உங்களிடம் சில வார்த்தைகள்—கேட்டால் கேளுங்கள்.

இந்தப்பதிவு அவர்கள் உண்மைகள் என்றமதுரைத் தமிழன் அவர்களின் வலைப்பதிவிற்காக நான் எழுதிய தொடர்க்கட்டுரையின்மீள்பதிவு. திரும்பவும்தான் வாசியுங்களேன். மிக்க நன்றி. அன்புடன்

சொல்லுகிறேன்

இந்தத் தொடர் பதிவு அவர்கள் உண்மைகள் தளத்தின் மதுரைத்தமிழன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் அவர்கள் என்னையும் எழுத அழைக்க , ,நான் இங்கே—- வயதானவர்களின் நினைவலைகள்தான். இது.

ஏன் இதிலும் ஏதாவது நல்லது இருக்கக் கூடும் அல்லவா என்று தோன்றியது. ஏதோ ஒரு சில வார்த்தைகள்தான் இது என்றும் தோன்றியது.

இவ்வளவு பெரிய முதியவள் என்ன ஆசீர்வாதம் செய்வாள் வேறு என்ன வார்த்தைகள் சொல்லப்போகிறாள் என்றுதானே நினைக்கத் தோன்றும்?

எங்கள் காலத்தில் எப்படியெல்லாம் புத்தி சொல்லப்பட்டது என்றும் அதைக் கடைபிடிக்க முடிந்ததா என்றும் பாருங்கள். எங்கள் காலத்திலேயே நாங்கள் ஒரு ஐம்பது வயது உள்ளவரின் மூன்றாம் மனைவியின் வாரிசுகள். எங்கள் பெரியம்மாக்கள் போனபின்தான் எங்கள் அம்மா.குறைவாக மதிப்பிடாதீர்கள். அந்தக் காலத்தில்
அடி அமக்களமெல்லாம் மார்க் குறைவாக வாங்கி விட்டால் பிள்ளைகளுக்குக் கிடைக்கும். நாங்களெல்லாம் பெண்கள். நன்றாக மார்க் வாங்கி விடுவோம்.

பெண்களெல்லாம் உயர்வு. அவர்களை ஒன்றுமே சொல்ல மாட்டார்கள். நாங்கதான்பலி. எங்களைக் கண்டாலே மார்க் கம்மியானவர்கள் கரித்துக் கொட்டுவார்கள். அவங்களைத் தாஜாசெய்ய நமக்குக் கிடைக்கும் எதிலும் போனா போகிறது என்று பங்கு கொடுக்கவேண்டும். அவன் கிட்டிப்புள் விளையாடினாலும் இல்லையே அவன் படித்தானே என்று சொல்ல வேண்டும். இது பெண்களின் பொதுவான நிலை.

அப்பா நன்றாகப் படித்தவர். பழைய காலத்தவர்.பழமை விரும்பிதான். அவர் செய்பவற்றைக் குறைகூற முடியாது. அந்தநாட்களில் மனைவிக்குச் சுதந்திரம் பேச்சில் கூட கொடுக்காதவர்களின் குரூப்பைச் சேர்ந்தவர். மற்றவர்கள் சொல்வார்கள்.

View original post 478 more words

ஜூலை 25, 2022 at 11:26 முப பின்னூட்டமொன்றை இடுக

ஃப்ரூட்சாட்.

நான்கைந்து வருஷங்களுக்கு முன்னர் ஜெனிவா வந்திருந்தபோது எழுதினது. அப்போது கிடைத்த பழங்கள் இது.மீள்பதிவிற்கு கிடைத்த பதிவு இது. ஸீஸனுக்குத் தகுந்தாற்போல பழங்களை மாற்றிச் செய்யுங்கள். ருசி உங்கள் கையில்தான். அன்புடன்

சொல்லுகிறேன்

எல்லாவித பழங்களும் வீட்டில் இருந்தது. தில்லியில் கடைகளில், ஃப்ரூட் சாட் கிடைக்கும். வெந்த உருளைக்கிழங்கின் துண்டுகள் கூட போட்டுப் பார்த்திருக்கிறேன். இது பழங்களைமட்டும் சேர்த்துச் செய்தது. என் மருமகள் என்ன வேண்டுமோ எல்லாம் செய்து கொடுக்கிறாள்.
வீட்டில் தனியாகப் பொழுது போக வேண்டுமே.!

முடிந்தபோது எழுதுகின்றேன். அவ்வளவுதான்.

ஃப்ரூட்சாட் ஃப்ரூட்சாட்

வேண்டியவைகள்.

