ஜெனிவா கொலுக்களில் சில

இதுவும் ஒரு மீள்பதிவுதான். ஆறு வருஷங்களுக்குப் பிறகு நவராத்திரிப் பதிவாகப் போடுவதை வெள்ளிக்கிழமையான இன்றே போடலாம் என்று தோன்றியது. கொரானோவிற்குப் பிறகு எல்லாம் சிறிய வட்டத்திற்குள் போய்விட்டது போலும். யாவருக்கும் ஆசீர்வாதங்கள். கண்டு களியுங்கள் அன்புடன்

சொல்லுகிறேன்

ஜெனிவா நவராத்திரி. எங்கள் வீட்டில் ஸ்வாமி ஷெல்ப்பில் தான் நித்யகொலு.

ஸ்வாமி ,ஷெல்ப் நிதயகொலு.  ஜெனிவா. ஸ்வாமி ,ஷெல்ப் நித்யகொலு. ஜெனிவா.

இவ்விடமும் ஏராளமான குடும்பங்களில் நவராத்திரி பொம்மைக் கொலு வைக்கிரார்கள். மிகவும் குதூகலமாகக் கொண்டாடுகிறார்கள். விதவிதமான பட்டுப் புடவைகளும், அதற்கேற்ற நகைகளும், மற்ற குடும்பத்தினர் அனைவரையும் அழைத்துப் பேசி மகிழ்ச்சியாகப் பகிர்ந்துண்ணலும், மஞ்சள் குங்கும, அன்பளிப்புகளுடன் பக்திக் கொண்டாடலும் மிகவும் அழகாக இருக்கிறது.

நல்ல குளிர் களை கட்டுகிரது.என்னைப்போன்ற வயதானவர்களுக்கு.

நான் சில அருகிலுள்ள வீடுகளுக்குத்தான் போனேன். என்னுடைய மருமகளும் கொலு என்ற பெயர் வைக்காமல் நித்தமும் கொலுவாகவே விளங்கும் ஸ்வாமி அறையில் மஞ்சள் குங்குமம் கொடுத்துக் கொண்டாடுகிறாள். பேத்தி விலாயினியும் மருமகள் ஸுமனும்.
நான் ஐந்து வருஷங்களுக்குப் பிறகு இவ்விடம் வந்திருந்ததால் எனக்கும் மகிழ்ச்சியாகவே இருந்தது.

நான் கண்ட சில கொலுக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

கீதா கிருஷ்ணமூர்த்தி மாமியின் கொலு. கீதா கிருஷ்ணமூர்த்தி மாமியின் கொலு.

மாமி வீட்டில்  எல்லாமே ,ஸ்பெஷல்தான். அங்கு போயிருந்தபோது ஏராளமானவர்களைப் பார்க்க முடிந்தது.   பாட்டுகள் அவ்விடம் பாடியவர்கள்  மறக்க முடியாதவர்கள்.  ஸ்ரீ சக்ரராஜ,பாக்யாத லக்ஷ்மிபாரம்மா.சேர்ந்து அருமையாகப் பாடியவர்கள்  பாட்டு இன்னமும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.விருந்தோம்பலுக்குப் பெயர் போனவர்கள். மற்றும்

ஒவ்வொருவரும் மிக்க அழகாக கொலு வைத்திருந்தனர். எங்கோ தமிழ்நாட்டில் உள்ளது போல அவர்களும்,அவர்களின் பெண் குழந்தைகளும் பங்கு கொண்டு,பேசி,மகிழ்வித்தது மனதைவிட்டு அகற்ற முடியாத காட்சிகள்.

பிரபா வீட்டுக் கொலு.  அம்மாவும் பெண்ணுமாக   உபசரித்தது மறக்க முடியாதது. பிரபா வீட்டுக் கொலு. அம்மாவும் பெண்ணுமாக உபசரித்தது மறக்க முடியாதது.

