Posts filed under ‘ஸ்வீட் கார பச்சடிகள்’

மாங்காய்ப் பச்சடி

இங்கே  மாங்காய்  ஸீஸன்.  மாங்காய்ப் பச்சடி செய்து சாப்பிடலாம்.

ஒட்டு மாங்காய் அதிக புளிப்பு  இருக்காது. அதைப் பார்த்ததும்,  ஸரி

இதையும்  ருசித்து,புசித்து பிடித்து,  போடுவோம் என்றுத் தோன்றியது.

செய்யலாமே

வேண்டியவைகள்.

கிளி மூக்கு மாங்காய்—-ஒன்று

வெல்லத்தூள்—1 கப்பைவிட   கொஞ்சம்  அதிகம்.

பச்சை மிளகாய்—2 காரமிளகாய்

முந்திரி—7   அல்லது 8   துண்டுகள்

ஏலக்காய்—1   பொடிக்கவும்

செய்முறை.

மாங்காயை  அலம்பித்   துண்டுகளாக  நறுக்கிக்  கொள்ளவும்.

தோல்  பருமனாக  இருந்தால்  தோலைச்  சீவவும்.

இந்த வகை மாங்காயிற்கு  அப்படியே   போடலாம்.

பச்சை மிளகாயைக் கீறிப்போட்டு நான்  மைக்ரோவேவில்தான்

10  நிமிஷங்கள்   ஹைபவரில்   வேகவைத்து எடுத்தேன்.

வெல்லப் பொடியை சிறிது  ஜலம் விட்டுக் கறைத்து தீயில்

2அல்லது 3 கொதிவிட்டு  இறக்கி வடிக்கட்டவும்.

வடிக்கட்டிய   வெல்ல  ஜலத்தைக் கொதிக்கவிட்டு அதில்

வெந்த  மாங்காய்,  பச்சை மிளகாயைச் சேர்த்து நிதான தீயில்

சற்று கெட்டியாகும்வரை கொதிக்க வைத்து இறக்கி  ஏலப்பொடி

சேர்க்கவும்.

முந்திரியை ஒடித்து  பச்சையாகவோ,  வறுத்தோ  அலங்கரிக்கவும்.

துளி   உப்பு   சேர்க்கலாம்.

இனிமையும்,காரமுமான   மாங்காய்ப் பச்சடி   தயார்.

புளிப்பு  மாங்காய்களிலும்   தயாரிக்கலாம்.

புதுவருஷத்திலும்  ,வேப்பம்பூ பச்சடியுடன்   இந்தப் பச்சடியும்

செய்வதுண்டு.  இதிலேயே   துளி  வறுத்த  வேப்பம்பூவைச் சேர்த்து

சாஸ்திரத்திற்கு   சேர்த்துவிட்டேன் என்று   சொல்பவர்களும்  உண்டு.

எது எப்படியோ   புதுவருஷத்திற்கு   மாங்காய்ப்  பச்சடியை

சொல்லியிருக்கிறேன்.சித்திரைப்   புத்தாண்டு  நந்தன  வருஷத்தை

இனிமையாக   வரவேற்போம்.

மாங்காய்ப் பச்சடி.

நான்தான் கிளிமூக்கு மாங்காய்.

எல்லா  பதிவுலக நண்பர்களுக்கும்   நந்தன  வருஷத்து

சித்திரையை   வரவேற்று  வாழ்த்துகளைக் கூறும்

அன்புடன்    சொல்லுகிறேன்   காமாட்சி.

ஏப்ரல் 12, 2012 at 10:21 முப 10 பின்னூட்டங்கள்

பாகற்காய் இனிப்புப் பச்சடி

கசப்பு காயாக இருந்தாலும்   செய்யும்  விதத்தில் 

பச்சடி ருசியாக இருக்கும். 

  பாகற்காய் பிடித்தவர்களுக்கு இது சுலபமாக தயாரிக்க

முடியும்.   கிரேவியைச் சுருக்கி கெட்டியாகத் தயாரித்தால்

ரொட்டியுடன் எடுத்துப் போக மிகவும் ஸௌகரியமானது.

எண்ணெய் சற்று கூட விட்டால் 2,  3,   நாட்கள்   வரை கெடாது.