நான் எவைகளைச் சேர்த்தேன் என்பதுதான் இது.

அவ்வப்போது  கிடைக்கும்   பிராந்தியப்    பழங்களைக் கொண்டு  ஸீஸனுக்குத்  தகுந்தாற்போலத் தயாரிக்கலாம்.

சிறிய வாழைப்பழம்—1,   ஆப்பிள் –1,   கிவி—1,   பப்பாளி நறுக்கியது –1கப்,   திராக்ஷை—அரைகப், துண்டுகளாக்கிய அனாசிப்பழம்–அரைகப்,   மாதுளை முத்துகள்  அரைகப், ஆரஞ்சுச் சுளைகள்  தோல்நீக்கியது –அரைகப்.

புளிப்பில்லாத தயிர்—1கப்,      வறுத்துப் பொடிசெய்த சீரகப்பொடி–அரை டீஸ்பூன்,  தேன் ஒரு டீஸ்பூன்,  சாட்மஸாலா—அரைடீஸ்பூன்,  உப்பு அரை டீஸ்பூன்,  இந்துப்பு அதாவது காலாநமக் என்று சொல்லுவது ஒரு  சிட்டிகை.

செய்முறை—- பழங்களை அழகாக சீராக நறுக்கி  , ஃபிரிஞ்ஜில் சிறிதுநேரம் ஒரு பவுலில் வைத்து எடுக்கவும்.   தயிரையும் வைக்கவும்.

பழத்துண்டங்கள் பழத்துண்டங்கள்

வாயகன்ற பவுலில்  உள்ள பழங்களின் மீது,  தயிரைப் பரவலாக விட்டு,  மேலே பொடிகளைத்  தூவவும்.   தேனையும்  கலக்கவும். அருமையான  சாட் ரெடி.

நன்றாகக் கலந்து   அழகிய கிண்ணங்களில்   போட்டு,  ஸ்பூனுடன்  சாப்பிடக் கொடுக்கவும்.

ஃப்ரூட்சாட் ஃப்ரூட்சாட்

ருசித்தீர்களா?

View original post

ஜூலை 18, 2022 at 11:23 முப 2 பின்னூட்டங்கள்

பச்சை சுண்டைக்காய் மெந்தியக் குழம்பு.பலாக் கொட்டையுடன்.

மிகவும் ஸிம்பிளாக ஒரு வெந்தயக் குழம்பு. படங்கள்கூட அவ்வளவு ஸரியாக இல்லை. ருசிதானே நமக்கு வேண்டும். ரஸிக்கவோ புசிக்கவோ எதுவானாலும் ஸரி. மீள்பதிவு. எனக்கு ஒரு மனநிம்மதிக்கான பதிவு. அன்புடன்

சொல்லுகிறேன்

வெந்தயக்  குழம்பைத்தான்    நாங்கள் மெந்திக் குழம்பு  என்று பேச்சு

வழக்கில்  சொல்லுவோம்.

துவாதசி சமையலில்    சுண்டைக்காயும்  ஒரு   முக்கியமான இடத்தை

வகிக்கிறது.

சென்னையில்   சுண்டைக்காய்  சுலபமாக கிடைத்ததால்  குழம்பும்

செய்து,   சுண்டைக்காய்ப்   பருப்புசிலியும்,  ப்ளாகில் போட  செய்தும்,

படமெடுத்தும் வைத்திருக்கிறேன். சுலப முறையை எழுதுகிறேன்.

பருப்புசிலியைப் பின்னாடி  பார்ப்போம். பலாக்கொட்டையும் பழ

சீஸனானதால்  கிடைத்ததைச் சேர்த்துப் போட்டு ச் செய்தேன்.

இப்போது குழம்பிற்கு  வேண்டியதைப் பார்ப்போமா?

வேண்டியவைகள்

புளி  ஒரு சின்ன  எலுமிச்சையளவு.

தாளித்துக்கொட்ட—கடுகு—அரைடீஸ்பூன்

உளுத்தம்பருப்பு—1 டீஸ்பூன்

கடலைப்பருப்பு—2 டீஸ்பூன்

வெந்தயம்—1 டீஸ்பூன்

மிளகாய் வற்றல்—-1

நல்லெண்ணெய்—3 டேபிள்ஸ்பூன்

பெருங்காயப்பொடி—அரை  டீஸ்பூன்

வெல்லம்—சிறிது

ருசிக்கு—உப்பு

ஸாம்பார்ப் பொடி—3 டீஸ்பூன்

அரிசிமாவு—ஒரு  டீஸ்பூன்

முக்கியமான பச்சை சுண்டைக்காய்—கால்கப்

இருந்தால்  பலாக்கொட்டை—7 அல்லது 8

கறிவேப்பிலை—சிறிது.