பிரபாவின் மாமியாரும் ஓர்ப்படியும் அயலூரில் இருக்கிரார்கள்.  மாமியின்…

View original post 184 more words

செப்ரெம்பர் 23, 2022 at 11:42 முப 2 பின்னூட்டங்கள்

எங்களைப் படம் போட்டிருக்காங்கோ பாருங்கோ.

இது தினமும் காணும் மும்பையின் காட்சி. ஏதோ ஒரு கற்பனை. அதற்கு சில படங்கள். அந்த காக்கைகளுக்கும் மிகவும் ஸந்தோஷம். ஒரு நிமிஷம் நீங்களும் பாருங்கள். நன்றி. தினம்தினம் பார்க்கலாம். அன்புடன்

சொல்லுகிறேன்

எங்க க்ளாஸ் பாத்தீங்களா? நாங்கள் மும்பை வாசிகள் எங்க க்ளாஸ் பாத்தீங்களா?
நாங்கள் மும்பை வாசிகள்

நாங்க எப்படின்னு இவங்க எங்களையே படம் பிடிக்கறாங்க

நீங்களும் பாருங்க

பறந்துபோன காக்கைகள்   ஒவ்வொன்றாய் வருகிறது.

வரிசையாய்  உட்காருகிறது. இன்னும் என்ன செய்யும் இதுகள்?

பார்ப்போமா?

எல்லாரும் வந்தாச்சா?  கோடிவீட்டு மரத்து அண்ணா, அண்ணி

வந்துட்டாங்களா?

பூரா வந்தாச்சா? பூரா வந்தாச்சா?

எல்லாரும் வந்து சாயங்காலம் இங்கே கூடலாம்..

அதோ அவங்களுக்கும் சொல்லுங்க.

எங்ளையும் படமெடுங்க.

நாங்க ஒரு ஸெக்க்ஷன் நாங்க ஒரு ஸெக்க்ஷன்

அங்கே பாருங்க அவங்க ஒரு ஸெக்க்ஷன்.

நீங்களும்  வந்துடுஙகோ!!!!!!!!!

நாங்களும் அதே கூட்டங்க நாங்களும் அதே கூட்டங்க

எல்லோரும் இரை தேடி தின்னூட்டு இங்கே இதே இடத்தில் காமாட்சிம்மா

படம் பிடிப்பாங்க  குளிச்சுட்டு ஜோரா வந்திடுங்கோ என்ன!!!!!!!!!!!!!

அம்மா படம் பிடிக்க வந்துட்டாங்க.  வாங்கவாங்க காகாகா

நாங்க அழகாக ஊஞ்ஜல்   ஆடுவோங்க   பிறகு எல்லோரும் ஓடுவோங்க

காகாகா

அழகான ஊஞ்சல் எல்லோரும் வந்தாச்சா? அழகான ஊஞ்சல்
எல்லோரும் வந்தாச்சா?

அதுக்குள்ள சிலபேருக்குக் கோவமா ?

என்ன ஆச்சுங்க அதுக்குள்ளே அங்கே போய்ட்டீங்க என்ன ஆச்சுங்க அதுக்குள்ளே அங்கே போய்ட்டீங்க

நன்றிம்மா   நாங்களும் போறோங்க காகாகா.

நன்றி,நன்றி நாங்களும் பரந்து போறோங்க. அழகாக ஊஞ்ஜலில் ஆடினோங்க  காகாகா நன்றி,நன்றி நாங்களும் பரந்து போறோங்க. அழகாக ஊஞ்ஜலில் ஆடினோங்க காகாகா

b

View original post

செப்ரெம்பர் 19, 2022 at 11:18 முப 5 பின்னூட்டங்கள்

க்வாக்கமோலே guacamole.—அவகேடோவின் ருசி.

