வெந்தய பருப்புக் குழம்பு.
காய்கள் விரும்பியதைப் போட்டுச் செய்யுங்கள்.
Continue Reading ஜூன் 16, 2017 at 5:50 முப 40 பின்னூட்டங்கள்
டால்வகையில் வெள்ளைக் காராமணி.
டால்வகையில் இதுவும் ஒன்று. வெள்ளைக் காராமணி. படியுங்கள். ருசியுங்கள். அன்புடன்
நாம் அநேகமாக சுண்டல்,கூட்டுமுதலானவைகள்தான் இதில் அடிக்கடி செய்வோம். அதிலும் இனிப்புப் போட்ட சுண்டல்தான் வெகு இடங்களில். என் நாட்டுப்பெண் இந்த டாலை பூரி,ரொட்டிகளுக்காகவும்,சாதத்துடனும் ஒரு மாற்றத்திற்காகச் செய்வாள் . அப்படிச் செய்தது தான் இதுவும். பூரியும் இருக்கிறது. எது வேண்டுமோ எடுத்துக் கொள்ளலாம்.
தட்டப்பயறு,காராமணி, பெரும்பயறு என்று பலவிதப் பெயர்களில் பல வகைகள் கிடைக்கிறது. இது ப்ளாக் ஐ பீன்ஸ் என்று சொல்லப்படும் வெள்ளைக் காராமணி. ஹிந்திியில் Bபோடி
காராமணி,கத்தரிக்காய்,பலாக்கொட்டை இவைகள் சேர்த்துச் செய்யும் கூட்டு ருசியானது. இதில் பலாக் கொட்டை இல்லை. இதுவும் தானாக வருகிறது.
நாம் இப்போது டால் செய்வதைப் பார்க்கலாம்.
வேண்டியவைகள். டால் செய்வதற்கு–
வெள்ளைக்காராமணி—1 1/2 கப்,
வெங்காயம்–திட்டமானசைஸ்–2 பூண்டு இதழ்–4. இஞ்சி அரை அங்குலத் துண்டு.
பழுத்த தக்காளி–2
பொடிக்க —மிளகு–1டீஸ்பூன், லவங்கம்–4, பட்டை சிறிதளவு, ஏலக்காய்–1
பொடிகள்–மிளகாய்ப்பொடி—1டீஸ்பூன், தனியாப்பொடி—-2 டீஸ்பூன், மஞ்சள்பொடி–1டீஸ்பூன்
தாளிக்க —எண்ணெய்,நெய் வகைக்கு ஒரு டேபிள்ஸ்பூன். சீரகம்—1டீஸ்பூன்
கொத்தமல்லி, எலுமிச்சை ஒரு பாதி. ருசிக்கு—உப்பு.
செய்முறை.
வெள்ளைக்காராமணியை தண்ணீரில் நன்றாகக் களைந்து நான்கு மணி நேரம் ஊறவிடவும்.
வெங்காயம்,பூண்டு,இஞ்சி இவைகளைச் சுத்தம் செய்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
தக்காளியைத் தனியாக பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அல்லது அரைத்துக் கொள்ளவும்.
பொடிக்கக் கொடுத்தவைகளை முடிந்தவரை பொடிக்கவும்.
காராமணியின் தண்ணீரை நீக்கிவிட்டு மூன்று கப் தண்ணீரைச் சேர்த்து மஞ்சள் பொடியுடன் குக்கரில் நேரிடையாக மிதமான தீயினில் இரண்டு விஸில்வரும்வரையில் வைத்து இறக்கி விடவும்.
View original post 80 more words
குதிரைவாலி அரிசியில் குழி அப்பம்.
சிறுதானியவகையின் குழி அப்பம் இது. நான் எழுதியபோது இது புதுவகை. செய்து பாருங்கள் அன்புடன்
குதிரைவாலி அரிசியின் உப்பு,வெல்ல அப்பங்கள்.
விண்டுப் பார்த்து சுளைசுளையாக இருக்கா? ஸரியான பதந்தான். அதுவும் கூட இருக்கிறது.
