Posts filed under ‘தொக்கு வகைகள்’

விருந்து சமையலில்கொறடா.

இலையில்  விருந்து சாப்பாடு

இலையில் விருந்து சாப்பாடு

போடமறந்த கொறடா

போடமறந்த கொறடா

கொறடா என்ற பெயரைப் பார்த்தால் இடுக்கி மாதிறி ஏதோ இரும்பு ஸாமான் என்று தோன்றும். ஆனால் இதுவும் ருசியை இடுக்கிப் பிடிப்பதால் இதற்குக் கொறடா என்ற பெயர் போலும்!!!!!

செய்வது மிக எளிதுதான். இதை தோசை,இட்லி,அடை வடை என்று யாவற்றினும் சேர்த்துச் சுவைக்கலாம். எங்கள் ஊர் விசேஷ சாப்பாடுகளில் ஒரு ஓரத்தில் இதுவும் இருக்கும்.
இப்போது சாப்பாடே வேறு விதமாக மாறி விட்டது. மெனுவும் மாறி விட்டது. அதனால் என்ன? என்ன பிரமாதம்,துவையல் மாதிரி தானேஎன்று சொல்வதும கேட்கிறது. சமையல் எழுதி ஏராளநாட்களாகிவிட்டது. எதையாவது எழுதுவோம் என்றால் வகையாக கொறடாப் பிடியில் சிக்கியது.
வேண்டியவைகள்—நல்ல நிறமான புளி ஒரு எலுமிச்சையளவு. பச்சை மிளகாய்–8, வற்றல் மிளகாய்– 3, தோல் சீவிய இ்ஞ்சி–2 அங்குல நீளம் [ கூடக் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை], சுத்தம் செய்த பச்சைக் கொத்தமல்லி 2,அல்லது,3 பிடி. காம்புகள் உட்பட போடலாம். பெருங்காயம் பிடித்த அளவு, உப்பு தேவையானது. நல்லெண்ணெய்–3 டேபிள்ஸ்பூன், கடுகு வேண்டிய அளவு.

செய்முறை–வற்றல் மிளகாயைக் கிள்ளியும்,புளியைப் பிய்த்துப் போட்டும் சிறிது தண்ணீரில் ஊறவைக்கவும். புளி நீரை உறிஞ்சும் அளவு தண்ணீர் போதும். புளி ஊறியவுடன், சிறியதாக நறுக்கிய இஞ்சி,பச்சை மிளகாய், பச்சைக்கொத்தமல்லி இவைகளைச் சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் விடாது அறைக்கவும்.

களிம்பு ஏறாத வாணலியில், நல்லெண்ணையைக் காயவைத்து கடுகை வெடிக்க விட்டு பெருங்காயத்தையும் சேர்த்து அறைத்த கலவைையைச் சேர்த்துக் கிளறவும். வேண்டிய உப்புடன், ஒரு கொட்டைப்பாக்களவு வெல்லத்தையும் சேர்த்து எண்ணெய் பிரியுமளவிற்குக் கிளறி இறக்கவும்..
பந்தி சாப்பாடுகளில் உப்பு உரைப்பு,புளிப்பு எது குறைவாகஇருந்தாலும், இதைத் தொட்டுக்கொண்டு சாப்பிடும்போது யாவும் ஸமனாகி விடும். ருசி பார்த்துச் சொல்லுங்கள்.

கொறடா

கொறடா


அதிக நாட்கள் வைத்து உபயோகிக்கலாம். காரப் பிரியர்களுக்கு ஏற்றது. மிதமான காரம் வேண்டுமானால் மிளகாயைக் குறைக்கவும்.

ஓகஸ்ட் 4, 2016 at 1:52 பிப 28 பின்னூட்டங்கள்

இனிப்பு எலுமிச்சைத் தொக்கும் கூடஒன்றும்.