இந்த அவகேடோ எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை.கிடைத்தாலும் விலை மிகவும் அதிகம். மீள் பதிவு போட்டபின் இது ஞாபகத்திற்கு வந்தது. ரஸிக்கலாம் அல்லவா? அன்புடன்

சொல்லுகிறேன்

அவகேடோ,மற்றும் அவகேடோ,மற்றும்

க்வாக்கமோலே க்வாக்கமோலே

இந்த க்வாக்கமோலே என்பது மெக்ஸிகன் பெயர். இதை அடிக்கடி என்

மருமகள் ஜினிவாவில் செய்வது வழக்கம்.

காயாகவும்,இல்லாமல்,மிகவும் பழுத்த தாகவும் இல்லாத பழத்தில்

இதை தயாரித்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

மென்மையான சதைப் பகுதியைக் கொண்டது இந்தப் பழம்.

ஸேலட்களிலும் நறுக்கிச் சேர்ப்பார்கள். சட்னியிலும் போடலாம்.

இந்த அவகேடோ  உடல் எடையைக் குறைக்கவும் உதவும்.

ஆன்டி ஆக்ஸிடெண்டுகளும்,பொட்டாஷியமும் இருக்கிறது.

ஸேன்ட்விச்,மில்க் ,ஷேக் செய்யவும் உதவுகிறது இது.

நம்முடைய,வெங்காயமும் ,தக்காளியும்      அனேக மருத்துவக் குணங்களை

உடையது அல்லவா?

எல்லாமாகச் சேர்த்து சுலபமாக ஒரு டிஷ்

கார்ன் சிப்ஸோடு, தொட்டுச் சாப்பிட இதைச் செய்வார்கள்.

தோலைச் சீவியாகிறது. தோலைச் சீவியாகிறது.

 ஸாமான்கள் தயார் நிலையில் ஸாமான்கள் தயார் நிலையில்

இந்த அவகேடோவின் உள்ளே கொட்டை பெரியதாக இருக்கும்.

அதை எடுத்து விட்டு பின்னர் தயாரித்த பண்டத்தின் நடுவே அதை

வைத்து விடுவது வழக்கம்.

அக்கொட்டை உடனிருந்தால் அவகேடோ நிறம் மாறுதலடையாமல்

இருக்கும்.  என்ன வேண்டும் என்பதைப் படத்தில் காட்டி விட்டு

வேண்டியவை சொல்லவே இல்லை அல்லவா?

வேண்டியவைகள்.

அவகேடோ—–1

பச்சை மிளகாய்—-1

நல்ல தக்காளிப்பழம்—-1

கொத்தமல்லி இலைகள்—ஆய்ந்தது—சிறிது.

சின்ன சைஸ்– வெங்காயம்—பாதிகூட போதுமானது.

ருசிக்கு– உப்பு

எலுமிச்சை—பாதி பழம். ருசிக்கேற்ப

கடையில் வாங்கிய கார்ன் சிப்ஸ்—-தேவைக்கேற்ப. உடன் சாப்பிட

செய்முறை.

அவகேடோவை  தோல் சீவி  மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.

பச்சைமிளகாய், வெங்காயம்,தக்காளியை, மிகவும்  பொடிப்பொடியாக

நறுக்கிக் கொள்ளவும்.

அவகேடோ நறுக்கினதை, ஒரு குழிவான கிண்ணத்தில் போட்டு

ஒரு…

View original post 71 more words

செப்ரெம்பர் 12, 2022 at 11:21 முப 2 பின்னூட்டங்கள்

பலாக்காய் பொடித்தூவல்

பலாக்காய் பொடித்தூவல் காய் கிடைக்கும்போதுதான் செய்கிரோம். விசேஷமானகாய் இது. என்னுடைய பதிவுகளில் மிகவும் விசேஷமாக இன்று கிடைத்தது. வட இந்தியாவில் கோப்தாவும் செய்கிரார்கள்.பாருங்கள் இதையும். அன்புடன்

சொல்லுகிறேன்

பிஞ்சு  பலாக்காய்—1  அரைக்கிலோஎடை

.பச்சைமிளகாய்—3

இஞ்சி—1சிறியதுண்டு

தேங்காய்த் துருவல்—அரைகப்.