எல்லா இடத்திலும் இப்போது சிறுதானியங்களின் உபயோகம் பிரபலமாகிக்கொண்டு வருகிறது. எல்லாவகை சிறுதானியங்களும்,மேலும் அதிக ஸாமான்களை/யும்க கொண்டு கஞ்சி மாவு தயாரிப்பது என்பது யாவர் வீட்டிலும்,பிரபலமாகிக்கொண்டு வருகிறது. அளவுகளில் சற்றேறக்குறைய வித்தியாஸங்கள் இருந்தாலும் மிகவும் எளிமையாக யாவரும் தயாரித்துச் சாப்பிடுகிறார்கள். எங்கள் பெண்ணின் வீட்டிலும் இது மிகவும் பிரபலம். வயதானவர்கள், அதிகம் பொருப்புகளை வகிக்கும் நடுத்தர வயதினர் என யாவருக்கும் நல்ல,ஸத்தையும்,ஆரோக்யத்தையும் அளிக்கிறது.
கரண்டியால் அளந்து தானியங்கள் போடுவதில்லை. கடையிலிருந்து பாக்கெட்.பாக்கெட்டாக வாங்கிவந்து வறுத்து அரைப்பதுதான். அவியலின் காய்கள் போல , இதில் இல்லாத தானியங்களே கிடையாது. பார்க்காத சிறுதானியங்களைக்கூட ,சென்னையில் கிடைப்பதை வாங்கி வந்ததைப் பார்த்த போதுதான் எனக்கும் சில தானியங்கள் எப்படியிருக்கும் என்று தெரிந்தது. சொன்னால் இவ்வளவா என்று மலைத்துப் போகும் அளவிற்கு தானியங்கள். நானும் அந்த ஸத்து மாவின் சக்தியை அரிந்துகொண்டு சாப்பிட்டு வருகிறேன்.. மாவு போஸ்டில் வந்து விடுகிரது. அந்தப்பெயர்களின் பட்டியலைப் பாருங்கள். பல படங்களையும் பாருங்கள்.
தினை, சாமை மேல்வரிசை, கீழ் வரிசை வரகரிசி, கொள்ளு அடுத்து
இன்னும் சில படம் 2மேல்வரிசை–கேழ்வரகு, கம்பு அடுத்து ஜெவ்வரிசி, சம்பா கோதுமை,நடுவில் பார்லி, இன்னும் படத்தில் இல்லாதவைகள் மக்காச் சோளம்,பொட்டுக்கடலை,புழுங்கலரிசி,பாதாம், குதிரைவாலி அரிசி, ஏலக்காய், போதுமா ஸாமான்.?
நல்ல சுத்தமாகக் கிடைக்கும் ஸாமான்களை வாங்கி அப்படியே …
View original post 269 more words
பிகாஸோ ஓவியங்கள்
பார்த்து ரஸிக்க பிகாஸோவின் படங்கள் மீள் பதிவாக வருகிறது.ரஸிக்கவும். அன்புடன்
உங்களிடம் சில வார்த்தைகள்—கேட்டால் கேளுங்கள்.
இந்தப்பதிவு அவர்கள் உண்மைகள் என்றமதுரைத் தமிழன் அவர்களின் வலைப்பதிவிற்காக நான் எழுதிய தொடர்க்கட்டுரையின்மீள்பதிவு. திரும்பவும்தான் வாசியுங்களேன். மிக்க நன்றி. அன்புடன்
இந்தத் தொடர் பதிவு அவர்கள் உண்மைகள் தளத்தின் மதுரைத்தமிழன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் அவர்கள் என்னையும் எழுத அழைக்க , ,நான் இங்கே—- வயதானவர்களின் நினைவலைகள்தான். இது.
ஏன் இதிலும் ஏதாவது நல்லது இருக்கக் கூடும் அல்லவா என்று தோன்றியது. ஏதோ ஒரு சில வார்த்தைகள்தான் இது என்றும் தோன்றியது.
இவ்வளவு பெரிய முதியவள் என்ன ஆசீர்வாதம் செய்வாள் வேறு என்ன வார்த்தைகள் சொல்லப்போகிறாள் என்றுதானே நினைக்கத் தோன்றும்?