செய்முறை

புளியை  2 கப் ஜலம் விட்டுக்  கறைத்துக் கொள்ளவும்.

பச்சை சுண்டைக்காயை காம்பு நீக்கி   நன்றாக   நசுக்கித்

தண்ணீரில்  அலசவும்.

விதைகள்  ஓரளவிற்கு   வெளியேறும். வடிக் கட்டவும்.

பலாக் கொட்டையையும்  மேல் தோல் நீக்கி  உட் பருப்பைத்

துண்டுகளாகச் செய்து கொள்ளவும்.

குழம்புப் பாத்திரத்தில்   எண்ணெயைக் காய வைத்து, கடுகு

வெந்தயம்,பருப்புகள்,பெருங்காயம்,மிளகாய்   இவைகளைத்

தாளித்துக் கொட்டி, சுண்டைக்காயைச்  சேர்த்து நிதான தீயில்

நன்றாக   வதக்கவும்.

சுண்டைக்காய் வதங்கியதும்,  ஸாம்பார்ப் பொடியைச் சேர்த்துச்

சற்றுப் பிரட்டி     புளி ஜலத்தைச் சேர்க்கவும்.பலாக் கொட்டையையும்

உப்பையும் சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.

துவாதசி சமையல் ஆனபடியால்   பூண்டு, வெங்காயம்

View original post 57 more words

ஜூலை 11, 2022 at 11:16 முப பின்னூட்டமொன்றை இடுக

மூலிகைப்பொடி.

மூலிகைப்பொடி. மலைக்காதீர்கள். சித்ரகூடம் போகவேண்டாம். வீட்டு மூலிகைகள்தான்.சற்று அக்கரையாகச் செய்தேன். மிகவும் ருசியாக வந்தது. இதுவும் மீள் பதிவுதான். பாருங்கள் அன்புடன்

சொல்லுகிறேன்

மூலிகை மிக்ஸ் மூலிகை மிக்ஸ்

பச்சென்று பார்க்க அழகாகவும், வாய்க்கு ருசியாகவும் அமைந்த பொடி

இது. செய்வதும் ஸுலபம்தான். மனம் விரும்பிச் செய்தால் ஒரு

நிமிஷத்தில் செய்து விடலாம்.

கறிவேப்பிலை, புதினா,   சில எலுமிச்சை இலைகள் நல்ல வாஸனை

ஆன ஸாமான்களாதலால்  இன்னும் ஸாமான்களுடன்  மிக்க நன்றாக

அமைந்தது.

மோர்க்குழம்பு, பச்சடி,வற்றக்குழம்பு என சற்றுப்  புளிப்பு ருசியுடன் கூடிய

வகைகளைத் தொட்டுக்கொண்டு சாப்பிட கூடுதல் ருசி வரும்.

சாப்பிட நேர்த்தியாக உள்ளது.

சென்னையில்  கறிவேப்பிலை  ஒருநாள் அதிகம் கிடைத்தது.

புதினாவும் அதிகப்படி இருந்ததைக் காயவைத்திருந்தேன் முதல் நாள்.

காய்ந்த புதினா, பச்சை கறிவேப்பிலை காய்ந்த புதினா, பச்சை கறிவேப்பிலை

மாதிரி வறுக்காத ஸாமான்கள் மாதிரி வறுக்காத ஸாமான்கள்

இந்த மூலிகைப்பொடியைச் செய்தேன்.  ருசியும் பார்த்தேன்

நீங்களும் செய்து பார்க்கலாமே என போட்டோவும் எடுத்தேன்.

எதைச் செய்யலாம்,எதை எழுதலாம் என்ற எண்ணம் ஸொந்த வலைப்பூ

வைத்திருப்பதால் அதிகம் தோன்றுகிறது.

ஸமயத்தில் இது ஒரு தொத்து வியாதி போலக்கூடத் தோன்றுகிறது.

பார்ப்போம். இதுவும் எவ்வளவு தூரம் போகிறதென்று.

ஸரி ஸாமான்களைப் பாருங்கள்.

வேண்டியவைகள்.

பச்சை கறிவேப்பிலை—இரண்டுகப்.

புதினா இலை காயவைத்தது—அரைகப்,அல்லது இருப்பதைப் போடவும்.

