Posts filed under ‘ஸாம்பார் வகைகள்’
அரைத்துவிட்ட மாங்காய் ஸாம்பார்.
இந்த ஸாம்பாரும்அதிகம் புளிப்பில்லாத மாங்காயில் செய்தால்
மிகவும் நன்றாக இருக்கும். ஒட்டு மாங்காயான கிளி மூக்கு மாங்காயில் செய்ததுதான் இந்த ஸாம்பாரும்.
காயை நறுக்கி வாயில் போட்டுப் பார்த்தால் புளிப்பைப் பற்றி
எவ்வளவு என்று தானாகவே தெறிந்து போகும்.
அதற்கேற்றார்போல் உப்புக் காரம் சேர்க்கலாம். ஸரி
இப்போது நாம் ஒரு திட்டமான மாங்காய்க்குண்டானதைப்
பார்ப்போம்.
வேண்டியவைகள்
மாங்காய்—-திட்டமான சைஸில்—-ஒன்று
துவரம் பருப்பு—அரைகப்
மிளகாய் வற்றல்—5அல்லது 6
பச்சை மிளகாய்—1
நல்லெண்ணெய்—2 டேபிள்ஸ்பூன்
தனியா—-1 டேபிள்ஸ்பூன்.
மிளகு—7,8 மணிகள்
அரிசி—1 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல்—கால்கப்
தாளித்துக் கொட்ட—கடுகு,வெந்தயம், பெருங்காயம்.
வாஸனைக்கு—கொத்தமல்லி, கறிவேப்பிலை.
விருப்பப் பட்டால் பாதி கேப்ஸிகம்
ருசிக்கு—-உப்பு
செய்முறை.
துவரம் பருப்பைக் களைந்து திட்டமாக தண்ணீர் விட்டு மஞ்சள்பொடி
சேர்த்து ப்ரஷர்குக்கரில் நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.
சிறிது எண்ணெயில் மிளகாய் ,தனியா, அரிசி, மிளகை வறுத்து
,அதனுடன் தேங்காயையும் வதக்கி இறக்கவும்.
ஆறியவுடன் மிக்ஸியில் சிறிது ஜலம் தெளித்து அறைத்து
எடுக்கவும்.
மாங்காயைக் கொட்டை நீக்கி துண்டங்களாகச் செய்து கொள்ளவும்.
கேப்ஸிகம், பச்சைமிளகாயு், மாங்காயுடன் வேண்டிய உப்பு சேர்த்து
குழம்பு வைக்கும்பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
மாங்காய் வெந்தவுடன் அறைத்த விழுதைச் சேர்த்து ஒரு கொதி
விடவும்.
வெந்த பருப்பைக் கரைத்துச் சேர்த்து பின்னும் நன்றாக கொதிக்கவிட்டு
இறக்கவும்.
நல்லண்ணெயில் கடுகு, வெந்தயம், பெருங்காயம் இவைகளைத்
தாளித்துக் கொட்டி, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்கவும்.
நான் வெங்காயம் போடுவதில்லை.
வேண்டியவர்கள் ஸாம்பார் வெங்காயத்தைச் சேர்த்துக்
கொண்டு செய்யவும்.
ருசிகள் பலவிதம். அதிலே இது ஒருவிதம்.
தடித்த தோல் உள்ள மாங்காயாக இருந்தால் தோலைச் சீவி
விட்டுச் சேர்க்கவும். உப்பு, புளிப்பு, காரத்திற்கு தகுந்தபடி
ஸாம்பாரை கெட்டியாகவோ, சிறிது நெகிழ்வாகவோ
தயாரிக்கவும். மாங்காய் ஸீஸன். செய்து பார்க்கலாமே.
பொடிபோட்ட ஸாம்பார்
ஸாதாரணமாக ஸாம்பார் பொடி போட்டு செய்யும் ஸாம்பார்களில்
காய்கறிகள் எதெது சேர்த்துச் செய்தால் நன்றாஇருக்கும். என்று
எனக்குத் தெறிந்ததைச் சொல்லுகிறேன்,
1 காப்ஸிகம்,காரட், பச்சைமிளகாய்
2 பூசணி, கத்தரிக்காய்
3 நூல்கோல்,வெங்காயம், பச்சைமிளகாய்
4பரங்கிக்காய், கேப்ஸிகம்,பச்சைமிளகாய்
5 வெண்டை ,தக்காளி, பச்சைமிளகாய், காப்ஸிகம்
வெண்டைக்காயை வதக்கிப் போடவும்.
6 அவரைக்காய், வெந்தயக்கீரை, பட்டாணி
7பாலக்,பட்டாணி,தக்காளி,சின்ன வெங்காயம்
8 காரட், பட்டாணி
9உருளைக்கிழங்கு, பீன்ஸ், பட்டாணி
10 முள்ளங்கி, சின்ன வெங்காயம்
11முருங்கக்காய், சின்ன வெங்காயம்
12 பச்சை சுண்டைக்காய்,தக்காளி
13 பாகற்காய், தக்காளி.
