Posts filed under ‘வடாம் வகைகள்’
ஜெவ்வரிசி வடாம்
இதுவும் தயாரிப்பது எளிதானதுதான். நல்ல வெயிலில் காயவைத்துத் தயாரித்தால்
வருஷத்திற்கு அதிகமாகவே வைத்து அவ்வப்போது உபயோகிக்கலாம்.
வெய்யில் உள்ள போது அதிகம் தயாரிக்க வேண்டும்.
ஸௌகரியம்போல காட்போர்டுகளின் மீதோ பெரிய அட்டைகளின் மீதோ
பாலிதீன் பேப்பர்களைச் சுற்றி வடாம் இட ட்ரேக்கள் தயார் செய்து கொள்ளவும்.
வேண்டியவைகள்
ஜெவ்வரிசி—-2கப்
பச்சைமிளகாய்—-5
எலுமிச்சம்பழம்—-1
தேவைக்கு—உப்பு
பெருங்காயப்பொடி—அரை டீஸ்பூன்
செய்முறை.
ஜெவ்வரிசியைத் தண்ணீர் விட்டுக் களைந்து சுத்தம் செய்து
மேலும் தண்ணீர் விட்டு ஒரு மணி நேரம் ஊறவைத்து நீரை
வடிக்கட்டவும்.
பச்சை மிளகாயை அரைத்து வைத்துக் கொள்ளவும்.
அடி கனமான அகலப் பாத்திரத்தில் 5 கப் தண்ணீரைக் கொதிக்க
வைக்கவும். வடிக்கட்டிய ஜெவ்வரிசியைச் சேர்த்துக் கிளரவும்.
தீயை ஸிம்மில் வைத்து பொங்கி வழியாமலும், பாத்திரத்தின்
அடியில் பிடிக்காமலும் அடிக்கடி கரண்டியினால் கிளறிக்
கொடுக்கவும்.
ஜெவ்வரிசி வெந்ததும் அரைத்த மிளகாய், உப்பு சேர்த்துக் கிளறி
இறக்கவும். எலுமிச்சை ரஸத்தைச் சேர்த்துக் கிளறி தட்டினால்
மூடி வைக்கவும். பெருங்காயம் சேர்க்கவும்.
சற்று நேரம் கழித்து கிளறியதை வேறு பாத்திரத்தில் எடுத்து
ஆறிய பதத்தில் கையினாலோ, ஸ்பூனினாலோ வடாங்களாக
இடவும்.
பாலிதீன் பேப்பரை ஈரத்துணியினால் துடைத்துவிட்டு , கையையும்
ஈரப் படுத்திக் கொண்டு கையினாலும் சிறிது இடம் விட்டு, விட்டு
வடாத்தைத் தயாரிக்கலாம்.
வடாக்கூழ் ஆறிவிட்டால் கெட்டியாகிவிடும். ஸ்பூனினால் இட
சிறிது மோரோ, ஜலமோ வேண்டியபோது சேர்க்கலாம்.
நல்ல வெய்யிலில் வைத்து, மறுநாளும் வைத்து எடுத்து வடாங்களைத்
திருப்பிப் போட்டுக் காயவைக்கவும்.கையால் பிறித்தெடுக்க முடியும்.
நன்றாகக் காயவைக்க வேண்டும்.
ஜெவ்வரிசி பாயஸம் மாதிரி இது சற்று கெட்டியாக வேகவைத்தபதம்.
அவ்வளவுதான்.
ஒருஸ்பூன் ஓமம், அல்லது சீரகம் சேர்த்தும் செய்யலாம்.
அரைத்த தக்காளி, தயிர், முதலானதும் புளிப்பிற்காக எலுமிச்சைக்குப்
பதிலாக சேர்த்துச் செய்தால் நிறம், மணம், ருசி மாறுதலாகவும்
நன்றாகவும் இருக்கும்.
நல்ல வெய்யில் அவசியம். ஈரப்பதம் துளிகூட இல்லாமல்
காயவைத்தெடுத்து பத்திரப் படுத்தவும்.
எண்ணெயில் பொறித்தெடுத்தால் சீறிக்கொண்டு பொரியும்.
இந்தியாவில் வெய்யில் ஸீஸன் இது .
வெளிநாட்டு வெய்யிலைக் கூட விடமாட்டேன்நான்.
வெதர் ரிபோர்ட் ஒத்தாசை செய்யும் எனக்கு.
வெங்காயம் அரைத்துப் போட்டும் வடாத்தைச் செய்யலாம்.
சமயத்தில் எண்ணெயில் பொரித்து சாப்பாட்டுடன் , அதுவும்
ரஸம் சாதத்துடன் சாப்பிட ஒப்பற்ற தோழன் இது
.திறந்த வெளி மாடி டெரஸுகளானால் வடாம் சீக்கிரம் காயும்.
நூலைக்கொண்டு பெறிய வலைமாதிரி வடாத்தைச் சுற்றி
கட்டி விடுவோம். காக்கைகள் பயந்துகொண்டு வராது. வடாத்துக்கு
காவல் என்று வேலை செய்யாது புத்தகம் படிக்க சான்ஸ்
கிடைக்கும். வடாம் ஸீஸனின் மலரும் நினைவுகள் ஏராளம்.
