பூந்தி லட்டு
வேண்டியவைகள் புதியதாக அரைத்த கடலை மாவு—2கப் சர்க்கரை—இரண்டரைகப் நெய்—–1டேபிள்ஸ்பூன் முந்திரிப் பருப்பு—–10 விருப்பம் போல் லவங்கம்—–6 திராட்சை—–15 ஏலக்காய்—–6 பொடித்துக் கொள்ளவும் பூந்தி பொரிக்க —–வேண்டிய எண்ணெய் கேஸரி பவுடர்—-ஒரு துளி குங்குமப்பூ—சில இதழ்கள் பச்சைக் கற்பூரம் —-மிகச் சிறிய அளவு செய்முறை சர்க்கரையை அமிழ ஒருகப் ஜலம் சேர்த்து அகன்ற பாத்திரத்தில் நிதானமான தீயில் வைக்கவும். பாகு கொதிக்கும் போது ஒரு ஸ்பூன் பாலைச் சேர்த்தால் அழுக்கு ஓரமாக ஒதுங்கும். கரண்டியால் அதை எடுத்து விடவும். […]
Continue Reading ஒக்ரோபர் 27, 2010 at 12:31 பிப 5 பின்னூட்டங்கள்
ஆலு தாம்
இதுவும் ரொட்டி, பூரி, ஏன் தோசையுடன் கூட சேர்த்துச்
சாப்பிட நல்லதொரு ஜோடி.
வேண்டியவைகள்
சிறியவகை பேபி பொடேடோ—-அரைகிலோ
பொடிக்க மிளகு–1 டீஸ்பூன்,லவங்கம் 6, சின்ன துண்டுபட்டை
அறைக்க–வெங்காயம்.—-2 திட்டமான அளவு
பூண்டு—4 இதழ்,, இஞ்சி சிறிய துண்டு
தக்காளிப்பழம்–2
வேண்டிய பொடிகள்
தனியா பொடி—2 டீஸ்பூன்
மிளகாய்ப் பொடி—–1 டீஸ்பூன்
கரம் மஸாலா பொடி—அரை டீஸ்பூன்
மஞ்சள்பொடி—அரை டீஸ்பூன்
பிரி்ஞ்சி இலை–ஒன்று
உருளைக்கிழங்கு பொரிக்க —வேண்டிய எண்ணெய்
மஸாலா வதக்க– 4டேபிள் ஸ்பூன் எண்ணெய்
செய்முறை—–உருளைக் கிழங்கை வேகவைத்து தோலை
உறிக்கவும். அதிகமாக வேக வேண்டாம்.
பொடிக்கக் கொடுத்திருப்பதை பொடித்துக் கொள்ளவும்.
தக்காளியைத் தனியாக அரைக்கவும்.
இஞ்சி பூண்டு வெங்காயத்தைத் தனியாக அரைக்கவும்.
எணெ்ணெயைக் காயவைத்து ஜீரகம் தாளித்து, வெங்காய
இஞ்சி, பூண்டு விழுதைப் போட்டு நிதான தீயில் வதக்கவும்.
விழுது ப்ரவுன் கலராக மாறியதும், பொடிகளைச் சேர்த்துப்
பிரட்டி,தக்காளி விழுதைச் சேர்க்கவும்.
எண்ணெய் பிறியுமளவிற்கு வதக்கிப் பிறகு 2 கப்பிற்கு
சற்று அதிகமாகவே தண்ணீரைச் சேர்த்து வேண்டிய
உப்பைப் போட்டு கொதிக்க விடவும்.
வேறு வாணலியில் எண்ணெயைக் காயவைத்து
உறித்து வைத்திருக்கும் முழு உருளைக் கிழங்கை
சிறிது சிறிதாகப் போட்டு சற்று சிவக்கப் பொரித்து
கொதிக்கும் கலவையில் சேர்த்து கொதிக்கவிட்டு
சேர்ந்தாற்போல் ஆகும்போது இறக்கி கொத்தமல்லி
தூவி உபயோகிக்கவும். வேண்டிய அளவு காரம் கூட்டிக்
குறைக்கவும்.
தக்காளி அறைப்பதற்குப் பதில் 150 கிராம் டொமேடோ
ப்யூரியை சேர்த்தும் கொதிக்க விடலாம்.
கலர் சிவப்பாக நன்றாக இருக்கும்.
ப்ரி்ஞ்சி இலையைச் சேர்க்கவும்.
அவல் புட்டு
இதுவும் சுலபமாகச் செய்யலாம்.
வேண்டியவைகள்——கெட்டி அவல்—–1 கப்
பொடித்த பாகு வெல்லம்—–முக்கால் கப்
தேங்காய்த் துருவல்—–5 டேபிள்ஸ்பூன்
நெய்—–1டேபிள் ஸ்பூன்
ஏலக்காய்—-4 பொடித்துக் கொள்ளவும்.