சேனைக் கிழங்கு, சேப்பங்கிழங்கு, வெள்ளிக் கிழங்கு,
இவை போன்ற கிழங்குகளைத் தனித்துப் போட்டு செய்யும்
பருப்புக் குழம்புகள் ருசியாக இருக்கும்.
எல்லா ஸாம்பாரிலுமே தக்காளிப் பழம் ஒன்றை சிறியதாக நறுக்கி
வதக்கி சேர்க்கலாம்.ஸாம்பாரில் தக்காளியா என்று கேட்கும் போரும்
உண்டு. வறுத்து அறைத்த ஸாம்பார் என்றால் தக்காளியை வறுத்த
ஸாமான்களுடன் வதக்கி, சேர்த்து அறைத்து விட்டால் கூடநன்றாக
இருக்கிறது.
சேப்பங்கிழங்கை வேகவைத்து தோல் உறித்து ஸாம்பாரில் சேர்க்க
வேண்டும்.
சேனைக்கிழங்கை தோல் நீக்கி சற்று நீளமாக நறுக்கி சற்று
வேகவைத்து ஸாம்பாரைச் செய்ய வேண்டும்.
பொதுவாக பாத்திரத்தில் தாளித்து காயை சற்று வதக்கி பிறகு புளி
ஜலம், ஸாம்பார்ப்ரொடி, உப்பு ,சேர்த்து நன்றாகக் கொதிக்க விட்டு,
வெந்த பருப்பைச் சேர்த்து பின்னும் கொதிக்கவிட்டு இறக்குவது
ஒரு முறை.
பாத்திரத்தில் சிறிது ஜலத்தில் காயைச் சிறிது வேகவைத்து
புளிஜலத்தைச் சேர்த்து, ஸாம்பார்ப்பொடி, உப்பு சேர்த்து கொதிக்க
வைத்து, வெந்த பருப்பு சேர்த்து , எண்ணெயில்கடுகு,வெந்தயம்
பெருங்காயம் தாளித்து இறக்குவதும் ஒரு முறை.
எதற்கும் ஒரு மாதிரிக்கு காரட், காப்ஸிகம் ஸாம்பார் செய்வோமா.
பெருஜ்ஜீரகம் ஸாம்பார்ப் பொடியில் நான் போடுவதில்லை.
புடலங்காய்,பீர்க்கங்காய்வாழைக்காய்,கொத்தவரங்காய்,வெள்ளரிக்காய்
முதலானது ஸாம்பாரில் போடுவதில்லை. வெங்காயம் கூட சின்ன
வெங்காயம்தான் ஸாம்பாருக்கு ஏற்றது.
தனித்த வெங்காய ஸாம்பார் மிகவும் எல்லோராலும் விரும்பப்படுகிறது.
சின்ன அளவில் புதியதாகப் பொடி செய்வோம்.
மிளகாய் வற்றல்—4, கொத்தமல்லி விதை—1டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு—2 டீஸ்பூன், வெந்தயம்அரை டீஸ்பூன்,
மிளகு—எண்ணிக்கையில் 6அல்லது 7
மிளகாய் தவிர மற்றவற்றை வெறும் வாணலியில் சிவக்க
வறுக்கவும்.
மிளகாயை துளிஎண்ணெயிலகறுகாமல்வறுக்கவும்.யாவற்றையும்
ஆற வைத்து துளி மஞ்சள் பொடி சேர்த்து மிக்ஸியில்பொடிக்கவும்.
ஸாம்பார்ப் பொடி சின்ன அளவில் ரெடி.
அல்லது வீட்டில்வைத்திருக்கும்ஸாம்பார்பொடிஉபயோகித்தாலும்
ஸரி..
திட்டமான காரட்—-3
பச்சையோ, சிகப்போ காப்ஸிகம்-1
பச்சைமிளகாய்–1
தக்காளி–1
துவரம் பருப்பு—முக்கால் கப் அளவிற்கு களைந்து வேக வைத்துக் கொள்ளவும்.
புளி—ஒரு சின்ன எலுமிச்சையளவு
தாளிக்க—எண்ணெய்
கடுகு, வெந்தயம் தலா அரைடீஸ்பூன்
வாஸனைக்கு வேண்டிய பெருங்காயம்
காரட்டைத் தோல் சீவி சற்றுப் பருமனான வில்லைகளாக
நறுக்கிக் கொள்ளுவோம்.
காப்ஸிகமும் அப்படியே. தக்காளியைச்துண்டுகளாக்குவோம்
புளியை ஊறவைத்து 2, 3 கப் ஜலம் சிறிதாகச்சேர்த்து
நன்றாகக் கரைத்து சக்கையை நீக்குவோம் .
