Posts filed under ‘இனிப்பு வகைகள்’
ரவை கேஸரி—rava kesari
வேண்டியவைகள்
நல்ல ரவை ஒருகப்
சர்க்கரை ஒண்ணேகால் கப்
நெய் கால்கப்
ஏலக்காய் நான்கு
முந்திரிப் பருப்பு—–8
திராட்சை—–15
கேஸரிகலர்—–கால் டீஸ்பூன்
குங்குமப்பூ இதழ்கள்——7அல்லது8
செய்முறை———–அரை டீஸ்பூன் நெய்யில்முந்திரியை ஒடித்து பொன்போல்வறுத்துக் கொண்டு
திராட்சையையும் சேர்த்து வறுத்து எடுத்துத் தனியாக வைக்கவும்.
ஏலக்காயை தோல் நீக்கி பொடி செய்து கொள்ளவும்.
கேஸரிப் பவுடரையும் குங்குமப் பூவையும் ஒரு ஸ்பூன் சூடான பாலில் கரைத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் இரண்டுகப் நீரைக் கொதிக்க வைத்துக் கொள்ளவும்.
இன்னொரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து மீதி நெய்யைவிட்டு நன்றாக சூடாக்கி
ரவையைப் போட்டு தீயைக் குறைத்து பொன்நிறமாக வறுக்கவும்.
ரவை வறுபட்டதும் கொதிக்கும் நீரை அதில்விட்டுக் கிளறவும்.
தீயை நிதானமாக்கி குங்குமப்பூ கலவையையும் சேர்த்துக் கிளறி ஒரு நிமிஷம் மூடவும்.
உப்புமா பக்குவத்தில் ரவை மலர்ந்து வெந்துவிடும்.
மூடியை அகற்றி சர்க்கரையையும் சேர்த்துக் கிளறவும்.
தளர்வான கேஸரி கிளறக் கிளற பக்குவமான தீயினால் இறுகி வரும். பந்து போன்ற மெத்தென்ற
பதத்தில் ஏலக்காய் முந்திரி திராட்சை சேர்த்து இறக்கவும்.
விட வேண்டிய நெய்யை முதலிலேயே வைப்பதால் ரவை நன்றாக வறுபடும்
ரவை நன்றாக வறுபட்டால் கட்டி தட்டாது.
நன்றாக வேகும். பிறகு நெய் விட வேண்டாம்.
வெந்த ரவையில் சர்க்கரை சேர்த்து சுலபமாகக் கிளறினால் கேஸரி ரெடி.
இனிப்பு அதிகம் வேண்டுமானால் சர்க்கரை அதிகம் சேர்க்கவும்.
சர்க்கரைப் போளி
கடலைப் பருப்பு் அரைகப்—–துவரம்பருப்பு அரைகப்—-சர்க்கரை 2கப்—-தேங்காய்த்துருவல் அரைகப்—ஏலக்காய்ப்பொடி கால்டீஸ்பூன்—மஞ்சள்பொடி கால்டீஸ்பூன்——உப்புகால்டீஸ்பூன்——–எண்ணெய்அரைகப்——நெய் 4டேபிள்ஸ்பூன்——போளியைத் தோய்த்து இட மெல்லியதாக சலிக்கப்பட்ட அரிசிமாவு வேண்டிய அளவு. போளி தயாரிக்க மூன்றுகப் மைதாமாவு.
செய்முறை—–பருப்புகளைக் களைந்து ஒனறரைககப் தண்ணீர் சேர்த்து சிறிய குககரில் மிதமான தீயில் ஒர் விஸில் வரும்வரை வேகவைத்து இறக்கவும். ஆறின பிறகு வெந்த பருப்புடன் ஏலப்பொடி,தேங்காய், சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் அரைத்தெடுக்கவும்.
அடிகனமான நான்ஸ்டிக பேனிலோ, வாணலியிலோ 3டீஸ்பூன் எண்ணெயுடன் அரைத்த விழுதைப்போட்டு மிதமான தீயில் வைத்து அடிபிடிககாமல் கிளறி கையில் ஒட்டாத பதத்தில் கெட்டியாகக் கிளறி இறக்கி ஆறவிடவும்.

போளி பூர்ணம்
முன்னதாகவேமைதாமாவுடன் 3டேபிள்ஸ்பூன்எண்ணெய் உப்பு,மஞ்சள்ப்பொடிகலந்து தண்ணீர் விடடுப பிசைந்து ரொட்டிமாவுபோல தயாரித்துக் கொள்ளவும்.அரைகப்பைவிடத் துளிஅதிகம் தண்ணீர, மாவு பிசையப் போதுமானது. மாவை ஒருமணி நேரம் ஊறவைக்கவும்.