எலுமிச்சை,அல்லது நாரத்தை இலை—5 அல்லது 6. இல்லாமலும்

செய்யலாம்.

கடலைப் பருப்பு—இரண்டு டேபிள்ஸ்பூன்

துவரம்பருப்பு—இரண்டு டேபிள்ஸ்பூன்

உளுத்தம் பருப்பு—இரண்டு டேபிள்ஸ்பூன்

எள்–ஒரு டேபிள்ஸ்பூன்

மிளகு,சீரகம் வகைக்கு அரை டீஸ்பூன்

காய்ந்தமிளகாய் குண்டுவகை—-4

புளி—சிறிது

உப்பு,பெருங்காயம்—-ருசிக்கு

செய்முறை.

கறிவேப்பிலையை அலம்பி ஈரமில்லாமல் துண்டில் பரப்பி ஈரம்

உலரவிடவும்.

அடுப்பில் வாணலியைக் காயவைத்து,  பருப்புக்களைத்  தனித்தனியாக

வெரும்…

View original post 101 more words

ஜூலை 4, 2022 at 11:22 முப பின்னூட்டமொன்றை இடுக

வெஜிடபிள் மோமோவும் கோல் பேடாகோ அசாரும்.

இன்று கிடைத்தது நேபாலதேசத்து மோமோ என்ற சிற்றுண்டி. கூடவே அசார் என்ற சாஸ் வகையும்.பாருங்கள். படியுங்கள். அன்புடன்.

சொல்லுகிறேன்

 வறுத்த மோமோக்கள் வறுத்த மோமோக்கள்

பெயரைப்பார்த்து    மலைக்க வேண்டாம்.    இது ஒரு நேபாளத்துச் சிற்றுண்டிவகை. செய்வதுகூட சுலபம்தான். திரு.   வெங்கட் நாகராஜ் அவர்கள்  இந்தச்சிற்றுண்டியை  ரஸித்து எழுதியிருந்தார். அவர் ப்ளாகில் படித்த உடனே இதைப்பற்றி எழுத நினைத்தேன். ஆனால் எதையும் செய்து படம் பிடித்து எழுதுவதுதானே  என்னுடைய   அசல் பதிவு.   உடல் நலமின்மையால்   எல்லாம் எங்கேயோ  விலகிப் போய்க் கொண்டே இருந்தது.   வீட்டில் சமையலுக்கு ஒத்தாசைக்கு ஒரு நபரை    ஏற்பாடு செய்திருப்பதாக  மருமகள் சொன்னாள். எனக்கில்லை. எங்கள்  குடும்பத்திற்கு., யாரோ இவர் யாரோ  என்ற எண்ணம்  மனதில ஓடியது. எங்கள் வீட்டுப் பெரியவருக்கு உதவிக்கு புதியதாக ஆள்  வந்து மூன்று மாதமாகிறது.

மருமகள்  டான்ஸ் ப்ரோக்கிராம் அஸ்ஸாமில்  செய்யப் போகப்போவதால்  எதற்கும்,யாவருக்கும் செய்ய ஒரு நபர்   புதிய உதவி நபரே  சிபாரிசு செய்யவே   உதவி ஆளும் வந்து சேர்ந்தாகி விட்டது. இந்தக் கதையெல்லாம்  எதற்கா?

உங்களுடனெல்லாம்  வார்த்தைகள் பேசி நிறைய நாட்களாகி விட்டது. என்னுடைய  ப்ளாகின்  உலகமல்லவா நீங்கள்.    வந்து சேர்ந்தது யார் தெரியுமா?

நேபாலைச் சேர்ந்தவர்கள்.  எனக்கு டில்லியில் ஒரு பெயருண்டு.  நேபால்மாமி. என்றுதான் என்னை அடையாளம் சொல்வார்கள் கனராபேங்க்மாமி,குவாலியர் மாமி, இல்லாவிட்டால் பத்தாம் நம்பர்மாமி,, இருபதாம் நம்பர்மாமி,   கைதிகளின் நம்பர் மாதிரி   வீட்டு நம்பருடன் மாமி சேர்ந்து விடும்.  இதெல்லாம் லலிதா ஸஹஸ்நாம க்ரூப்.   மிகவும்   ஸந்தோஷமாக  திருப்புகழ்  முதலான வகுப்புகளுக்கும் போகும்  க்ரூப். மிகவும் இனிமையான  காலம் அது.

