமொழி
  • 148. Sheela's avatar Sheela  |  11:46 முப இல் திசெம்பர் 31, 2012

    Mami

    Namaskaram & happy new year to you.

    Ellorukkum engal namaskaram.

    with regards

    மறுமொழி
    • 149. chollukireen's avatar chollukireen  |  1:05 பிப இல் திசெம்பர் 31, 2012

      புது வருட நல் வாழ்த்துகள் யாவருக்கும். ஆசிகளும், அன்பும் மாமி

      மறுமொழி
  • 150. மு.வி.நந்தினி's avatar மு.வி.நந்தினி  |  10:33 முப இல் ஜனவரி 30, 2013

    உங்கள் முயற்சி எனக்கு புத்துணர்வைத் தருகிறது..

    மறுமொழி
    • 151. chollukireen's avatar chollukireen  |  7:01 முப இல் பிப்ரவரி 1, 2013

      மிகவும் நன்றி. நீங்களும் அடிக்கடி வருகை தரவும். எனக்கும் ஸந்தோஷமாக இருக்கும். அன்புடன்

      மறுமொழி
  • 152. padma's avatar padma  |  11:20 முப இல் பிப்ரவரி 18, 2013

    anbulla kamatchi amma
    neengal tharpodhu engey irukkireergal. Naan ranjani narayananan moolamaaga ungal blog patri arindu kondane. Migavum nandraaga irukkiradhu. Tamil mozhiyil eluda vedum endru irukkiradhu. anaal adhai eppadi seivadhu endru puriyavillai. Naan madras adambakkam irukkirane. ungal blog rombvum nandraaga irukkiradhu. matravai ungal badil paarthu.
    nandri.
    padma.

    மறுமொழி
    • 153. chollukireen's avatar chollukireen  |  6:20 முப இல் பிப்ரவரி 19, 2013

      அன்புள்ள பத்மா உங்கள் பின்னூட்டம் பார்த்து மிக்க மகிழ்ச்சியம்மா. நான் மும்பையில் இருக்கிறேன். ரஞ்ஜனி நாராயணன் எனக்கு மிகவும் வேண்டியவர்.
      ப்ளாக் மூலமான நட்பு. இருந்தாலும் அன்பு வெகு வருடங்களாகத் தொடர்ந்து வருவது போன்ற மன உணர்ச்சிகள். நல்ல பெண்மணி. நீங்கள் இதுமாதிரியே ஆங்கிலத்தில் பின்னூட்டத்தை எழுதினாலும் அழகாகத்தான் இருக்கிறது. வரவேற்கிறேன். தொடர்ந்து வாருங்கள். மிக்க ஸந்தோஷம். அன்புடன் காமாட்சி

      மறுமொழி
  • 154. குமார்'s avatar குமார்  |  12:10 முப இல் ஏப்ரல் 5, 2013

    மாமி
    உங்கள் வலைப்பூ நன்றாக உள்ளது. தாங்கள் வளவநூரில் படிக்கும்போது திரு இராமச்சந்திர அய்யர் தலைமை ஆசிரியராக இருந்தாரா? அவர் என்னுடைய பாட்டனார். அவர் வளவனூர் பற்றி சொன்ன கதைகள் இன்னும் என் மனக்கண் முன் தெளிவாக நிற்கின்றன.
    குமார்

    மறுமொழி
    • 155. chollukireen's avatar chollukireen  |  6:26 முப இல் ஏப்ரல் 5, 2013

      உங்கள் வரவிற்கு மிகவும் ஸந்தோஷம். என்னுடைய வயதை கவனித்தீர்களா? நான் படிக்கும்போது வளவனூரில் ஹைஸ்கூலே வரவில்லை. பிற்பாடு ஆண்கள்,பெண்கள் என தனித்தனியே ஹைஸ்கூல்கள் வந்துவிட்டது. என்னுடைய பெண்ணும் வளவனூரில் படித்தாள். நான் விசாரிக்கிறேன். நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்? விவரம் எழுதுங்கள். அடிக்கடி வந்து பின்னூட்டமிடுங்கள். பதில் எதிர் பார்க்கிறேன். அன்புடன்

      மறுமொழி
  • 156. குமார்'s avatar குமார்  |  11:22 முப இல் ஏப்ரல் 6, 2013

    நன்றி மாமி! தாங்கள் என்னுடைய அம்மாவை விட நான்கு வருஷங்கள் பெரியவர். என் தாத்தா எந்த வருடங்கள் வளவனூர் பள்ளியில் இருந்தார் என்று என் அம்மாவிடம் விசாரித்து பதில் அனுப்புகிறேன்.
    நான் அமெரிக்காவில் அட்லாண்டாவில் வசிக்கிறேன்.

