Posts filed under ‘வறுவல்’
பாகற்காய் வறுவல். முறை 2
மாதிரிக்குத்தானே. ஸுமார் 4 பாகற்காய் எடுத்துக்கொண்டு செய்து
பார்க்கலாம். சுலபமாக செய்வதற்கு மைக்ரோவேவ் மிக்க
ஒத்தாசையாக இருக்கிறதல்லவா?
வேண்டியவைகள்—எல்லாமே கொஞ்சம் கொஞ்சம்தான்.
அரை டீஸ்பூன்–சர்க்கரை
கால் டீஸ்பூன்—–மஞ்சள்ப்பொடி
புளி ஜலம— கெட்டியாக 1 டேபிள்ஸ்பூன்
உப்பு—வேண்டிய அளவு
எண்ணெய்—–வேண்டிய அளவு
செய்முறை—பாகற்காயை அலம்பி மெல்லிய வட்டங்களாக
நறுக்கி விதைகளை நீக்கவும்.
புளிஜலம்,உப்பு,ம.பொடி, சர்க்கரை சேர்த்து நன்றாகப் பிசறி
ஊற வைக்கவும்.
சிறிது நேரம் கழித்து நன்றாக ஒட்டப் பிழிந்து மைக்ரோவேவ்
பாத்திரத்தில் மாற்றவும்.
4 டீஸ்பூன் எண்ணெயைக் காயுடன் கலந்து பிசறி ஹை
பவரில் மைக்ரோவேவ் செய்யவும்.
திரும்பவும் எடுத்துக் கிளறிவிட்டு 2 நிமிஷங்கள் மைக்ரோவேவ் செய்யவும்.
இப்படியே பின்னும் ஒரு டீஸ்பூன் எண்ணெய் கலந்து ஒரு நிமிஷம்
மைக்ரோவேவ் செய்யவும்
தண்ணீர் வற்றும் வரை ஒவ்வொரு நிமிஷமாக கிளறிவிட்டுமைக்ரோவேவ் செய்து
நல்ல கரகரப்பான பதம் வரும்போது எடுத்து ஒரு நிமிஷம் ஆற வைக்கவும்.
வாணலியில் ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி எண்ணெயில் வதக்கி வறுவலையும்
சேர்த்து போதும், போதாதற்கு உப்பு மிளகாய்ப் பொடி சேர்த்து கரகர பதத்தில்
இறக்கி உபயோகிக்கவும். வெங்காயம் வேண்டாம். அதுவும் ஸரி. பூண்டு,
பெருங்காயப்பொடி எது வேண்டுமானாலும் வாஸனைக்கு சேர்க்கலாம்.
பாகற்காய் ருசி பிடித்தவர்களுக்கு இந்த வகையும் முயற்சிக்கலாம்.
சேனைக்கிழங்கு வறுவல்.
வேண்டியவைகள்
சேனைக் கிழங்கு—–கால் கிலோ
வறுப்பதற்கு வேண்டிய எண்ணெய்
மஞ்சள்பொடி—–கால் டீஸ்பூன்
கடலைமாவு–2 டேபிள்ஸ்பூன்
அரிசி மாவு—2 டீஸ்பூன்
மிளகாய்ப் பொடி—1 டீஸ்பூன்
பெருங்காயப்பொடி—சிறிது
ருசிக்கு உப்பு, நெய் ஒரு ஸ்பூன்
செய்முறை—-சேனையை நன்றாகத் தண்ணீரில் அலம்பி மண்
போக சுத்தம் செய்து தோல் நீக்கி சிறிய மெல்லிய சதுரங்களாக
நறுக்கிக் கொள்ளவும்.
கொதிக்கும் தண்ணீரை விட்டு 5 நிமிஷம் ஊற வைத்துத்
துண்டங்களை வடிக்கட்டிக் கொள்ளவும்.
துண்டங்களை, உப்பு, நெய், ஒருஸ்பூன் எண்ணெய் விட்டு பிசறி
சிறிது நேரம் வைக்கவும். துண்டங்களில்காரம மாவுகள், மஞ்சள் பொடியென வேண்டியவைகளைத் தூவிக்
கலந்து உதிர்த்து காயும் எணெணெயில் பரவலாகப் போட்டு
கரகரவென்ற பக்குவத்தில் வறுத்து எடுக்கவும். இதுவும் ருசியான
வறுவல்தான்.
பாகற்காய் வறுவல்.
வேண்டியவைகள்-
-4 அல்லது5 பாகற்காய்களை நறுக்கி விதைகளை நீக்கி
மெல்லியத் துண்டங்களாகச் செய்துகொள்ளவும்.
.அரை டீஸ்பூன் உப்பு சேர்த்துப் பிசறி ஊற விடவும்.
மற்றும்
மஞ்சள் பொடி– அரை டீஸ்பூன்
மாங்காய்ப் பொடி—1 டீஸ்பூன்
சர்க்கரை—-1 டீஸ்பூன்
கடலைமாவு—கால்கப்
அரிசி மாவு —1 டேபிள் ஸ்பூன்
மிளகாய்ப் பொடி—-1 டேபிள் ஸ்பூன்
உப்பு—ருசிக்கு
பெருங்காயப் பொடி—-அரை டீஸ்பூன்
மாவில் கலக்க—1 ஸ்பூன் நெய்
வறுவல் வறுப்பதற்கு—–வேண்டிய எண்ணெய்
செய்முறை
பாகற்காயை கசக்கினாற் போல ஒட்டப் பிழிந்து எடுக்கவும்.
சிறிது உப்பு, காரம், நெய் புளிப்பு,இனிப்பு யாவற்றையும்,
கலந்து மேலாக மாவுகளைத் தூவி உதிர் உதிராகப்
பிசறவும்.
எண்ணெயைக் காயவைத்து உதிர்த்த மாதிரி தளர்களைப்
போட்டு முறுகலாக வறுத்தெடுத்து உபயோகிக்கவும்.
அரிசி மாவிற்குப் பதில் ஓட்ஸ் கலந்தும் உபயோகிக்கலாம்.
காற்று புகாதபடி டப்பாக்களில் வைத்து 4 அல்லது5 நாட்கள்
கூட வைத்து உபயோகிக்கலாம். பிசறலில் தண்ணீர் சேர்க்கக்
கூடாது.