Posts filed under ‘Uncategorized’
ஸீஸன் மோர்க்குழம்பு.
எப்போதோசெய்த ஒரு மோர்க்குழம்பு ரீப்ளாக் செய்யக் கிடைத்தது.கிராமங்களில் நாட்டுப் பழங்கள் என்று மிகவும் மலிவாகக் கிடைக்கும். அதைப்போட்டும் செய்வார்கள். மொத்தத்தில் ஸீஸனில் செய்யும் குழம்பு. ருசியுங்கள். அன்புடன்
எந்த ஸீஸனா.. மாம்பழ ஸீஸனா. ஆமாம்.
தோல் பருமனாக இருக்கிறது. பழுத்த பழம் நறுக்க வரவில்லை என்றாள் மருமகள். ஸரி அதை வைத்துவிடு நான் உப யோகப் படுத்திக் கொள்கிறேன்என்றேன். சீக்கிரமே செய்து விடுங்கள் என்றாள்.
அவர்கள் காலை சாப்பாடுகள் செய்து முடித்த பின் நான் சமையலரைக்குப் போனேன். இரண்டு ஸ்பூன் கடலைபருப்பு,துளி தனியா, சீரகம் ,எல்லாவற்றையும் ஊரவைத்து காரத்துக்கு பச்சைமிளகாய் இஞ்சி சேர்த்து கொஞ்சம் கூடவே தேங்காய்த்துருவலையும் சேர்த்து அரைத்துக் கொண்டேன்
இந்த மாம்பழத்தை 2 ஒரு பக்கம் துளி கீரல் போட்டுவிட்டு , நன்றாகக் கதுப்பை அழுத்தி எடுத்துக் கொண்டேன். இரண்டுகப் கெட்டி மோரில் புளிப்பில்லாதது எல்லா வற்றையும் சேர்த்து நன்றாகக் கலந்தேன். உப்பு,மஞ்சப்பொடியும் போட்டேன். என்ன பிரமாதம் என்கிறீர்களா?கரைத்து அடுப்பில் வைத்து ஒரு கொதி விட்டு கடுகு,வெந்தயம்,பெருங்காயம்,கூடவே நான்கு குடமிளகாயையும் வறுத்துப் போட்டு தாளித்துக் கொட்டி விட்டு, கறிவேப்பிலையையும் அதன் தலையில் போட்டு இறக்கினேன்.
எங்க வீட்டுக்காரர் சாதம் சாப்பிட்டு நாலு வருஷமாறது. ராக்கொடிஅளவுஇரண்டுதோசை,ரஸம்,அல்லது இரண்டு இட்லி, பிரட்பால் ,கஞ்சி, அந்த மனுஷருக்கு தோசையுடன் இன்று இந்த மோர்க்குழம்புதான் இரண்டு கரண்டி கொடுத்தேன். பிடித்து சாப்பிட்டதை உங்களுக்கும் சொல்லலாமே. நானும் காரமே சாப்பிடறதில்லே. நானும் சாப்பிட்டேன். எனக்கு அதில் இரண்டு வேக வைத்த காயைப் போட்டேன். குழம்பு சூப்பர்தான்.
என் கதையாகத்தான் இருக்கட்டுமே. நாட்டு மாம்பழமானால் இன்னும் காரம் வைக்கலாமோ என்னவோ? போட்டோ பாருங்கோ …
View original post 16 more words
ஜெயின் கிச்சடியும் பத்லா கடியும்
இந்தக் கிச்சடியும் கடியும் சாப்பிட ருசியாக இருக்கிறது.நானே சொல்வதில் அர்த்தமில்லை.நீங்களும் முந்தியே படித்திருக்கிறேன் என்று சொல்லாமல் படித்தால் செய்து சாப்பிடத் தோன்றும். அன்புடன்
ஜெயின் கிச்சடியும்,பத்லா கடியும்.
ஜெயின் சமூகத்தினர் செய்யும் விஜிடபிள் கிச்சடியும் அதற்கான நீர்த்த மோர்க்குழம்பும் ருசியாக இருக்கும். இதோடு கூட சுட்ட மிளகு அப்பளாமும் எல்லோரும் சாப்பிட ஒரு அருமையான ,சுலபமான உணவு. வாய்க்கு ருசியாக இருப்பதோடு பூரா ஸத்துகள் நிரம்பியதாகவும் இருப்பது இதன் விசேஷம். ஸாதாரணமாக பூமிக்கடியில் விளையும், கிழங்கு,இஞ்சி போன்றவைகளை ஆசாரமானவர்கள் சமையலில் சேர்ப்பதில்லை. இது அம்மாதிரி முறையில் செய்யப்படவில்லை.யாவும் சேர்த்துச் செய்தது.