எங்கோ…

View original post 316 more words

ஜூன் 27, 2022 at 11:56 முப பின்னூட்டமொன்றை இடுக

கோஸ்வடை

கல்லுரலில் அரைத்துப் பழக்கமானதை மிக்ஸியிலரைத்துச் செய்தேன்போல உள்ளது. இதுவும் பழைய குறிப்புதான். செய்து பாருங்கள். அன்புடன்

சொல்லுகிறேன்

பழக்கமாகிவிட்டால் எதையுமே  சுலபமாகச் செய்யலாம்.

இதுவும் அப்படிதான்.

முழு  உளுத்தம் பருப்பு—1 கப்  தோல் நீக்கியது

துவரம்பருப்பு—1 டேபிள்ஸ்பூன்

மிளகாய்—4

இஞ்சி—சிறிய துண்டு

பெருங்காயம்—சிறிது

பொடியாக நறுக்கியமுட்டைகோஸ்-1கப்

பொடியாக நறுக்கிய  கொத்தமல்லி–அரைகப்

ருசிக்கு—உப்பு

பொரிக்க—வேண்டிய எண்ணெய்

8 மிளகு.—பொடித்தது

செய்முறை—–பருப்புகளை  3 மணி நேரம் தண்ணீரில் ஊற-

வைத்து வடித்து    மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

இஞ்சி மிளகாயையும்  சேர்த்து அரைத்து விடலாம்.

லேசாக   துளி ஜலம்  தெளித்து  அரைக்கவும்.

நல்ல  மெத்தென்ற பதத்தில்  மாவு இருந்தால் நல்லது.

உப்பு,கோஸ்,  கொத்தமல்லி, பெருங்காயம் கலந்து  கொண்டு

வடைகளை தயாரித்து,  எண்ணெயைக் காயவைத்து

வடையைப் போட்டு வேகவைத்து எடுக்க வேண்டும்.

கையை  ஈரப்படுத்திக்கொண்டு  மாவை எடுத்து உருட்டி

பாலிதீன் பேப்பர்மேல் வைத்து  ,வட்டமாக சமன் செய்து,

நடுவில் ஒரு பொத்தலுமிட்டு மாவை  காயும்      எண்ணெயில்

நழுவ விடவேண்டும். திருப்பிவிட்டு இருபுறமும் சிவக்க-

-விட்டு எடுத்து  வடிக்கட்டவும்.

ருசியானது.  அரைப்பது சற்று முன் பின் இருந்தாலும்,

ஜலம், அரைப்பதில்  அதிகமாகக் கூடாது

வாஸனைக்கு மிளகுப் பொடி சேர்ப்போம்.

இதையே பெரிய அளவில் உருட்டிப் போட்டும் சிவக்க

வேகவைத்தும் எடுக்கலாம்.

மிக்ஸியில் அரைக்கும்போது   சீக்கிரமே சூடாகிவிடுவதால்

சற்று இடைவெளி கொடுத்து அரைப்பது  அவசியமாகிறது.

கோஸ் மட்டிலும் சேர்த்து தயாரித்த  வடையிது.   சமயத்தில் சிறிது

ஜலம் அதிகம் என்று தோன்றினால்  ஒரு டீஸ்பூன் கடலை மாவோ,

உளுத்தம் மாவோ கலந்து செய்யவும். முழுப்  பருப்பு  விழுது காணும்.

வடையும் …

View original post 2 more words

ஜூன் 20, 2022 at 11:47 முப 2 பின்னூட்டங்கள்

வெஜிடபிள்ப் பன்னீர்க் கறி

மிகவும் எளிதாகக் செய்யக் கூடிய இதைச் செய்து பாருங்கள். வெஜிடபில் பன்னீர்க் கறி. இதுவும் மீள் பதிவுதான். அன்புடன்

சொல்லுகிறேன்

தயார் நிலையில் வெஜிடபிள் பன்னீர் தயார் நிலையில் வெஜிடபிள் பன்னீர்

பாலக் பன்னீர்,   மட்டர்பன்னீர்,மாதிரி, இதுவும்   காப்ஸிகம் சேர்த்த

பன்னீர்க்கறி. இதுவும்  மிக்க   ருசியுடனிருக்கும்.   ரொட்டி, சாதம்

முதலானவைகளுடன் தொட்டுக்கொள்ள  மிகவும் உபயோகமாக

இருக்கும். அவஸரமாக காய்கள் ஒன்றுமில்லாவிட்டால் இதை

உடனே  செய்து விட முடிகிரது.   பன்னீர் உடம்பிற்கும்   நல்ல ஊட்டம்

கொடுக்கும் பொருள். செய்வோமா? வேண்டிய ஸாமான்கள்.

