Archive for நவம்பர் 4, 2022
தோசையும் சுலப சட்னியும்.
பார்த்தேன். போடவேண்டும் போலத் தோன்றியது. பார்கககககதப்போம்
பதிவைப் பார்த்ததும் மீள்பதிவு செய்யத் தோன்றியது. பாருங்கள். கூட ஒரு சட்னியும் உள்ளது. அன்புடன்
இதுவும் வழக்கமான தோசைதான். நான் எந்த விகிதத்தில் அரிசி,
பருப்பு, கலந்து செய்கிறேனென்பதுதான் சொல்ல வந்த விஷயம்
என்று கூடத் தோன்றும். கரகரவென்று தோசை குழந்தைகளுக்குப்
பிடிக்கிரது. அதனால் நான் எப்படிச் செய்கிறேனென்று சொல்லுகிறேன்.
வேண்டியவைகள்.
இட்டிலிக்கு உபயோகிக்கும் புழுங்கலரிசி—3 கப்
பச்சரிசி—–1 கப்
துவரம்பருப்பு—-கால்கப்
வெந்தயம்—5 டீஸ்பூன்
நல்ல விழுது காணும் உளுத்தம் பருப்பு—-1 கப்
தேவைக்கு—-உப்பு
செய்முறை
அரிசிவகைகள், துவரம்பருப்பு, வெந்தயம் இவைகளைத் தண்ணீர்-
-விட்டுக் களைந்து சுத்தம் செய்து நல்ல ஜலம் விட்டு ஊற வைக்கவும்.
இதே போல் உளுத்தம் பருப்பையும் நன்றாகக் களைந்துத் தனியாக
ஜலம் விட்டு ஊறவைக்கவும்.
அரிசி நன்றாக ஊறினால் சீக்கிரம் அரைபடும்.
குறைந்த பக்ஷம் 5, 6 மணிநேரம் ஊறினால் நல்லது.
பருப்பு 2, 3 மணி நேரம் ஊறினால் கூட போதும்.
கிரைண்டரை நன்றாகச் சுத்தம் செய்து அலம்பி முதலில்
உளுத்தம் பருப்பைப் போட்டு திட்டமாக ஜலம் தெளித்து நன்றாக
அரைக்கவும். பஞ்சுப் பொதி மாதிரி, நன்றாகக் குமிழ்கள் வரும்படி
அரைக்கவும். நல்ல கிரைண்டரானால் 40 நிமிஷமாவது ஆகும்.
உளுந்து மாவைப் பூரவும் எடுத்துவிட்டு, அரிசியைச் சிறிது,சிறிதாகக்
கிரைண்டரில் போட்டு தண்ணீர் திட்டமாகச் சேர்த்து நன்றாக மசிய
வெண்ணெய் போல அறைக்கவும். இட்டிலி மாவைப்போல அல்ல.
நைஸாக அறைக்கவும். இப்போது வேண்டிய உப்பையும் சேர்க்கவும்.
2, 3 சுற்றுகள் சுற்றி முதலில் அறைத்து வைத்த…
View original post 270 more words