Posts filed under ‘துவையல் வகைகள்’
பிரண்டைத் துவையல்.
பிரண்டை ஒரு மருத்துவ குணமுள்ள கொடிவகையைச் சேர்ந்த
தாவரம்.
மருத்துவத்தில் பலவகைகளில் உபயோகமாவதை சமையலிலும்
சில வழிகளில் சேர்த்துச் செய்வதுண்டு. சிரார்த்தம் செய்யும் போது
முக்கியமாக பிரண்டை சேர்த்துத் துவையல் செய்வது முக்கிய
வியஞ்ஜனமாகக் கொடுப்பது வழக்கத்திலுள்ளது.
பெண்களிருந்தால் கட்டாயம் பிரண்டைத் துவையல் சமையலில்
இடம் பெறும்.
வாய்வுத் தொந்திரவு ஏற்படாமல் விசேஷ சாப்பாட்டைச்
சீரணம் செய்யும் கருத்தில்தான் இப்பழக்கம் வழக்கத்தில்
இருந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
இதே போல உளுந்து அப்பளாம் தயாரிக்கும் போது பிரண்டையை
அரைத்து உப்புடன் சேர்த்துக் கொதிக்கவைத்து வடிக்கட்டி
ஆறினவுடன் உளுத்தமாவில் சேர்த்துப் பிசைந்து இடித்துத்தான்
அப்பளாம் தயாரிப்பது வழக்கம்.
எனக்கு சென்னையில் தொட்டியில் துளிர் விட்டிருந்த பிரண்டையைப்
பார்த்ததும், குறைந்த பட்சம் துவையலும், ப்ளாகும் மனஸில்
வந்து விட்டது.
இப்படி அப்படி பெண்ணைப் பண்ணச் சொல்லி சொல்லிப் படம்
எடுத்து வந்து விட்டேன்.
கொஞ்சம் கூடவே சில மாறுதலும் செய்து செய்தது.
என்ன ஒன்று ? செய்ய முடிந்தாலும் முடியாவிட்டாலும்
இப்படியும் ஒரு துவையல் செய்யலாம்.சொல்லுகிறேனையும்
நீங்கள் யாவரும் ஏதாவதொரு ஸமயத்தில்
நினைக்கலாம் என்ற ஒரு நப்பாசை. பதம் ஸரிதானே?
வேண்டியவைகள்.
வெள்ளை எள்-2-டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு-2டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு-1 ஸ்பூன்
குண்டு மிளகாய்-8. வேறு மிளகாய்
ஆனால் காரத்திற்குத் தக்கபடி
தோல் சீவிய நீண்ட அளவு 2இஞ்சி
எண்ணெய்-2டேபிள்ஸ்பூன்
புளி சின்ன எலுமிச்சையளவு.
பெருங்காயம்—சிறிது
உப்பு –ருசிக்கு . மிளகு—6 எண்ணிக்கையில்
தேங்காய்த் துருவல்–2 டேபிள்ஸ்பூன்
பிரண்டையை தண்ணீரில் அலம்பித் துடைக்கவும்.
இளம் பிரண்டை—4பாகங்கள். நடு கணுவை நீக்கி நறுக்கவும்.
இரண்டு பாகத்தையும் சேர்க்கும் இடம் கணுவு . கரும்புடைய
ஜாயின்ட் மாதிரி.
பிரண்டைக்கு நறுக்கிய பாகம் தொட்டால் சிறிது அறிக்கும்
தன்மை உண்டு.
நறுக்கியதைக் கரண்டியால் எடுக்கவும்.
செய்முறை
முதலில் வாணலியில் எண்ணெயைக் காயவைத்து நறுக்கிய
பிரண்டையை சிவக்க வறுத்து எடுக்கவும்.
பின்னர் நறுக்கிய இஞ்சியையும் வதக்கி எடுக்கவும்.
பருப்புகளையும்.மிளகாய், பெருங்காயத்தையும் சிவக்க வறுத்து
எள்ளையும் சேர்த்து வறுத்து இறக்கவும்.
புளி, மிளகாய், இஞ்சி, வதக்கிய பிரண்டை, தேங்காய்த் துருவல்
யாவற்றையும் சிறிது தண்ணீர் தெளித்து மிக்ஸியில் மசிய
அறைக்கவும்.
மிகுதி வருத்த ஸாமான்கள் உப்பு சேர்த்து மேலும் சற்று
கரகர பதத்தில் கெட்டியான துவையலாக அரைத்தெடுக்கவும்.