    மறுமொழி
    • 157. chollukireen's avatar chollukireen  |  9:30 முப இல் ஏப்ரல் 8, 2013

      பதில் எழுதியதற்கு மிகவும் ஸந்தோஷம். வளவநூரில் ஜார்ஜ் ஸ்கூல் என்ற ஒன்று இரு
      ந்தது. கோவிந்தையர் பெயரில் இப்போதும் இருக்கிறது. நான் டிஸ்ட்ரிக் போர்ட் பெண்கள் பள்ளியில் படித்தேன். உங்களம்மா 4 வயதுதான் சிறியவர் என்ற முறையில் இரண்டு பேருக்குமே தெரிந்திருக்க நியாயமுண்டு. அக்ரஹாரத்தில் எங்கு இருந்தார் யார் என்ற விவரமெல்லாம் எழுதுங்கள். பெயர் யாவும் எழுதுங்கள். தெரிந்து கொள்ள ஆவலாயிருக்கிறேன். இம்மாதிரி மீண்டும் அறிமுகமெல்லாம் கிடைத்தால், எவ்வளவோ விஷயங்கள் புதையல் கிடைத்த மாதிரி மனதில் மலரும். நன்றி அன்புடன் காமாட்சி.

      மறுமொழி
      • 158. குமார்'s avatar குமார்  |  12:01 பிப இல் மே 18, 2013

        தாமதமாக பதில் போடுவதற்கு மன்னிக்கவும். என்னுடைய அம்மா 1953 – 1955ல் வளவநூரில் இருந்தார். District Board High Schoolல் படித்தார். SSLC பரீக்ஷை எழுத விழுப்புரம் சென்றதாகவும் சொன்னார்.

        என் தாத்தா இராமச்சந்திர அய்யர் District Board High Schoolல் தலைமை ஆசிரியராக இருந்தார். அங்கிருந்து ராசிபுரத்துக்கு மாற்றல் ஆகிச் சென்றார்.

        என் அம்மாவின் பெயர் பாலாம்பாள். என் மாமாவும் (கோபாலன்) அதே பள்ளியில் படித்தார். என் அம்மாவுக்கு 4 அக்காக்களும் 4 சகோதரர்களும் உண்டு.

      • 159. chollukireen's avatar chollukireen  |  1:24 பிப இல் மே 22, 2013

        உங்கள் பதில் பார்த்து ஸந்தோஷம். 1954 இல் நான் விவாகமாகி பெங்களூர் போய்விட்டேன். அடுத்து
        கல்கத்தா என 2 வருஷங்கள் வளவனூர் வரவில்லை. இரண்டாவது உங்கள் அம்மா பெருமாள் கோவில் தெருவில் இருந்திருக்க மாட்டார்கள். பெயர் ஞாபகமில்லை,ஒருஐயங்கார், மற்றும்,ராஜாமணி
        என்றவர்கள், பிரின்ஸ்பாலாக இருந்தது தெரியும். என் அப்பாவை தமிழ்ப் பண்டிதர் என்ற முறையில்
        ஊரில் யாவருக்கும் தெரியும். நீங்கள் இவ்வளவு அக்கரையாக விவரங்கள் கொடுத்திருக்கிறீர்கள்.
        எங்கள் தெருவில் ரங்கராவ்,மற்றும் ஒரு லேடி தமிழாசிரியைகள் இருந்தனர். அம்மா இருந்திருந்தால்
        கட்டாயம் தெரியும் என்று சொல்லியிருப்பார்கள். ஊரே இவ்வளவு இணைப்பைத் தருகிரது. அந்த வகையில் ஸந்தோஷம். அம்மாவுடன் படித்த பெண்கள் பேர் சொன்னால் அவர்களை எனக்குத் தெரிந்திருக்கும். கேட்டு எழுதுங்கள். ஞாபகப்படுத்திக் கொள்கிறேன். அம்மாவிற்கு, உங்கள் குடும்பத்தினருக்கு என் அன்பு விசாரிப்புகள். தொடருங்கள். நன்றி. அன்புடன்காமாட்சி

  • 160. sun's avatar sun  |  5:15 பிப இல் ஒக்ரோபர் 1, 2013

    மே 22 க்கு பின் எந்த பதிவும் இல்லையே!!!

