Posts filed under ‘Uncategorized’
2011 in review
The WordPress.com stats helper monkeys prepared a 2011 annual report for this blog.
Here’s an excerpt:
The concert hall at the Sydney Opera House holds 2,700 people. This blog was viewed about 38�000 times in 2011. If it were a concert at Sydney Opera House, it would take about 14 sold-out performances for that many people to see it.
மோர் மிளகாய்
பெயர் தான் மோர் மிளகாயே தவிர ஊறுவதென்னவோ தயிரில்தான்.
நல்ல ருசியான மிளகாய். எண்ணெயில் வறுத்து தயிர் சாதத்துடன்
சாப்பிட கட்டு சாப்பாட்டுகளுடன் எடுத்துப் போக என சுலபமானது.
ஜெனிவா வெய்யிலில் தயாரித்த என்னை ஏன் போடவில்லை என்று
கேட்பது போல மனதில் ஒரு எண்ணம். எழுதின குறிப்பைப் போட்டுவிட்டால்
போகிறது. விருப்பமானவர்களுக்கு உபயோகமாக இருக்குமே.
வேண்டியவைகள்.
பச்சை மிளகாய்—அதிக காரமில்லாத சிறிய சைஸ் ஒரு 20 , 25.
பெறிய சைஸாக இருந்தால் நம்பரைக் குறைத்துக் கொள்ளவும்.
நல்ல தயிர்—–ஒருகப். அதிகமும் விடலாம்.
உப்பு ருசிக்குத் தக்கபடி .2 டீஸ்பூன் வரை ஸரியாக இருக்கும்.
செய்முறை.
மிளகாய்களை அலம்பித் துடைத்துக் காயின் நுனியில் சற்றுக் கீரவும்.
காம்பையும் சிறிது வைத்து மிகுதியை நீக்கவும்.
கண்ணாடி, அல்லது ஜாடிக் கிண்ணத்தில் மிளகாயைப் போட்டு அது
மூழ்கும்படி தயிரைக் கடைந்து அத்துடன் சேர்க்கவும்.
உப்பு சேர்த்துக் கலந்து மூடி வைக்கவும்.
2, 3நாட்கள் தயிரில் ஊறின பிறகு மிளகாயைச் சற்று பிழிந்தாற்போல
எடுத்து வெய்யிலில் காயவைக்கவேண்டும்.
ஒரு ட்ரேயிலோ, தட்டிலோ பாலிதீன் பேப்பரினால் கவர் செய்து
அதன் மேல் பரவலாக மிளகாயைப் பரப்பி நல்ல வெய்யிலில்
காயவைக்கலாம்.
தயிர்க் கலவையையும் கூடவே வெய்யிலில் வைக்கவும்.
வெய்யில் போன பிறகு மிளகாயைத் திரும்பவும் தயிருடனே
கலந்து வைக்கவும்.
ஒருநாள் விட்டு ஒருநாள் இப்படியே மிளகாயைக் காய வைக்கவும்.
வெய்யிலில் வைக்க வைக்க மிளகாயும், தயிரும் காய்ந்து விடும்.
கொஞ்சம்,தயிர், உப்பு காய்ந்து மிளகாயினின்றும் பொடியாக உதிரும்.
நன்றாகக் காய்ந்த மிளகாயை பாட்டிலில் போட்டு வைத்து, வேண்டும்
போது எண்ணெயில் சற்றுக் கருக வறுத்து உபயோகிக்கவும்.
தயிரில் ஊறின மிளகாய்கள் நல்ல மணத்துடன் உப்பும் உறைப்புமாக
ருசியாக இருக்கும். எண்ணெயில் வறுத்த பிறகுதான்.
ஊறும் போதே பச்சையாக தொட்டுக் கொள்ள உபயோகிப்பவர்களும்
உண்டு.
கெட்டியான புளிக்கரைசலிலும் மிளகாயை ஊறவைத்து இதே முறையில்
காயவைத்து தயாரிப்பதும் உண்டு.
தயிர் அதிகமாகவே சேர்க்கவும்.
மோர்க்குழம்பு, மோர்க்களி, இட்லிஉப்புமா இவைகளில் முக்கியமாக
இம்மிளகாய் உபயோகப்படும்.
வீட்டில் அதிகப்படியாக மிகுந்து போகும் 7, 8 மிளகாயில் கூட இதைச்
சிறிய அளவில் செய்து காயவைத்து உபயோகப் படுத்தலாம்.
மூன்றாவது படம் ஊறும் மிளகாய்.
கடைசி படம் நன்றாகக் காய்ந்த மோர் மிளகாய். இனி வறுக்க வேண்டியதுதான் பாக்கி.
தீபாவளி வாழ்த்துக்கள்.