எங்கள் காலத்தில் எப்படியெல்லாம் புத்தி சொல்லப்பட்டது என்றும் அதைக் கடைபிடிக்க முடிந்ததா என்றும் பாருங்கள். எங்கள் காலத்திலேயே நாங்கள் ஒரு ஐம்பது வயது உள்ளவரின் மூன்றாம் மனைவியின் வாரிசுகள். எங்கள் பெரியம்மாக்கள் போனபின்தான் எங்கள் அம்மா.குறைவாக மதிப்பிடாதீர்கள். அந்தக் காலத்தில்
அடி அமக்களமெல்லாம் மார்க் குறைவாக வாங்கி விட்டால் பிள்ளைகளுக்குக் கிடைக்கும். நாங்களெல்லாம் பெண்கள். நன்றாக மார்க் வாங்கி விடுவோம்.
பெண்களெல்லாம் உயர்வு. அவர்களை ஒன்றுமே சொல்ல மாட்டார்கள். நாங்கதான்பலி. எங்களைக் கண்டாலே மார்க் கம்மியானவர்கள் கரித்துக் கொட்டுவார்கள். அவங்களைத் தாஜாசெய்ய நமக்குக் கிடைக்கும் எதிலும் போனா போகிறது என்று பங்கு கொடுக்கவேண்டும். அவன் கிட்டிப்புள் விளையாடினாலும் இல்லையே அவன் படித்தானே என்று சொல்ல வேண்டும். இது பெண்களின் பொதுவான நிலை.
அப்பா நன்றாகப் படித்தவர். பழைய காலத்தவர்.பழமை விரும்பிதான். அவர் செய்பவற்றைக் குறைகூற முடியாது. அந்தநாட்களில் மனைவிக்குச் சுதந்திரம் பேச்சில் கூட கொடுக்காதவர்களின் குரூப்பைச் சேர்ந்தவர். மற்றவர்கள் சொல்வார்கள்.
View original post 478 more words
ஃப்ரூட்சாட்.
நான்கைந்து வருஷங்களுக்கு முன்னர் ஜெனிவா வந்திருந்தபோது எழுதினது. அப்போது கிடைத்த பழங்கள் இது.மீள்பதிவிற்கு கிடைத்த பதிவு இது. ஸீஸனுக்குத் தகுந்தாற்போல பழங்களை மாற்றிச் செய்யுங்கள். ருசி உங்கள் கையில்தான். அன்புடன்
எல்லாவித பழங்களும் வீட்டில் இருந்தது. தில்லியில் கடைகளில், ஃப்ரூட் சாட் கிடைக்கும். வெந்த உருளைக்கிழங்கின் துண்டுகள் கூட போட்டுப் பார்த்திருக்கிறேன். இது பழங்களைமட்டும் சேர்த்துச் செய்தது. என் மருமகள் என்ன வேண்டுமோ எல்லாம் செய்து கொடுக்கிறாள்.
வீட்டில் தனியாகப் பொழுது போக வேண்டுமே.!
முடிந்தபோது எழுதுகின்றேன். அவ்வளவுதான்.
வேண்டியவைகள்.
நான் எவைகளைச் சேர்த்தேன் என்பதுதான் இது.
அவ்வப்போது கிடைக்கும் பிராந்தியப் பழங்களைக் கொண்டு ஸீஸனுக்குத் தகுந்தாற்போலத் தயாரிக்கலாம்.
சிறிய வாழைப்பழம்—1, ஆப்பிள் –1, கிவி—1, பப்பாளி நறுக்கியது –1கப், திராக்ஷை—அரைகப், துண்டுகளாக்கிய அனாசிப்பழம்–அரைகப், மாதுளை முத்துகள் அரைகப், ஆரஞ்சுச் சுளைகள் தோல்நீக்கியது –அரைகப்.
புளிப்பில்லாத தயிர்—1கப், வறுத்துப் பொடிசெய்த சீரகப்பொடி–அரை டீஸ்பூன், தேன் ஒரு டீஸ்பூன், சாட்மஸாலா—அரைடீஸ்பூன், உப்பு அரை டீஸ்பூன், இந்துப்பு அதாவது காலாநமக் என்று சொல்லுவது ஒரு சிட்டிகை.
செய்முறை—- பழங்களை அழகாக சீராக நறுக்கி , ஃபிரிஞ்ஜில் சிறிதுநேரம் ஒரு பவுலில் வைத்து எடுக்கவும். தயிரையும் வைக்கவும்.