கடுகு—அரை டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு—ஒரு டீஸ்பூன்

எண்ணெய்—3டேபிள்ஸ்பூன்

ருசிக்கு—உப்பு

துளி  மஞ்சள்  பொடி

கொத்தமல்லி,  கறிவேப்பிலை—சிறிது

செய்முறை.

காயை 2 துண்டங்களாக  வெட்டவும்.

பால்போல   பிசின்  வெளிப்படும்.  நிறைய  தண்ணீர்விட்டு

காயை அலம்பவும்.

கடைகளிலேயே   காயை  ஒழுங்காக  தோல் நீக்கி துண்டங்களாக

வெட்டியும்   கொடுக்கிறார்கள்.

சின்ன  காயானால்  நாமே   பட்டை பட்டையாக   தோலைச்

சீவிக் கொட்டிவிட்டு   உள் பாகத்தை  சற்று பெறியதுண்டுகளாக

நறுக்கி   தண்ணீரில் போட்டு  அலம்பிக் கொள்ளவும்.

வாணலியில்  துண்டுகள் அமிழத் தண்ணீர் விட்டுமஞ்சள்ப்பொடி

சேர்த்து   திட்டமான தீயில் வேகவைத்துக் கொள்ளவும்.

காய்  முக்கால்பதம்  வெந்ததும்    இறக்கி  வடிக்கட்டவும்.

காய் ஆறியவுடன்   மிக்ஸியிலிட்டு  வைப்பரில் 2 ,3 முறை

சுற்றி   எடுக்கவும்.

இப்பொழுது   உதிர் உதிராக  காய்  பக்குவமாக இருக்கும்.

திரும்பவும்   வாணலியில்   எண்ணெயைக் காயவைத்து

கடுகை வெடிக்கவிட்டு  பருப்பை சிவக்க வறுத்து  நறுக்கிய

இஞ்சி,  பச்சை மிளகாயைப் போட்டு   வதக்கவும்.

உதிர்த்த  காயைக் கொட்டி உப்பு  சேர்த்து வதக்கவும்.

தேங்காயைச் சேர்த்து  வதக்கி இறக்கவும்.

கொத்தமல்லி,  கறிவேப்பிலையைச் சேர்க்கவும்.

பொடித்தூவல் தயார்.  தினப்படி  சாப்பாட்டில் இதுவும்

ஒரு   கறிதான்.எலுமிச்சை  சாறு  துளி   சேர்க்கலாம்

இது சிரார்த    காலங்களில்  விசேஷமான  ஒருகறிகாயாக

தேடி வாங்கப்படும்.1008   கறிகளுக்கு சமானமான  காயிது.

கேரளாவில்   இது  பரவலாக எல்லோராலும்   சமைக்கப்படும்

காய்.

பலா முசு  என்று  சிறிய  வகைக் காய்கள்  சமைப்பதற்கு

மிகவும் ஏற்றது.

வட இந்தியாவிலும்  …

View original post 17 more words

செப்ரெம்பர் 5, 2022 at 11:09 முப 2 பின்னூட்டங்கள்

மும்பையின் வினாயகர்கள்

இவ்வருடத்திய மும்பை கணேசர்களின் அணிவகுபப்பைத் தரிசியியுங்கள்.

தொந்தி வினாயகர்

அலங்கார கணேசர்
நீலவண்ணர்
ரோஜாநிரத்தவர்
அழகு வண்ணத்தவர்
பால் வண்ணத்தவர்
கிளி வண்ணத்தவர்

இளம் ரோஜா வண்ணத்தவர்

இப்படி மனதில் தோன்றியவைகளை வண்ணமாக எழுதியுள்ளேன். பதிவு எழுதி வருஷங்கள் பல ஆகிவிட்டதால் எதுவும் மனதில் இல்லை. மறந்தே விட்டது. எங்களுக்குப் பண்டிகை இல்லை. இருப்பினும் பதிவு எழுதி இருக்கிறேன். வக்ர துண்டமஹாகணபதியை யாவரும் வணங்கி நன்மையைப் பெறுங்கள். அன்புடன் சொல்லுகிறேன்.

