Posts filed under ‘சுலபமானது’

பாஸ்தா ஸேலட்

வேகவைத்த பாஸ்தாவுடன் ,சில காய்கள் சேர்த்து ருசியான ஸேலட் பிடித்தவர்களுக்கு.

Continue Reading ஜூலை 30, 2015 at 11:52 முப 10 பின்னூட்டங்கள்

க்வாக்கமோலே guacamole.—அவகேடோவின் ருசி.

ஸுலபமான குறிப்பொன்றை விஸ்தாரமாக எழுதியிருக்கிறேன். கொஞ்சம் விலை ஜாஸ்தி அவகேடோவிற்கு. கார்ன் சிப்ஸ் கிடைக்காத இடமே இல்லை. வாங்கி ஜோடி சேருங்கள்.
எல்லா சிப்ஸுடனும் ருசிதான்.

Continue Reading ஜனவரி 31, 2014 at 11:18 முப 33 பின்னூட்டங்கள்

மாங்காய் இஞ்சி பிசறல்.

இந்த   மாங்காய்   இஞ்சி என்றால்  எனக்கு மிகவும் பிடிக்கும். சென்னை

வந்த பிறகு   மாங்காயிஞ்சியை   ஸ்மரிக்காமல் இருக்க முடியுமா?

கேட்பதற்கு முன்னாடியே  எனக்கு பிடிக்கும் என்ற  முறையில்   மாஇஞ்சியை

என் பெண் வாங்கி வந்து விட்டாள்.  ஸரி,  எதையும் தேடிப்  போகாமல்

இருப்பதைவைத்து   ஒரு பதிவு  போடலாம் என்று தோன்றியது.

ஸாதாரணமாக    பொடியாக   மாஇஞ்சியை   நறுக்கி,    உப்பு சேர்த்து,

எலுமிச்சை சாறு சேர்த்து  ,    கடுகு தாளித்து, பச்சைமிளகாயையும்

துளி வதக்கிப் போட்டால்   அதுவே  மிக்க   ருசியாக இருக்கும்.

எனக்கு எப்படி செய்தால்   பிடிக்கும்,செய்தேன் என்பதையும்தான்

நீங்களும்   படியுங்களேன்.  பிரமாதமொன்றுமில்லை.  இருந்தாலும்

எழுதுகிறேன்.  படியுங்கள்.

வேண்டியவைகள்—–

நல்ல  கேரட்—பெறியதாக ஒன்று

திட்டமான  நீளம் கொண்ட மாங்காயிஞ்சி—4 துண்டுகள்

கேப்ஸிகம்—1  பச்சைநிறம்.

பச்சைமிளகாய்  பாதியோ அல்லது   ஒன்றோ

பூண்டு இதழ்—ஒன்று.பிடித்தவர்கள் உபயோகிக்கவும்.

வெங்காயம்—-1

உப்பு—ருசிக்கு

சர்க்கரை—ஒரு துளி

கடுகு,  சீரகம்—மொத்தமாக   அரை டீஸ்பூன்.

உளுத்தம் பருப்பு—-சிறிது

எண்ணெய்—-துளி.   தாளிக்க

சின்ன  எலுமிச்சம் பழம்—1

கொத்தமல்லித்தழை—மேலே தூவ

செய்முறை—இஞ்சி,கேரட்டைத்    அலம்பித்  தோல்

சீவிப்      பொடியாக     நறுக்கவு்ம்.

காப்ஸிகத்தையும்  அதே அளவில்  நறுக்கவும்.

ஒரு கரண்டியில் துளி  எண்ணெயில்  கடுகு,சீரகம் உ.பருப்பு,தாளித்து

பொடியாக நறுக்கிய  பூண்டு,   பச்சைமிளகாயை  வதக்கி வைக்கவும்.

எலுமிச்சை  சாற்றில்,,உப்பு,  சர்க்கரை சேர்த்து  நறுக்கிய   துண்டங்களின்

கலவையில்       சேர்த்துக் கலக்கவும்.