வேண்டியவைகள்
பெரிய வெங்காயம் —2
பூண்டு இதழ்கள்—3,
பீன்ஸ்—6, கேரட்—1,தக்காளி—1, காப்ஸிகம் சிகப்பு,பச்சை –பாதிபாதி. பட்டாணி உரித்தது அரைகப். உருளைக்கிழங்கு –1 இரண்டாக் கீறிய பச்சை மிளகாய் ஒன்று.
தாளித்துக் கொட்ட— வற்றல் மிளகாய்—2, சீரகம்—1 டீஸ்பூன்,மிளகு—1 டீஸ்பூன்,லவங்கம்—6 , ஒரு துளி லவங்கப்பட்டை, இஞ்சி சிறிது, பிரிஞ்ஜி இலை1 எண்ணெய்—3 டேபிள்ஸ்பூன்
அரிசி—பெரியடம்ளரால் ஒரு டம்ளர். பயத்தம் பருப்பு கால் டம்ளர். ருசிக்கு உப்பு.
செய்முறை. பிரமாதமொன்றுமில்லை.
கரிகாய்களை ஒன்றுபோல் நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி,பூண்டை தட்டி வைத்துக் கொள்ளவும்.
குக்கரில் எண்ணெயை விட்டுக் காய்ந்ததும் தாளித்துக் கொட்டக் கொடுத்தவைகளைப் போட்டு வறுக்கவும் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி,பூண்டு இஞ்ஜியைச் சேர்த்து வதக்கி, நறுக்கிய தக்காளியையும் சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கிய பிறகு காய்களையும்,பிரிஞ்ஜி இலையையும் சேர்த்து வதக்கவும். இதனுடன்அரிசிப்,பருப்பை நன்றாகக் களைந்து அதனுடன் மூன்று பங்கு அளவு தண்ணீரையும் சேர்க்கவும் துளி மஞ்சள்ப்பொடி வேண்டிய உப்பு சேர்த்து குக்கரில்…
View original post 108 more words
காராசேவு
இதுவும் மீள் பதிவுதான். பதினோரு வருஷங்களுக்கு முன்னர். பூண்டு பிடிக்காதவர்கள் அதை நீக்கிவிட்டுச் செய்யலாம். உங்கள் டேஸ்ட் எப்படியோ? அன்புடன்
நீண்ட நாட்களுக்குப் பிறகு தீபாவளிக்குள்ளாவது
ஏதாவது எழுதவேண்டும் என்ற நினைப்புடன்
வந்திருக்கிறேன். சுலபமாக எழுதவும், செய்யவும்
காராசேவு ஞாபகத்திற்கு வந்ததால் உடனே செய்தும்,
எழுதியும் போட்டிருக்கிறேன். நீங்களும் செய்து பாருங்கள்.
வேண்டியவைகள்.
கடலைமாவு—2 கப்
அரிசிமாவு—அரைகப்
சமையல் ஸோடா–கால் டீஸ்பூன்
மிளகாய்ப்பொடி—1 டீஸ்பூன்
உறித்த பூண்டு இதழ்கள்–3
லவங்கம்–2
ஏலக்காய்–1
கசகசா—2டீஸ்பூன்
வெண்ணெய்–1 டேபிள்ஸ்பூன்
ருசிக்கு–உப்பு
பொறித்தெடுக்க—தேவையான எண்ணெய்
செய்முறை—-மாவுகளைச் சேர்த்துச் சலிக்கவும்.
ஒரு தாம்பாளத்தில் உப்பு, ஸோடாஉப்பு, வெண்ணெய்
சேர்த்துத் தேய்த்துக் கலக்கவும்.
கசகசாவை ஊற வைத்து வடித்து. நறுக்கிய பூண்டுத்
துண்டுகள், ஏலம், லவங்கம்,மிளகாய்ப்பொடி சேர்த்து
சிறிது ஜலம் தெளித்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதைக் கரைத்து , மாவுடன் சேர்த்து
கெட்டியாக முறுக்கு பிழியும் பதத்தில் மாவைப்
பிசைந்து கொள்ளவும்.