ஏதோ அப்படி இப்படி பதிவை உருவாக்கி உள்ளேன். மன்னிக்கவும்.

வினாயகச் சதுர்த்திப் பதிவு இது.

ஓகஸ்ட் 30, 2022 at 12:06 பிப 8 பின்னூட்டங்கள்

தட்டை பீன்ஸ் கறி.

இன்று மீள் பதிவிற்கு அகப்பட்டுக் கொண்டது தட்டைபீன்ஸ் கறி. எனக்கு பிடித்த ஒருவகை இவ்விடத்தில். பாருங்கள். சுவையுங்கள். எழுத்தில்தான். அன்புடன்

சொல்லுகிறேன்

நான் முன்பு ஜெநிவாவில் இருக்கும்போது இந்தக்காயை கட்டாயம் பார்த்தால் வாங்காது விடமாட்டேன். ஃப்ரெஞ்சுப்பெயர் HARICOTS COCO. நான் என்னவோ பெரிய அவரைக்காய் என்பேன். ஆங்கிலத்தில் FLATE BEANS என்பார்கள் போல இருக்கிறது.
தட்டை பீன்ஸ்

ஒரு கப்பீன்ஸ்  கறிசாப்பிட்டால்   110 கலோரிகள் அதில் இருக்கிறது. நார்ச் சத்து அதிகம் இருக்கும் காய். நம் ஊரில்  எத்தனையோவித அவரைக்காய்கள்,கலர்க் கலரில் காய்த்தும் ,வாங்கியும் சாப்பிட்டிருக்கிறோம். அவைகளின் ருசி அலாதி. இக்காயில் ப்ரோடின்,கார்போஹைட்ரேட் முதலானது அதிகம் இருக்கிறது.

இதுவும் அவரைக்காய் வகைதான்.  காயின்   மேல்ப்பாகம் சற்று தடிமனாக இருக்கிறது.   ஸரி இதையும் சமைத்து ஒரு பதிவு போடுவோமென்று தோன்றியது.

நான் செய்தது என்னவோ ஸாதாரண கறிதான்.

செய்முறை.

காய் ஒரு கால்கிலோ அளவு.

இஷ்டப்பட்ட அளவு தேங்காய்த் துருவல். இஞ்சி நசுக்கியது சிறிதளவு.

கறிப்பொடி—இரண்டு டீஸ்பூன். வேண்டிய அளவு உப்பு. மஞ்சட்பொடி அரை டீஸ்பூன் எண்ணெய்—ஒரு டேபிள்ஸ்பூன். கடுகு,உளுத்தம் பருப்பு தாளிக்க சிறிது.

செய்முறை. காயை நன்றாகத் தண்ணீர் விட்டு  அலம்பி  வடிக்கட்டவும்.

பின்னர் காம்பு நீக்கிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

மைக்ரோவேவிற்குத் தயார்

காயின்மேல் நசுக்கிய இஞ்சியைப்போட்டு ,ஒரு அரைஸ்பூன் எண்ணெய் விட்டுப் பிசறி மைக்ரோவேவில் உயர்ந்த மின் அழுத்தத்தில் 10 நிமிஷங்கள் வேக வைத்து எடுக்கவும். அல்லது குக்கரில் சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு விஸில் வருமளவிற்கு விட்டு வேக வைத்ததை வடிக்கட்டவும்..

வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகை வெடிக்கவிட்டு உளுத்தம் பருப்பைச்சேர்த்து சிவந்ததும் வெந்த காயைக் கொட்டி,உப்பு,மஞ்சள்…

View original post 57 more words

ஓகஸ்ட் 29, 2022 at 11:27 முப 2 பின்னூட்டங்கள்

மட்டர் பனீர் முந்திரிக் கிரேவியுடன்.

மடர் பன்னீர் வெங்காயம், பூண்டு இல்லாதது.இதுவும் ஒருவகை. மீள் பதிவாக வருகிறது. ருசித்துப் பாருங்கள். அன்புடன்

சொல்லுகிறேன்

20170502_125917

பிள்ளையுடன் படித்த  பால்ய சினேகிதர்கள் வருகிறார்கள்  j`’ரொட்டியுடன் சாப்பிட. காரசாரமாக மட்டர் பன்னீரும் தயாராகிறது. சற்று வேறுமாதிரி  என்று தோன்றியது. ப்ளாகில் குறிப்புகள் எழுதி வெகு நாட்களாகிறது.  இதுவும் உபயோகமாக இருக்குமே.  செய்து பாருங்கள். பூண்டு வெங்காயம் சேர்க்கவில்லை.  ஒரிஜனல் முந்திரிச் சுவையுடன்—-

வேண்டியவைகள்.ப்ரோஸன் மட்டர்–200 கிராம்.பனீர்–200 கிராம். வறுப்பதற்கு வேண்டிய எண்ணெய்

தாளித்துக் கொட்ட  நெய்—2டீஸ்பூன்.

பெரிய தக்காளிப் பழம்—2    அரை அங்குல  நீளம்–இஞ்சித்துண்டு. இவை இரண்டையுமாகச் சேர்த்து அரைத்த விழுது.

முந்திரிப் பருப்பு—8,         ஒரு டீஸ்பூன்  வெள்ளரி விதை. இதைத் தர்பூஸ்கா ஸீட்ஸ் என்று வட இந்தியர் சொல்வார்கள், இவைகளை ஊரவைத்துத் தனியாக அரைத்துக் கொள்ளவும்.

பொடிக்க ஸாமான்கள்

மிளகுஅரை டீஸ்பூன்—லவங்கம்-5,—பட்டை  ஒரு அங்குல அளவிற்கு, ஏலக்காய்-இவைகளைப் பொடிக்கவும். ஸுமாராகப் பொடித்தல்ப் போதும். வறுக்க வேண்டிய அவசியம் இல்லை.

தேஜ்பத்தி என்னும்லவங்க இலை–1

பொடிகள்.   மிளகாய்ப்பொடி–1 டீஸ்பூன்,—-மஞ்சள் பொடி தேவையான அளவு.

ருசிக்கு—உப்பு.

செய்முறை.    பதப்படுத்தப்பட்ட பட்டாணியை வென்னீர் விட்டு அலம்பி ஊறவைக்கவும். பின்னர்   திட்டமான தண்ணீரில்  வேக வைக்கவும்.

பனீரைச் சிறு துண்டங்களாக நறுக்கி,  வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ச்சி லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

மற்றொரு வாணலியில் நெய்யும் எண்ணெயுமாகக் கலந்து இரண்டுஸ்பூன்வைத்துச் சூடானதும்தேஜ்பத்தியைத்  தாளித்து, அரைத்து வைத்துள்ள தக்காளிவிழுதைக் கொட்டி   சுருளக்கிளறவும்.

பொடிகளைச் சேர்த்துக் கிளறி, வெந்தமட்டரைத் தண்ணீருடன் சேர்க்கவும்.  இரண்டொரு கொதி வந்தபின்  பனீரைச் சேர்க்கவும்.

திட்டமாக உப்பைச் சேர்த்து முந்திரி விழுதைச்…

View original post 31 more words

ஓகஸ்ட் 22, 2022 at 10:45 முப 2 பின்னூட்டங்கள்

டால்வகையில் வெள்ளைக் காராமணி.