மாவு

பிசைந்த போளி மாவு
பாதிமாவை சமமான பத்து அல்லது 12,உருண்டைகளாகச் செய்து கொள்ளவு்ம். இதேபோல் பருப்புக் கலவையையும் பாதியை 12,உருண்டைகள் செய்து கொள்ளவும்.
மாவு உருண்டைகளை அரிசிமாவில் தோய்த்து ஒவவொன்றாக சப்பாத்திப் பலகையில், உள்ளங்கையளவிற்கு அப்பழக்குழவியினால் வட்டமாக இட்டுக் கொள்ளவும். வட்டத்தின் மேல் லேசாக எண்ணெய் தடவவும். பருப்புக் கலவையை லேசாக கையினால் வில்லையாகப் பரத்தி அதன்மேல்வைத்து வட்டத்தின் விளிம்புகளால் மூடி சற்று அழுத்தி, தட்டையாக்கிக் கொண்டு அரிசிமாவில் பிரடடி குழவியினால் வட்டமான போளிகளாக இட்டுக் கொள்ளவும். இரண்டொருதரம் மாவைத் தொட்டு இடவும். போளி ஒட்டாமல் வரும். அப்பளாம்போல மெல்லியதாக இடவரும்.
- பிசைந்த போளி மாவு
- மாவு
- போளி பூர்ணம்
4,5,—4,5ஆகதயாரித்துக் கொண்டு மிதமான சூட்டில் தோசைக்கல்லைக் காயவைத்து போளிகளைப போட்டு, ரொடடி தயாரிப்பது போல நெய்யும் எண்ணெயுமாகக் கலந்து போளியின் இருபுறமும் ஸ்பூனினால் தடவி , எடுக்கும்போதே இரண்டாக மடித்தும் எடுத்து வைக்கவும். இப்படியே எல்லாவற்றையும் பொருமையாக போளிகளாகத், தயாரிக்கவும். தீயாமல், கருகாமல் பதமாக எடுக்கவும். நல்ல ருசியாகவும் மிருதுவாகவும் இருககும்.
மாவில் எண்ணெய் சேர்ப்பதால் கல்லில் போடடெடுப்பதற்கு அதிக நெய, எண்ணெய் தேவையிராது.
பருப்புகளை ஸப்ரேட்டரில் வேகவைத்தால் இரண்டு விஸில் வைக்கலாம். உட் பாத்திரத்தை மூட வேண்டும்.20 போளியைவிட அதிகமாகவே என் கணக்கில் வருகிறது.
பருப்பு நன்றாக வேகவேண்டிய அவசியமில்லை.
சேமியா—-பாயஸம்
வேண்டியவை—–100கிராம்,சேமியா
150கிராம்,சர்க்கரை ,கால்லிட்டர்பால,8பாதாமபருபபு,4ஏலக்காய், துளிகுங்குமப்பூ,சிறிதளவு முந்திரிப்பருப்பு.
செய்முறை—-நிதானமான தீயில் கடாயில் சேமியாவைப் போடடு பொன்நிறமாக வருத்துக் கொள்ளவும்.
பாதாம் பருப்பை சுடுதண்ணீரில நனறாக ஊரவைத்து தோல் நீக்கி மிக்ஸியில் அறைத்து வைத்துக் கொள்ளவும்.
சேமியாவை 2-3முறை சுடு தண்ணீரில் அலமபி தண்ணீரை வடித்து விட்டு பாலில் நிதானமான தீயில் வேக வைக்கவும். வெந்ததும் சர்க்கரை,ஏலக்காய்பபொடி சேர்த்து 2-3நிமிஷங்கள் கொதிக்கவிட்டு, வேண்டிய அளவு பால் சேர்த்து வருத்த முந்திரியையும் குங்குமப்பூவையும் சேர்த்துக் கலக்கி இறக்கவும். முந்திரி வறுக்க மடடும சிறிது நெய் போதுமானது.
. அரைத்த பாதாம்கலவையை கொதிக்கும் போது சேர்தது விடவேண்டும். சேமியாவை நெய் சேர்க்காமல் வறுத்தால் பால திரியாமலிருக்கும். இனிப்பு அதிகம் வேண்டுமானால் சர்க்கரை அதிகம் சேர்க்கவும.