வேண்டியவைகள்

திட்டமான   நீளத்துடன் கூடிய  பாகற்காய்—2

பச்சை மிளகாய்—–3

தோல்நீக்கி பொடியாக நறுக்கிய இஞ்சித் துண்டுகள்– –2

-டேபிள்ஸ்பூன்

புளி—ஒரு பெறிய நெல்லிக்காயளவு

வெல்லம் பொடித்தது–4,5 டேபிள்ஸ்பூன்

தாளிக்க—-கடுகு, அரை டீஸ்பூன்

கடலைப்பருப்பு—ஒருடேபிள்ஸ்பூன்

பெருங்காயம்—சிறிது

ரஸப்பொடி—ஒருடீஸ்பூன்

கரிவேப்பிலை–சிறிது

எண்ணெய்—5, 6 டீஸ்பூன்

உப்பு—-ருசிக்கு

விருப்பப் பட்டால்–ஏலக்காய்-1

பாகற்காயை அலம்பி   இரண்டாகப் பிளந்து  விதைகளை நீக்கி

மெல்லிய   துண்டுகளாக   நறுக்கிக் கொள்ளவும்.

சிறிது  உப்பு சேர்த்துக் கலந்து   கசக்கின மாதிரி பிசறி   ஒரு

பாத்திரத்தில்  அழுத்தி  வைக்கவும். புளியை ஊறவைத்து     ,

2, 3 ,முறை ஜலம் விட்டு கெட்டியாகசாரு பிழிந்து வைத்துக்

கொள்ளவும். பாகற்காயை ஒட்டப் பிழிந்து  ஒரு டீஸ்பூன்

எண்ணெய் விட்டுப் பிசறி   மைக்ரோவேவில்    ஹை பவரில்

5, நிமிஷங்கள் வைத்து எடுக்கவும். காய் நன்றாக வெந்து விடும்.

நான்ஸ்டிக்பேனில்,எண்ணெயைககாயவைத்து,கடுகு,

பெருங்காயம்,   பருப்பைத் தாளித்து   மிளகாய்,   கரிவேப்பிலை

இஞ்சி   சேர்த்து  வதக்கவும். வெந்த    காயையும் உடன் சேர்த்து

வதக்கி புளி ஜலம் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம்,உப்பு

,ரஸப்பொடி சேர்த்து நிதானமாகக் கொதிக்க விடவும். ஏலக்காய்ப்

பொடி,  மஸாலாப்பொடி   வேண்டியவர்கள் துளி சேர்க்கலாம்.

குழம்பை   நன்றாகக்   கொதிக்க விடவும்.

குழம்பு திக்காவதற்காக   ஒரு ஸ்பூன் அரிசி மாவைக்

கடைசியில்சிறிதுஜலத்தில் கரைத்துச் சேர்த்து  ஒரு

கொதிவிட்டு   இறக்கவும்.

காய் அதிகம் சேர்த்துச் செய்தால்   சுருளக் கிளறினாலே போதும்.

மாவு அவசியம் இல்லை

.டிபனுடன் எடுத்துப்போக சௌகரியமாக இருக்கும்.

உப்பு காரம்,மற்றும்  யாவும்  காய்க்குத் தக்கபடி  அதிகம்

சேர்க்கவும்.

இனிப்பு,  புளிப்பு கசப்பு,  எல்லாம் கலந்த அறுசுவைப்
பச்சடி.  வாஸனையுடன் கூடிய பச்சடி.  
பாகற்காய்பிடித்தவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். 
நான்வீட்டிலசெய்ததால்உங்களுக்கும் பிடித்தவர்கள்
செய்யட்டுமே என்று  எழுதியிருக்கிறேன். பெருஞ்சீரகமும்
பிடித்தவர்கள்   தாளிப்பில் சேர்க்கலாம்.

பாகற்காய் இனிப்புப் பச்சடி

மே 20, 2011 at 9:58 முப 2 பின்னூட்டங்கள்

அம்ருத்காஸப்ஜி.

அம்ருத்கா ஸப்ஜி ரொட்டியுடன் நன்றாக இருந்தது.

பேரைப் பார்த்து  எப்படி செய்வது என்ன ஏது என்று

விசாரித்தேன். போபால் மருமகளின்  அம்மா, என்

சம்மந்தி  கொடுத்த    குறிப்பு  இது. கொய்யாப் பழம்

முக்கியமானது. இதை ஸப்ஜி வகையாக அவர்கள்

ரொட்டியுடன் சாப்பிடுவதால்  இது அம்ருத்கா ஸப்ஜி.