    மறுமொழி
    • 161. chollukireen's avatar chollukireen  |  5:37 முப இல் ஒக்ரோபர் 2, 2013

      தொடர்ந்து எழுதிக்கொண்டுதான் வருகிறேன்.. ஸெப்டம்பர் 29 ந் தேதிகூட நவராத்ரி என்ற தலைப்பில் சொல்லுகிறேனில் எழுதியிருக்கிறேன்.. வருகைக்கு நன்றி. பதிவுகள் பார்த்துச் சொல்லுங்கள்.. அன்புடன் சொல்லுகிறேன்.

      மறுமொழி
  • 162. sun's avatar sun  |  5:39 பிப இல் ஒக்ரோபர் 5, 2013

    மாமிக்கு நமஸ்காரம்.தங்கள் மறுமொழிக்கு நன்றி.
    நவராத்ரி நல்வாழ்த்துக்கள்
    சுந்தரேசன்

    மறுமொழி
  • 163. ranganathanbe's avatar ranganathanbe  |  1:57 முப இல் ஒக்ரோபர் 26, 2013

    Anbu Ammavak Vankkam.. Indru thaan intha website patri arinthu kolla mudinthathu.. இந்த வயதிலும் தங்களின் ஆர்வமும் உற்சாகமும் என்னை மிகவும் மகிழ்ச்சியடையச்செய்கிறது…..

    Inimel thaan ungal samyal kuripugalai parthu seiya vaendum pol thondrukirathu.. Nan matrum en nanbargaldun chennail vasithhu varukiran.. Seekirama potu lateah roomk varuvathal ena samaithu sapdivuthu endru theriyaathu :(.. so plz share some tips for us to cook some easy recipie …

    Note: Sorry for spelling mistakes

    மறுமொழி
    • 164. chollukireen's avatar chollukireen  |  1:04 பிப இல் ஒக்ரோபர் 26, 2013

      ஆசிகள். உங்களிடம் சமையல் செய்வதற்கு,காஸ்,குக்கர்,மைக்ரோவேவ்,இன்னும் என்ன வசதிகள் இருக்கிறதென்பது தெரிந்தால் அதற்கேற்ப
      வழிகளைச் சொல்லலாம். உங்கள் பின்னூட்டம் மகிழ்ச்சியாக யிருக்கிரது. இவ்வளவு தூரம் எழுத நினைத்தீர்களே அதுவே ஸந்தோஷம்.அன்புடன்

      மறுமொழி
  • 165. ranganathanbe's avatar ranganathanbe  |  2:03 பிப இல் ஒக்ரோபர் 28, 2013

    Thanks 🙂 we have everything in our room (Cooker, dhosai kal, gas and etc etc.. Ovan mattum illa).. Masala podi ellam readmade packetla iruku …

    But we dont know what to cook :(. etho rice mattum vachi curd vaangi manage panrom amma 🙂 🙂 some times dhosa wit idly podi..

    மறுமொழி
    • 166. chollukireen's avatar chollukireen  |  10:21 முப இல் நவம்பர் 12, 2013

      சாதம் வைக்கிறீர்கள். பயத்தம் பருப்பு,சிறிது மசூர்டாலையும் தண்ணீர் விட்டுக் களைந்து,சிறிது மஞ்சள்பொடி சேர்த்து இரண்டு பங்கு ஜலம் சேர்த்து குக்கரில் வேக வையுங்கள்.
      வெங்காயம்,பச்சைமிளகாய்,இஞ்சி சேர்த்து 2ஸ்பூன் எண்ணெயில் வதக்கி, வெந்தபருப்பை மசித்துச் சேர்த்து கொதிக்க வையுங்கள்.உப்பு போடுங்கள். வேண்டிய அளவு ஜலம் விடவும். கொதித்தபின் இறக்கிவைத்து எலுமிச்சம் பழம் பிழியுங்கள்.
      பச்சைக் கொத்தமல்லி சேருங்கள். ஊறுகாய் தொட்டுக்கொண்டு
      சாதத்துடன் சேர்த்துச் சாப்பிடுங்கள். ஒரு நாள் போகும்.
      ஒருகப் டால். 3 மிளகாய்.
      அல்லது 1டீஸ்பூன் மிளகாய்ப்பொடி,
      சிப்ஸ் அப்பளாம், ஏதாவது இருக்குமே. சும்மா ரஃப்பா எழுதியிருக்கேன். அன்புடன்