துவையலில் காரல் ஒன்றும் இருக்காது. சாதத்தில் நெய்
சேர்த்துச் சாப்பிட ருசியாக இருக்கும்.
பச்சைமோர், மோர்க்குழம்பு என தொட்டுக் கொண்டு
சாப்பிட ருசிதான்.
சிரார்த்த துவையலில். தேங்காயிராது. கறிவேப்பிலையும்
எள்ளுண்டையும் வைத்து பருப்புகள்,மிளகாய், புளி சேர்த்து
அரைப்பார்கள்.
அதுவும் ருசியாகத்தான் இருக்கும்.
எதுவோ எனக்குப் பிடித்தமானது. எழுத பிரண்டை கிடைத்தது.
அதுதான் விசேஷம்.
சுட்டரைத்தத் துவையல்
நல்ல பெறிய சைஸ் கத்தரிக்காயை
அனலில் சுட்டு துவையல்தயாரித்தால்சுவையாக இருக்கும்.
நான் மைக்ரோவேவில் சுட்டுதான் செய்தேன்.
மிகவும் நன்றாகத் தோல்உறிக்க வந்தது.
உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு விஷயமும் வேண்டும்
ஜெனிவா குறிப்புதான் இதுவும்,
கத்தரிக்காய் என்னவோ இந்தியாவினுடயதுதான்.
வேண்டிய ஸாமான்களைப் பார்ப்போமா.
வேண்டியவைகள்–கத்தரிக்காய் துவையலுக்காக—
கத்தரிக்காய்—- பெறிய சைஸாக 2
வெங்காயம்—-திட்டமான அளவு 2
வெள்ளை எள்—–2 டீஸ்பூன்
புளி—–ஒரு நெல்லிக்காயளவு
பெருங்காயம்—சிறிது
கொத்தமல்லி, கறிவேப்பிலை வேண்டிய அளவு.கட்டாயமில்லை.
உப்பு–ருசிக்குத் தேவையான அளவு.
உளுத்தம் பருப்பு—-4 டீஸ்பூன்
கடுகு—1/4டீஸ்பூன்
வெந்தயம்1/4 டீஸ்பூனிற்கும் குறைவு
மிளகாய் வற்றல்—-4
எண்ணெய்—நல்லெண்ணெய். 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை—–அலம்பித் துடைத்த கத்தரிக்காயின் மேல் இலேசாகஎண்ணெயைத் தடவவும்.
மைக்ரோவேவில், அதன் பாத்திரத்தில், காயை வைத்து,ஹை பவரில் 3 நிமிஷங்கள்சூடாக்கவும்.
திரும்பவும் காயைத் திருப்பி வைத்து4 நிமிஷங்கள்அதேபோல் சூடாக்கி எடுக்கவும்.
காய் நன்றாக ஆறிய பிறகு தோலை உறித்தெடுக்கவும்.
வாணலியில் சிறிது எண்ணெயைக் காயவைத்து உ.பருப்பு,மிளகாய்,
வெந்தயம்இவைகளை சிவக்க வறுத்து எள்ளையும் சேர்த்து வறுத்து இறக்கவும்.
நறுக்கிய வெங்காயத்தைத் தனியாகச் சிறிது எண்ணெய் சேர்த்து வதக்கவும்
.எள்,சுட்ட கத்தரிக்காய், வெங்காயம், மிளகாய்,புளி ,வெந்தயம்
இவற்றை மிக்ஸியில்இட்டுஜலம் விடாமல் கெட்டியாக அறைக்கவும்.
நன்றாக மசிந்த பின் உளுத்தம்பருப்பைச் சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்துஉப்பைச் சேர்க்கவும்.
கடுகு, பெருங்காயப் பொடியை, மிகுதி எண்ணெயில் தாளிதம் செய்யவும்.
நல்லெண்ணெய், நெய் சேர்த்து சாதத்துடன் சாப்பிட மிகவும் ருசியாகஇருக்கும்.
வெங்காயத்திற்குப் பதில் தேங்காயும், புளிக்குப் பதில்,வதக்கிய தக்காளியும்சேர்த்து அரைக்கலாம்.
புளி சேர்த்த துவையலில் சிவக்க வறுத்த வெந்தயம் ருசியைக் கொடுக்கும்.
சுட்ட கத்தரிக் காயுடன் துளி,தேங்காய்,இஞ்சி, ப.மிளகாய் சேர்த்தரைத்து
தயிரில் கலந்து கடுகு தாளித்தால் பச்சடி தயார்.