நமக்கு    இனிப்பு கார பச்சடியாகத் தோன்றும்.

வேண்டியவைகளைப் பார்ப்போம்.

வேண்டியவைகள்—-பழுத்தும்,  பழுக்காததுமான பெரிய

கொய்யாப் பழங்கள்——2       ஒரேசைஸ்  துண்டுகளாக

நறுக்கிக் கொள்ளவும்.

நெய்—-2   டீஸ்பூன்

மிளகாய்ப்பொடி—கால் டீஸ்பூன்

கடுகு,சீரகம்,வகைக்கு   கால்   டீஸ்பூன்

தனியாப்பொடி–ஒரு துளி

ருசிக்கு உப்பு

மஞ்சள்பொடி -ஒருதுளி

சக்கரை—2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை.—–நான்ஸ்டிக் பேனில் நெய்யை நன்குசூடாக்கி

கடுகு, சீரகத்தைத்   தாளித்து,சில   பழத் துண்டுகளுடன்  எல்லா

பொடிகளையும்சேர்த்துப் பிரட்டி  மீதிப் பழத்துண்டுகளையும்

சேர்த்து சில  நிமிஷங்கள்  வதக்கி  திட்டமாக,உப்பு

சேர்த்துவேக விடவும்.அரைகப்தண்ணீரும்,  சக்கரையும்

சேர்த்துக்கொதிக்கவிட்டு சேர்ந்து வரும்போது   இரக்கவும்.

அதிகம்   வேக வேண்டாம்.

பழத்தின் அளவிற்குத் தகுந்தபடி   தண்ணீரைக்  குறைவாகச்

சேர்க்கவும்.  கெட்டியாகவோ,  தளர்வாகவோநம்விருப்பத்திற்கு

ஏற்ப செய்யவும்.   இது ஒரு ஜெயின் சமூகத்தினரின் ஸ்பஷல்.

தளர இருந்தால் பச்சடி. சற்று கெட்டியாக இருந்தால் ஸப்ஜி.

இனிப்பு, உப்பு,  காரம்,   விருப்பப்படி சேர்க்கவும்.    பழம் சற்று

பழுக்காதிருந்தால்  இரண்டு கொதி அதிகம் விட்டால் போதும்.

சுவையான, மணமான,   இனிப்பும்காரமுமான ஸப்ஜிதயார்.

ரொட்டிக்கு ,ஏற்ற ஸப்ஜி இது.  நாம் தயாரிக்கும்போது இஞ்சி

கூட சேர்க்கலாம்.  எதுவும் சேர்க்காமல்   அசல் கொய்யாப்பழ

சுவையுடன் நன்றாகவே இருக்கிறது.  எளிதான  குறிப்பு.

இரண்டு துண்டு பழத்தால் அலங்கரிக்கவும்.

அம்ருத்காஸப்ஜி

 

ஜனவரி 27, 2011 at 6:16 முப 4 பின்னூட்டங்கள்

பீட்ரூட் பச்சடி [கட்டா மீட்டா]

வேண்டியவைகள்—-திட்டமான அளவில் 2 பீட்ரூட்

வெல்லப் பொடி—-கால்கப்

புளி—சின்ன நெல்லிக்காயளவு

மிளகாய்ப் பொடி—அரை டீஸ்பூன்

கரம் மசாலா அல்லது ஏலக்காய்ப் பொடி–சிறிது

ஒரு டீஸ்பூன் —-எண்ணெயும்,     சிறிது கடுகும்.

கால் டீஸ்பூன்  —உப்பு.   மிளகாய் ஒன்று

செய்முறை—–பீட்ரூட்டை நன்றாக அலம்பி தோல் சீவிப்  பொடியாக

நறுக்கி, திட்டமாக ஜலம் சேர்த்து வாணலியிலோ, கச்சாத பாத்திரத்திலோ

நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.

புளியை அரைகப் ஜலத்தில் ஊற வைத்துக் கரைத்து வெந்த காயில்

சேர்க்கவும்.

உப்பு, வெல்லம், காரம் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும்.

கடுகு, மிளகாய் ஒன்றுஎண்ணெயில் தாளிக்கவும்.குறுகி வரும்

போது இறக்கி  ஏலக்காயோ, கரம் மஸாலாவோ சேர்க்கவும்.

திதிப்பு அதிகம் வேண்டுமானால் வெல்லம் அதிகரிக்கவும்.

