Posts filed under ‘குழம்பு வகைகள்’
கறிவேப்பிலைக் குழம்பு
இளசாக உருவிய கறிவேப்பிலை இலைகள்–2கப்
தோல் நீக்கி உறித்த பூண்டு இதழ்கள்—-கால்கப்
மிளகாய் வற்றல்——-3
மிளகு–2 டீஸ்பூன்
தனியா—-3 டீஸ்பூன்
சுக்கு—-ஒரு சிறிய துண்டு
ஓமம்–அரை டீஸ்பூன்
அரிசி–ஒரு டீஸ்பூன்
மேலே கொடுத்திருப்பவை யாவும் வறுப்பதற்கு.
தாளித்துக் கொட்ட—-கடுகு,,பெருங்காயம், வெந்தயம் 1டீஸ்பூன்
ஒவ்வொரு ஸ்பூன் கடலை உளுத்தம், பருப்புகள், வேர்க் கடலை,
தாளிக்க——நல்லெண்ணெய்–4 டேபிள் ஸ்பூன்
ருசிக்கு உப்பு—1டீஸ்பூன் மஞ்சள்பொடி
புளி—1எலுமிச்சை அளவு, வெல்லத்தூள் 1ஸ்பூன்
செய்முறை–புளியை வெந்நீரில் ஊறவைத்து 2,3முறை தண்ணீர் விட்டு
சாறு எடுத்துக் கொள்ளவும்.
வறுக்கக் கொடுத்திருப்பவைகளை சிறிது எண்ணெயில் வறுத்து பூண்டு
கறிவேப்பிலையையும் வதக்கிச் சேர்த்து, ஆறியபின் சிறிது ஜலம் சேர்த்து
அரைத்துக் கொள்ளவும்.
குழம்பு வைக்கும் பாத்திரத்தில் எண்ணெயைக் காயவைத்து கடுகு,
பருப்புவகைகளைத் தாளித்து ,புளிக்கரைசலில் அரைத்த விழுதைக்
கொட்டிக் கரைத்து வேண்டிய அளவு ஜலம் சேர்த்து கொதிக்க விடவும்.
உப்பு, மஞ்சள், வெல்லம் சேர்க்கவும்.
குழம்பு நன்றாகக் கொதித்து திக்கான பதம் வந்ததும் இறக்கவும்
ருசியானதும், உடம்பிற்கு ஆரோக்கியமானதுமான குழம்பு.
நெய் சேர்த்துச் சாப்பிடவும்.
ருசிக்கு சிறிது தேங்காயும் சேர்த்து அரைக்கலாம்.
மாம்பழக் குழம்பு.
வேண்டியவைகள் ——துவரம் பருப்பு—1கப்
புளி—சின்ன எலுமிச்சை அளவு
ஸாம்பார் பொடி–3 டீஸ்பூன்
மிளகாய் வற்றல்—2
கடுகு–1டீஸ்பூன்
வெந்தயம்–அரைஸ்பூன்
வாஸனைக்கு–பெருங்காயம்
ருசிக்குஉப்பு
தாளிக்க எண்ணெய்—3டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு
நாட்டு மாம்பழம்—5,6
செய்முறை—–பருப்பைக் களைந்து மஞ்சள் பொடி சேர்த்து
திட்டமான தண்ணீருடன் குக்கரில் வேக வைக்கவும்.
புளியை ஊறவைத்து 4கப் தண்ணீரைச் சிறிது சிறிதாகச்
சாறெடுக்கவும்.
குழம்பு வைக்கும் பாத்திரத்தில் புளி ஜலத்துடன் 5,6 சின்ன
மாம்பழங்களைச் சேர்த்து உப்பு, ஸாம்பார்ப் பொடி சேர்த்து
கொதிக்க விடவும்.
பழங்கள் சுருங்கி வெந்து குழம்பின் பச்சை வாஸனை போனபின்
வெந்த பருப்பைக் கலக்கிக் கொட்டி கொதிக்க விடவும்.
மிளகாய் கடுகு, வெந்தயம் பெருங்காயத்தை எண்ணெயில்
பொரித்துக் , கொட்டி 1டீஸ்பூன் அரிசி மாவைச் சிறிது ஜலத்தில்
கரைத்துவிட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கி உபயோகிக்கவும்.
