Archive for நவம்பர் 17, 2022
எங்கள் ஊர் நினைவுகள்.2
எங்கள் ஊர் நினைவுகளின் இரண்டாம் பாகமிது. இதையும்தான் நீங்கள் படிக்கட்டுமே என்றுமீள்பதிவு செய்திருக்கிறேன். படியுங்கள். அன்புடன்
மாசி நிலவு மாத்திரமில்லை. ஆடிப்பூரம் உத்ஸவத்திற்கும் எங்கள்
ஊரில் இரண்டு கோயில்களிலும் அதாவது ,ஈச்வரன் , பெருமாள்
கோயில்களிலும், சாயங்கால வேளையிலிருந்து இரவு 10 மணி
வரையில் கூட,சுமங்கலிப் பெண்களும், பெண் குழந்தைகளும் கூடிக்
கும்மியடித்து மகிழும் வழக்கம் இருந்தது.
காரணம் எல்லோரும் வழக்கமறிந்து பழகிப்போன அவ்வூர்ப் பெண்களே.
கொடுக்கல், வாங்கல் என்ற முறையில் எல்லாப் பெண்களும்
அவ்வூரின்,பெண்களாகவும், நாட்டுப் பெண்களாகவும் இருந்ததின் காரணம்
என்று நினைக்கிறேன்.
இப்போதும், ஒரு,கல்யாணம், உபநயனம், வளைகாப்பு, சீமந்தம், போன்ற
வைபவங்களின் முடிவில் ஒரு சுற்றாவது கும்மி பெரியவர்களும்,
சிறுமிகளுமாக சேர்ந்து, கும்மியடிப்பது வழக்கமாக இருக்கிறது.
ஐயோ எனக்குத் தெரியாது, உனக்குத் தெரியாது என்று பிகு பண்ணிக்
கொண்டாவது கை கொட்டும் வழக்கம் இருக்கிறது.
ஒரு பெரியவர், குனிந்து நிமிர்ந்து கை கொட்டினால் தொடரவேண்டிய
கட்டாயம் வந்து விடுகிறது.
பழைய காலத்தில், பெண்கள் புஷ்பவதி ஆனால், 4,5 தினங்கள் வரை
இவ்வழக்கம் ,ஸந்தோஷமாகக் கொண்டாடும் வழக்கம் இருந்தது
இதன் தொடர்ச்சிதான் எங்களூர் ஆடிப்பூர உற்சவம்.
அதற்கும் வசூல் செய்து,நான்குநாள் அம்மனை ஊஞ்சலிலிருத்தி,
ஊர் முழுவதிலும் வீட்டுக்கு வீடு, மூன்றாவது நாள், புட்டு,சர்க்கரை,
பழம், முதலானவைகளைமேளதாளம் புடை சூழ ,அலங்காரம்
செய்து கொண்டசிறுமிகளும்,பெரியபெண்களுமாக கொடுத்துவிட்டு வருவது
ஒரு அழகான நிகழ்ச்சியாக இருக்கும்.
ஆடிப்பூரத்தன்று, காலையில் எல்லோருக்கும், வளை அடுக்கி, எண்ணெய்,
மஞ்சள் கொடுப்பார்கள்.
இவையெல்லாம் யாராவது நேர்ந்து கொண்டு செய்வார்கள். எத்த வருஷமும்
இவைகளில்லாமலில்லை. இரண்டு…
View original post 459 more words