படங்கள் சுமாராகத் தோன்றினாலும் வடாங்கள் ரொம்பவும்
ருசியாகவும், அருமையாகவும் இருக்கு. மும்பை அபார்ட்மென்ட்
வெயிலின் வடாம் இது. சுருங்கச் சொன்னால் ஜெவ்வரிசியைக்
கூழாகக் கிளறி, உப்பு,காரம், புளிப்பு சேர்த்துத் தயிர் சாதம் மாதிரி
ஆறவைத்து , கையினால் பாலிதீன் பேப்பர்கள் மீது வடாம்களாக
இட்டு வெயிலில் 2, 3, நாட்கள் காயவைத்து நன்றாக உலர்ந்த
வடாங்களைப் பத்திரப் படுத்த வேண்டும். அவ்வளவுதான்.
குழம்புக் கருவடாம்
நல்ல வெய்யில் காயும் போது இந்தமாதிரி வடாங்களைத்
தயாரித்து வைத்துக் கொள்வதுண்டு.
பருப்பு வகைகளில் தயாரிக்கும், இவ் வடாங்கள் கூட்டு,குழம்பு,
டால்கள், வத்தக்குழம்புகள், சாம்பார் என எல்லாவற்றுடனும்
எண்ணெயில் வறுத்துப் போட்டு செய்தால் மாறுதலுக்கு ஒரு
ருசி கிடைக்கும். இப்போதுதான் யாவுமே ரெடிமேடாக
.கிடைக்கிறது. அது வேறு விஷயம்.
இன்ட்ரஸ்ட் இருந்தால் முயற்சி செய்து பார்க்கலாமே.
நான் ப்ளாகில் போடுவதற்காக இந்த பாம்பே வெய்யிலையும்
சற்று உபயோகிக்கலாமே என்று செய்தேன். கிழக்கு மேற்காக
அமைந்த டூப்ளே அபார்ட்மென்ட் இது. காலையில்
பக்கவாட்டு வெய்யிலும் 2மணிக்குமேலே மேற்கத்திய
வெயிலும் உதவி செய்தது. துணியாலே மூடிமூடி
காயவைத்து ரொம்பவே அக்கரையாக செய்திருக்கிரேன்.
வேண்டிய சாமான்கள்
உளுத்தம் பருப்பு—-1 கப்
மிளகாய் வற்றல்—-4
வாஸனைக்கு —ஒரு டீஸ்பூன் மிளகு சீரகம்
ஒருகப்—-துருவிய வெள்ளை பூசணிக்காய்
திட்டமாக உப்பு.
செய்முறை—-உளுத்தம் பருப்பை நன்றாகக் களைந்து
தண்ணீரில் 4மணி நேரம் ஊரவைத்து வடித்து மிளகாய்
சேர்த்து தண்ணீர் விடாமல் கெட்டியாக மிக்ஸியில் அறைத்துக்
கொள்ளவும்.
பூசணித் துருவலை ஒட்டப் பிழிந்து சேர்க்கவும்.
உப்பு, மிளகு சீரகப்பொடியையும் கலக்கவும்.
அகலமான ட்ரேயின் மீது பாலிதீன் பேப்பர்களைச் சுற்றி
வடாம் இட ட்ரே தயாரிக்கவும்.
ட்ரேயைத்தண்ணீரால் துடைத்துவிட்டு கையை ஈரமாக்கிக்
கொண்டு அறைத்த மாவை சிறு பகோடாக்கள் மாதிரி
ஒன்றிற்கொன்று இடம் விட்டு உருட்டிவைத்து ட்ரேயை
வெய்யிலில் வைத்து காயவிடவும்.
நல்ல வெய்யிலில் காயவைத்து மறுநாள் திருப்பிப் போட்டு
கருவடாங்களைக் காயவைக்கவும்.
ஈரப்பதம் போய் நன்றாக மொறுமொறு என்று ஆகும் அளவிற்கு
வெய்யிலில் காயவைத்து காற்றுப் புகாத பாட்டில்களில்
சேமித்து வைக்கவும்.
வேண்டிய போது வறுத்து கூட்டு, குழம்புகளில் சேர்க்கலாம்.
நாட்டுப்புரத்து குறிப்புகளாக நினைத்துக் கொள்ளுங்கள்.
நான் வெங்காயத்தை சேர்த்து அரைத்து செய்திருக்கிறேன்
வெந்தயக்கீரை சேர்த்தும் தயாரிக்கலாம்.
தனி பயத்தம் பருப்பிலும், காராமணி, தட்டைப் பயறு
சேர்த்தரைத்தும் கருவடாம் இதேமுறையில் தயாரிக்கலாம்.
தயாரிப்பது பெரிய காரியமில்லை. வெய்யிலில்
காயவைத்தெடுப்பதுதான் பெரிய காரியம்.
வட இந்தியர்கள் தயாரிப்பில் கடுகு, மிளகு,சீரகம்,வெந்தயம்,
லவங்கம், என யாவும் முழுதாகவே சேர்த்தும் காரமாக
தயாரிக்கிரார்கள். தயாரிக்க முடிகிறதோ இல்லையோ எப்படி
எதில் தயாரிக்கிறார்கள் என்பதாவது அறியமுடிகிறது
அல்லவா.படம் ஒரு மாதிரிக்குதான்.