இது கிராமங்களில் கிடைக்கும் சாதாரணமான நாட்டு மாம்பழத்தில்
செய்வது வழக்கம். சாம்பார் ருசியாக இருக்கும். பழம் ருசியாக
இருக்காது.
கிளிமூக்கு மாம் பழத்தில் [ஒட்டு மாம்பழம்] செய்தால் புளியை
குறைத்து சேர்த்து பழத்தைத் துண்டுகளாக வெட்டிக் கலந்து
உப்புகாரம் சேர்த்து கொதிக்கவிட்டு ,வெந்த பருப்பைச் சேர்த்து
தாளித்துக் கொட்டலாம்.
1 டீஸ்பூன் தனியாவையும், சிறிது தேங்காயையும் வறுத்துஅறைத்து
சேர்த்தால் ருசி கூடும்.
சற்று புளிப்பும், இனிப்புமான குழம்பு இது.
மாம்பழ மணத்துடன் ருசியாக இருக்கும். கொத்தமல்லி
கறி வேப்பிலை சேர்த்து மணத்தை அதிகப் படுத்தலாம்.
தாளகம்
இது ஒரு கலந்த ருசிக் குழம்பு
வேண்டியவைகள்.—–பூசணி, பறங்கி, சௌசௌ முதலான
காய்களிலும், சேப்பங் கிழங்கு, வெள்ளிக் கிழங்கு முதலான
கிழங்கு வகைகளிலும், சேர்த்தும், தனித்தும் விருப்பம்
போலச் செய்யலாம்.
பச்சைப் பட்டாணி, மொச்சைப்பருப்பு சேர்க்கலாம்.
காயைத் தோல் நீக்கிச் சற்றுப் பெரிய துண்டங்களாக
நறுக்கிக் கொள்ளவும்
கிழங்குகளானால் வேக வைத்துத் தோல் உறித்துக்
கொள்ளவும், கால் கிலோ அளவிற்குஇருக்கலாம்
புளி—-1 எலுமிச்சை அளவு. ஊற வைக்கவும்.
கறி வேப்பிலை—-உறுவியது-அரைகப் அளவு
உளுத்தம் பருப்பு—-ஒன்றறை டீஸ்பூன்
அரிசி—1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல்–4
வெல்லம்—-1 டேபிள் ஸ்பூன்
தேங்காய்த் துருவல்—–1 மூடி துருவியது
தாளிக்க—எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்
கடுகு, பெருங்காயம்.
சிறிது மஞ்சள் பொடி. ருசிக்கு உப்பு
செய்முறை—-காய்களைக் கலந்து செய்வதானால் மொத்தமாக
கால் கிலோவிற்கு அதிகமாகவே இருக்கட்டும். காய்களைச்
சிறிது வேகவிட்டு ,வேக வைத்த கிழங்குத் துண்டங்களையும்
சேர்த்து, புளியைக் மூன்று கப் அளவிற்கு ஜலம் சேர்த்துக்
கரைத்துச் சேர்க்கவும். உப்பு, மஞ்சள், வெல்லம் போடவும்.
நன்றாகக் கொதிக்க விடவும்
முதலிலேயே வெறும் வாணலியில் தனித் தனியாக
உளுத்தம் பருப்பு, மிளகாய் ,அரிசியை சிவக்க வறுத்துக்
கொள்ளவும்.
தேங்காய், கறிவேப்பிலையையும்சற்று வறுத்து யாவற்றையும்
ஆறின பின் மிக்ஸியிலிட்டு நன்றாக, திட்டமாக ஜலம்
விட்டு அரைக்கவும்.
இவ்வாறு அறைத்த விழுதைக் கரைத்து, புளி வாஸனை
போகக் கொதித்த கலவையில் கொட்டி ஒரு கொதி விட்டு
இறக்கவும்.
எண்ணெயில் கடுகு, பெருங்காயத்தைத் தாளித்துக் கொட்டவும்.
புளிப்பு, இனிப்பு, காரம் கலந்த ஒரு தனிச் சுவை.