தேன்குழல் பிழியும் அச்சில் பெரிய கண் கொண்ட
வில்லையைப் போட்டு மாவை நிரப்பிப் பிழிய வேண்டும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து மாவை
வட்டமான வடிவத்தில் பிழியவும்.
நிதான தீயில், ஓசை அடங்கும்வரை வைத்து
திருப்பிப்போட்டு எடுக்கவும்.
ஆறினவுடன் , துண்டங்களாக ஒடித்துக் கொள்ளவும்.
காற்றுப் புகாத டப்பாக்களில் வைத்து உபயோகிக்கவும்.
சேவு தேய்க்கும் உபகரணம் இல்லாததால் இப்படிச்
செய்வதே வழக்கமாகி விட்டது. நன்றாகவும் சுலபமாகவும்
இருக்கிறது. வேறு என்ன வேண்டும்.
மாவை நன்றாகப் பிசைவது அவசியம்.
வாழைக்காய் பொடித்தூவல்.
இதுவும் எப்போதோ போட்ட குறிப்புதான். தேங்காய் சேர்ப்பதால் எண்ணெய் இன்னும் கூட குறைத்து விடலாம். பொடிவேறு. பொடித்தூவல் வேறுதான். பாருங்கள் அன்புடன்
வாழைக்காய் பொடித்தூவல்ன்னு பேர். ஆனால் எந்தப்
பொடியும் தூவாமல் செய்ததுதான் இது.
தேங்காய் சேர்த்து செய்வதுதான் இதன் விசேஷம். இதை
வெறும் ஒரு வாழைக்காயில் செய்தேன்.
ப்ளாகையும் பார்த்துவிட்டு வரட்டுமே என்று ஒரு
போட்டோ.!!!!!!!!! பாருங்கள் நீங்களும்.
வேண்டிய ஸாமான்கள்.
நல்ல முற்றிய மொந்தன் வாழைக்காய்.—1
தேங்காய்த் துருவல்—-கால்கப்
பச்சைமிளகாய்—-2 பொடியாக நறுக்கவும்
உப்பு–ருசிக்கு
இஞ்சி சிறிது-தட்டிக் கொள்ளவும்.
எண்ணெய்—-2 டேபிள்ஸ்பூன்
தாளித்துக்கொட்ட—கடுகு,உளுத்தம் பருப்பு,கடலைப் பருப்பு. சிறிது
புளி –சிறிது. காய் கறுக்காமலிருப்பதர்கு
செய்முறை—–வாழைக்காயை, நடுவில் இரண்டாக நறுக்கித் தண்ணீரில் போட்டு வைக்கவும்.
புளியைக் கரைத்துவிட்டு மேலும் அதிக ஜலம் சேர்த்து-
கொதிக்க வைத்து அதில் நறுக்கிய இரண்டு துண்டு
வாழைக்காயைச் சேர்த்து வேக விடவும். தோலுடன்தான்.
காய் முக்கால்பதம் வந்தவுடன் , காயை வடிக்கட்டி எடுத்து
விடவும் காய் ஆ றியவுடன்,பழம் உரிப்பது போல தோலை
உரிக்கவும்.
சுலபமாக வந்து விடும்.
காயை நன்றாக உதிர்த்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு பருப்பு
வகைகளைத் தாளித்துக் கொட்டி, நறுக்கிய மிளகாய்
இஞ்சியை வதக்கி உதிர்த்த வாழைக்காயை உப்பு சேர்த்து
வதக்கவும்.
தேங்காய்த் துருவலைச் சேர்த்து வதக்கி இறக்கவும்.
வேண்டியவர்கள் சிறிது எலுமிச்சைத் துளிகளைச்
சேர்க்கலாம்.
நல்ல ருசியாக இருக்கும். இது ஒருவகை. தேங்காய்
எண்ணெயிலும். தாளிக்கலாம்.
கறிவேப்பிலை மறக்க வேண்டாம்.சிலர் வெந்த பருப்பையும்
பிழிந்து போடுவார்கள். உங்களுக்குப் பிடித்ததைச்
செய்யலாம்.
கார கதம்பம்.