Originally posted on சொல்லுகிறேன்:
இது வாய்க்கு ருசியாகவும்,  ஆரோக்கியமுமான தொக்கு. செய்வதுமெளிது.  விருப்பமானவைகளுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.  டிபன்களுடன் எடுத்துப்போக சுலபமானது. வேண்டியவைகள்.—நல்ல எலுமிச்சம் பழம்–6 சக்கரை—ஒன்றரை கப் மிளகாய்ப்பொடி–3 டீஸ்பூன் மஞ்சள்பொடி—1 டீஸ்பூன் வறுத்தறைத்த  வெந்தய   சீரகப்பொடி–1 டீஸ்பூன். பெருங்காயப்பொடி—1 டீஸ்பூன். உப்பு—–ருசிக்கு ஏற்ப செய்முறை—பழம் பெறியதாக இருக்கட்டும். சிறியதாக இருந்தால்   4 ஆக   எடுத்துக் கொள்ளலாம். பழத்தை அலம்பி    சிறிய  ப்ரஷர் குக்கரில்  அரைகப்  தண்ணீர் சேர்த்து  மிதமான தீயில்  2 விஸில் வரும்வரை   வேகவைத்து…

Continue Reading ஜனவரி 19, 2015 at 11:03 முப 8 பின்னூட்டங்கள்

இனிப்பு எலுமிச்சைத் தொக்கும் கூடஒன்றும்.

இது வாய்க்கு ருசியாகவும்,  ஆரோக்கியமுமான தொக்கு.

செய்வதுமெளிது.  விருப்பமானவைகளுடன் சேர்த்துச்

சாப்பிடலாம்.  டிபன்களுடன் எடுத்துப்போக சுலபமானது.

வேண்டியவைகள்.—நல்ல எலுமிச்சம் பழம்–6

சக்கரை—ஒன்றரை கப்

மிளகாய்ப்பொடி–3 டீஸ்பூன்

மஞ்சள்பொடி—1 டீஸ்பூன்

வறுத்தறைத்த  வெந்தய   சீரகப்பொடி–1 டீஸ்பூன்.

பெருங்காயப்பொடி—1 டீஸ்பூன்.

உப்பு—–ருசிக்கு ஏற்ப

செய்முறை—பழம் பெறியதாக இருக்கட்டும். சிறியதாக

இருந்தால்   4 ஆக   எடுத்துக் கொள்ளலாம்.

பழத்தை அலம்பி    சிறிய  ப்ரஷர் குக்கரில்  அரைகப்  தண்ணீர்

சேர்த்து  மிதமான தீயில்  2 விஸில் வரும்வரை   வேகவைத்து

இறக்கவும்.

ப்ரஷர் அடங்கியபின்   ஆறவைத்து,    பழத்தைப்பிய்த்துப்போட்டு

விதைகளை அகற்றிவிட்டு,   மிக்ஸியின் சிறிய கன்டெய்னரில்

போட்டு   நன்றாக   அறைத்து  எடுக்கவும்.

வேகவைத்த ஜலமும் சேர்த்து  அறைக்கலாம்.

அடி கனமான   நான்ஸ்டிக் பேனில்   சக்கரையுடன்   சிறிது

ஜலம் சேர்த்து   சற்று கொதிக்கவிடவும்.

சக்கரை கறைந்து   கொதிக்க ஆரம்பித்தவுடன்  அறைத்த

விழுதை    அதனுடன் சேர்த்துக்  கிளறவும்.

நிதான தீயில்  ஹல்வா மாதிரி   சுருண்டு வரும் வரைக் கிளறி

உப்பு,மிளகாய்ப்பொடி,   வெந்தய, சீரக,பெருங்காய,மஞ்சள்ப்

பொடிகளைப் போட்டு    நன்றாகக்  கிளறி   இறக்கவும்.

வேக வைத்த அளவு   எண்ணிக்கையில்   எலுமிச்சம்   பழத்தின்

சாற்றை  எடுத்து      கொட்டைகளை நீக்கி  இறக்கி வைத்துள்ள

கலவையில்   சேர்த்துக்  கிளறவும். சாறு அதிகம்  சேர்க்கலாம்.