டால்வகையில் இதுவும் ஒன்று. வெள்ளைக் காராமணி. படியுங்கள். ருசியுங்கள். அன்புடன்

சொல்லுகிறேன்

P1020781

நாம் அநேகமாக  சுண்டல்,கூட்டுமுதலானவைகள்தான் இதில்  அடிக்கடி செய்வோம்.   அதிலும் இனிப்புப் போட்ட  சுண்டல்தான்  வெகு இடங்களில்.  என் நாட்டுப்பெண்  இந்த டாலை  பூரி,ரொட்டிகளுக்காகவும்,சாதத்துடனும் ஒரு மாற்றத்திற்காகச் செய்வாள் .  அப்படிச் செய்தது தான் இதுவும். பூரியும் இருக்கிறது.   எது வேண்டுமோ   எடுத்துக் கொள்ளலாம்.

தட்டப்பயறு,காராமணி, பெரும்பயறு என்று பலவிதப் பெயர்களில் பல வகைகள் கிடைக்கிறது.   இது  ப்ளாக் ஐ பீன்ஸ்   என்று சொல்லப்படும் வெள்ளைக் காராமணி.  ஹிந்திியில்   Bபோடி

காராமணி,கத்தரிக்காய்,பலாக்கொட்டை இவைகள் சேர்த்துச் செய்யும் கூட்டு ருசியானது.   இதில் பலாக் கொட்டை  இல்லை. இதுவும் தானாக வருகிறது.

P1020777

நாம் இப்போது  டால்  செய்வதைப் பார்க்கலாம்.

வேண்டியவைகள்.   டால் செய்வதற்கு–

வெள்ளைக்காராமணி—1 1/2 கப்,

வெங்காயம்–திட்டமானசைஸ்–2    பூண்டு இதழ்–4.      இஞ்சி அரை அங்குலத் துண்டு.

பழுத்த தக்காளி–2

பொடிக்க —மிளகு–1டீஸ்பூன்,   லவங்கம்–4,   பட்டை   சிறிதளவு, ஏலக்காய்–1

பொடிகள்–மிளகாய்ப்பொடி—1டீஸ்பூன்,  தனியாப்பொடி—-2 டீஸ்பூன், மஞ்சள்பொடி–1டீஸ்பூன்

தாளிக்க —எண்ணெய்,நெய்  வகைக்கு ஒரு டேபிள்ஸ்பூன். சீரகம்—1டீஸ்பூன்

கொத்தமல்லி, எலுமிச்சை ஒரு பாதி. ருசிக்கு—உப்பு.

செய்முறை.

வெள்ளைக்காராமணியை தண்ணீரில் நன்றாகக்  களைந்து   நான்கு மணி நேரம் ஊறவிடவும்.

வெங்காயம்,பூண்டு,இஞ்சி இவைகளைச் சுத்தம் செய்து  மிக்ஸியில்  நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

தக்காளியைத் தனியாக   பொடிப்பொடியாக   நறுக்கிக் கொள்ளவும். அல்லது  அரைத்துக் கொள்ளவும்.

பொடிக்கக் கொடுத்தவைகளை   முடிந்தவரை  பொடிக்கவும்.

காராமணியின் தண்ணீரை நீக்கிவிட்டு   மூன்று  கப் தண்ணீரைச் சேர்த்து மஞ்சள் பொடியுடன்   குக்கரில்   நேரிடையாக  மிதமான தீயினில்   இரண்டு விஸில்வரும்வரையில் வைத்து  இறக்கி விடவும்.

View original post 80 more words

ஓகஸ்ட் 15, 2022 at 11:40 முப பின்னூட்டமொன்றை இடுக

குதிரைவாலி அரிசியில் குழி அப்பம்.

சிறுதானியவகையின் குழி அப்பம் இது. நான் எழுதியபோது இது புதுவகை. செய்து பாருங்கள் அன்புடன்

சொல்லுகிறேன்

குதிரைவாலி அரிசியின்  உப்பு,வெல்ல அப்பங்கள் குதிரைவாலி அரிசியின் உப்பு,வெல்ல அப்பங்கள்.