தாளிதத்தைச் சேர்த்து   கொத்தமல்லி தூவவும். உரிகானோ இருந்தலும்

ஒரு துளி போடலம்.

வாய்க்கு ருசியானது.  பார்க்கவும் அழகாக இருக்கு.  சாப்பாட்டுடன்,

ருசிதான். வெங்காயத்தை   பிடித்த முறையில்  வதக்கியோ,

பச்சையாகவோ  நறுக்கிச்  சேர்க்கலாம்.

வினிகர் சேர்த்தும்   செய்யலாம்.

மாங்கய் இஞ்சி,மற்றும் சில

மாங்காய் இஞ்சி பிசறுதலுக்குத் தயார்.

பிப்ரவரி 16, 2012 at 10:56 முப 10 பின்னூட்டங்கள்

பன்னீர் துக்கடா

மிகவும்  சுலபமாக   தயாரிக்கலாம் இதை.

வேண்டியவைகள்.

பன்னீர்—-200கிராம்

ஸாம்பார் வெங்காயம்—உறித்தது  5 அல்லது 6

தக்காளி—-சின்னதாக  1

பச்சை  மிளகாய்—-சின்னதாக  ஒன்று

பச்சைக் கொத்தமல்லி இலை—–அரைகப்

பன்னீர்  பொறிக்க  வேண்டிய—  எண்ணெய்

ருசிக்கு –உப்பு

செய்முறை—-பன்னீரைச் சற்று பெரிய துண்டங்களாக  நறுக்கவும்.

வெங்காயம்,மிளகாய்,   தக்காளி,   கொத்தமல்லி உப்பு சேர்த்து   மிக்ஸியில்

ஜலம் விடாமல் பேஸ்ட்டாக   அறைத்துக் கொள்ளவும்.

அடுத்து  நான் ஸ்டிக்  பேனில் , நிதான தீயில்    பரவலாக  சிறிது எண்ணெய்

விட்டு சூடாக்கி   பனீர் துக்கடாக்களைப்   பரப்பவும்.

ஒரு புறம்  சிவந்ததும்   நிதானமாக மறுபுறம்    திருப்பிப்   போட்டு சற்று

சிவக்கவைத்து     எடுத்து   டிஷ்யூ பேப்பரில் போட்டு எண்ணெய்

நீக்கவும்.             ஒரு பாத்திரத்தில்தயாரான   துண்டங்களின் மேல்

வேண்டிய  அளவிற்கு    அறைத்த பேஸ்ட்டைப்    பிசறி     தட்டுகளில்

அலங்கரித்து வைக்கவும்.

பேஸ்ட் மிகுதியானால்    தயிரில் கலந்தால்    பச்சடியாகிவிடும்.

பன்னீர் பிடித்தவர்களுக்கு     துக்கடா   ருசியான ஒன்று.

பன்னீர் துக்கடா

ஏப்ரல் 29, 2011 at 5:41 முப 4 பின்னூட்டங்கள்

மாங்காய்ப் பிசறல்

இது மிகவும் சுலபமானது.

வேண்டியவைகள்.

புளிப்பில்லாத     பிஞ்சு மாங்காய்    2

பச்சை மிளகாய் —சின்னதாக  1

இஞ்சி—சிறிய துண்டு

ருசிக்கு—உப்பு

தாளித்துக் கொட்ட 1 டீஸ்பூன்   எண்ணெய்

துளி கடுகு,      பெருங்காயப் பொடி சிறிது

செய்முறை-—–மாங்காயை  உள்ப் பருப்பு நீக்கி  பொடிப் பொடியாக

நறுக்கிக் கொள்ளவும்.

இஞ்சி,    பச்சை  மிளகாயையும்    மிகவும்   பொடியாக நறுக்கி

மாங்காயுடன் உப்பு சேர்த்துக் கலக்கி , கடுகு,   பெருங்காயத்தைத்

தாளித்துக் கொட்டி உபயோகிக்கவும்.

எல்லாச் சாப்பாட்டுடனும் உடன் சாப்பிட ருசியாக இருக்கும்.

