எங்கள் ஊர் நினைவுகள்.1
நவம்பர் 14, 2022 at 12:35 பிப பின்னூட்டமொன்றை இடுக
நேற்று உறவுக்காரர் ஒருவர் எங்கள் ஊரைப்பற்றிய கட்டுரை ஒன்று வாட்ஸப்பில் ஊரைச்சுற்றுவதைப் படிக்கும்படி அனுப்பி இருந்தார். அது நான் இந்த வலைப்பூவில் நான் எழுதியதே.நீங்களும் படியுங்களேன். பெயரில்லாமல் இரள்டு வரிகள் மட்டுமே மாற்றம் அவர் எழுதியதில். ஸந்தோஷம்தான். அன்புடன்
இரவு நேரத்திற்கான சமையல் செய்து கொண்டே யோசனை. காஸில் ரஸம் கொதிக்கிரது. மைக்ரோவேவிலிருந்து எடுத்த காலிபிளவரும் உருளைக்கிழங்கும் எண்ணெயில் வதங்குகிரது. எழுதரதை விட்டு விட்டாயா என்று உள் மனம் கேட்கிரது. காரணம் எதுவானா என்ன? எழுத நினைத்தால் எழுதணும். காரணம் தேடாதே!!! நம்மஊர்,நம்ம ஊர் என்று மனதால் நினைக்கும் ஊரைப் பற்றி எழுது. வளவனூர். தமிழ் நாட்டில் விழுப்புரத்தை அடுத்து புதுச்சேரி போகும் வழியில் 5 மைல்களைக் கடந்தால் எங்கள் ஊர் அமைந்திருக்கிறது. ரயில்,பேருந்து, என எல்லா வசதிகளுமுடைய ஊர். ஊரைப் பற்றி ஆரம்ப கால கதைகள் சொல்லக் கேட்டிருக்கிரேன். சோழ மன்னர்களின் ஆட்சியில் ஏற்பட்ட ஊர் ஆகையால் வளவன் என்றால் அவர்களைக் குறிக்கும் காரணப் பெயர் கொண்டு வளவனூர் என்ற பெயருக்குக் காரணம் சொல்வார்கள். பச்சைப் பசுமையாக நில,புலன்களுடன்,ஆராவாரமில்லாத, அமைதியான ஊர். ரயில்வே ஸ்டேஷன். ஸ்டேஷன் எதிரே ப்ரமாண்டமான ஏரி. பெண்ணை நதியினின்றும் ஏரிக்கு தண்ணீர் வரத்து. ஸ்டேஷனுக்கு வெளியே வந்தால் சற்று இரண்டுநடை போட்டால் அழகான குளம். குளத்தைச் சுற்றி மாமரங்கள். வேம்பு,அரசு,இருவாக்ஷி, ஸரகொன்றை,கொன்றை போன்ற மரங்கள், பவழமல்லி, அரளி மற்றும் பூந்தோட்டம், தோட்டத்தைக் காக்க,வேலை செய்ய,நம்பகமான ஆட்கள், இப்படி. ஊரில் ஸ்டேஷனின்றும் வரும்போதே உள் நுழைந்தால் அக்ரஹாரம். என்னை ஒரு சுற்று சுற்றிவிட்டுப் போ என்று சொல்வதுபோல் ஒரு சிறிய வரப்ரஸாதியான ஸ்ரீ ஹனுமார் ஸன்னதி.பெருமாள் கோயில். இதே பஸ்மூலம் வருபவர்களுக்கு கடைத்தெரு, பிள்ளையார்,ஈசுவரன் கோயில்கள்,ஸ்கூல், ஹையர்…
View original post 501 more words
Entry filed under: Uncategorized.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed