Posts filed under ‘சிலநினைவுகள்’
விளக்கு பூஜை நினைவுகள்.
டில்லியில் எப்போதோ நடந்த விளக்கு பூஜையின் படங்கள். மலரும் நினைவுகள் மயூர் விஹார்—மேதா அபார்ட்மென்ட். நாங்கள் ஒரு பத்து தமிழ்க்குடும்பம் இருக்கும்.
வேலைக்குப் போகிறவர்களும் வருவதற்காக சனிக்கிழமைகளில் லலிதா ஸஹஸ்ரநாமம், குத்து விளக்குபூஜை ஆடி,தை வெள்ளிக்கிழமைகள்,நவராத்ரி பத்து தினங்கள் என ஒன்று தவராது செய்தவைகள். ப்ளாகில் போட்டுப் பார்ப்போமா… படங்கள் அவ்வளவு பிரகாசமாக இல்லை. மலரும் நினைவுகள்தானே.!!!!!!!!
நடுவில் ஒரு விளக்கு. சுற்றிலும் உட்கார்ந்து பூஜை. நிவேதனம் லலிதா அதான் கனராபேங்க் மாமி செய்கிரார். தில்லி ரோஜா இதழ்களாகவேபூஜை.
நினைத்துப் பார்க்கவே ஆனந்தம். அடுத்து கிடைத்த படங்களெல்லாம், டில்லி நினைவுகளாகக் கிடைத்த சில பழைய படங்கள். ஆடி வெள்ளிக்கிழமை. ஞாபகம் வந்தது. அவ்வளவே.
லெஸொதோ அனுபவமும் தென்னாப்பிரிக்காவும்.4
கடைகளையும்,விலங்குகளையும்,மலைகளையும் சுற்றினால்ப் போதுமா? நம்மொத்தவர்களுடனும்,மற்றோர்களுடனும் ஆற அமரப் பேச வேண்டாமா ? லெஸொத்தோவிற்கு நன்றி சொல்ல வேண்டாமா? வாருங்கள்
Continue Reading திசெம்பர் 30, 2014 at 11:21 முப 10 பின்னூட்டங்கள்
லெஸொதோLESOTHO அனுபவமும் தென் ஆப்பிரிக்காவும்2
ஜோஹான்ஸ்பர்க்கில் நாங்கள் தங்கி இருந்து அவ்விடமிருந்து முடிந்தவைகளைச் சுற்றிப்
பார்த்தோம். கூட வந்தவர்கள் நேபாலி குடும்பத்தினர்.
ஏர்போர்ட்டில் முன்பு ஜெனிவாவினின்றும் வரும்போது பார்த்தவைகள் ஞாபகத்திற்கு வந்தது.
மறுநாள் காலையில்தான் எங்களுக்கு லெஸொதோ போகமுடியும் ஏர்ப்போர்ட்டின் மேல் தளத்திலுள்ளவைகளைப்
பார்க்க, ஏதாவது சாப்பிட என்று போனோம்.
அவ்விடம் பார்த்த வகைவகையான கலர்களில் உள்ள வர்ணிக்க முடியாத வகையில்
கடைகளில் கொட்டிக்கிடக்கும் கற்களை வர்ணிக்க வார்த்தைகளில்லை.
ஆபரணத்திற்காக வேண்டி இக்கற்கள் மனதைக் கொள்ளை கொண்டன.அவை எல்லாமும்
ஞாபகத்திற்கு வந்தது.
மஸாஜ் செய்வதற்காக வாடிக்கையாளர்களை பலவிதத்தில் ஆகர்ஷிக்கும் பெண்களைப் பார்க்க முடிந்தது.
உலகத்து ஸாமான்கள் யாவையுமே எது வேண்டுமானாலும் வாங்கலாம். அம்மாதிரி
பலவண்ணக் கடைகள். பிரமிப்பை உண்டு செய்தது.
ஆனால் நாம் இப்போது வேறு விதமான உலகைப் பார்க்கப் போகிறோம்.
ஜோஹான்ஸ் பர்க்கில்
காலையில் எழுந்து யாவரும் தயாரானோம். அவ்விடம் வீதிகளில் வாயு வேகமாகச் செல்லும்
கார்களைத்தான் பார்க்க முடிந்த்தே தவிர மனித நடமாட்டமே இல்லை.
அதிலும் பெண்களைப் பார்க்கவே முடியாது.