வாயகன்ற பவுலில் உள்ள பழங்களின் மீது, தயிரைப் பரவலாக விட்டு, மேலே பொடிகளைத் தூவவும். தேனையும் கலக்கவும். அருமையான சாட் ரெடி.
நன்றாகக் கலந்து அழகிய கிண்ணங்களில் போட்டு, ஸ்பூனுடன் சாப்பிடக் கொடுக்கவும்.
ருசித்தீர்களா?
பச்சை சுண்டைக்காய் மெந்தியக் குழம்பு.பலாக் கொட்டையுடன்.
மிகவும் ஸிம்பிளாக ஒரு வெந்தயக் குழம்பு. படங்கள்கூட அவ்வளவு ஸரியாக இல்லை. ருசிதானே நமக்கு வேண்டும். ரஸிக்கவோ புசிக்கவோ எதுவானாலும் ஸரி. மீள்பதிவு. எனக்கு ஒரு மனநிம்மதிக்கான பதிவு. அன்புடன்
வெந்தயக் குழம்பைத்தான் நாங்கள் மெந்திக் குழம்பு என்று பேச்சு
வழக்கில் சொல்லுவோம்.
துவாதசி சமையலில் சுண்டைக்காயும் ஒரு முக்கியமான இடத்தை
வகிக்கிறது.
சென்னையில் சுண்டைக்காய் சுலபமாக கிடைத்ததால் குழம்பும்
செய்து, சுண்டைக்காய்ப் பருப்புசிலியும், ப்ளாகில் போட செய்தும்,
படமெடுத்தும் வைத்திருக்கிறேன். சுலப முறையை எழுதுகிறேன்.
பருப்புசிலியைப் பின்னாடி பார்ப்போம். பலாக்கொட்டையும் பழ
சீஸனானதால் கிடைத்ததைச் சேர்த்துப் போட்டு ச் செய்தேன்.
இப்போது குழம்பிற்கு வேண்டியதைப் பார்ப்போமா?
வேண்டியவைகள்
புளி ஒரு சின்ன எலுமிச்சையளவு.
தாளித்துக்கொட்ட—கடுகு—அரைடீஸ்பூன்
உளுத்தம்பருப்பு—1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு—2 டீஸ்பூன்
வெந்தயம்—1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல்—-1
நல்லெண்ணெய்—3 டேபிள்ஸ்பூன்
பெருங்காயப்பொடி—அரை டீஸ்பூன்
வெல்லம்—சிறிது
ருசிக்கு—உப்பு
ஸாம்பார்ப் பொடி—3 டீஸ்பூன்
அரிசிமாவு—ஒரு டீஸ்பூன்
முக்கியமான பச்சை சுண்டைக்காய்—கால்கப்
இருந்தால் பலாக்கொட்டை—7 அல்லது 8
கறிவேப்பிலை—சிறிது.
செய்முறை
புளியை 2 கப் ஜலம் விட்டுக் கறைத்துக் கொள்ளவும்.
பச்சை சுண்டைக்காயை காம்பு நீக்கி நன்றாக நசுக்கித்
தண்ணீரில் அலசவும்.
விதைகள் ஓரளவிற்கு வெளியேறும். வடிக் கட்டவும்.
பலாக் கொட்டையையும் மேல் தோல் நீக்கி உட் பருப்பைத்
துண்டுகளாகச் செய்து கொள்ளவும்.
குழம்புப் பாத்திரத்தில் எண்ணெயைக் காய வைத்து, கடுகு
வெந்தயம்,பருப்புகள்,பெருங்காயம்,மிளகாய் இவைகளைத்
தாளித்துக் கொட்டி, சுண்டைக்காயைச் சேர்த்து நிதான தீயில்
நன்றாக வதக்கவும்.
சுண்டைக்காய் வதங்கியதும், ஸாம்பார்ப் பொடியைச் சேர்த்துச்
சற்றுப் பிரட்டி புளி ஜலத்தைச் சேர்க்கவும்.பலாக் கொட்டையையும்
உப்பையும் சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.
