Archive for பிப்ரவரி, 2016
தை பிறந்தால்–2
உஷாவின் நினைவு இருந்துகொண்டே இருக்கிறது. அவ்வப்போது மானஸீகமாகப் பேசிக்கொள்வோம் கற்பனையில். மிகவும் அபிமானமுள்ள பெண். ஒரு ஆகாயவிமான பிரயாணம் மட்டுமல்ல.பல வித உணர்வுகளை பல ஸமயம் விமானப் பயணங்களில் அனுபவித்துள்ளேன். இது மனதை விட்டு அகலாத கற்பனையும் சேர்ந்ததுதான். உஷாவும் படித்து மகிழ்ந்திருப்பாள். அன்புடன்
-வாஷிங்டன்லே நல்ல வேலெம்மா எனக்கு. மகளைப் பாத்துபாத்து
அருமையா வளர்க்கவும், அதுக்கு குறையில்லாம எல்லாம் செய்யவும்,
வேலைக்கு போவதும் ,வருவதும்தான் அதுதான் உலகத்திலே ,பெரிசு.
மக நல்லா வளரணும், படிக்கணும், இது ஒண்ணுதாம்மா கனவு.
ஆபீஸ்லே இருக்கரவங்க சொல்லுவாங்க, உனக்குன்னு வாழ்க்கை
வேணும், அதைப்பத்தியும் யோசின்னு சொல்லுவாங்க.
எனக்கு எதுவும் காதுலே விழுந்ததேயில்லைம்மா. வருஷத்துக்கொரு
முறை இந்தியா வந்து போனால், அம்மா கை சாப்பாடு தின்றாலே அது
போதும்மா.
ஜெயந்தி நல்லா படிப்பா. அவங்க அப்பா வழி பாட்டின்னா உசுரு.
அவங்களும் வருஷா வருஷம் கூப்பிடுவாங்க. அனுப்புவேன்.
இப்படியே அவளுக்கு அன்பும் நல்லா கெடைச்சுது.
நான் அவங்ககிட்டே போன் போட்டுதான் பேசுவேன்.
உஷா, ஜெயந்தி வளந்திட்டே வரா. நீ ஜாக்கிரதையா இருக்கோணம்.
அவளுக்கு எல்லாம் நல்லா செய்யணும்!
வெளி நாட்லே இருக்கே!ஞாபகம் இருக்கணும் , இதையே சொல்லுவாங்க.
இது ஏது? புதுக்கதை ஏதாவது பாவம், நமக்கு இதெல்லாம் வேணுமா?
யோசனை வந்து விட்டது.
ட்ரே,ப்ளேட் எல்லாம் எடுக்க ஏர்ஹோஸ்டஸ் வர இரண்டு நிமிஷம் பேச்சு
தடை.
அப்பா சொல்வாங்க, போனிலேதான், உன் மக எதிர்காலம் உன் கையில்.
என் எதிர் காலமே தெரியலே. என்ன சொல்ராங்கன்னு புரியலையா?
ஆபீஸ்லே பெரிய,பெரிய மீட்டிங்லாம் ஏற்பாடு செய்ய என்னிடம்
ஒப்படைப்பாங்க. வெளியிடங்கள்லேந்து ஆட்களெல்லாம் வருவாங்க.
அவங்களுக்கும், எல்லா ஒத்தாசைங்க. ஷாப்பிங் எல்லாம் கூட போய்
முடிந்ததை எல்லாம் செய்வேங்க
ஜெயந்திக்கும் ஷாப்பிங் போக பிடிக்கும். இம்…
View original post 976 more words
தை பிறந்தால்–1
பார்த்துக்கொண்டே வரும்போது இந்தக் கதை மட்டும் திரும்பப் படித்ததாக ஞாபகம் வரலை. இரண்டு பகுதியாவேறு போட்டிருந்தேன். அடியைப் பிடிடா பாரதப்பட்டா என்று ஒரு வசனமுண்டு. புதுசா எழுத யோசனைவந்தாலும் ப்ளாகில் அதிகம் தட்டச்சு செய்ய முடிவதில்லை ஸரி இதைப் போடுவோம் என்று தோன்றியது. படிக்காதவர்கள் கூட சிலர் ,பலர் இருக்கலாமில்லையா? எனக்காகவே மனத்திருப்திக்காகப் போடுகிறேன் என்றே இருக்கட்டும். படியுங்கள்.
ஏர் போர்ட், டிக்கெட் கவுண்டர்.
அப்க்ரேட் இன்னிக்கு செய்வதாகச் சொன்னீர்கள்.
ஸாரி மேடம். பிஸினஸ்க்ளாஸ் ஃபுல் மேடம்.
நேற்று புக்செய்யக் கேட்ட போது கட்டாயம் இன்று தருகிறேன்
என்று சொன்னீர்கள். ப்ளாட்டினம் கார்ட் எதற்குத் தருகிறீர்கள்?
எங்கே உங்கள் ஆஃபீஸர். நான் பேசுகிறேன்.
ஸாரிமேடம்.
நோநோ. ஸாரி,யெல்லாம் வேண்டாம். கொடுத்த வார்த்தையை
காப்பாத்தணும். வயஸானவங்க, வீல்ச்சேர்.
போன் செய்து விவரம் போக ஆஃபீஸரே வருகிரார்.
ஒரு முறைகூட இ்துவரை அப்க்ரேட் கேட்டதில்லை.
உங்கள் கார்டிற்கு என்ன மதிப்பு.?
வாதம், கார்ட் எதற்குக் கொடுக்குறீர்கள் அதற்கு அர்த்தமே இல்லை.
எப்படியோ பத்து நிமிஷம் கொடுங்கள், பார்க்கிறேன்.
வேண்டாமே இ ப்படியே அட்ஜஸ்ட் பண்ணலாமே.
என்ன ஆகிறது பார்ப்போம். அப்படி விடக்கூடாது. டிக்கட் வாங்க
முடியாதா என்ன?
வாதம் பலித்து. கார்டை வாங்கி ஸரி பார்த்து அப்க்ரேட் செய்து
மூன்று போர்டிங்பாஸ்.
சேர்ந்தமாதிரி இருக்கையில்லை. ஆரம்பத்தில் இரண்டு இருக்கை.
கடைசியில் ஒரு இருக்கை.
ஸாரி. இப்படிதான் கொடுக்க முடிந்தது. ரொம்ப சிரமப்பட்டுதான்
செஞ்ஜோம்.
இவ்வளவு சண்டை போட்டால்தான் காரியம் நடக்கும்.
வீல்சேர். முன்னைடியே போய்ச் சேரணும்.
நாங்க முன்னாடி இருக்கோம். நீங்க பின் ஸீட்டுலே இருங்கோ.
மத்ததை நான் பாத்துக்கறேன்.
வீல்சேர், பாஸஞ்சர்கள் இரங்கிப் போனவுடன்,ப்ளேன் சுத்தம்செய்து
கொண்டிருக்கும் போதே டோரில் காத்துக் கிடக்கும்.
அதிகம் பாஸஞ்சரிருந்தால் இன்னும் சீக்கிரமே சுவர்க
வாசல்தான். உள்ளே போக அனுமதிக்கு .
தெறியாமல் பணத்தை , வீல் சேரைத்…
View original post 538 more words