நாங்கள் தங்கி இருந்த ஹோட்டல்காரர்களே ஸரியான பந்தோபஸ்துடன், சுற்றுலாவிற்கும்
ஏற்பாடு செய்கிரார்கள்.
அப்படி இன்று காட்டு மிருகங்கள்,அதன் இயற்கைச் சூழலில் பார்க்க என்று சொன்னார்கள்.
ஏதோ டிபனை முடித்துக் கொண்டு, கையில் வேண்டிய கொரிப்பதற்கும் எடுத்துக் கொண்டு
அவர்களின் வண்டியில் ஒரு பசுமையான இடத்தில் கொண்டு விட்டார்கள்.
அங்கிருந்து அவ்விடத்திய பஸ்ஸில் போகக் காத்திருந்தோம்.
கூண்டு வண்டிமாதிரி பஸ் . வழிநெடுக நல்ல பசுமையான இடங்கள். காடு மாதிரி இல்லை.
ஆனால் நாடும் இல்லை.
பாருங்கோ,பாருங்கோ, அப்புறம் பேசலாம். பிள்ளை எச்சரிக்கிறான். அதுவும் வேண்டும் நமக்கு.
வரிக்குதிரைகளைப் பார்க்க முடிகிறது. சிறிது நேரம் வரை வரிக்குதிரைகள்மயம்.
அப்பறம் ஒட்டைச்சிவிங்கிகள்.
இது முடிந்ததும் ரெய்னோ. இவ்வளவு தானா !!!!!!!!!!
இல்லே வெவ்வேரெ இடம் போகணும். ஒருரவுண்டு வந்து இறங்கினோம்.
அங்கிருந்து ஸன்ஸிடி போனோம்.
பூராநேரமும் சுற்றி சுற்றி, பல கேளிக்கை இடங்கள்,
மிஸ் வேர்ல்ட் நடந்த இடம், இன்னும் பொழுது போக்குகளுக்கான இடம் எல்லாம்
சுற்றிப்பார்த்து ஹோட்டல் வந்து சேர்ந்தோம்.
அதற்கும் அடுத்த நாள்.
இன்று லயன்ஸ் பார்க் பார்க்கப் போகிறோம். பகல் பன்னிரண்டு மணிக்குத்தான் அவைகள் இறை சாப்பிடும் நேரம்.
வழக்கம்போல் காலை பத்துமணிக்குள் எல்லாம் முடித்துக் கொண்டு ஆர்வமாக சிங்கங்கள்
பார்க்க அதே முறையில் கூண்டு வண்டி,மற்றும் கார்கள் பின்தொடர பெரிய,அரிய காக்ஷிகளைக்
காணப்போகிறோம் என்ற எண்ணத்துடன் பயணிக்கிறோம்.
சிறுத்தைகள்காட்டெருமைகள், மான்கள் காட்சிகள்
சிங்கங்கள் இறை பிடித்துச் சாப்பிடும் காட்சியானால் பார்க்கக் கஷ்டமாக இருக்குமே.
பாட்டிக்கு பயமா? பேத்தியின் கேள்வி.
அவர்கள் உலகம் அவர்களுக்கு. ஸரியாக பன்னிரண்டுமணி. அங்கே பாருங்கள்.
சிங்கங்கள் அணி வகுத்து ஏக்கமாக நிற்கிறது. பின்னோட்டமிடுகிறது
. உணவு போடும் ஜீப்.
உயர்ந்த இரும்புக் கூட்டுடன் வருகிறது. சிங்கங்கள் பின் தொடருகிறது.
பார்வையாளர்கள் உஷாருடன பார்க்க, தொப்,தொப் என்ற சப்தத்துடன் இறைச்சி வேகமாக வீசப்பட
பொத்தென்ற சப்தத்திற்கு நாய்கள் எச்சில் இலைகளுக்கு முந்திக் கொண்டு ஓடுவதுபோல சிங்கக்
கூட்டம் ஜீப்பின் பின்னால் ஓடுகிறது. இறையைக் கவ்விக் ,கொண்டுஏகாந்தமாகப்புசிக்க, கூட்டாஞ்சோறு
சாப்பிடஎன்று வெகு ஸ்வாரஸ்யத்துடன் புசிக்கும் சிங்கங்களைப் பார்க்க முடிகிறது.