துவாதசி சமையல் ஆனபடியால் பூண்டு, வெங்காயம்
View original post 57 more words
மூலிகைப்பொடி.
மூலிகைப்பொடி. மலைக்காதீர்கள். சித்ரகூடம் போகவேண்டாம். வீட்டு மூலிகைகள்தான்.சற்று அக்கரையாகச் செய்தேன். மிகவும் ருசியாக வந்தது. இதுவும் மீள் பதிவுதான். பாருங்கள் அன்புடன்
பச்சென்று பார்க்க அழகாகவும், வாய்க்கு ருசியாகவும் அமைந்த பொடி
இது. செய்வதும் ஸுலபம்தான். மனம் விரும்பிச் செய்தால் ஒரு
நிமிஷத்தில் செய்து விடலாம்.
கறிவேப்பிலை, புதினா, சில எலுமிச்சை இலைகள் நல்ல வாஸனை
ஆன ஸாமான்களாதலால் இன்னும் ஸாமான்களுடன் மிக்க நன்றாக
அமைந்தது.
மோர்க்குழம்பு, பச்சடி,வற்றக்குழம்பு என சற்றுப் புளிப்பு ருசியுடன் கூடிய
வகைகளைத் தொட்டுக்கொண்டு சாப்பிட கூடுதல் ருசி வரும்.
சாப்பிட நேர்த்தியாக உள்ளது.
சென்னையில் கறிவேப்பிலை ஒருநாள் அதிகம் கிடைத்தது.
புதினாவும் அதிகப்படி இருந்ததைக் காயவைத்திருந்தேன் முதல் நாள்.
காய்ந்த புதினா, பச்சை கறிவேப்பிலை
இந்த மூலிகைப்பொடியைச் செய்தேன். ருசியும் பார்த்தேன்
நீங்களும் செய்து பார்க்கலாமே என போட்டோவும் எடுத்தேன்.
எதைச் செய்யலாம்,எதை எழுதலாம் என்ற எண்ணம் ஸொந்த வலைப்பூ
வைத்திருப்பதால் அதிகம் தோன்றுகிறது.
ஸமயத்தில் இது ஒரு தொத்து வியாதி போலக்கூடத் தோன்றுகிறது.
பார்ப்போம். இதுவும் எவ்வளவு தூரம் போகிறதென்று.
ஸரி ஸாமான்களைப் பாருங்கள்.
வேண்டியவைகள்.
பச்சை கறிவேப்பிலை—இரண்டுகப்.
புதினா இலை காயவைத்தது—அரைகப்,அல்லது இருப்பதைப் போடவும்.
எலுமிச்சை,அல்லது நாரத்தை இலை—5 அல்லது 6. இல்லாமலும்
செய்யலாம்.
கடலைப் பருப்பு—இரண்டு டேபிள்ஸ்பூன்
துவரம்பருப்பு—இரண்டு டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு—இரண்டு டேபிள்ஸ்பூன்
எள்–ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகு,சீரகம் வகைக்கு அரை டீஸ்பூன்
காய்ந்தமிளகாய் குண்டுவகை—-4
புளி—சிறிது
உப்பு,பெருங்காயம்—-ருசிக்கு
செய்முறை.
கறிவேப்பிலையை அலம்பி ஈரமில்லாமல் துண்டில் பரப்பி ஈரம்
உலரவிடவும்.
அடுப்பில் வாணலியைக் காயவைத்து, பருப்புக்களைத் தனித்தனியாக
வெரும்…
View original post 101 more words
வெஜிடபிள் மோமோவும் கோல் பேடாகோ அசாரும்.
இன்று கிடைத்தது நேபாலதேசத்து மோமோ என்ற சிற்றுண்டி. கூடவே அசார் என்ற சாஸ் வகையும்.பாருங்கள். படியுங்கள். அன்புடன்.