கொத்ஸு தயாரிக்கலம்.
இப்படி சுட்ட கத்தரிக் காயில் அநேகவிதம் தயாரிக்கலாம்.
அரைக்கும் போதே கொத்தமல்லி கறிவேப்பிலையை மறக்க வேண்டாம்.
உப்பு காரம் , தேவைக்கேற்ப அதிகரிக்கலாம்.
பர்த்தா தயாரிப்பதும் இப்படி சுட்ட கத்தரிக்காயில்தான்.
கத்தரிக்காய் சேர்க்கும் பத்திய சமையலில் சுட்ட காயை மசித்து
துளி நெய்யில் கடுகு,சீரகம்,உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து,
உப்புபோட்டு கொடுப்பார்கள்
கிராமத்து ஐட்டம் இது. எதுவோ வேண்டியவர்கள் செய்து பாருங்கள்
.இரண்டாவதுபடம் மேலே வந்திருக்கிரது.கீழே 1, 3, 4.
பச்சை மாங்காய்த் துவையல்.
சுலபமாகத் தயாரிக்கலாம். கிரீன் சட்னி, ரெட்சட்னி, ஒயிட்
சட்னி வகையில் இது கிரீன்சட்னி.
வேண்டியவைகள்
திட்டமான மாங்காய்—1 தோல் சீவி நறுக்கிக் கொள்ளவும்.
பச்சை மிளகாய்—3 நறுக்கிக் கொள்ளவும்.
புதினா இலைகள்—–2 கப்
பச்சைக் கொத்தமல்லி—நறுக்கியது 1கப்
வெங்காயம்—- 1
தேங்காய்த் துருவல்—-கால்கப்
இஞ்சி—சிறிய துண்டு
ருசிக்கு—உப்பு
செய்முறை–குறிப்பிட்டிருக்கும் யாவற்றையும் மிக்ஸியில்
இட்டு ஜலம் விடாமல் கெட்டியாக அறைத்து எடுக்கவும்.
உப்பு காரம் கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம்.
ருசியான சட்னியை வேண்டிய அளவு தளர்த்திக்கொண்டு
போண்டா, பஜ்ஜி, பகோடாக்களுடனும், கெட்டியாக தோசை,
ரொட்டி, பூரி வகைகளுடனும் உண்ணலாம். பிரிஜ்ஜில் வைத்து
2—3 நாட்சள் உபயோகிக்கலாம். ஸாண்ட்விச்சிற்கும் ஏற்றது.
காப்ஸிக சட்னி.
வேண்டியவை எண்ணெய் —–4 டீஸ்பூன்
சிவப்பு கேப்ஸிகம் ——2 அல்லது 3
பச்சை மிளகாய்——2
உறித்த சின்ன வெங்காயம்——–ஒரு கப்
தக்காளிப் பழம்——2
ருசிக்கு உப்பு
தாளிக்க கடுகு, உளுத்தம் பருப்பு தலா 1 ஸ்பூன்
செய்முறை——காய் வகைகளை சிறிய
துண்டங்களாக நறுக்கி மிக்ஸியில் தண்ணீர்
விடாமல் கெட்டியாக அரைத்தெடுக்கவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து
கடுகை வெடிக்கவிட்டு, உளுத்தம் பருப்பை சிவக்க
வறுத்து, அரைத்த விழுதைக் கொட்டிக் கிளறவும்.
சற்று கெட்டியானவுடன் இறக்கி உப்பைக் கலந்து
உபயோகிக்கவும்.கலர் மாறாமலிருக்க உப்பைக்
கடைசியில் சேர்க்கிரோம். இதுவும் எல்லா
வகைகளுடனும் சேர்த்துச் சாப்பிட ருசியானதுதான்.
தக்காளிச் சட்னி.
வேண்டியவைகள் தக்காளிப்பழம்–4
பூண்டு இதழ்—–4
இஞ்சி—-ஒரு துண்டு
எண்ணெய்—–3 டீஸ்பூன்
ருசிக்கு உப்பு
மிளகாய்ப் பொடி—-அரை டீஸ்பூன்
சீரகம்——-அரை டீஸ்பூன்
செய்முறை——–இஞ்சி பூண்டை சிறியதாக நறுக்கிக்
கொள்ளவும். தக்காளியையும் தனியாக நறுக்கிக்
கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து சீரகத்தைத்
தாளித்து இஞ்சி, பூண்டை நன்றாக வதக்கிக் கொண்டு
தக்காளியையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
வதக்கிய பின் ஆற வைத்து உப்பு, காரப்பொடி
சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி அரைத்து
உபயோகிக்கவும். தனித் தக்காளிச் சட்னி இது.