வேண்டிய பொருள்கள்விஜிடபிள் பன்னீருக்கு வேண்டிய பொருள்கள்
விஜிடபிள் பன்னீருக்காக

வேண்டியவைகள்.

பன்னீர்——250 கிராம்

கேப்ஸிகம்—-பெரியதாக ஒன்று

தக்காளிப்பழம்—ஒன்று

பச்சைமிளகாய்—ஒன்று.

வெங்காயம்—-பெரியதாக ஒன்று.

எண்ணெய்—2 டேபிள்ஸ்பூன்

ருசிக்கு உப்பு.

–இஞ்சி,  கொத்தமல்லி இலை, வேண்டியருசியில் துளி மஸாலா

செய்முறை

பன்னீரைக் கையினால் நன்றாக  உதிர்த்துக் கொள்ளவும்.

கேப்ஸிகம்,வெங்காயம்,தக்காளி,  பச்சை மிளகாய் எல்லாவற்ரையும்

தனித்தனியே  சிறியவைகளாக நறுக்கிக் கொள்ளவும்.

அடி கனமான  வாணலியிலோ,  நான் ஸ்டிக் வாணலியிலோ எண்ணெய்

விட்டுக் காயவைத்து   முதலில்  வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.

காப்ஸிகம்,மிளகாயையும் சேர்த்து வதக்கி,  தக்காளியைச் சேர்த்து

வதக்கவும்.உப்பு,சேர்த்து சுருள வதக்கி,    உதிர்த்த பன்னீரைச்  சேர்த்து

அடிக்கடி கிளறிக் கொடுக்கவும்.      கொத்தமல்லி தூவவும்.

முதலிற் சற்று சேர்ந்தாற்போல யிருந்தாலும் நிதான தீயில்,வதக்க

வதக்க ஸரியாகும்.

ஜீரா  ,தனியாப் பொடியோ,   அல்லது  பிடித்த   அதாவது   மஸாலாப்

பொடியோ   ஒரு துளி சேர்க்கலாம்.

நல்ல ருசியான   கறி இது.

எதனுடன் வேண்டுமானாலும் சேர்த்துச் சாப்பிடலாம்.

இதுவே அதுவும் பன்னீர்க் கறி இதுவே அதுவும் பன்னீர்க் கறி

View original post

ஜூன் 13, 2022 at 11:22 முப 6 பின்னூட்டங்கள்

விருந்து சமையலில்கொறடா.

மீள் பதிவிற்கு வசமாக சிக்கியது கொறடா. நல்ல காரஸாரமான சட்னிதான் இது என்று சொல்கிறீர்களா?ஆமாம் இல்லையா. ருசியுங்கள். அன்புடன்

சொல்லுகிறேன்

இலையில்  விருந்து சாப்பாடு இலையில் விருந்து சாப்பாடு

போடமறந்த கொறடா போடமறந்த கொறடா

கொறடா என்ற பெயரைப் பார்த்தால் இடுக்கி மாதிறி ஏதோ இரும்பு ஸாமான் என்று தோன்றும். ஆனால் இதுவும் ருசியை இடுக்கிப் பிடிப்பதால் இதற்குக் கொறடா என்ற பெயர் போலும்!!!!!

செய்வது மிக எளிதுதான். இதை தோசை,இட்லி,அடை வடை என்று யாவற்றினும் சேர்த்துச் சுவைக்கலாம். எங்கள் ஊர் விசேஷ சாப்பாடுகளில் ஒரு ஓரத்தில் இதுவும் இருக்கும்.
இப்போது சாப்பாடே வேறு விதமாக மாறி விட்டது. மெனுவும் மாறி விட்டது. அதனால் என்ன? என்ன பிரமாதம்,துவையல் மாதிரி தானேஎன்று சொல்வதும கேட்கிறது. சமையல் எழுதி ஏராளநாட்களாகிவிட்டது. எதையாவது எழுதுவோம் என்றால் வகையாக கொறடாப் பிடியில் சிக்கியது.
வேண்டியவைகள்—நல்ல நிறமான புளி ஒரு எலுமிச்சையளவு. பச்சை மிளகாய்–8, வற்றல் மிளகாய்– 3, தோல் சீவிய இ்ஞ்சி–2 அங்குல நீளம் [ கூடக் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை], சுத்தம் செய்த பச்சைக் கொத்தமல்லி 2,அல்லது,3 பிடி. காம்புகள் உட்பட போடலாம். பெருங்காயம் பிடித்த அளவு, உப்பு தேவையானது. நல்லெண்ணெய்–3 டேபிள்ஸ்பூன், கடுகு வேண்டிய அளவு.