இந்தக் காரகதம்பம் தெரிந்தவர்கள் சொல்லி நான் செய்து பார்த்தேன்.அப்போது படம் எடுத்து,சேர்க்க எல்லாம் எனக்குத் தெரியாது.செய்தோம்,சாப்பிட்டோம். பதிவும் போட்டோம் என்ற அளவில்தான். ஃபிரிஜ்லே மீதி இருந்த காய்கறிகளைக் கொண்டு செய்தது. நீங்களும் ருசித்துப் புசியுங்கள். அன்புடன். கார கதம்பத்தை
வாங்கி மிகுந்த காய் கறிகளிலோ அல்லது வாங்கி வந்த
அன்றோ சிறிது விதவிதமான காய் கறிகளில் இதைத்
தயாரிக்கலாம்.காரட்,கத்திரி, வாழைக்காய்,காப்ஸிகம்,
பீட்ரூட்,உருளைக் கிழங்கு என கலந்து மெல்லிய
வட்டங்களாக இரண்டு கப் அளவிற்கு நறுக்கி வைத்துக்
கொள்ளவும்.
மேலும் வேண்டியவைகள்.——கடலைமாவுஅரைகப்.
அரிசிமாவு——–4 டீஸ்பூன்
நெய்——–3 டீஸ்பூன்
ஒரு துளி ஸோடாஉப்பு
ருசிக்கு–உப்பு
பெருங்காயம்—சிறிது
பொரிக்க எண்ணெய்
செய்முறை—–நறுக்கிய காய்கறித் துண்டுகளில்
இரண்டு ஸ்பூன் எண்ணெய், நெய்,உப்பு,ஸோடா
பெருங்காயம்,காரம் சேர்த்து நன்றாகப் பிசிறவும்.
அதன் பின் காய்க் கலவையில் மாவைத் தூவி
பகோடா பக்குவத்தில் சிறிது ஜலம் தெளித்து
மாவைக் கலக்கவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து,பிசிறி
வைத்திருக்கும் கலவையை கையால் பிரித்துப்
போட்டு, சிவக்க, கரகரப்பாகப் பொரித்து எடுக்கவும்.
பலவித ருசிகளில் நன்றாக இருக்கும்.
மாவு கலக்கும் போது அதிக தண்ணீர் விடாமல்
சரிவரக் கலக்கவும்.
சோம்புக்கீரை பக்கோடா
இது சோம்புக்கீரையில் செய்தது. என்ன ரீப்ளாக் செய்யலாம் என்று பார்த்த போது காரகதம்பம் செய்ய நினைத்தேன். அதில் படம் எதுவும் இல்லை. இதை முதலில் போட்டுவிட்டு அதை திங்களன்று போடுவோம் என்று விட்டு விட்டேன் கதை பேசுகிறேனா?இதை முதலில்ப் பாருங்கள். அன்புடன்
அதிசயமாக நானும் கடைக்கு வருகிறேன். காய்கறிகளை
ஒட்டு மொத்தமாக பார்த்தால் ஏதாவது புதுசா யோசனை
தோன்றும். எங்கேயும் போகாதவர்கள் சொன்னால் ,ஸரி
வா பாட்டி நீ கடையில் ஏறி இறங்கினால்ப் போதும்.
வா என்று உறுதியாகக் சொல்லவே நான்கிளம்பிப்
போய் கடையில் இறங்கியும் ஆயிற்று.
எல்லா காய்களையும் பார்த்து இதில்,அது செய்யலாம், அதில்
இது செய்யலாம் யோசனை போய்க்கொண்டே இருந்ததே
தவிர ப்ராக்டிகலாக ஒன்றுமில்லை.
மளமளவென்று மாமூலாக வாங்கும் காய்களுக்கு லிஸ் ட்
சொல்லிவிட்டு,கீரை வகைகளைப் பார்த்தால் ,பெருஞ்சீரகக்
கீரை,இன்னும் பலகீரைகள் வகைவகையாகக் கொட்டிக்
கிடந்தது.பெருஞ்சீரகக் கீரைதான் சோம்புக்கீரை.
பெங்களூர், காட்மாண்டு, ஜெனிவாவில் இதை வாங்குவது உண்டு.
கர்நாடகாவில் ஃபேமஸ் இந்தக்கீரை. பாணந்தி,அதாவது
பெண்களுக்கு பிரஸவத்திற்குப் பிரகான காலத்தில்
பத்தியச் சமையலுக்கு இது மிகவும் நல்லது என்று சொல்லக்
கேட்டிருக்கிறேன்.