அவ்வப்போது செய்து உபயோகிக்கலாம்.
கொண்டைக் கடலை சட்னி
சிவப்போ, வெளுப்போ ஏதாவது ஒரு கடலையில் இதைச் செய்யலாம்.
வேண்டியவை——கொண்டைக் கடலை—-அரைகப். முதல் நாளே
வெறும் வாணலியில் கடலையைச் சிவக்க வறுத்துத் தண்ணீரில்
ஊற வைக்கவும்.
பச்சை மிளகாய்—-இரண்டு
இஞ்சி —ஒரு துண்டு
தேங்காய்த் துருவல்—–இரண்டு டேபிள்ஸ்பூன்
பச்சைக் கொத்தமல்லி—சிறிது
தயிர்—ஒருகப்
தாளிக்க——ஒருஸ்பூன் எண்ணெய்
கடுகு,பெருங்காயம் சிறிது
ருசிக்கு உப்பு
பிடித்தமான ருசிக்காக புதினா.வெங்காயம் போன்றவைகளும்,
சிறிது வதக்கி சேர்க்கலாம்.
தயிரைக் கடைந்து கொள்ளவும்.
ஊற வைத்த கடலையை வடிக்கட்டி உப்பு, மிளகாய்,
இஞ்சி, தேங்காய், கொத்தமல்லி சேர்த்து,கெட்டியாக
அரைத்துக் கொண்டு கடைந்த தயிரில் கலக்கவும்.
எண்ணெயில் கடுகு, பெருங்காயத்தைத் தாளித்து
சட்னியில் சேர்க்கவும். வாஸனைக்காக சேர்ப்பதை
அரைக்கும் போதே சேர்த்து விடவும்.
சைட்டிஷ்ஷாக உபயோகிக்க நன்றாக இருக்கும்.
காரம் அதிகமாக்க தாளித்துக் கொட்டும் போது
மிளகாய் சேர்க்கலாம்.
வேர்க்கடலைச் சட்னி
வேண்டியவை—–ஒருகப் வேர்க்கடலை, வெறும் வாணலியில் வறுத்துத் தோல் நீக்கிக கொள்ளவும். மற்றும்
தனியா விதை ஒரு டீஸ்பூன்,—-ஒரு சிறிய துண்டு இஞ்சி
வற்றல் மிளகாய் 3,—தேங்காய்த் துருவல் அரைகப்,
புளி, சின்ன எலுமிச்சை அளவு,–ருசிக்கு உப்பு
புதினா அல்லது கறிவேப்பிலை இலைகள் அரைகப்.
எண்ணெய் நான்கு டீஸ்பூன், தாளிக்க தலா கடுகு, உளுத்தம் பருப்பு, அரை டீஸ்பூன்.
புளிக்கு பதில் வேண்டிய அளவு தக்காளிப்பழமும் வதக்கி உபயோகிக்கலாம்.
செய்முறை—-புளியை ஊற வைத்து கெட்டியாகசாறை எடுத்துக் கொள்ளவும்.
தனியா, மிளகாய்,இஞ்சியை எண்ணெயில் வறுத்துக் கொண்டு
புதினாவையும் சேர்த்து இறக்கவும். வறுத்து தோல் நீக்கிய
வேர்க்கடலையுடன் புளி நீர், தேங்காய், வறுத்த சாமான்கள், உப்பு சேர்த்து மிக்ஸியில் கெட்டியாக அரைத்தெடுத்து எண்ணெயில் தாளித்துக் கொட்டவும். அரை டீஸ்பூன் வெல்லமும் சேர்க்கலாம்.
வேண்டிய சுவைக்கேற்ப வெங்காயம், பூண்டு, என பிடித்த ருசிக்கேற்றவாறு சாமான்களை மாற்றிப் போட்டு ஜமாய்க்கலாம். புளிப்பு காரமும், எப்படி வேண்டுமோ அப்படி மாற்றலாம்.