சூடு  ஆறிய  பின்னர்   சுத்தமானபாட்டில்களில்

சேமித்துவைக்கவும்.

பெருங்காயம் தூக்கலாக  இருந்தால்   வாஸனையாக இறுக்கும்.

விருப்பப்பட்டவர்கள்     சோம்பு,  ஏலக்காய், லவங்கம்,பட்டை,

ஜாதிக்காய்,   முதலாவதின்   ஏதாவதொன்றின்    பொடியையும்

ஒரு துளி சேர்க்கலாம்.

எண்ணெய் இல்லாத   தொக்கு.பிரிஜ்ஜில் வைக்கும்

அவசியமில்லை.

இதனுடனேயே   இன்னொரு பக்கம்   பூண்டு சேர்த்த டொமேடோ

தொக்கும்   தயாராயிற்று.

அதையும் சேர்த்துப் பாருங்களேன்.  ஏற்கெனவே  இஞ்சி சேர்த்துச்

செய்த  குறிப்பு   இருக்கிரது.

இது வேறு  ருசி. இதையும்  பாருங்களேன் ஸமயத்திற்குஉதவும்.

வேண்டியவைகள்—-பெறியசைஸ்   தக்காளிப்பழம்—6

உறித்த பூண்டு இதழ்கள்—15

மிளகாய்ப்பொடி—3 டீஸ்பூன்

மிளகாய் வற்றல்—2

பெருங்காயப்பொடி—1 டீஸ்பூன்

மஞ்சள்ப்பொடி—1டீஸ்பூன்

வறுத்தறைத்த   வெந்தய,   சீரகப் பொடி—தலா 1டீஸ்பூன்

ருசிக்கு—உப்பு

புளி—ஒரு எலுமிச்சை அளவு

எண்ணெய்—கால் கப்பிற்கதிகம்

சக்கரை—1டீஸ்பூன்.

செய்முறை—தக்காளியை ஒரு பாத்திரத்தில் போட்டு  நன்றாக

கொதிக்கும்  தண்ணீரை  பழம் அமிழும்படியாக அதன்மேல்

விட்டு   மூடிவைக்கவும்.

புளியை  ஈரப்படுத்தி  ஊர விடவும்.

ஜலம் ஆறியபின்    பழத்தை   எடுத்துத்  தோலை உறித்துத்

தனியாக வைக்கவும்.

உறித்து வைத்துள்ள  பூண்டை  சிறியதாக  நறுக்கிப் போட்டு

மிக்ஸியில் அறைக்கவும்.

தக்காளி,  புளியையும்  சேர்த்து  அறைக்கவும்.

நான்ஸ்டிக் பாத்திரத்திலோ,அல்லது  அகலமான பேனிலோ

கலவையைக்கொட்டி    நிதானமான தீயில் கொதிக்கவைத்துக்

கிளறவும்.

கலவை திக்காக சேர்ந்து வரும்போது   வாணலியில்எண்ணெயை

– க்காயவைத்து   மிளகாயை வறுத்து,  கடுகை வெடிக்கவிட்டு

கீழிறக்கி  பொடிகளைச் சேர்த்துக் கிளறி,   கலவையில்  கொட்டிக்

கிளறவும்.  வேண்டிய உப்பு  சேர்க்கவும்.

சக்கரையும்தான்.

துளி ஸ்பூனில் எடுத்து  ஆற வைத்து ருசி பார்க்கவும்.

சுருளக்கிளறி இறக்கி  ஆற வைத்து   பாட்டில்களில்  சேமிக்கவும்.

ப்ரிஜ்ஜில் வைத்து   நீண்ட நாள் உபயோகிக்கலாம்.

ருசி பார்க்கச் சொன்னது   உப்புக்காரம்   கூடக் குறைய

வேண்டுமானால் சேர்ப்பதற்காகத்தான்.படத்தில் சில பொடிகள்

வைக்கத் தவறியிருப்பேன்.   அதெல்லாம் ஒரு பிரமாதமில்லை.

குறிப்புகளே அவசியமானது.

