Posts filed under ‘கிரேவி வகைகள்’

மட்டர் பனீர் முந்திரிக் கிரேவியுடன்.

20170502_125917

பிள்ளையுடன் படித்த  பால்ய சினேகிதர்கள் வருகிறார்கள்  j`’ரொட்டியுடன் சாப்பிட. காரசாரமாக மட்டர் பன்னீரும் தயாராகிறது. சற்று வேறுமாதிரி  என்று தோன்றியது. ப்ளாகில் குறிப்புகள் எழுதி வெகு நாட்களாகிறது.  இதுவும் உபயோகமாக இருக்குமே.  செய்து பாருங்கள். பூண்டு வெங்காயம் சேர்க்கவில்லை.  ஒரிஜனல் முந்திரிச் சுவையுடன்—-

வேண்டியவைகள்.ப்ரோஸன் மட்டர்–200 கிராம்.பனீர்–200 கிராம். வறுப்பதற்கு வேண்டிய எண்ணெய்

தாளித்துக் கொட்ட  நெய்—2டீஸ்பூன்.

பெரிய தக்காளிப் பழம்—2    அரை அங்குல  நீளம்–இஞ்சித்துண்டு. இவை இரண்டையுமாகச் சேர்த்து அரைத்த விழுது.

முந்திரிப் பருப்பு—8,         ஒரு டீஸ்பூன்  வெள்ளரி விதை. இதைத் தர்பூஸ்கா ஸீட்ஸ் என்று வட இந்தியர் சொல்வார்கள், இவைகளை ஊரவைத்துத் தனியாக அரைத்துக் கொள்ளவும்.

பொடிக்க ஸாமான்கள்

மிளகுஅரை டீஸ்பூன்—லவங்கம்-5,—பட்டை  ஒரு அங்குல அளவிற்கு, ஏலக்காய்-இவைகளைப் பொடிக்கவும். ஸுமாராகப் பொடித்தல்ப் போதும். வறுக்க வேண்டிய அவசியம் இல்லை.

தேஜ்பத்தி என்னும்லவங்க இலை–1

பொடிகள்.   மிளகாய்ப்பொடி–1 டீஸ்பூன்,—-மஞ்சள் பொடி தேவையான அளவு.

ருசிக்கு—உப்பு.

செய்முறை.    பதப்படுத்தப்பட்ட பட்டாணியை வென்னீர் விட்டு அலம்பி ஊறவைக்கவும். பின்னர்   திட்டமான தண்ணீரில்  வேக வைக்கவும்.

பனீரைச் சிறு துண்டங்களாக நறுக்கி,  வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ச்சி லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

மற்றொரு வாணலியில் நெய்யும் எண்ணெயுமாகக் கலந்து இரண்டுஸ்பூன்வைத்துச் சூடானதும்தேஜ்பத்தியைத்  தாளித்து, அரைத்து வைத்துள்ள தக்காளிவிழுதைக் கொட்டி   சுருளக்கிளறவும்.

பொடிகளைச் சேர்த்துக் கிளறி, வெந்தமட்டரைத் தண்ணீருடன் சேர்க்கவும்.  இரண்டொரு கொதி வந்தபின்  பனீரைச் சேர்க்கவும்.

திட்டமாக உப்பைச் சேர்த்து முந்திரி விழுதைச் சேர்த்துக் கொதிக்க விடவும்.

மிகவும் கெட்டியாகத் தயாரிக்காமல்   கூட்டு மாதிரி சற்று நெகிழும் பதத்தில் இருக்கும்படி தண்ணீரைக் கொதிக்கும்போதே  திட்டமாகச் சேர்த்துச் செய்யவும்.

இறக்கி வைத்து ரொட்டி, பூரியுடன்   பரிமாறவும். என்ன ருசியான து,எவ்வளவு ருசியானது என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும். உதவி–ஸுமன்

20170502_092908

மே 13, 2017 at 7:47 முப 13 பின்னூட்டங்கள்

வெங்காய ஓலன்

எல்லாவற்றையும் வேகவைத்துவிட்டு தேங்காய்ப்பாலை
சேர்த்து இறக்குவது பிரமாத காரியமில்லை. பாருங்கள்

Continue Reading செப்ரெம்பர் 27, 2012 at 6:26 முப 9 பின்னூட்டங்கள்

சிறு கிழங்கு கிரேவியுடன்

நான்  கூட  இந்தக் கிழங்கை   அதிகம்   உபயோகப்படுத்தியது

இல்லை.இரண்டொருமுறை சாப்பிட்டிருக்கிறேன். அவ்வளவுதான்.