துவையல் வகை சட்னி
புதினா பச்சை சட்னி.–வேண்டியவை-இரண்டு மூன்று கைப்பிடி கழுவியபுதினா இலை, ஒரு வெங்காயம், பச்சைமிளகாய்மூன்று, சிறியதுண்டு வெல்லம், உப்பு, சிறிது எலுமிச்சை சாறு,. யாவற்றையும் மிகசியில் போட்டு நீர் தெளித்து அரைத்தெடுக்கவும். சாஸ் பதத்தில் தயாரித்து காரவகைகளுக்கு ஜோடியாகக் கொடுக்கலாம். இதே வகையில் பச்சைக் கொத்தமல்லி, இளம் கறிவேப்பிலையிலும் தயாரிக்கலாம். புளிப்பிற்காக புளியையும் உபயோகிககலாம்.
புளிச் சட்னி—-வேண்டியவை–புளிஎலுமிச்சை அளவு, சீரகம்,பெருஞ்சீரகம்ஒவ்வொரு டீஸ்பூன், உப்பு, வெல்லம்ஒரு துண்டு, சாட்மஸாலா அரைஸ்பூன்.
சுடு தண்ணீரில் புளியை ஊறவைத்து கெட்டியாகச் சாறு பிழிந்து வடிக்கட்டிக் கொளளவும். சீரகங்களை வெறும் வாணலியில் சிவக்க வருத்துப பொடித்துக் கொள்ளவும். புளிச்சாறை நிதானமானதீயில் நன்றாகக் கொதிக்க வைத்து மற்ற சாமான்களையும் சேர்த்து சாஸ் மாதிரியான பதத்தில் இரக்கி உபயோகிககவும். இதுவும் காரவகையான சமோசா போண்டா பஜ்ஜிகளுடன் ஜோடியாகிறது. வட இந்தியாவின் இம்லி சட்னி இது.
பெருங்காயம்,இஞ்சி சேற்பது அவரவர்கள் சாய்ஸ்.
துவையல் வகைகள்—–இரண்டு
புளி சேர்க்காமல்செய்யும் துவையல்களுக்கு கடலைப்பருப்பையும், துவம்பருப்பையும் சேர்த்துச் செய்யலாம்.சாதரணமாகப்ப்ருப்புத் துவையல் என்றே சொல்லுவோம்.
சுமாராகச் சிறிதளவு தயாரிக்க வேண்டிய சாமான்கள்.
அரைகப்-துவரம்பருப்பு,-அரைகப் கடலைப்பருப்பு,–அரைகப்தேங்காய்த்துருவல்,-அரைடீஸ்பூன்மிளகு,-சிறிதுபெருங்காயம்,-வறுப்பதற்கு வேண்டிய எண்ணெய்,-இரண்டு காய்ந்த மிளகாய். உப்பு.
தேங்காய்,உப்பு, தவிர மற்றவைகளை எண்ணெயில் சிவக்க வறுத்துக்கொண்டுஅதையும் சேர்த்துதிட்டமாக தண்ணீர் சேர்த்து மிக்சியில் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.நெய்சேர்த்து சாதத்துடன் சாப்பிட ருசியாகயிருக்கும்.
இதே முறையில் முழுவதும்கடலைப்பருப்பு சேர்த்துதேங்காய் அதிகம்வைத்து பச்சைமிளகாய் சேர்த்தும் அரைக்கலாம்.
பீர்க்கங்காய்,சௌசௌ,வெங்காயம் முதலியனவும் வதக்கி சேர்த்து அரைக்கலாம்.
பொட்டுக்கடலைசேர்த்த தேங்காய் சட்டினி.
அரைக்க சாமான்கள்–தேங்காய்த்துருவல்ஒன்றரைகப்,–பொட்டுக்கடலைஅரைகப்,-பச்சைமிளகாயஐந்து,–உப்பு,
தேவைப்பட்டால் ஒருதுண்டு இஞ்சியோ வெங்காயமோ சேர்க்கலாம், எலுமிச்சைசாறுஒரு டீஸ்பூன்.
தாளிக்க–அரைடீஸ்பூன்கடுகு,-அரைடீஸ்பூன்உளுத்தம் பருப்பு,- இரண்டுஸ்பூன் நல்லெண்ணெய்,-பெருங்காயப்பொடிசிறிது.