விண்டுப் பார்த்து  சுளைசுளையாக இருக்கா? ஸரியான பதந்தான். அதுவும் கூட இருக்கிறது.

எல்லா இடத்திலும்  இப்போது  சிறுதானியங்களின் உபயோகம் பிரபலமாகிக்கொண்டு வருகிறது. எல்லாவகை  சிறுதானியங்களும்,மேலும் அதிக ஸாமான்களை/யும்க கொண்டு கஞ்சி மாவு தயாரிப்பது என்பது யாவர் வீட்டிலும்,பிரபலமாகிக்கொண்டு வருகிறது.  அளவுகளில்  சற்றேறக்குறைய வித்தியாஸங்கள் இருந்தாலும்   மிகவும் எளிமையாக யாவரும் தயாரித்துச் சாப்பிடுகிறார்கள்.    எங்கள் பெண்ணின்  வீட்டிலும் இது மிகவும் பிரபலம்.   வயதானவர்கள், அதிகம் பொருப்புகளை வகிக்கும் நடுத்தர வயதினர்  என யாவருக்கும் நல்ல,ஸத்தையும்,ஆரோக்யத்தையும் அளிக்கிறது.

கரண்டியால் அளந்து தானியங்கள் போடுவதில்லை. கடையிலிருந்து  பாக்கெட்.பாக்கெட்டாக  வாங்கிவந்து  வறுத்து அரைப்பதுதான். அவியலின் காய்கள் போல , இதில் இல்லாத தானியங்களே கிடையாது. பார்க்காத சிறுதானியங்களைக்கூட  ,சென்னையில் கிடைப்பதை வாங்கி வந்ததைப் பார்த்த போதுதான் எனக்கும் சில தானியங்கள் எப்படியிருக்கும் என்று தெரிந்தது.  சொன்னால் இவ்வளவா என்று மலைத்துப் போகும் அளவிற்கு தானியங்கள். நானும் அந்த ஸத்து மாவின்   சக்தியை  அரிந்துகொண்டு சாப்பிட்டு வருகிறேன்.. மாவு போஸ்டில் வந்து விடுகிரது.  அந்தப்பெயர்களின் பட்டியலைப் பாருங்கள். பல படங்களையும் பாருங்கள்.

தானியங்களில்ச் சில தானியங்களில்ச் சில.படம்    1

தினை, சாமை   மேல்வரிசை,    கீழ் வரிசை வரகரிசி, கொள்ளு அடுத்து

இன்னும் சில இன்னும் சில  படம்   2மேல்வரிசை–கேழ்வரகு,   கம்பு அடுத்து   ஜெவ்வரிசி, சம்பா கோதுமை,நடுவில்  பார்லி, இன்னும் படத்தில் இல்லாதவைகள்  மக்காச் சோளம்,பொட்டுக்கடலை,புழுங்கலரிசி,பாதாம், குதிரைவாலி அரிசி, ஏலக்காய், போதுமா ஸாமான்.?

நல்ல சுத்தமாகக்  கிடைக்கும் ஸாமான்களை வாங்கி அப்படியே  …

View original post 269 more words

ஓகஸ்ட் 8, 2022 at 11:26 முப பின்னூட்டமொன்றை இடுக

பிகாஸோ ஓவியங்கள்

பார்த்து ரஸிக்க பிகாஸோவின் படங்கள் மீள் பதிவாக வருகிறது.ரஸிக்கவும். அன்புடன்

சொல்லுகிறேன்

IMG_2466

View original post 161 more words

ஓகஸ்ட் 1, 2022 at 11:49 முப பின்னூட்டமொன்றை இடுக

Older Posts Newer Posts


மே 2024
தி செ பு விய வெ ஞா
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 293 other subscribers

வருகையாளர்கள்

  • 551,508 hits

காப்பகம்

பிரிவுகள்


சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

Chitrasundar's Blog

நாங்களும் சமைப்போமில்ல!!!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com News

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.