பெயரைப்பார்த்து மலைக்க வேண்டாம். இது ஒரு நேபாளத்துச் சிற்றுண்டிவகை. செய்வதுகூட சுலபம்தான். திரு. வெங்கட் நாகராஜ் அவர்கள் இந்தச்சிற்றுண்டியை ரஸித்து எழுதியிருந்தார். அவர் ப்ளாகில் படித்த உடனே இதைப்பற்றி எழுத நினைத்தேன். ஆனால் எதையும் செய்து படம் பிடித்து எழுதுவதுதானே என்னுடைய அசல் பதிவு. உடல் நலமின்மையால் எல்லாம் எங்கேயோ விலகிப் போய்க் கொண்டே இருந்தது. வீட்டில் சமையலுக்கு ஒத்தாசைக்கு ஒரு நபரை ஏற்பாடு செய்திருப்பதாக மருமகள் சொன்னாள். எனக்கில்லை. எங்கள் குடும்பத்திற்கு., யாரோ இவர் யாரோ என்ற எண்ணம் மனதில ஓடியது. எங்கள் வீட்டுப் பெரியவருக்கு உதவிக்கு புதியதாக ஆள் வந்து மூன்று மாதமாகிறது.
மருமகள் டான்ஸ் ப்ரோக்கிராம் அஸ்ஸாமில் செய்யப் போகப்போவதால் எதற்கும்,யாவருக்கும் செய்ய ஒரு நபர் புதிய உதவி நபரே சிபாரிசு செய்யவே உதவி ஆளும் வந்து சேர்ந்தாகி விட்டது. இந்தக் கதையெல்லாம் எதற்கா?
உங்களுடனெல்லாம் வார்த்தைகள் பேசி நிறைய நாட்களாகி விட்டது. என்னுடைய ப்ளாகின் உலகமல்லவா நீங்கள். வந்து சேர்ந்தது யார் தெரியுமா?
நேபாலைச் சேர்ந்தவர்கள். எனக்கு டில்லியில் ஒரு பெயருண்டு. நேபால்மாமி. என்றுதான் என்னை அடையாளம் சொல்வார்கள் கனராபேங்க்மாமி,குவாலியர் மாமி, இல்லாவிட்டால் பத்தாம் நம்பர்மாமி,, இருபதாம் நம்பர்மாமி, கைதிகளின் நம்பர் மாதிரி வீட்டு நம்பருடன் மாமி சேர்ந்து விடும். இதெல்லாம் லலிதா ஸஹஸ்நாம க்ரூப். மிகவும் ஸந்தோஷமாக திருப்புகழ் முதலான வகுப்புகளுக்கும் போகும் க்ரூப். மிகவும் இனிமையான காலம் அது.
எங்கோ…
View original post 316 more words
கோஸ்வடை
கல்லுரலில் அரைத்துப் பழக்கமானதை மிக்ஸியிலரைத்துச் செய்தேன்போல உள்ளது. இதுவும் பழைய குறிப்புதான். செய்து பாருங்கள். அன்புடன்
பழக்கமாகிவிட்டால் எதையுமே சுலபமாகச் செய்யலாம்.
இதுவும் அப்படிதான்.
முழு உளுத்தம் பருப்பு—1 கப் தோல் நீக்கியது
துவரம்பருப்பு—1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்—4
இஞ்சி—சிறிய துண்டு
பெருங்காயம்—சிறிது
பொடியாக நறுக்கியமுட்டைகோஸ்-1கப்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி–அரைகப்
ருசிக்கு—உப்பு
பொரிக்க—வேண்டிய எண்ணெய்
8 மிளகு.—பொடித்தது
செய்முறை—–பருப்புகளை 3 மணி நேரம் தண்ணீரில் ஊற-
வைத்து வடித்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
இஞ்சி மிளகாயையும் சேர்த்து அரைத்து விடலாம்.
லேசாக துளி ஜலம் தெளித்து அரைக்கவும்.
நல்ல மெத்தென்ற பதத்தில் மாவு இருந்தால் நல்லது.
உப்பு,கோஸ், கொத்தமல்லி, பெருங்காயம் கலந்து கொண்டு
வடைகளை தயாரித்து, எண்ணெயைக் காயவைத்து
வடையைப் போட்டு வேகவைத்து எடுக்க வேண்டும்.
கையை ஈரப்படுத்திக்கொண்டு மாவை எடுத்து உருட்டி
பாலிதீன் பேப்பர்மேல் வைத்து ,வட்டமாக சமன் செய்து,
நடுவில் ஒரு பொத்தலுமிட்டு மாவை காயும் எண்ணெயில்
நழுவ விடவேண்டும். திருப்பிவிட்டு இருபுறமும் சிவக்க-
-விட்டு எடுத்து வடிக்கட்டவும்.