ஜலம் ஜாஸ்தியாகிவிட்டால்  துளி மாவு கரைத்து விடலாம்.

 முந்திரி, திராக்ஷை சேர்த்தால் ருசி கூடும்.

ஏப்ரல் 12, 2010 at 8:22 முப பின்னூட்டமொன்றை இடுக

தக்காளி ஸ்வீட் பச்சடி.

சமீபத்தில் விசேஷத்திற்கு    பரிமாறிய சமையலில்  ஸ்வீட்பச்சடி

மிகவும் நன்றாக இருந்தது. பச்சடியைப் பற்றி விசாரித்தேன்.மிகவும்

சாதாரண குறிப்புதான்.  இருந்தாலும் குழந்தைகளும் பெறியவர்களும்

மிகவும் விரும்புவார்களென்று       நினைக்கிறேன்.

வேண்டியவைகள்.

பழுத்த தக்காளிப் பழம்——4

சர்க்கரை——5,—6  டேபிள்ஸ்பூன்

ஏலப்பொடி—-கால் டீஸ்பூன்

முந்திரிப் பருப்பு—8

உலர்ந்த திராக்ஷை  —2 டேபிள்ஸ்பூன்

நெய்—-1 டேபிள் ஸ்பூன்

செய்முறை——–தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

கச்சாத பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் நெய்யில் தக்காளியை லேசாக

வதக்கி, அரை கப் ஜலம் சேர்த்து நன்றாக வேகவிடவும். ஜலம்

 வேண்டுமானால் சிறிது  அதிகம் சேர்த்து  மசிக்கவும்.

சர்க்கரையைச் சேர்த்துக் கிளறவும்.

நீர்த்துக் கொதித்தபின்,   திக்காக சேர்ந்து வரும்போது இறக்கி

நெய்யில் முந்திரி திராக்ஷையை வறுத்துச்   சேர்க்கவும்.

ஏலப்பொடி சேர்த்து உபயோகப்படுத்தவும்.

தக்காளியை நன்றாக மசிப்பது அவசியம்.  சொன்னால்தான்

தெரியும் தக்காளிப் பச்சடி என்று.

மார்ச் 31, 2010 at 11:38 முப பின்னூட்டமொன்றை இடுக

வேப்பம்பூப் பச்சடி.

வேண்டியவைகள்

வேப்பம்பூ——-3 டீஸ்பூன்

புளி—-ஒரு நெல்லிக்காயளவு

பச்சை மிளகாய்—-1

வெல்லப் பொடி——–3 டேபில்ஸ்பூன்

உப்பு –சிறிது

தாளிக்க எண்ணெய்  —சிறிது

கடுகு—- கால் டீஸ்பூன்,துளி பெருங்காயம்

செய்முறை—-புளியை வென்னீரில் ஊற வைத்து் அரைகப் அளவிற்கு தண்ணீரில்

கெட்டியாகக் கறைத்துக் கொள்ளவும்.

வேப்பம் பூவை  வாணலியில் எண்ணெய் விடாமல் வறுத்துப் பொடிக்கவும்.

காய்ந்த பூவாக இருந்தால் துளி நெய்விட்டு வறுத்துப் பொடிக்கவும்.

 வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி,  கடுகு, பெருங்காயம் தாளித்துக்

கீறின     பச்சை மிளகாயை வதக்கி, புளி ஜலத்தைச் சேர்க்கவும்.

உப்பு,    வெல்லம் சேர்த்துக் கொதிக்க விடவும்.  ஜாம் பதத்தில்

சுண்டி வரும் போது இறக்கி வைத்து வேப்பம் பூப்பொடியைச்

சேர்க்கவும்.  இஞ்சியும் சேர்க்கலாம்.    தமிழ் வருஷப்பிறப்பிற்கு

இந்தப் பச்சடி கட்டாயம் செய்வது வழக்கமாக இருந்தது.

பித்தத்தினால் ஏற்படும் கோளாறுகளுக்கெல்லாம் இந்தப் பச்சடி

மிகவும் நல்லது.

மார்ச் 30, 2010 at 7:20 முப பின்னூட்டமொன்றை இடுக


மே 2024
தி செ பு விய வெ ஞா
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 293 other subscribers

பிரபலமான இடுகைகள்

வருகையாளர்கள்

  • 551,513 hits

காப்பகம்

பிரிவுகள்


சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

Chitrasundar's Blog

நாங்களும் சமைப்போமில்ல!!!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com News

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.