லோடு காலியான பிறகும் இன்னும் ஏதாவது விழுமா என்ற நப்பாசையுடன் ஜீப்பின் பின்னால் நிற்கும்
ஆவலாதிகளையும் பார்க்க முடிந்த்து.
பசி வந்திடப் பத்தும் அவைகளுக்கும் பறந்து போகும் போலும்.!!!!!!!!!!!
மேலும் வெண் சிங்கங்கள், அவைகளின் ஆசுவாஸம்.
சும்மா ஒரு எஸ்கர்ஷன் மாதிரித் தோன்றுகிறதா?
எவ்வளவோ வருஷங்களுக்கு முன் பார்த்த விஷயம்.
பாக்கி உள்ளது. பிறகு பார்க்கலாம்.
எங்கள் ஊர் நினைவுகள்.1
இரவு நேரத்திற்கான சமையல் செய்து கொண்டே யோசனை. காஸில் ரஸம் கொதிக்கிரது. மைக்ரோவேவிலிருந்து எடுத்த காலிபிளவரும் உருளைக்கிழங்கும் எண்ணெயில் வதங்குகிரது. எழுதரதை விட்டு விட்டாயா என்று உள் மனம் கேட்கிரது. காரணம் எதுவானா என்ன? எழுத நினைத்தால் எழுதணும். காரணம் தேடாதே!!! நம்மஊர்,நம்ம ஊர் என்று மனதால் நினைக்கும் ஊரைப் பற்றி எழுது. வளவனூர். தமிழ் நாட்டில் விழுப்புரத்தை அடுத்து புதுச்சேரி போகும் வழியில் 5 மைல்களைக் கடந்தால் எங்கள் ஊர் அமைந்திருக்கிறது. ரயில்,பேருந்து, என எல்லா வசதிகளுமுடைய ஊர். ஊரைப் பற்றி ஆரம்ப கால கதைகள் சொல்லக் கேட்டிருக்கிரேன். சோழ மன்னர்களின் ஆட்சியில் ஏற்பட்ட ஊர் ஆகையால் வளவன் என்றால் அவர்களைக் குறிக்கும் காரணப் பெயர் கொண்டு வளவனூர் என்ற பெயருக்குக் காரணம் சொல்வார்கள். பச்சைப் பசுமையாக நில,புலன்களுடன்,ஆராவாரமில்லாத, அமைதியான ஊர். ரயில்வே ஸ்டேஷன். ஸ்டேஷன் எதிரே ப்ரமாண்டமான ஏரி. பெண்ணை நதியினின்றும் ஏரிக்கு தண்ணீர் வரத்து. ஸ்டேஷனுக்கு வெளியே வந்தால் சற்று இரண்டுநடை போட்டால் அழகான குளம். குளத்தைச் சுற்றி மாமரங்கள். வேம்பு,அரசு,இருவாக்ஷி, ஸரகொன்றை,கொன்றை போன்ற மரங்கள், பவழமல்லி, அரளி மற்றும் பூந்தோட்டம், தோட்டத்தைக் காக்க,வேலை செய்ய,நம்பகமான ஆட்கள், இப்படி. ஊரில் ஸ்டேஷனின்றும் வரும்போதே உள் நுழைந்தால் அக்ரஹாரம். என்னை ஒரு சுற்று சுற்றிவிட்டுப் போ என்று சொல்வதுபோல் ஒரு சிறிய வரப்ரஸாதியான ஸ்ரீ ஹனுமார் ஸன்னதி.பெருமாள் கோயில். இதே பஸ்மூலம் வருபவர்களுக்கு கடைத்தெரு, பிள்ளையார்,ஈசுவரன் கோயில்கள்,ஸ்கூல், ஹையர் எலிமென்டிரிஸ்கூல் என இருந்தது ஹைஸ்கூல்கள் காலேஜ் எனவும் முன்னுக்கு வந்து கொண்டு இருக்கிறது தற்போது. ஆரம்ப காலத்தில் கிராமத்தில் வேத அத்யயனம் செய்யும் குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வசதிகளைக் கொடுத்து பெருமாள்கோயில் தெரு பூரவும் அமர்த்தியிருக்கிறார்கள். இப்படிபாரத்வாஜ கோத்திரம்,கௌசிக கோத்ரம்,ஹரித கோத்ரம், நைத்ர காசியப கோத்ரம், இப்படி பலவித கோத்திரக்காரர்கள், வேத விற்பன்னர்கள் குடிபுகுந்த ஒரு வேத