அன்புமிக்க வலைப்பதிவு உலகத்தின் அனைவருக்கும், மற்றும் யாவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துகள். இனிமையாக தீபாவளியைக் கொண்டாடுங்கள். அன்புடன் சொல்கிறேன் காமாட்சி.வணக்கம்.
சொல்கிறேன்.
அன்புள்ள என்னுடைய ப்ளாகைப் பார்த்துத்
தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு வணக்கம்.
வீட்டில் பெரியவருக்கு உடல்நிலை ஸரியில்லாத
காரணத்தால் எனக்கு எழுதமுடியவில்லை.
நிலைமை ஸரியாகி தொடர்ந்து எழுத கடவுளைப்
ப்ரார்த்திக்கிறேன். அன்புடன் காமாட்சி சொல்லுகிறேன்.
Introducing-Manasvini, my Granddaughter!
Hey, people! this is chollukireen’s granddaughter manasvini (mannu) here! Sorry i did this without telling you, patti! I like to blog, just like patti! (my blogs are mannu98 and othermannu98) Anyways, just wanted to say to patti- You are a great patti and keep blogging, ‘cuz your recipies are delicious! Come back to Mumbai/Bombay soon! (in time for my BIRTHDAY!) I don’t have your e-mail id and your not on skye EVER, so this is the only way icould say this! Hope you didn‘t mind me blogging on your account! SORRY SORRY SORRY!!! Also- you forgot the diary appa gave you in your cupboard.
LOVE YOU and MISS YOU LOTS!
LOADS OF KISSES FROM,
MANNU ❤
புத்தாண்டு வாழ்த்துக்கள்
எல்லா வலைப்பதிவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும்
மங்களகரமான ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
சொல்லுகிறேன் காமாட்சி
நன்றி சொல்லுகிறேன்
அன்பு மிக்கவர்களே சொல்லுகிறேன்1000
புள்ளியைக் கடக்க காரணமான உங்களுக்கு நன்றியைச் சொல்லுகிறேன். காமாட்சி.
காய்கறி புலவு.VEGETABLE PULAVU
வேண்டியவை—-பாஸ்மதி அரிசி–2கப்
வேண்டிய காய்கறிகள—–தோல்நீக்கி நறுக்கிய உருளைக் கிழங்கு ஒருகப்,——–காரட் ஒருகப். வெங்காயம் ஒருகப் காலிபிளவர் ஒரு கப், பச்சைமிளகாய்மூன்று.
பொடிக்க——-லவங்கம்8—மிளகுஒரு டீஸ்பூன்,-பட்டை1அங்குல அளவு, ஏலக்காய்1. இவைகளை ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளவும்.
தாளிக்க—–ஜீரகம் ஒரு டீஸ்பூன்,—-பிரிஞ்சி இலை ஒன்று,
இஞ்சி, பூண்டு விழுது தலா ஒரு டீஸ்பூன்,மஞ்சள்பொடி அரை டீஸ்பூன். எண்ணெய்2டேபிள் ஸ்பூன், நெய்3டேபிள் ஸ்பூன்.
ருசிக்கு வேண்டிய உப்பு.
செய்முறை——-அரிசியைக் களைந்து வடிக்கட்டி நிதானமான தீயில் , வாணலியில் இரண்டு ஸபூன் நெய்யை விட்டு ஈரம் போக அரிசியை வறுத்துக் கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய்யும், நெய்யுமாக விட்டு, ஜீரகத்தைத் தாளித்து, வெங்காயம் மிளகாய் ,இஞ்சி,பூண்டுசேர்த்து வதக்கவும். வதங்கியவுடன், காய்கறிகளையும் சேர்த்து லேசாக வதக்கி மஸாலாபொடி மஞ்சள் உப்பு, பிரிஞ்சிஇலை, வருத்த அரிசி, மூன்றரை கப் தண்ணீர் சேர்த்து நிதானமான தீயில் வெயிட் போட்டு ஒரு விஸில் வரும் வரை வைத்து எடுக்கவும்.
அவரவர்கள் குக்கரில் அரிசி வேக எவ்வளவு விஸில் என கணக்குத் தெரியும். அதன் பிரகாரம் செய்யவும். தக்காளிப் பச்சடியுடன் பறிமாறலாம் வெங்காயம் ஸாம்பார் வெங்காயமாகச் சேர்த்தால், புலவு ருசியாக இருக்கும்.
வாழ்த்துகள்
அனைவருக்கும் என் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துகள் சொல்லுகிறேன் காமாட்சி
camaiyal kuRippukaL.
naan palavitha caivac camaiyal kuRippukkaLaith theRivikka ninaikkireen.
oree vakai pala maathirikaLil ceyyap patukirathu. raSiththup patiyunggaLeen.







