Posts filed under ‘ஜூஸ் வகைகள்’
மேங்கோலஸி
சொல்லப்போனால் மாம்பழமோர்தான். அழகாகச்
செய்து கொடுத்தால் வெய்யிலுக்கு மாம்பழச்சுவை
-யுடன் ஜில் என்று குடிப்பதற்கு இதமாக இருக்கிறது.
அதுவும் நல்ல இன மாம்பழம் சேர்த்துச் செய்தால்
சொல்லவே வேண்டாம். அவ்வளவு நன்ராக இருக்கு.
பார்ப்போமா?
வேண்டியவைகள்
நல்ல மாம்பழம்—-ஒன்று
புளிப்பில்லாத மோர்—அரை டம்ளர்
காலாநமக்கென்று சொல்லப்படும் உப்பு—அரைடீஸ்பூன்
வேண்டிய அளவு—ஐஸ் தண்ணீர்
செய்முறை
மாம்பழத்தைத் தோல் சீவித் துண்டங்களாகச் செய்து
கொள்ளவும்.
மாம்பழத் துண்டுகளை மிக்ஸியிலிட்டு கூழாக மசித்துக்
கொள்ளவும்.
மோரையும், காலா நமக்கையும் சேர்த்து மிக்ஸியைச் சற்று
ஓடவிட்டு எடுத்து ஐஸ்த்தண்ணீரைச் சேர்த்து கண்ணாடித்
தம்ளர்களில் விட்டுப் பருக வேண்டியதுதான்.
புளிப்புப் பழமாக இருந்தால் சர்க்கரையைச் சேர்த்து
மோருடன் நீர்க்கச் செய்து அருந்தலாம்.
மாம்பழ சீஸன். நான் செய்ததைச் சொன்னேன்.
உங்கள் விருப்பம்போல சுவையில் மாறுதல்களுடனும்
செய்யலாம். பிடித்ததா. இல்லையா?
பார்க்கலாம்.
பன்னா. மாங்காஜூஸ்
ஒரு மாங்காய் உபயோகிக்காமல் இருந்தது. அதையும்
உபயோகிக்கலாம் என்ன செய்யலாம்? மாங்காய் ஜூஸ்
ஸுமன் செய்வது ஞாபகத்திற்கு வந்தது. செய்தாச்சு.
குடித்தும் ஆச்சு. பகிர்ந்து கொள்வதுதானே என் பழக்கம்.
இதையும் பாருங்கள். பருகுங்கள்.
வேண்டியவைகள்
அதே புளிப்பில்லாத கிளிமூக்கு மாங்காய்—ஒன்று
வேறு வகையானாலும் அதிகம் புளிப்பில்லாத மாங்காயானாலும்ஸரி.
சர்க்கரை—-4 டீஸ்பூன்.வேண்டிய அளவு அதிகறிக்கவும்.
ஏலக்காய்–1 பொடிக்கவும்.
காலா நமக்கென்று சொல்லும் உப்பு அரை டீஸ்பூன்.
இஞ்சி வாஸனைக்குத் துளி
புதினா—4 இலைகள்
செய்முறை
மாங்காயை அப்படியே முழுதாக குக்கரில் வேகவைத்து
எடுக்கவும்.
பருப்பு வேகவைக்கும் போது மேலே ஒரு பாத்திரத்தில்
துளி தண்ணீருடன் மாங்காயை வைத்தாலும் ப்ரஷரில்
நன்றாக வெந்து விடும்.
ஆறினவுடன் மாங்காயின் தோலையும் கொட்டையையும்
எடுத்து விடவும்.
இப்போது மாங்காயின் உட்பகுதியை கரண்டியினாலோ,
க்ரஷ்ஷரினாலோ நன்றாக மசிக்கவும்.
2 கப் குளுமையான தண்ணீர் விட்டுக் கறைத்து பெறிய
கண்உடைய சல்லடையிலோ, வடிக்கட்டியிலோ வடிக்கட்டவும்.
சர்க்கரை, காலாநமக்,ஏலக்காய் ஒன்று சேர்த்துக் கலக்கவும்.
இஞ்சித் துருவலில் 1 ஸ்பூன் தண்ணீர் சேர்த்துப் பிழிந்து
கலக்கவும்.
ருசி பார்க்கவும்.
புளிப்புக்கு ஏற்ற ஜலம் சேர்க்கவும். இனிப்பும் அப்படியே.
புதினா இலையைச் சற்று கசக்கினாற்போல தயாரான ஜூஸைக்
கண்ணாடித் டம்ளரில்விட்டு மேலே அலங்கரித்துக் கொடுக்கவும்.
எடுத்து விட்டு குடிக்கட்டும்.ஐஸ் கட்டிகளைச் சேர்க்கவும்.
இங்கே புதினா முடிந்து விட்டது. போடாவிட்டால் கூட ருசியாக
இருந்தது.
செய்து தான்பாருங்களேன்.