செய்முறை–வற்றல் மிளகாயைக் கிள்ளியும்,புளியைப் பிய்த்துப் போட்டும் சிறிது தண்ணீரில் ஊறவைக்கவும். புளி நீரை உறிஞ்சும் அளவு தண்ணீர் போதும். புளி ஊறியவுடன், சிறியதாக நறுக்கிய இஞ்சி,பச்சை மிளகாய், பச்சைக்கொத்தமல்லி இவைகளைச் சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் விடாது அறைக்கவும்.

களிம்பு ஏறாத வாணலியில், நல்லெண்ணையைக் காயவைத்து கடுகை வெடிக்க விட்டு பெருங்காயத்தையும் சேர்த்து அறைத்த கலவைையைச் சேர்த்துக்…

View original post 39 more words

ஜூன் 6, 2022 at 10:51 முப பின்னூட்டமொன்றை இடுக

சுட்டரைத்தத் துவையல்

எனக்கு மைக்ரோவேவ் புதியதாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். தவிரவும் கத்தரிக்காய் இதில் சுட்டால் எப்படி இருக்கும் என்று நினைத்தேனோ? ஞாபகமில்லை. எதுவோ மீள்பதிவுதான் இதுவும். எப்படி இருக்கு பாருங்கள். அன்புடன்

சொல்லுகிறேன்

நல்ல பெறிய சைஸ் கத்தரிக்காயை

அனலில்    சுட்டு   துவையல்தயாரித்தால்சுவையாக இருக்கும்.
நான் மைக்ரோவேவில் சுட்டுதான் செய்தேன்.

மிகவும் நன்றாகத் தோல்உறிக்க வந்தது.

உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு விஷயமும் வேண்டும்

ஜெனிவா குறிப்புதான் இதுவும்,

கத்தரிக்காய் என்னவோ இந்தியாவினுடயதுதான்.
வேண்டிய ஸாமான்களைப் பார்ப்போமா.
வேண்டியவைகள்–கத்தரிக்காய் துவையலுக்காக—
கத்தரிக்காய்—- பெறிய சைஸாக 2
வெங்காயம்—-திட்டமான அளவு 2
வெள்ளை எள்—–2 டீஸ்பூன்
புளி—–ஒரு நெல்லிக்காயளவு
பெருங்காயம்—சிறிது
கொத்தமல்லி, கறிவேப்பிலை வேண்டிய அளவு.கட்டாயமில்லை.
உப்பு–ருசிக்குத் தேவையான அளவு.

உளுத்தம் பருப்பு—-4 டீஸ்பூன்
கடுகு—1/4டீஸ்பூன்
வெந்தயம்1/4 டீஸ்பூனிற்கும்   குறைவு
மிளகாய் வற்றல்—-4
எண்ணெய்—நல்லெண்ணெய். 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை—–அலம்பித் துடைத்த கத்தரிக்காயின் மேல் இலேசாகஎண்ணெயைத் தடவவும்.
மைக்ரோவேவில்,   அதன்   பாத்திரத்தில், காயை வைத்து,ஹை பவரில் 3 நிமிஷங்கள்சூடாக்கவும்.

திரும்பவும் காயைத் திருப்பி வைத்து4 நிமிஷங்கள்அதேபோல் சூடாக்கி எடுக்கவும்.
காய் நன்றாக ஆறிய பிறகு தோலை உறித்தெடுக்கவும்.
வாணலியில் சிறிது எண்ணெயைக் காயவைத்து உ.பருப்பு,மிளகாய்,

வெந்தயம்இவைகளை சிவக்க வறுத்து எள்ளையும் சேர்த்து வறுத்து இறக்கவும்.
நறுக்கிய வெங்காயத்தைத் தனியாகச் சிறிது எண்ணெய் சேர்த்து வதக்கவும்

.எள்,சுட்ட கத்தரிக்காய், வெங்காயம், மிளகாய்,புளி ,வெந்தயம்

இவற்றை மிக்ஸியில்இட்டுஜலம் விடாமல் கெட்டியாக அறைக்கவும்.

நன்றாக மசிந்த பின்  உளுத்தம்பருப்பைச் சேர்த்துக்  கொரகொரப்பாக  அரைத்துஉப்பைச் சேர்க்கவும்.

கடுகு,  பெருங்காயப் பொடியை,  மிகுதி எண்ணெயில்  தாளிதம் செய்யவும்.