கோஷம் ஒலிக்கும் ஒரு பவித்ரமான ஸ்தலமாக இருந்தது. மற்றும் மூன்று தெருவுகள் வசதி படைத்த, வியாபாரங்கள் செய்யுமளவிற்கு வசதி உள்ளவர்களாலும் நிரம்பப் பெற்று, ஒருவர்க்கொருவர் உதவி செய்தும், கொண்டு கொடுத்து, விவாக ஸம்பந்தங்கள் மூலம் பின்னிப் பிணைந்து இருந்தனர். கட்டுப்பாட்டுடன் எல்லா நிகழ்வுகளிலும் யாவரும் பங்கு பெற்று ஒரு அமைதியான கிராமமாக இருந்தது. எங்கள் ஊர் ஏரியைச் சுற்றி ப் பதினெட்டு கிராமங்கள் இருந்தன.இருக்கின்றன. எங்கும் பயிர் பச்சை, எல்லோரிடமும்,நில புலன்கள். மாடு கன்றுகள். எங்களூரில் கூடும் சந்தை பெயர் பெற்றது. கரும்பு,கடலைக்கொட்டை, நெல் போன்றவை நிறைய விளையும். பக்கத்து கிராமங்களினின்றும் வரும் காய்கறிகள் பெயர் பெற்றவை. இப்படிகுடுமாங்குப்பத்து கத்தரிக்காய்,மடுக்கரை நாரத்தங்காய், மற்றும் சில ஊர்களின், காய்கறிகள், புதுப்பாளையம் தயிர் பால். ஆலயம்பாளைய தோட்டத்து வாழைக்காய், என பெயர் பெற்ற ஸாமான்களுண்டு. மிளகாய் தோட்டத்துக் கீரை மிகவும் ருசியாக இருக்கும். உப்பு,வெல்லம்,சவுக்கு விறகு, பண்ணுருட்டி முந்திரிப் பருப்பு,பலாப்பழம் அடுப்பெறிக்கும் கறி முதலானவைகள் பெரிய கூண்டு வண்டிகளில், கட்டை வண்டிகளில் மலிந்த விலையில் விற்பனைக்கு வரும். அக்காலத்தில் போக்கு வரத்து வசதிகள் குறைவாக இருந்தாலும். பண்டங்கள் யாவும் வீட்டு வாயிலில் வாங்கும்படியான வியாபாரங்கள் இருந்தது. பலவித கடைகளும் இருந்தது. ஊரைச்சுற்றி, பல குடியிருப்பான இடங்கள், குமார குப்பம் என்று ஒரு பெரிய அடுத்தபடியான வசதியான ஒரு ஊரும் இணைக்கப்பட்ட வளவனூராக இருந்தது. போஸ்டாபீஸ், போலீஸ்டேஷன்,ரிஜிஸ்டாராபீஸ், பஞ்சாயத்துபோர்ட் ஆஸ்ப்பத்திரி, பேங்குகள் எலக்டிரிக் ஆபீஸ் என எல்லா வசதியும் இருந்தது. புண்யகாலங்கள், துலாஸ்நானம், மாகஸ்நானம், கிரஹணபுண்யகாலங்கள், தினப்படி குளிப்பது என எல்லாம் குளத்தில்தான். நல்ல, அல்ல பிற விஷயங்களுக்கு, அங்குதான் ஏற்ற இடமாகவும் இருக்கும். குளக்கரையில், நந்த வனத்திலென, ஊரில் ஸன்னியாஸம் வாங்கிக்கொண்டு முக்தியடைந்த ஸன்னியாசிகளின் அதிஷ்டானமும் இருக்கும். ஸன்னியாசிகளை எரிப்பதில்லை. என்னுடைய பாட்டியின் தகப்பனார் ஸன்னியாஸம் வாங்கிக் கொண்டவர். அவருடைய ஸமாதி, அதுதான் அதிஷ்டானமென்று சொல்லுவார்கள். எங்களூர் நந்த வனத்தின் ஒரு பக்கத்தில் ஒரு இருவாக்ஷி மரத்தடியில் இருந்தது.