ஒரு கேரட்டைச் சீவி பொடியாக நறுக்கியும் கலக்கலாம்.

மே 12, 2010 at 7:26 முப பின்னூட்டமொன்றை இடுக

காரட் ஸாலட்

வேண்டியவைகள்—-காரட்—2 அலம்பித் தோல் சீவி பொடிப் பொடியாக

நறுக்கிக் கொள்ளவும்.

வெங்காயம–1 பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பூண்டு—ஒரு இதழ் மிகவும் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.

காப்ஸிகம்   —எந்தக் கலரானாலும்  பொடியதாக  நறுக்கியதுண்டுகள்

பச்சை மிளகாய்—-பாதியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பச்சைக் கொத்தமல்லித் துண்டுகள்—ஒரு டீஸ்பூன்

சர்க்கரை—ஒரு துளி

உப்பு—ருசிக்கேற்ப

எண்ணெய்—ஒருதுளி

எலுமிச்சம் பழம்—பாதி

செய்முறை—-சற்று அகன்ற பாத்திரத்தில் உப்பு , சர்க்கரயைப்

போட்டு பூண்டு வெங்காயத்தை எலுமிச்சம்பழ சாற்றுடன் அழுத்திக்

கலக்கவும்.

மீதமுள்ள சாமான்களையும் சேர்த்துக் கலக்கினால் ஸாலட் ரெடி.

வேக வைத்த கடலை, பட்டாணி, ராஜ்மா, முளைப் பயறு, முதலானவைகள்

சேர்த்தும் செய்யலாம்.

தக்காளி,     வெள்ளரிக்காய், கோஸ், சோளம் ,லெட்டூஸ் முதலானவைகளும்

சேர்த்துச் செய்யலாம்.

எண்ணெய். ஆலிவாயிலாக இருந்தால் ருசி கூடும்.

காரம் அவசியமில்லை.    புளிப்பில்லாத மாங்காய் கூட சேர்க்கலாம்.

கேரட்டைத் துருவியும்,   பீட்ரூட்டைத் தனியாகத் துருவியும், ருசிக்குத்

தக்க சேர்மானங்களைச் சேர்த்து  பலவிதங்களில் தயாரிக்கலாம்.

ஏப்ரல் 27, 2010 at 10:25 முப பின்னூட்டமொன்றை இடுக

மசித்த உருளைக் கிழங்கு.

இதென்ன  பிரமாதமான சமையல் குறிப்பா? என்றுதான் தோன்றும்.

அப்படியே மசித்து நாம் உபயோகிக்கிரோமா?   எனக்குத் தோன்றியது.

எழுதலாம் என்று. அவ்வளவுதான்

வேண்டியவைகள்.

 4 ,அல்லது 5  உருளைக் கிழங்குகள்

மிளகுப்பொடி—–அரை டீஸ்பூன்

ருசிக்கு–உப்பு

வெண்ணெய்—2 அல்லது 3 டீஸ்பூன்

கால் டீஸ்பூன்—-மஞ்சள் பொடி.

செய்முறை——உருளைக்கிழங்கை நன்றாக வேகவைத்து எடுத்து

தோல் உறித்து சூடாக இருக்கும் போதே நன்றாக மசிக்கவும்.

இதற்குக் கூட கரண்டி இருக்கிரது.

மசித்த கிழங்கில் உப்பு, மஞ்சள்    பொடி, மிளகுப்பொடி   வெண்ணெய்

   சேர்த்துப்   பிசையவும். ஒரு ஸ்பூன் பால்கூட சேர்க்கலாம்.

 இதுவும் ஒரு நல்ல ருசிதான்.  மாஷ் பொடேடோ.

மார்ச் 25, 2010 at 11:18 முப பின்னூட்டமொன்றை இடுக


மே 2024
தி செ பு விய வெ ஞா
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 293 other subscribers

வருகையாளர்கள்

  • 551,514 hits

காப்பகம்

பிரிவுகள்


சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

Chitrasundar's Blog

நாங்களும் சமைப்போமில்ல!!!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com News

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.