எலுமிச்சை தொக்கிற்கான ஏற்பாடு.அறைத்த எலுமிச்சை மற்றும்ஸாமான்கள்.

எலுமிச்சை,தக்காளி தொக்குகள் ஜோடியாகத் தயாராகிரது.

பாட்டில்களில் வித்தியாஸமான தொக்குகள்.

ஜூலை 30, 2011 at 3:47 பிப 10 பின்னூட்டங்கள்

தக்காளித் தொக்கு

வேண்டியவைகள்

நல்ல கெட்டியான தக்காளிப் பழம்——-1 கிலோ

காய்ந்த புளி—1 பெரிய எலுமிச்சை அளவு

இஞ்சி—-100 கிராம்

பொடிக்க

வற்றல் மிளகாய்—-15

கடுகு——2டீஸ்பூன்

வெந்தயம்—-1டீஸ்பூன்

சீரகம்—-2 டீஸ்பூன்

பெருங்காயப் பொடி—2 டீஸ்பூன்

மஞ்சள் பொடி—3 டீஸ்பூன்

தாளிக்க [வதக்க]—-நல்லெண்ணெய் அரைகப்

ருசிக்கு—-உப்பு

செய்முறை —-அகன்ற ஸ்டீல் பாத்திரத்தில் சுத்தம் செய்த

தக்காளியைப் போட்டு,     அதன்மேல் பழங்கள் அமிழும்படி

 வேரொரு பாத்திரத்தில் கொதிக்க வைத்தத்    தண்ணீரைவிட்டு

மூடி வைக்கவும்.

வெந்தயத்தை வெறும் வாணலியில், சிவக்க வறுக்கவும.

கடுகு,    சீரகத்தையும் வெறும் வாணலியில் வறுக்கவும்.

நிதான தீயில் அரை ஸ்பூன் உப்புப் பொடியுடன்  மிளகாயையும்

கறுகாமல் வறுத்தெடுக்கவும்.

மிளகாயைத் தனியாகவும்,   கடுகு,வெந்தயம்,  சீரகத்தைத்

தனியாகவும். பொடித்துக் கொள்ளவும்.

 தண்ணீர் ஆறியவுடன்  நீரை வடித்துவிடவும்.

தக்காளியின் தோல் உறிக்க வரும். ஒவ்வொரு தக்காளியாக

எடுத்துத்  தோலை உறிக்கவும்.

இஞ்சியைத் தோல் நீக்கிப் .பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

தக்காளி, இஞ்சியுடன்   புளியையும் பிய்த்துப் போட்டு மிக்ஸியில்

தண்ணீர் விடாமல் அரைத்தெடுக்கவும்.

அடி அகலமான நான் ஸ்டிக் வாணலியில் பாதி எண்ணெயைக்

காயவைத்துச்  சிறிது கடுகைத் தாளித்து அறைத்த விழுதைக்

கொட்டிக் கிளறவும்.

குறைந்த தீயில் அடிக்கடி கிளறி மூடவும்.

மிகுதி எண்ணெயைச் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கிளறவும்.

தண்ணீர் வற்றி கலவை சுருண்டு வரும் போது உப்பு,

மஞ்சள், பெருங்காயப் பொடி சேர்க்கவும்.

ஒரு ஸ்பூன் சர்க்கரையும் சேர்க்கவும்

சுருளக் கிளறி,   கீழ் இறக்கி மிளகாய்,கடுகு சீரக வெந்தயப்

பொடிகளைச் சேர்த்துக் கிளறவும்.  எண்ணெய் போதாவிட்டால்

கிளறும் போதே சற்று அதிகம் சேர்க்கவும்.   ஆறியபின்  பிரிஜ்ஜில்

வைத்து உபயோகிக்கவும்.   வெய்யில் காலம்.    எண்ணெய் பிறிந்து

வருமளவிற்கு கெட்டியாக பொருமையாகக் கிளறவும்.

காற்றுப் புகாத பாட்டில்களில் எடுத்து வைத்து உபயோகிக்கவும்.