பிருந்தாவனமாக துளசி மடம் மாதிரி அமைப்பதும் உண்டு. இவருக்கு பிரமாதமாக எதுவும் கட்டவில்லை. உயரமான ஒரு கல்லை நட்டு அடையாளம் குறிப்பிட்டிருந்தனர். பிருந்தாவனம் எழுப்ப நினைத்தும் அவரது வாரிசுகள் ஒருவர்பின் ஒருவராக காலஞ் சென்று விட்டனர். அவருடைய பெண்ணான எங்கள், தாய்வழிப்பாட்டி எங்களுடனே இருந்தார். அவர் குளத்திற்கு போகும் போதெல்லாம், அந்த அதிஷ்டானத்திற்குப்போய் ஸ்நானம் செய்வித்து மலரஞ்சலி செய்து விட்டு வருவார். ஸ்வாமிகள் தாத்தா இங்குதான் இருக்கிறார் என்று சொல்லுவார். அவருடைய நினைவு நாளன்று, விசேஷ அபிஷேக, ஆராதனை செய்து விட்டு வந்து பிருந்தாவன ஸமாராதனை என்று சொல்லி, வகையாக சமைத்து உறவினர்களுடன் , உணவளித்து மகிழ்வார். என் அப்பாவும் பாட்டியின் உறவுமுறையில் ஸகோதரர் ஆகும். நான் பாட்டியிடம் அது எப்படி, இது எபபடி என்று கேள்விகளெல்லாம் கேட்பேன். அதனால் சில பழைய, பழக்க வழக்கங்கள்,எப்படி அந்தக் காலம் இருந்தது என்பதெல்லாம் ஏறக் குறைய தெரியும். அடுத்த தலை முறைக்கு சொன்னால் கூட தெரியாது. சொல்வதற்கு இம்மாதிரி கதைகளும் இருக்காது. நந்த வனத்தின் மாமரங்கள் காய்த்தால் அதில் சில குடும்பங்களுக்கு பங்கு உண்டு. நிலத்திற்கு பட்டா கிடையாது. மரத்திற்கு உண்டு என்பார்கள். காவல் கார்ப்பவர்கள் மாங்காய்களைப் பரித்துக் கோணியில் மூட்டைகளாகக் கட்டி எடுத்து வருவார்கள். பரித்த காய்களை விகிதாசாரமாகக் கொடுத்து விட்டு இரண்டு பங்கு காய்கள் அவர்களுக்காக எடுத்துப் போவார்கள். அவர்கள் பங்கையும் அவ்விடமே வேண்டுபவர்களுக்கு விற்று விட்டு பணமாக்கி விடுவார்கள். கால ஓட்டத்தில் மரங்களுமில்லை. நந்த வனங்களுமில்லை. பங்குதாரர்களுமில்லை. பராமரிக்கவும் இல்லை. குளத்தின் உபயோகங்களும் குறைந்து கொண்டே வர ஊரின் புராதன மக்களின் வாரிசுகள் நகர வாஸங்களில் வேலைக்குப்போக பழமை மறந்து புதுமை புகுந்து, நீர் நிலைகளில் தண்ணீர் வற்ற, எல்லாமே மறந்த ஒன்றாக எப்பொழுதோ ஆகிவிட்டது. இன்னமும் சில குடும்ப வாரிசுகளின் மூன்றாம்,நான்காம் தலை முறைகள் உறவு சொல்ல இருக்கிறார்கள் என்பதுதான் முக்கியமான விஷயம். கோயிலின் உத்ஸவங்கள் கூட ஒவ்வொரு குடும்பத்தினரே செய்ய வேண்டுமென்ற விதிமுறையும் உண்டு. அது மாத்திரம் வாரிசுதாரர்கள் எங்கிருந்தாலும் வந்து,அல்லது உறவினர்களைக் கொண்டோ நடத்தும் பழக்கம் இன்றும் நடைபெறுகிரது. நாங்கள் சிறு வயதில் அதுவும், பெண் பசங்கள், மாசிநிலா, ஊரைச் சுற்றி ஒவ்வொரு வீட்டின், வாசலிலும் பாட்டுகள் பாடி கும்மியடித்து, கூடை,கூடையாக நெல்லை வாங்கிக்கொண்டு, மூன்று நாட்கள் அதாவது மாசிமாத பௌர்ணமியின் முதல் மூன்று நாட்கள் இரவில் நிலவின் தண்மையான வெளிச்சத்தில் கூடிக் களித்ததை, பகிர்ந்துகொள்ளலாமென்ற எண்ணம் எங்கிருந்தோ வந்து விட்டது. படியுங்கள் நீங்களும்!!!!!!!!! வருகிறேன்.