நல்லெண்ணெய்,   நெய்  சேர்த்து  சாதத்துடன்  சாப்பிட  மிகவும் ருசியாகஇருக்கும்.

வெங்காயத்திற்குப் பதில்   தேங்காயும், புளிக்குப் பதில்,வதக்கிய தக்காளியும்சேர்த்து…

View original post 72 more words

மே 30, 2022 at 10:51 முப 2 பின்னூட்டங்கள்

என்ன சமையல்?

பத்து வருஷங்களுக்கு முன்னர் எழுதிய பதிவு. பதிவுகள் ஒரேமாதிரி படிக்க அலுத்து விடும் என்று சற்று வித்தியாஸமாக எழுதினேன். மருமகள் செய்முறையும் இதில். பூண்டா என்றெல்லாம் நினைக்காதீர்கள். அவரவர்கள் விருப்பம். ரஸிப்பீர்கள் என்று நினைக்கிறேன்.பார்க்கலாம். அன்புடன்.

சொல்லுகிறேன்

ஸிம்பிலாக   சமைக்கிறேன்  என்று  பிரதீஷா செய்த சமையலை

நீங்களும் தான்  ருசியுங்களேன்.     அஸ்ஸாம் டாலும் சென்னை

ரஸமும்     பொதுவான    கறிகளும்கலந்து  ருசியுங்களேன்.

ஒரு டால்.   பயத்தம்பருப்பும்,   மசூர்  டாலும் கலந்து வேகவைத்து

பொடியாக  நறுக்கிய  வெங்காயம்,ப.மிளகாய்,  இஞ்சி, பூண்டு,

தக்காளியை நன்றாக  வதக்கிச் சேர்த்து  உப்பு, மஞ்சளுடன்

சேர்த்துக் கொதிக்க  வைத்து,   கொத்தமல்லி சேர்த்தது.

மஸாலா போடலை.   துளி  சீரகப்பொடி போட்டது.

உருளைக் கிழங்கை    மெல்லியதாக   நறுக்கி   1ஸ்பூன்

எண்ணெயுடன்   5 நிமிஷங்கள்   மைக்ரோவேவ்  செய்து எடுத்து

வாணலியில்   எண்ணெயில்  கடுகைத் தாளித்து,  உப்பு,காரம்

மஞ்சள்   சேர்த்து  நன்றாக   வதக்கியது.

அடுத்து   நிறைய  தக்காளியை  மைக்ரோவேவில்  வேகவைத்து

எடுத்து துளி  புளி சேர்த்து  கறைத்து   சாறு எடுத்து,  ரஸப்பொடி,உப்பு,

பூண்டு விழுதுடன்   நிதான தீயில்   நன்றாகக்   கொதித்துக்

குறைந்தவுடன்,    துவரம்பருப்பு   வேகவைத்ததைக் கறைத்துக் கொட்டி

ஒது கொதி வந்தவுடன்   இறக்கி,   நெய்யில்   கடுகு,  பெருங்காயம்

பொரித்துக் கொட்டி,    கொத்தமல்லித்தழை  தூவி இறக்கியது.

கமகம ரஸம்.

வீட்டில்  தோய்த்த   புளிப்பில்லாத   தயிர்.

கொஞ்சம்   ஊறுகாய்.

வதக்கிய    வெண்டைக்காய் கறி.

நடுவில்    குட்டி காப்ஸிகம்   பஜ்ஜி அதுவும் சுடச்சுட

பாக்கலாமா,   கேட்கலாமா,  ருசிக்கலாமா

பஜ்ஜியைச் செய்யலாம்.

குட்டி கேப்ஸிகம்

வேண்டிய அளவு–

-கடலைமாவு,துளி அரிசி மாவு

ருசிக்கு  வேண்டிய   உப்பு,மிளகாய்ப்பொடி

துளி   ஸோடா உப்பு

துளி பெருங்காயப்பொடி

கொத்தமல்லி இலை கொஞ்சம்

கேப்ஸிகம் வேண்டியஅளவு.

செய்முறை

மிளகாயை   இரண்டாக  நறுக்கிக்  கொள்ளவும்.

முழுதாகவும்   போடலாம்.

உப்பு…

View original post 76 more words

மே 23, 2022 at 11:25 முப 4 பின்னூட்டங்கள்

Older Posts Newer Posts


மார்ச் 2023
தி செ பு விய வெ ஞா
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 293 other subscribers

வருகையாளர்கள்

  • 546,864 hits

காப்பகம்

பிரிவுகள்


சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

Chitrasundar's Blog

நாங்களும் சமைப்போமில்ல!!!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com News

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.