சின்னக் கட்டாக ஒன்று வாங்கி வந்தேன்.
இங்குள்ள பேத்திகள் விரும்புவார்களே மாட்டார்களோ என்ற
யோசனையும் வேறு.
குறுக்கு வழியாக இட்டிலிக்கு அறைத்த உளுந்து மாவில்
ஒரு அறைக் கிண்ணம் எடுத்தேன்.
அது ஜலம் விட்டு அறைத்த மாவு இல்லையா?
அது கொண்ட வரையில் கடலை மாவைத் தூவி ப் பிசறினேன்.
பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய்,உப்பு,இஞ்சி
முதலானவைகளைச் சேர்த்து, நன்றாக ஆய்ந்து நறுக்கிய
சோம்புக் கீரையையும் சேர்த்துப் பிசறி , எண்ணெயைக்
காயவைத்து அதில் மாவைக் கிள்ளி பகோடாக்களாகப்
போட்டு சிவக்கவிட்டுப் பொறித்தெடுத்தேன்.
View original post 65 more words
அரைக்கீரை மசியல்.
இந்த அரைக்கீரை மசியல் பூண்டு வெங்காயம் சேர்த்துச் செய்தது. வெங்காயம்,பூண்டு பிடிக்காதவர்கள் தேங்காயைச் சேர்த்து அரைத்துச் செய்யலாம். பாருங்கள். இதுவும் ஒரு ருசிதான். அன்புடன்
இந்தக்கீரையும் ருசியானதுதான்.பார்ப்போம்.
வேண்டியவைகள்
அரைக்கீரை—ஒருகட்டு
கீரையை ஆய்ந்து அலசி ப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
தக்காளிப்பழம்—ஒன்று
பச்சைமிளகாய்—2
நறுக்கிய வெங்காயம்—சிறிது
பூண்டு இதழ்—-4
மிளகு—அரை டீஸ்பூன்
சீரகம்—-1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு—1 டீஸ்பூன்
பயத்தம் பருப்பு—-2 பிடித்தபிடி
எண்ணெய்—-1டேபிள்ஸ்பூன்
செய்முறை.
பருப்பைச் சற்று வறுத்துக் களைந்து கீரையையும் வடிக்கட்டிச்
சேர்த்து திட்டமான தண்ணீருடன் ப்ரஷர் குக்கரில் வேக
வைத்து இறக்கவும்.
2 விஸிலே போதுமானது.
உளுத்தம் பருப்பையும், மிளகையும் சிறிது எண்ணெயில் வறுத்து
நறுக்கிய தக்காளி, பச்சைமிளகாய்,பூண்டு, வெங்காயம் சேர்த்து
வதக்கவும்.
சீரகம் சேர்த்து மிக்ஸியில் அறைத்துக் கொள்ளவும்.
வெந்த பருப்புடன் கூடிய கீரையை நன்றாக மசிக்கவும்.
அறைத்த விழுதைக் கொட்டி உப்பு சேர்த்துக் கொதிக்க
விடவும். மசியலாக பதத்தில் இறக்கவும்.
கடுகு தாளித்துக் கொட்டவும்.
தேங்காயும் வேண்டுமானால் அறைக்கும் போது சேர்க்கவும்.
நொய் புளி உப்புமா அல்லது புளிப் பொங்கல்.