      மறுமொழி
  • 167. Carolyn's avatar Carolyn  |  7:52 முப இல் நவம்பர் 6, 2013

    வணக்கம்! ரொம்ப சந்தோஷமாக இருக்கு, உங்களை பற்றி தெரிந்து கொண்டது. இந்த வயதில், நிறைய சோகங்களை சுமந்து திரியும் மனிதர்கள் மத்தியில் நீங்கள் கற்றுக்கொள்வதிலும், பகிர்ந்து கொள்வதிலும் ஆர்வமாய் இருப்பது ரொம்ப நிம்மதியான விஷயம்.!
    உங்கள் பகிர்தலை என் mailக்கு விருப்பமிருந்தால் அனுப்புங்கள்.

    மறுமொழி
    • 168. chollukireen's avatar chollukireen  |  6:12 முப இல் திசெம்பர் 9, 2013

      அம்மா ரொம்ப ஸந்தோஷம். உன் மெயில் அட்ரஸ் தெரியாதே.
      எனக்கு என் பகிர்தலை அனுப்ப விருப்பம் உள்ளது. தாமதமான பதில். மன்னிக்கவும். உங்கள் முதல் வரவு நல்வரவாக அமையட்டும். அன்புடன் சொல்லுகிறேன்

      மறுமொழி
  • 169. Meera Janakiraman's avatar Meera Janakiraman  |  8:59 முப இல் ஜூன் 6, 2014

    மாமி அவர்களுக்கு,
    நமஸ்காரங்கள். வேப்பிலைகட்டி செய்வதைப்பற்றி தெரிந்துகொள்ள தேடி உங்களை வந்தடைந்தேன். நாங்கள் வயோதிகத்தில் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு நீங்கள் ஒரு முன்னோடி. மீண்டும் உங்களை வணங்குகிறேன்.

    மறுமொழி
    • 170. chollukireen's avatar chollukireen  |  8:32 முப இல் ஜூன் 7, 2014

      மீரா அநேக ஆசிகளம்மா. உன் முதல் வரவிற்கு அன்பான வரவேற்புகள். வந்து கொண்டே இருந்தால்
      பேசிக்கொண்டே இருக்கலாம். அன்புடன்

      மறுமொழி
  • 171. Madraasi's avatar Madraasi  |  6:07 முப இல் நவம்பர் 29, 2014

    Nice of you. Got in touch with your blog through one of my friend Mahalakshmi. I am alos blogging in the name of Madraasi, pls do check my blog when your free mam http://madraasi.com/about/. You got a very interesting and awesome blog mam. Iam happy to collect too many informations from your blog.

    மறுமொழி
  • 172. marubadiyumpookkumm's avatar marubadiyumpookkumm  |  8:16 முப இல் திசெம்பர் 19, 2014

    again I got a mother….But Kamakshi amma I dont like your hair tyes(colouring)be as usual and natural…very good and energetic works on this age…

    மறுமொழி
    • 173. chollukireen's avatar chollukireen  |  4:26 முப இல் திசெம்பர் 20, 2014

      அம்மா என்று அழைத்ததற்கு நன்றி. உங்கள் அபிப்ராயத்தை வரவேற்கிறேன். அன்புடன்

      மறுமொழி
  • 174. sundaresan's avatar sundaresan  |  6:06 பிப இல் திசெம்பர் 20, 2014

    ரொம்ப நாளுக்கு பிறகு தங்கள் பதிவை பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.தாங்கள இருக்கும் இடத்தில் குளிர் எப்படி உள்ளது.

    மறுமொழி
    • 175. chollukireen's avatar chollukireen  |  11:16 முப இல் திசெம்பர் 22, 2014

      தங்கள் வரவு மிக்க ஸந்தோஷம். நான் மூன்று வருஷங்களுக்கு மேலாக மும்பையில் இருக்கிறேன். இரவு நேரத்தில் சற்றுக் குளிர் இவ்விடம். நீங்கள் ஜெநிவாவை
      மனதிற்கொண்டு கேட்கிறீர்கள். வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி. அன்புடன்

      மறுமொழி
  • 176. sundaresan's avatar sundaresan  |  6:45 பிப இல் திசெம்பர் 22, 2014

    அப்படியா. மிக்க மகிழ்ச்சி.