அரைக்கக் கொடுத்திருப்பவைகளுடன் திட்டமாக உப்பு சேர்த்து மிக்ஸியில் நீர் சேர்த்து கெடடியாகவும் நைஸாகவும் அரைததெடுக்கவும்.தாளிதம் செய்து எ.சாறு அறிந்த கொத்தமல்லித்தழை சேர்த்து கெட்டியாகவோ அல்லது தளர்ச்சியாகவோ இட்லி,தோசை,வடை போண்டா என எல்லாவற்றிற்கும் பொருத்தமான ஜோடியாக உபயோகிக்கலாம். அடுத்து–
இரண்டுகப் தேங்காய்த்துருவலுடன் பச்சை மிளகாய் நான்கு சேர்த்து அரைத்து மேலே குறிப்பிட்டபடியே யாவையும் சேர்த்தால் தனித் தேங்காய் சட்னி தயார்.பச்சை மிளகாயை எப்போதும் எண்ணெயில் வதக்கி சேர்ப்பது நல்லது.
தேங்காய் சேர்க்காமல் வெங்காயத்தை வதக்கி பருபபுகளுடன் சேர்த்தும் அரைக்கலாம்.
மேலும்அ டுத்து பிறகு.
துவையல் வகைகள்.
சாதத்துடன் சேர்த்து கலந்து சாப்பிடும் சிலவகைத் துவையல்களைச் சொல்லுகிறேன். புளிப்பு காரத்துடன் கூடியது.கீழ்க்கண்ட காய் வகைகளைச் சேர்த்து தயாரிக்கலாம். பீர்க்கங்காய், சௌசௌ, தக்காளிக்காய், தேங்காய், காரட், முள்ளங்கி, தனியா, இஞ்சி, புதினா, பூண்டு, கறிவேப்பிலை தக்காளிப்பழம். கத்தரிக்காய்,. அடிப்படை சாமான்களாகச் சில வகைகள். குறைந்த அளவு—-3டேபிள்ஸ்பூன் உளுத்தம் பருப்பு..—-மிளகாய் வற்றல் 3அல்லது 4. புளி ஒரு நெல்லிக்காயளவு ஊறவைத்துக் கொள்ளவும். சிறிது பெருங்காயம்,ஒரு டேபிள்ஸ்பூன் வெள்ளைஎள். – 200கிராமிற்குககுறைவில்லாத நீரோட்டமுள்ள பெரிய கத்தரிக்காயை சிறிது எணணெய் யைப் பூசி மிதமான தீயில் சுடடு எடுக்கவும். மைக்ரோவேவில் கூட இரணடு ிரண்டு நிமிஷமாகத் திருப்பிச் சுட முடியும். ஆறின பிறகு தண்ணீரில் கழுவித் தோலை உறித்தெடுக்கவும். கடாயில் சிறிது எணணெயைக் காய வைத்து பருப்பு ,மிளகாய் , பெருங்காயம், எள்முதலியவைகளைச் சிவக்க வறுத்துக் கொள்ளவும். மிக்ஸியில் புளி , மிளகாய், உப்பு, சுட்ட கத்தரிக்காய் வகைகளைப்போட்டு நன்றாக அரைக்கவும். பின்னர் வறுத்த பருப்பையும் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு ரவை போன்ற பக்குவத்தில் கரகரப்பாக அரைத்தெடுக்க வும். ருசிக்கு வேண்டியவர்கள் சிறிது பூண்டு அல்லது வெஙகாயமும் வதக்கி அரைக்கும போது சேர்த்துக் கொள்ளலாம். அடிப்படை காய்களை சேர்க்கும் போது முள்ளங்கி, காரட்டைத தோல் ,சீவி துருவிக் கொண்டு எண்ணெயில்சற்று வதக்கிச் சேர்த்து அரைக்கவும் . இரண்டுகப் துருவல் போதுமானது.
த்க்காளிப் பழம் இரண்டுகப் வதக்கிச் சேர்க்கும் போது புளி அவசியமில்லை.அதே தக்காளிக்காயைச் சேர்க்கும்போது சிறிதளவு புளி அவசியம். இதேபோல முக்கிய பொருளாக எதைச் சேர்த்தாலும் காரத்தை வேண்டிய அளவு கூட்டியும் குறைத்தும் செய்வது நம் கையிலுள்ளது. முக்கிய சேர்வு வகைகளால் ருசியில் மாறுதல் கிடைக்கிறது. சிறிது நல் எண்ணெயில் கடுகைத் தாளிக்கவும்.
வெங்காயம் பூண்டையும் வதக்கி அதிக முக்கியப் பொருளாக வைத்துத் தயாரிக்கலாம் முக்கியப் பொருளை வைத்துப் பெயர் சொல்கிறோம். வகைகள் நம்முடைய தயாரிப்பைப் பொருத்தது.