இதுஒரு பழையகாலத் தயாரிப்பு.ஸாதாரணமாக வெங்காயம் சேர்க்க மாட்டார்கள். இது வேலை செய்பவர்களின் சாய்ஸ். இன்னும் வேண்டியவைகளைச் சேர்த்து செய்து பாருங்கள்.அன்புடன்
கிராமங்களில் அடிக்கடி செய்யக்கூடியது இந்தவகை. யாவரும் நெல்லை
மிஷினி்ல் கொடுத்து அரிசியாக செய்து வரும்போது எப்படியும் சிறிதளவாவது
அரிசி இடிந்து நொய்யாக அதாவது குருணையாக மாறும். அதைத் தனியாக
எடுத்துப் பல விதங்களில் உபயோகப் படுத்துவார்கள். புழுங்கலரிசியில் அதிகம்
நொய் விழுவதில்லை. நான் எழுத ஆரம்பித்ததிலிருந்தே இந்தப் புளி உப்புமாவை
எழுத நினைத்தும் ஒன்று நொய் கிடைப்பதில்லை. இவ்விடம்
வரும்போது கவனத்தில் வருவதில்லை. இந்த ஸமயம் எல்லாம்
கூடி வந்தது. வகையாகவும் அமைந்தது. இது என்ன மஹாப்பெறிய
வஸ்துவென்று நினைக்கலாம். இங்கே சென்னையில் வீட்டைச் சுற்றி
பெயின்டிங் வேலை நடைபெற்றது. வேலையாட்கள் மிகவும் தூரத்திலிருந்து
வருவதால் அவர்களுக்கு டிபன், சாப்பாடு வீட்டிலேயே செய்து
கொடுத்தார்கள். இதில் நானும் இந்த உப்புமாவைச் செய்யும்படி சொல்லி
ஞாபகப்படுத்திக் கொண்டேன். எனக்கு உங்கள் யாவருடனும் அதைப்
பகிர்ந்து கொள்வதுதானே முக்கியக் காரணம். புளிப்பொங்கல் எனக்கு
ரொம்பவே பிடித்திருந்தது. கதையில்லை நிஜம் இது. சிறிய அளவில்
வேண்டியதைப் பார்ப்போம்.
வேண்டியவைகள்—
அரிசி நொய்–2 கப்
புளி—ஒரு கெட்டியான பெரிய நெல்லிக்காயளவு.
நல்லெண்ணெய்—2 டேபிள்ஸ்பூன்
கடுகு—அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு—வகைக்கு 2டீஸ்பூன்கள்
மிளகாய்வற்றல்—3
வெந்தயம்–கால் டீஸ்பூன்
பெருங்காயம்–ஒரு சிறிய கட்டி
ருசிக்கு—உப்பு
தேவைக்கேற்ப—வெங்காய, பூண்டுத் துண்டங்கள்
கறிவேப்பிலை—10 அல்லது 15 இலைகள்
சிறிது மஞ்சள்ப் பொடி
செய்முறை—
நாம் இதை ரைஸ் குக்கரிலேயே செய்வோம். மிகவும் சுலபம்
அரிசி நொய்யைக் களைந்து கல்லில்லாமல் அறித்தெடு்த்து தண்ணீரை
வடிக்கட்டவும்.
புளியைத்…
View original post 118 more words
பன்னா. மாங்காஜூஸ்
மாங்காய் ஸாம்பாரைத் தொடர்ந்து ஜூஸ் வருகிறது. இதுவும் மீள் பதிவுதான். செய்து பருகுங்கள். எப்படி இருக்கிறது. அன்புடன்
ஒரு மாங்காய் உபயோகிக்காமல் இருந்தது. அதையும்
உபயோகிக்கலாம் என்ன செய்யலாம்? மாங்காய் ஜூஸ்
ஸுமன் செய்வது ஞாபகத்திற்கு வந்தது. செய்தாச்சு.
குடித்தும் ஆச்சு. பகிர்ந்து கொள்வதுதானே என் பழக்கம்.
இதையும் பாருங்கள். பருகுங்கள்.
வேண்டியவைகள்
அதே புளிப்பில்லாத கிளிமூக்கு மாங்காய்—ஒன்று
வேறு வகையானாலும் அதிகம் புளிப்பில்லாத மாங்காயானாலும்ஸரி.
சர்க்கரை—-4 டீஸ்பூன்.வேண்டிய அளவு அதிகறிக்கவும்.
ஏலக்காய்–1 பொடிக்கவும்.
காலா நமக்கென்று சொல்லும் உப்பு அரை டீஸ்பூன்.
இஞ்சி வாஸனைக்குத் துளி
புதினா—4 இலைகள்
செய்முறை
மாங்காயை அப்படியே முழுதாக குக்கரில் வேகவைத்து
எடுக்கவும்.
பருப்பு வேகவைக்கும் போது மேலே ஒரு பாத்திரத்தில்
துளி தண்ணீருடன் மாங்காயை வைத்தாலும் ப்ரஷரில்
நன்றாக வெந்து விடும்.
ஆறினவுடன் மாங்காயின் தோலையும் கொட்டையையும்
எடுத்து விடவும்.
இப்போது மாங்காயின் உட்பகுதியை கரண்டியினாலோ,
க்ரஷ்ஷரினாலோ நன்றாக மசிக்கவும்.