    மறுமொழி
  • 177. Raja Samson's avatar Raja Samson  |  3:30 முப இல் ஜனவரி 16, 2015

    pirandai thuvaiyal very nice maami

    மறுமொழி
    • 178. chollukireen's avatar chollukireen  |  5:16 முப இல் ஜனவரி 16, 2015

      உங்கள் வரவு நல்வரவாக இருக்கட்டும். பிரண்டைத் துவையல் ருசி பார்த்து எழுதினீர்களா? அடிக்கடி வந்து பின்னூட்டமிடலாமே!
      மேலும் எழுதியிருப்பவைகளைப் பார்த்தீர்களா? படித்துப் பாருங்கள். நன்றி. அன்புடன்

      மறுமொழி
  • 179. நெல்லைத் தமிழன்'s avatar நெல்லைத் தமிழன்  |  8:15 முப இல் ஜனவரி 14, 2016

    பாராட்டுகிறேன். கணிணி உலகம், நிறைய சாளரங்களைத் திறந்துவிட்டிருக்கிறது. முகம் தெரியாத மக்கள் தெரிந்துகொள்ள ஏதுவாக இருக்கிறது. தன்னையும் விசாரிக்க இத்தனை முகம் தெரியாத சொந்தங்களா என்று பெருமைப்படத்தக்க அளவில் நிறைய பேர் பிளாக்குகளை வாசிக்கிறார்கள். வாழ்த்துக்கள்.. தொடருங்கள்.

    மறுமொழி
    • 180. chollukireen's avatar chollukireen  |  11:32 முப இல் ஜனவரி 14, 2016

      பாராட்டுதல்களுக்கு மிகவும் நன்றி. நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. இப்போதுநான் எழுத முடியாத ஒரு நிலைக்கு வயோதிகம் தொந்திரவு கொடுக்கிறது. ஆசிகளும்,வாழ்த்துகளும் மட்டும் கொடுக்கும் ஒரு வலைப்பூவாக மாறி வருகிறது. இம்மாதிரி ஸமயத்தில்,என்னைப் பாராட்டவும் ஒருவர் புதியதாக சொல்லுகிறேனைப் படித்திருக்கிரார் என்பதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். பொங்கல் வாழ்த்துகள். நன்றி. அன்புடன்

      மறுமொழி
  • 181. sundaresan's avatar sundaresan  |  4:51 பிப இல் ஜனவரி 14, 2016

    எனது பொங்கல் வாழ்த்துக்கள். நமஸ்காரம்.தங்களது உள்ளீடுகளை பார்க்க மகிழ்ச்சி.

    மறுமொழி
  • 182. விஜிஷர்மா's avatar விஜிஷர்மா  |  12:19 பிப இல் நவம்பர் 22, 2016

    நமஸ்காரம் மாமி
    பாராட்டுவதற்க்கு வார்த்தைகளே இல்லை.அருமை. இந்த வயதிலும் தங்களின் ஈடுபாடு வியப்பை உண்டாக்குகிறது. வெளிநாட்டில் உள்ள இடங்களை நேரில் பார்ப்பது போலவே உள்ளது.உங்கள் பணி தொடரவும்,பூரண நலமுடன் இருக்க பகவானை ப்ரார்திக்கின்றேன்.வாழ்த்துக்கள்.

    மறுமொழி
  • 183. chollukireen's avatar chollukireen  |  4:01 பிப இல் நவம்பர் 27, 2016

    ஆசிகள் விஜி. உன் பாசமிக்க பாராட்டுதல்களுக்கு,தாமதமாகப் பதில் எழுதுகிறேன். பொருட்படுத்தாதே. அடிக்கடி வந்து பின்னூட்டமிடு. உறவுகள் வலுக்கும். உன்னைப் பற்றியும் தெரிந்து கொள்ள மிகவும் ஆவலாக இருக்கிறேன். பதிலெழுது. அடுத்து கமென்டுகள் எதிர்பார்க்கும் உன் அன்புள்ள மாமி. மிகவும் நன்றி.

    மறுமொழி
  • 184. Sakertoknow's avatar Gowtham  |  8:06 முப இல் ஓகஸ்ட் 29, 2018

    அருமை!👍👍👍

    மறுமொழி

padmavathy sharma s. -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

Subscribe to the comments via RSS Feed