எங்கள்   மருமகன்   கோயம்பேட்டிலிருந்து   வாங்கிக்கொண்டு

வந்ததுமல்லாமல்  ருசி  பிஸ்கெட் மாதிரி நன்றாக இருக்கும் என்று

கடைக்காரர்   சொன்னதாகவும் சொன்னார்.

ஸரி செய்து  பார்ப்போம்.  எங்கு  சாப்பிட்டோம் என்பதுஞாபகத்திற்கு

வந்தது.பாலக்காட்டு  தெறிந்தவர்களின்   வீட்டில்   சாப்பிட்டது

ஞாபகத்திற்கு  வந்தது.   உடனே   ஓரளவு    ருசியும்   இப்படிதான்

இருந்தது    என்ற   எண்ணமும்   ஏற்பட்டது.

என்னவோ   நான் செய்ததை  எழுதுகிறேன்.

வேண்டியவைகள்—-அரை கிலோ  சிறுகிழங்கு

தேங்காய்த் துறுவல்—அரைகப். சிறிது  குறைவானாலும் ஸரி.

பச்சை மிளகாய்—–3

சின்ன  வெங்காயம்–10, அல்லது  12

பெறிய  வெங்காயம்—1

சீரகம்—1 டீஸ்பூன்

எண்ணெய்—2, 3  டேபிள்ஸ்பூன்

தாளித்துக் கொட்ட—-கடுகு,  உளுத்தம் பருப்பு சிறிது

கறிவேப்பிலை—சிறிது.  மஞ்சள்ப் பொடி  சிறிது

செய்முறை

கிழங்கு   பார்ப்பதற்கு   ஒரே  மண்ணாக  இருக்கும் போல

இருக்கிறது.  வெளிநாட்டில்  எப்படி   கிடைக்குமோதெறியலே.

நிறையத் தண்ணீரில்  1 மணிநேரம்   ஊறவைத்தேன்.

பிறகு   பலமுறை   தண்ணீரில்  அலம்பி  அலம்பி மண்ணைப்

போக்கி   வடித்து    அதன்  மெல்லியதான  தோலைச் சீவி  எடுத்தேன்

.மெல்லிய  துண்டங்களாக  நறுக்கி  தண்ணீரில்  போட்டு வைத்தேன்

உறித்த சின்னபெறிய வெங்காயம்,  மிளகாய்,   சீரகம்,தேங்காய்

இவைகளை   மிக்ஸியில்    நன்றாக  அரைத்து வைத்தேன்.

பாத்திரத்தில்   தண்ணீரைக் கொதிக்க வைத்து   கிழங்குத்

துண்டுகளை  நன்றாக   வேக வைத்து  வடிக்கட்டினேன்.

வாணலியில்எண்ணெயில்   கடுகு  உ. பருப்பைத் தாளித்துக்கொட்டி

கிழங்கை   வதக்கி    உப்பு   சேர்த்து   அரைத்த விழுதைச் சற்று

ஜலம்  சேர்த்துக் கலக்கி   அதனுடன் சேர்த்தேன்.கொதித்ததும்

இறக்கி    கறிவேப்பிலை சேர்த்து     ருசி பார்க்கக்  கொடுத்தேன்.

ரொம்ப   நன்னாயிருக்கு   என்ற  கமென்ட்தான்  வந்தது.

தேங்காயெண்ணை சேர்த்தால்   அவியல் ருசியும் எட்டிப் பார்க்கும்.

அறைத்த விழுதைக்  கெட்டியாகச்    சேர்த்துப்  பிரட்டினால்  கறி

வகையாகும்.

இஞ்சி,  பூண்டு,  வெங்காயம்,மஸாலா சேர்த்தும்  பண்ணலாம்.

நிறைய  ஐடியாக்கள் எனக்கும்,   எல்லோருக்கும் தோன்றும்.

முதல்தரம்  பண்ணியதால்  ப்ரமாதமாக  பீடிகை  கொடுத்து

விட்டேன்.

அதுதான்   உண்மையும்  கூட.   எனக்கும்  ரொம்ப  பிடித்திருந்தது.

கிழங்கு  ருசியாக  இருக்கிறது.

இதை கூர்க்கன் கிழங்கு என்றும்  சொல்வார்கள்

இரண்டாவது படம்  கிரேவியுடன்   சிறுகிழங்கு.

காரம் வேண்டுமானால்  மிளகாய்  அதிகம்  சேர்க்கவும்.

மார்ச் 17, 2012 at 12:21 பிப 7 பின்னூட்டங்கள்


மே 2024
தி செ பு விய வெ ஞா
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 293 other subscribers

வருகையாளர்கள்

  • 551,514 hits

காப்பகம்

பிரிவுகள்


சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

Chitrasundar's Blog

நாங்களும் சமைப்போமில்ல!!!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com News

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.