பருப்புப் பொடி, பொரித்த துவையல் சாதங்களுக்கு ஏற்ற
ஒரு சக ஜோடி. மிகவும் சுலபமாகச் செய்ய முடியும்.
பச்சை மிளகாயும் சேர்க்கலாம்.
தக்காளிப்பழ கொத்ஸு.
வேண்டியவைகள்
பொடியாக நறுக்கிய தக்காளிப்பழம்–4 கப்
நறுக்கிய சாம்பார் வெங்காயம்—1கப்
பச்சை மிளகாய்—-2 நறுக்கிக் கொள்ளவும்….
ரஸப்பொடி அல்லது கறிப் பொடி—1 டீஸ்பூன்
தாளிக்க—-எண்ணெய் —-3 டேபிள் ஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு,கடலைப் பருப்பு ஒவ்வொரு டீஸ்பூன்
ஒரு கோலியளவு—புளி
ருசிக்கு உப்பு , துளி வெல்லம்
ஒரு டீஸ்பூன்—அரிசி மாவு.
செய்முறை—–புளியை ஊற வைத்து ஒரு கப் ஜலத்தில்
கரைத்துக் கொள்ளவும்.
குழம்பு வைக்கும் பாத்திரத்தில் எண்ணெயைச் சூடாக்கி
கடுகு, பருப்பு வகைகளைத் தாளித்து வெங்காயம், பச்சை-
-மிளகாயைச் சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம்
வதங்கிய பின் தக்காளியையும் சேர்த்து வதக்கி புளித்
தண்ணீரைச் சேர்க்கவும். உப்பு, வெல்லம், பொடி சேர்த்து
கொதிக்க விடவும். நன்றாக வெந்தவுடன் அரிசி மாவில்
ஒரு கரண்டி ஜலம் சேர்த்துக் கரைத்து விடவும்.கொத்ஸு
கெட்டியாக இருந்தால் கொதிக்கும் போதே, மாவு கரைத்து
விடுவதற்கு முன்பே வேண்டிய அளவு தண்ணீர் சேர்க்கவும்.
கத்தரிக்காய், பரங்கிக்காய், கேரட் ,இஞ்சிமுதலானதும் சிறியதாக
நறுக்கி வதக்கும் போது சேர்க்கலாம். காரம் புளிப்பு முதலானது
அதிகம் செய்யும்படியிருக்கும். பொங்கல், இட்லியுடன் ஜோடி
சேரும்.கொத்ஸு தயார்.கறிவேப்பிலை மறக்காமல் சேர்க்கவும்.
தனியாப் பொடி, மிளகாய்ப் பொடி, ரஸப் பொடிக்குப் பதிலாகவும்
சேர்க்கலாம்.
முருங்கைக்காய் பொரித்த குழம்பு.
வேண்டியவைகள்—-
பயத்தம் பருப்பு—–அரைகப் லேசாக வறுத்துக் கொள்ளவும்.
துவரம் பருப்பு —–அரைகப
இவைகளைத் தண்ணீர் விட்டுக் களைந்து 6 முறுங்கைக்
காய்களை அலம்பி 2 அங்குலத் துண்டுகளாக நறுக்கிச்
, மஞ்சள்பொடியும் 3கப் தண்ணீர்ரும் சேர்த்து ப்ரஷர்
குக்கரில் வேக வைத்து இறக்கவும்.
வறுத்து அறைக்க——
மிளகாய் வற்றல்——–4
மிளகு —–அரை டீஸ்பூன்
தனியா—-ஒரு டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு—-ஒரு டீஸ்பூன்
தேங்காய்த் துருவல்–முக்கால் கப்
எண்ணெய்—ஒரு டீஸ்பூன்
சீரகம்—-அரை டீஸ்பூன்
திட்டமான தக்காளிப் பழம் —-2 நறுக்கிக் கொள்ளவும்.
தாளித்துக் கொட்ட –கடுகு, பெருங்காயம், ஒரு ஸ்பூன்நெய்
வாஸனைக்கு—கொத்தமல்லி, கறி வேப்பிலை
செய்முறை——வறுக்கக் கொடுத்த சாமான்களை வறுத்து
தேங்காயையும் லேசாக வறுத்து ஆறிய பின் ஜலம்
சேர்த்து மிக்ஸியில் அறைத்துக் கொள்ளவும்.