ருசியானது. அரைப்பது சற்று முன் பின் இருந்தாலும்,
ஜலம், அரைப்பதில் அதிகமாகக் கூடாது
வாஸனைக்கு மிளகுப் பொடி சேர்ப்போம்.
இதையே பெரிய அளவில் உருட்டிப் போட்டும் சிவக்க
வேகவைத்தும் எடுக்கலாம்.
மிக்ஸியில் அரைக்கும்போது சீக்கிரமே சூடாகிவிடுவதால்
சற்று இடைவெளி கொடுத்து அரைப்பது அவசியமாகிறது.
கோஸ் மட்டிலும் சேர்த்து தயாரித்த வடையிது. சமயத்தில் சிறிது
ஜலம் அதிகம் என்று தோன்றினால் ஒரு டீஸ்பூன் கடலை மாவோ,
உளுத்தம் மாவோ கலந்து செய்யவும். முழுப் பருப்பு விழுது காணும்.
வடையும் …
View original post 2 more words
வெஜிடபிள்ப் பன்னீர்க் கறி
மிகவும் எளிதாகக் செய்யக் கூடிய இதைச் செய்து பாருங்கள். வெஜிடபில் பன்னீர்க் கறி. இதுவும் மீள் பதிவுதான். அன்புடன்
தயார் நிலையில் வெஜிடபிள் பன்னீர்
பாலக் பன்னீர், மட்டர்பன்னீர்,மாதிரி, இதுவும் காப்ஸிகம் சேர்த்த
பன்னீர்க்கறி. இதுவும் மிக்க ருசியுடனிருக்கும். ரொட்டி, சாதம்
முதலானவைகளுடன் தொட்டுக்கொள்ள மிகவும் உபயோகமாக
இருக்கும். அவஸரமாக காய்கள் ஒன்றுமில்லாவிட்டால் இதை
உடனே செய்து விட முடிகிரது. பன்னீர் உடம்பிற்கும் நல்ல ஊட்டம்
கொடுக்கும் பொருள். செய்வோமா? வேண்டிய ஸாமான்கள்.
வேண்டிய பொருள்கள்
விஜிடபிள் பன்னீருக்காக
வேண்டியவைகள்.
பன்னீர்——250 கிராம்
கேப்ஸிகம்—-பெரியதாக ஒன்று
தக்காளிப்பழம்—ஒன்று
பச்சைமிளகாய்—ஒன்று.
வெங்காயம்—-பெரியதாக ஒன்று.
எண்ணெய்—2 டேபிள்ஸ்பூன்
ருசிக்கு உப்பு.
–இஞ்சி, கொத்தமல்லி இலை, வேண்டியருசியில் துளி மஸாலா
செய்முறை
பன்னீரைக் கையினால் நன்றாக உதிர்த்துக் கொள்ளவும்.
கேப்ஸிகம்,வெங்காயம்,தக்காளி, பச்சை மிளகாய் எல்லாவற்ரையும்
தனித்தனியே சிறியவைகளாக நறுக்கிக் கொள்ளவும்.
அடி கனமான வாணலியிலோ, நான் ஸ்டிக் வாணலியிலோ எண்ணெய்
விட்டுக் காயவைத்து முதலில் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
காப்ஸிகம்,மிளகாயையும் சேர்த்து வதக்கி, தக்காளியைச் சேர்த்து
வதக்கவும்.உப்பு,சேர்த்து சுருள வதக்கி, உதிர்த்த பன்னீரைச் சேர்த்து
அடிக்கடி கிளறிக் கொடுக்கவும். கொத்தமல்லி தூவவும்.
முதலிற் சற்று சேர்ந்தாற்போல யிருந்தாலும் நிதான தீயில்,வதக்க
வதக்க ஸரியாகும்.
ஜீரா ,தனியாப் பொடியோ, அல்லது பிடித்த அதாவது மஸாலாப்
பொடியோ ஒரு துளி சேர்க்கலாம்.
நல்ல ருசியான கறி இது.
எதனுடன் வேண்டுமானாலும் சேர்த்துச் சாப்பிடலாம்.