குழம்புப் பாத்திரத்தில் எண்ணெயைக் காயவைத்து கடுகை
வெடிக்கவிட்டு. வெந்தயத்தையும் கூடவே சிவக்க வைத்து,
பெருங்காயத்தையும் தாளித்து, பச்சைமிளகாய் ,தக்காளியை
வதக்கி, அலம்பின காய்களையும் போட்டு 2 பிரட்டு பிரட்டி
கரைத்த புளி ஜலத்தைச் சேர்ப்போம்.
திட்டமாக உப்பு, பொடித்த ஸாம்பார்ப் பொடி , அல்லது
ஏற்கெனவே இருக்கும் ஸாம்பார்ப் பொடியில் 3 டீஸ்பூன்
சேர்த்து கொதிக்க வைக்கவும்.
கொதிக்க ஆரம்பித்த பிறகு சற்று தீயைக் குறைத்து, காய்
வெந்து, புளி, பொடி வாஸனை குறைந்த பின், வெந்த
பருப்பைத் திட்டமாகக் கலக்கிச் சேர்த்து நன்றாகக்
கொதிக்க விட்டு ஸாம்பார் நீர்க்க இருக்கும்போல்
தோன்றினால் ஒருஸ்பூன் அரிசி மாவைத் துளி
தண்ணீரில்க் கரைத்து விட்டு ஒரு கொதி வந்ததும்
இறக்கி கொத்தமல்லி கறிவேப்பிலையைத் தூவி
உபயோகிக்கவும். காரம் வேண்டியளவிற்கு மிளகாயை
அதிகரிக்கலாம்.
இந்தக் காய்கறி ஜோடிகள் எனக்கு மனதில்ப்பட்டு
நான் செய்கிறேன். அது ஒன்றுதான் விசேஷமே தவிர
வேறொன்றுமில்லை.
சொல்லுகிறேன்னு பேர் கொடுத்திருக்கிறேனே அதனால்
சொல்லும் மாதிரியே எழுத்து வார்த்தைகள் அமைந்து
விட்டது.
பொடிபோட்ட ஸாம்பார். அதனால் தேங்காயைக்கூப்பிடவில்லை.
மொத்தமாக இயந்திரத்தில் ஸாம்பார்ப் பொடி செய்தால்
துவரம் பருப்பு போடலாம். அரிசியும் நான் போடுவதில்லை.
கதை மாதிரி நீண்டு விட்டது பதிவு.
.வெந்தயக்கீரை ஸாம்பார்
இது அவரைக்காயும் வெந்தயக்கீரையையும் சேர்த்து
செய்யும் ஸாம்பார். அறைத்து விட்டு செய்யலாம்.
வேண்டியவைகள்
சுத்தம் செய்து நறுக்கிய வெந்தயக்கீரை—-3 கப்
காம்பு நீக்கி இரண்டாக நறுக்கிய அவரைக்காய் 10
பச்சை மிளகாய்—-2
வறுத்தரைக்க—-தனியா -2டீஸ்பூன்
மிளகாய்—4
கடலைப் பருப்பு–1 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல்—அரைகப்
தாளிக்க—-எண்ணெய்—-2 டேபிள் ஸ்பூன்
கடுகு, பெருங்காயம்
ருசிக்கு உப்பு
துவரம் பருப்பு—முக்கால் கப். துளி மஞ்சள் பொடி
புளி–1 எலுமிச்சைஅளவு தக்காளிப் பழம் 2
செய்முறை-—–பருப்பைக் களைந்து மஞ்சள் சேர்த்து
திட்டமான தண்ணீருடன் குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.
புளியை ஊற வைக்கவும்.
வறுக்கக் கொடுத்த சாமான்களை 1 ஸபூன் எண்ணெயில் சிவக்க
வறுத்து, தேங்காயையும் சேர்த்துப் பிறட்டி இறக்கவும்.
ஆறிய பின் மிக்ஸியிலிட்டு சிறிது ஜலம் சேர்த்து அறைத்து
எடுக்கவும்.
புளியைக்கரைத்து 3கப் அளவிற்கு அதிகமாகவே சாறு பிழிந்து
கொள்ளவும்.
குழம்புப் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம்
தாளித்து ,, பச்சைமிளகாயுடன் அலம்பிய கீரையைப் போட்டு
வதக்கவும். நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி புளி ஜலத்தைச்
சேர்க்கவும். அவரைக்காய், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.
காய் வெந்து, புளி வாசனை போன பிறகு அறைத்த விழுதைக்
கரைத்துக் கொட்டி நன்றாக கொதித்தபின். வெந்த பருப்பை
மசித்துச் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.
கொத்தமல்லி கறிவேப்பிலை சேர்க்கவும்.
கொதிக்கும்போது அடிக்கடி கிளறி அடி பிடிக்காமல் செய்வது
அவசியம் கீரை அவரைக்காய் ருசி பொருத்தமாக இருக்கும்.
அவசியமானால், பருப்பை அதிகம் சேர்த்து வேகவைக்கவும்.