தக்காளியையும் வதக்கி அறைப்பதில் சேர்த்து விடவும்.
காயும் பருப்புமாக வேக வைத்ததில் அறைத்த கலவையை
கறைத்துச் சேர்த்து திட்டமாக உப்பையும் சேர்த்து
நன்றாகக் கொதிக்க விடவும் நிதானமான தீயில் ஞாபகம்
இருக்கட்டும். இறக்கி வைத்துநெய்யில் கடுகுபெருங்காயம்
தாளித்து கொத்தமல்லி கறி வேப்பிலை சேர்க்கவும்.
சின்ன வெங்காயம் வதக்கி சேர்க்கலாம். தனிப்படவும்
நிறைய வெங்காயத்தை மாத்திரம்உபயோகித்தும்
செய்யலாம்.
தக்காளி சேர்க்காமல் கடைசியில் இறக்கிய பிறகு
வேண்டிய அளவிற்கு எலுமிச்சை சாற்றையும் கலந்து
கொள்ளலாம். கெட்டியாக இல்லாமல் சற்றுத் தளர்வாக
தயாரிப்பதாலும், புளி இல்லாது செய்வதாலும் பொரித்த
குழம்பு என்று சொல்கிறோம்.
நீர்த்த மோர்க் குழம்பு.
வேண்டியவை——–கடைந்தமோர் 3கப்.
மிளகு——-1டீஸ்பூன்,———லவங்கம்8
ஓமம்—-1டீஸ்பூன்,——— மிளகாய் வற்றல்1.
வெந்தியம் அரை டீஸ்பூன்,——–நசுக்கிய இஞ்சி சிறிது
ருசிக்கு உப்பு,——-கடலைமாவு 1டீஸ்பூன்,—துளி மஞ்சள்பொடி
கறிவேப்பிலை சிறிதளவு. தாளிக்க எண்ணெய் 1 டீஸ்பூன்.
செய் முறை —- மோரில் கடலைமாவு, உப்பு, மஞ்சள், இஞ்சியைக் கரைத்துக் கொள்ளவும்.
எண்ணெயைக் காயவைத்து, ஓமத்தை வெடிக்க விட்டு எல்லா சாமான்களையும்
போட்டு வறுத்து கரைத்த மோரில் கொட்டி ஒரு கொதி விட்டு இறக்கவும்.
உடல் நலமில்லாது சுமாராகும் சமயம் கிச்சடியுடன் சேர்த்துசாப்பிட வாய்க்கு
ருசியான ஆரோக்கியமான குழம்பு இது. ரஸமாகவும் கொள்ளலாம்.
தனியாப் பொடியும் ஒரு ஸ்பூன் சேர்க்கலாம்.
———–
வெந்திய மோர்க் குழம்பு–VENDIYA MORK KUZAMBU
வேண்டியவைகள்–புளிப்பு மோர்-2கப்
வறுக்க வேண்டியவைகள் மிளகாய் வற்றல்- 2,——–தனியா 1டீஸ்பூன்
வெந்தியம்——1டீஸ்பூன்,——–அரிசி 1’டீஸ்பூன்,——-துவரம் பருப்பு 1டீஸ்பூன். இவைகளை சிறிது எண்ணெயில் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
தேங்காய்த் துருவல் 2டேபிள் ஸ்பூன்,——பெருங்காயம் சிறிது.
தாளிக்க—–எண்ணெய், கடுகு அரை டீஸ்பூன்,—–சிறிது மஞ்சள்பொடி,-ருசிக்குஉப்பு,——கறி வேப்பிலை சிறிது.
செய்முறை———வறுத்த சாமான்களுடன் தேங்காய் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து, உப்பு, மஞ்சள்பொடி பெருஙகாயம் திட்டமாகச் சேர்த்துமோரில் கரைக்கவும். எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து நிதானதீயில் பால் பொங்கும் பதத்தில், மோர்க் கலவையைக் கொதிக்க வைத்து இறக்கவும். காய்கள் விருப்பப்படி சேர்க்கவும். காரமும் அப்படியே.