மே 16, 2010 at 10:20 முப பின்னூட்டமொன்றை இடுக

மாங்காய்த் தொக்கு.

வேண்டியவைகள்

.சற்று புளிப்பான மாங்காயைத் தோல் சீவித் துருவிய

மாங்காய்த் துருவல்—-4கப்

மிளகாய்ப் பொடி—-5 டீஸ்பூன்

வறுத்தரைத்த வெந்தயப் பொடி—1 டீஸ்பூன்

மஞ்சள்பொடி—1 டீஸ்பூன்

பெருங்காயப் பொடி—1 டீஸ்பூன்

நல்லெண்ணெய்—-7 டேபிள் ஸ்பூன்-

-வற்றல் மிளகாய் 2 —-கடுகு  1 டீஸ்பூன் 

 ருசிக்கு உப்பு

நான்ஸ்டிக் பேன் அல்லது அலுமினிய வாணலியில்எண்ணெயைக்

காய வைத்து கடுகு தாளித்து, மிளகாயை சிவக்க வறுத்துக்

கொண்டு மாங்காய்த் துருவலைச் சேர்த்து நிதான தீயில் வதக்கவும்.

உப்பு மஞ்சள் பொடி சேர்த்து சுருள வதக்கவும்.

எண்ணெய் பிரிந்து மாங்காய்சுருண்டு வரும் போது காரப்பொடி

வெந்தயப் பொடி, பெருங்காயப் பொடி சேர்த்துக் கிளறி  உடனே

இறக்கவும். ஆறியவுடன் பாட்டிலில் போட்டு வைத்து உபயோகிக்கவும்.

இதுவும் எல்லாவற்றிற்கும் உறு துணையாக இருக்கும்.

அதிகம் போலத் தோன்றினால் பிரிஜ்ஜில் வைத்து உபயோகிக்கவும்.

மாங்காயின் புளிப்பிற்கு தக்கவாறு உப்பு காரம் கூட்டிக் குறைக்கவும்.

மார்ச் 21, 2010 at 2:01 பிப 1 மறுமொழி

மிளகாய்த் தொக்கு.

வேண்டியவைகள்

பச்சை மிளகாய்—–100 கிராம்

புளி—-ஒரு எலுமிச்சையளவு

எண்ணெய்—–3டேபிள் ஸ்பூன்

கடுகு—–1 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு–2 டீஸ்பூன்

பெருங்காயப்பொடி—முக்கால் டீஸ்பூன்

வெந்தயம்-1 டீஸ்பூன்

உப்பு—-தேவையான அளவு

வெல்லப் பொடி–1 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் பொடி—1 டீஸ்பூன்

செய்முறை—–மிளகாயை அலம்பி காம்பு நீக்கிதுடைத்து

வைத்துக் கொள்ளவும்.

புளியைக் கொட்டை கோது இல்லாமல் உலர்த்திஎடுக்கவும்.

வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி பச்சை மிளகாயைக்

கீறிப் போட்டு மிதமான சூட்டில் நன்றாக வதக்கவும்.

மூடியால் மூடித் திரந்து பதமாக வதக்கவும்.

ஆறிய பின் புளி,உப்பு,வெல்லம் சேர்த்து துளி கூட

தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் அறைத்து எடுக்கவும்.

எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு,  வெந்தயத்தைச்

சிவக்க வறுத்துப் போட்டு மஞ்சள் பெருங்காயம் சேர்த்துக்

கலந்து காற்று புகாத பாட்டிலில் எடுத்து வைத்து,

 உபயோகிக்கவும் .சாப்பாடு  டிபன் வகைகளுடன் உற்ற

ஜோடியாக இருக்கும்.

மார்ச் 21, 2010 at 11:04 முப 1 மறுமொழி


மே 2024
தி செ பு விய வெ ஞா
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 293 other subscribers

வருகையாளர்கள்

  • 551,514 hits

காப்பகம்

பிரிவுகள்


சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

Chitrasundar's Blog

நாங்களும் சமைப்போமில்ல!!!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com News

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.