2 கப் குளுமையான தண்ணீர் விட்டுக் கறைத்து பெறிய
கண்உடைய சல்லடையிலோ, வடிக்கட்டியிலோ வடிக்கட்டவும்.
சர்க்கரை, காலாநமக்,ஏலக்காய் ஒன்று சேர்த்துக் கலக்கவும்.
இஞ்சித் துருவலில் 1 ஸ்பூன் தண்ணீர் சேர்த்துப் பிழிந்து
கலக்கவும்.
ருசி பார்க்கவும்.
புளிப்புக்கு ஏற்ற ஜலம் சேர்க்கவும். இனிப்பும் அப்படியே.
புதினா இலையைச் சற்று கசக்கினாற்போல தயாரான ஜூஸைக்
கண்ணாடித் டம்ளரில்விட்டு மேலே அலங்கரித்துக் கொடுக்கவும்.
எடுத்து விட்டு குடிக்கட்டும்.ஐஸ் கட்டிகளைச் சேர்க்கவும்.
இங்கே புதினா முடிந்து விட்டது. போடாவிட்டால் கூட ருசியாக
இருந்தது.
View original post 2 more words
அரைத்துவிட்ட மாங்காய் ஸாம்பார்.
இதுவும் பத்து வருஷங்களுக்கு முன்னர் பதிவிட்டதுதான். மாங்காய் ஸீஸன் ஆயிற்றே. பிடித்தவர்கள் அவர்களுக்குப் பிடித்தபடி செய்து ருசியுங்கள். அன்புடன்
இந்த ஸாம்பாரும்அதிகம் புளிப்பில்லாத மாங்காயில் செய்தால்
மிகவும் நன்றாக இருக்கும். ஒட்டு மாங்காயான கிளி மூக்கு மாங்காயில் செய்ததுதான் இந்த ஸாம்பாரும்.
காயை நறுக்கி வாயில் போட்டுப் பார்த்தால் புளிப்பைப் பற்றி
எவ்வளவு என்று தானாகவே தெறிந்து போகும்.
அதற்கேற்றார்போல் உப்புக் காரம் சேர்க்கலாம். ஸரி
இப்போது நாம் ஒரு திட்டமான மாங்காய்க்குண்டானதைப்
பார்ப்போம்.
வேண்டியவைகள்
மாங்காய்—-திட்டமான சைஸில்—-ஒன்று
துவரம் பருப்பு—அரைகப்
மிளகாய் வற்றல்—5அல்லது 6
பச்சை மிளகாய்—1
நல்லெண்ணெய்—2 டேபிள்ஸ்பூன்
தனியா—-1 டேபிள்ஸ்பூன்.
மிளகு—7,8 மணிகள்
அரிசி—1 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல்—கால்கப்
தாளித்துக் கொட்ட—கடுகு,வெந்தயம், பெருங்காயம்.
வாஸனைக்கு—கொத்தமல்லி, கறிவேப்பிலை.
விருப்பப் பட்டால் பாதி கேப்ஸிகம்
ருசிக்கு—-உப்பு
செய்முறை.
துவரம் பருப்பைக் களைந்து திட்டமாக தண்ணீர் விட்டு மஞ்சள்பொடி
சேர்த்து ப்ரஷர்குக்கரில் நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.
சிறிது எண்ணெயில் மிளகாய் ,தனியா, அரிசி, மிளகை வறுத்து
,அதனுடன் தேங்காயையும் வதக்கி இறக்கவும்.
ஆறியவுடன் மிக்ஸியில் சிறிது ஜலம் தெளித்து அறைத்து
எடுக்கவும்.
மாங்காயைக் கொட்டை நீக்கி துண்டங்களாகச் செய்து கொள்ளவும்.
கேப்ஸிகம், பச்சைமிளகாயு், மாங்காயுடன் வேண்டிய உப்பு சேர்த்து
குழம்பு வைக்கும்பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
மாங்காய் வெந்தவுடன் அறைத்த விழுதைச் சேர்த்து ஒரு கொதி
விடவும்.
வெந்த பருப்பைக் கரைத்துச் சேர்த்து பின்னும் நன்றாக கொதிக்கவிட்டு
இறக்கவும்.
நல்லண்ணெயில் கடுகு, வெந்தயம், பெருங்காயம் இவைகளைத்
தாளித்துக் கொட்டி, கறிவேப்பிலை, கொத்தமல்லி …
View original post 40 more words