பருப்புத் துவையல் சாதங்கள், பொடிவகை சாதங்களுடன், சேர்த்துச் சாப்பிடநன்றாக இருக்கும்.
இதையே வறுத்தரைத்த வெந்தயப் பொடி, மிளகாய்ப் பொடி, ஒருடீஸ்பூனகடலைமாவு, பெருங்காயம் உப்பு, முதலியவற்றை புளிப்பு மோரில் கரைத்து தேங்காயெண்ணெயில் கடுகை தாளித்து ஒரு கொதிவிட்டு அவசரத்திற்கும் தயாரிக்கலாம். காய்கள் போடாவிட்டாலும் பரவாயில்லை.செய்து பாருங்கள்.
மோர்க்குழம்பு. morkkuzampu
வேண்டியவை அதிக புளிப்பில்லாத கெட்டியான மோர் 3கப்
மஞ்சள் பொடி—அரை டீஸ்பூன்.——–சுவைக்குஉப்பு
அரைக்க—பச்சை மிளகாய் 3——–சீரகம்ஒரு டீஸ்பூன்—
கடலைப் பருப்பு இரண்டு டீஸ்பூன்.–தனியா இரண்டு டீஸ்பூன்
இஞ்சி அரை அங்குலத் துண்டு. —-தேங்காய்த் துருவல் 4டேபிள்ஸ்பூன்
தாளிக்க——கடுகு அரைடீஸ்பூன்——–வெந்தயம்கால் டீஸ்பூன்,——–வத்தல் மிளகாய் ஒன்று
பெருங்காயம் சிறிது,———நல்லெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்.
கறிவேப்பிலை சிறிதளவு.
காய்——பூசணி. பறங்கி. சௌ,சௌ கீரைத்தண்டு, சேனை முதலானவைகளானால் சிறிய
துண்டங்களாக 3 கப் அளவிற்கு ஏதாவதொன்றை நறுக்கிக் கொள்ளவும்.
அரைக்கக் கொடுத்தவைகளை தண்ணீரில் அலம்பி ,ஊறவைத்து ,தேங்காய் .
இஞ்சி, பச்சைமிளகாய் சேர்த்து மிக்ஸியில் துவையல் மாதிரி அரைத்தெடுக்கவும்.
குழம்பு செய்யும் பாத்திரத்தில் நறுக்கிய காயைசிறிது உப்பு சேர்த்து நீரில் வேக விடவும்.
தண்ணீர் அதிக மிருந்தால் வடித்து விடவும்.
மோரில் அரைத்த கலவை, உப்பு,மஞ்சள் பொடி சேர்த்து நனறாகக் கரைத்து வெந்த காயில்
கொட்டி பால் பொங்குவதுபோல் குழம்பு நுரைத்து பொங்கி மேலெழும் வரை கிளறி கொதிக்கவிட்டு இறக்கி வைக்கவும் எண்ணெயில் தாளிக்க வேண்டியதைத் தாளித்து
கறிவேப்பிலையையும் குழம்பில் சேர்க்கவும்.
குடமிளகாய், வெண்டைக்காய். போடுவதாக இருந்தால் எண்ணெயில் வதக்கி சேர்க்கலாம்.
காய்களுக்குப்பதில் சிறிது கடலைமாவில் லேசான உப்பு காரம் சேர்த்து தளர தண்ணீர்
விட்டுப் பிசைந்து காயும் எண்ணெயில் பகோடாக்களாகப் பொரித்தும் கொதிக்கும் குழம்பில் போட்டு இறக்கி மூடி வைக்கலாம்.
அடுத்து வேறு விதமான மோர்க் குழம்புகளைப் பார்க்கலாம்.
மிளகுக் குழம்பு milaguk kuzampu
வேண்டியவை வறுக்க மிளகு-ஒரு டேபிள்ஸ்பூன்
தனியா—இரண்டு டேபிள்ஸ்பூன் , மிளகாய்வற்றல்- ஒன்று
உளுத்தம் பருப்பு-ஒரு டீஸ்பூன், துவரம்பருப்பு–இரண்டு டீஸ்பூன்.
கறிவேப்பிலை-15-அல்லது20 இலைகள், நசுக்கிய சுக்கு சிறிய துண்டு, பெருங்காயம் சிறிது. வறுக்க ஒரு ஸ்பூன் எண்ணெய்.
தாளிக்க- நெய்ஒருடேபிள்ஸ்பூன், நல்லஎண்ணெய்ஒருடேபிள்ஸ்பூன்
கடுகு, வெந்தயம் தலா அரைடீஸ்பூன்
கரைக்க—பழைய புளி எலுமிச்சை அளவு
சுவைக்கு உப்பு,—- வெல்லம் சிறிது, மஞ்சள்பொடி சிறிது.
காய்கறிகள்— ,பிஞ்சு கத்தரிக்காய்- –முருங்கைப் பிஞ்சு,பொடியாக நறுக்கி வேக வைத்த சேனைக்கிழங்கு, இதில் விருப்பமானதை உபயோகிக்கலாம்.
செய்முறை—–வறுக்கக் கொடுத்த சாமான்களை எண்ணெயில் சிவக்க வறுத்து கரிவேப்பிலையையும் சேர்த்து மிக்ஸியில் நீர் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
புளியை ஊற வைத்து 2-3 முறை தண்ணீர் விட்டு சாறு எடுத்துக் கொள்ளவும்.
குழம்பு செய்யும் பாத்திரத்தில் எண்ணெயும் நெய்யுமாகக் காய வைத்து, கடுகு,வெந்தயம் தாளித்து நறுக்கிய காயையும் போட்டு தீயைக் குறைத்து நன்றாக வதக்கி புளித் தண்ணீரைச் சேர்க்கவும்.3
உப்பு,மஞ்சள் பொடி சேர்த்து புளி வாசனைபோக கொதிக்கவிட்டு
அரைத்த விழுதைச் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் சேர்த்து நீர்க்க இல்லாமல் குழம்பை சரியான பதத்தில் இறக்கி உபயோகிக்கவும்.
மருத்துவ குணமுள்ள காரமான குழம்பு இது. நெய் விட்டுச் சாப்பிட வேண்டும். காரம் கூட்டிக் குரைத்து உபயோகிக்கலாம்.
பின் குறிப்பு——தாளிக்கும்போது, சின்ன வெங்காயம், அல்லது
தோல் நீக்கிய பூண்டுப் பகுப்புகளையும் காய்கறிகளுக்குப் பதிலாகச்
சேர்த்து வதக்கியும் செய்யலாம். அல்லது வதக்கிய பூண்டைச்
சிறிது அரைக்கும்போதும் சேர்க்கலாம்.
மிளகு முக்கியமானதால், சேர்மானங்கள் அவரவர்கள் விருப்பம்.
காய்கள் சேர்க்கும் அளவைப் பொறுத்து எண்ணெயும் கூட்டிக் குறைக்க வேண்டும்.
வற்றல் குழம்பு—-vatral kuzhambu.
வேண்டியவைகள் புளி–ஒருஎலுமிச்சை அளவு சாம்பார் பொடி–ஒரு டேபிள் ஸ்பூன் தாளிப்பதற்கு கடுகு அரை டீஸ்பூன் வெந்தயம்–ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன் உளுத்தம்பருப்பு–ஒரு டீஸ்பூன் வேர்க்கடலை—இரண்டு டீஸ்பூன் பெருங்காயப்பொடி-அரைடீஸ்பூன் நல்லெண்ணெய்–மூன்று டேபிள் ஸ்பூன் தேவைக்கு உப்பு காய்ந்த மிளகாய் ஒன்று. சாம்பார் வெங்காயம்-உறித்து நறுக்கியது ஒரு கப் முருங்கைக்காய்–நறுக்கிய துண்டுகள் ஏழு அல்லது எட்டு கறிவேப்பிலை இலைகள்–சிறிதளவு செய்முறை– புளியை ஒருகப் சுடு தண்ணீரில் ஊறவைத்து நன்றாகக் கரைத்துச் சாரெடுக்கவும். மேலும் இரு முறை தண்ணீர் […]
Continue Reading செப்ரெம்பர் 10, 2009 at 1:53 முப 3 பின்னூட்டங்கள்