குங்குமப்பூ அல்லது கேஸரி பவுடர்—-ஒரு துளி
துவரம்பருப்பு——-4, 5 டேபிள்ஸ்பூன்
முந்திரிப்பருப்பு——விருப்பத்திற்கு தக்கபடி
செய்முறை——வெறும் வாணலியில் மிதமான சூட்டில் அவலை சிவக்க
வறுத்து கரகரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்.
லேசாக கை பொருக்கும் வென்னீரில் சிறிது தெளித்து பொடித்த அவலைப்
பிசறி ஊற வைக்கவும். பிடித்தால் பிடிக்கவும் விட்டால் உதிரும்படியும்
இருக்க வேண்டும்.
துவரம் பருப்பை நெத்து பதத்தில் [முக்கால் வேக்காடு] வேகவிட்டு
பருப்பைப் பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
குங்குமப்பூ,சற்றே வருத்த தேங்காய், ஏலப்பொடி, பருப்பு
இவைகளை பொடித்த அவலுடன் கலக்கவும்.
வெல்லம் நினைய, ஜலம் சேர்த்து நல்ல முதிர்ந்த பாகாகக்
காயவைக்கவும்
ஒரு தாம்பாளத்தில் அவலைக் கொட்டி , பாகை அதன் மேல்
கொட்டிக் கலக்கவும்.
முந்திரியை வறுத்துச் சேர்த்து நெய்யுடன் கலக்கவும்.
ஆறின பிறகு உபயோகிக்கவும்.
துவரம் பருப்பிற்கு பதில் பயத்தம் பருப்பையும் வறுத்து
முக்கால் பதம் வேகவிட்டுப் பிழிந்தும் சேர்க்கலாம்.
ஷீலா நீ கேட்டதை எழுதிவிட்டேன்.
ஜெவ்வரிசி கிச்சடி
என்னுடைய மருமகள் சுமன் செய்யும் விசேஷமான
சிலவகைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
வேண்டியவைகள்——ஜெவ்வரிசி(பெறியவகை)-1கப்
வேர்க் கடலை—-1கப்
எண்ணெய்—-2 டேபிள் ஸ்பூன்.
நறுக்கிய பச்சை மிளகாய்—-2
ஜீரகம்—–அரை டீஸ்பூன
பொடியாக நறுக்கிய உருளைக் கிழங்கு-முக்கால்கப்
நல்லமோர்—அரைகப்
நறுக்கிய கொத்தமல்லி– ஒரு டேபிள் ஸ்பூன்
ருசிக்கு—உப்பு, அரை டீஸ்பூன் சர்க்கரை
செய்முறை——தயாரிப்பதற்கு 5, 6 மணிநேர முன்பே
ஜவ்வரிசியை நன்றாகக் களைந்து தண்ணீரை ஒட்ட
வடித்துவிட்டு மோரைக் கலந்து ஊற விடவும்.
ஊறின ஜெவ்வரிசி உதிர், உதிராகவும்,நன்றாக
ஊறியும் இருக்க வேண்டும்.
வேர்க் கடலையை சிவக்க வறுத்து தோல் நீக்கி
ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி ஜீரகத்தைத்
தாளித்து, பச்சைமிளகாய் ,கிழங்குத் துண்டங்களைச்
சேர்த்து வதக்கவும்.
கிழங்கு வதங்கியதும், ஊறின ஜெவ்வரிசியை
சேர்த்து உப்பும் சர்க்கரையும் கலந்து வதக்கவும்.
தீ மிதமாக இருக்கட்டும்.
நன்றாகச் சூடேறி வதங்கியபின் வேர்க்கடலைப்
பொடியை சேரத்துக் கிளறி சூடாக இறக்கவும்.
விருப்பத்திற்கு ஏற்ப எலுமிச்சை சாறு சேர்த்து
பச்சைக் கொத்தமல்லியைத் தூவவும்.
விரத நாட்களில் அன்னம் சேராத உணவாக இதைக்
கருதி உண்பதால் வெங்காயம் சேர்ப்பதில்லை..
எண்ணெய் வேண்டுமானால் அதிகம் சேருங்கள்.
காரமும் அப்படியே.
பீட்ரூட் கறி
இதுவும் கறிப்பொடி உபயோகித்து செய்தால் ருசியாகஇருக்கும்.
வேண்டியவைகள்
பீட்ரூட்—-அரைகிலோ
வெங்காயம்—-2
எண்ணெய்—–2டேபிள் ஸ்பூன்
இஞ்சி—சிறிய துண்டு
ருசிக்கு உப்பு
கடுகு—1டீஸ்பூன்
கறிப்பொடி—–1டேபிள் ஸ்பூன்
செய்முறை—–பீட்ரூட்டை சுத்தம் செய்து தோல்சீவி
சிறிய துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
இஞ்சி வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எணெணெயைக் காயவைத்து கடுகை
வெடிக்கவிட்டு இஞ்சி வெங்காயத்தை நன்றாக வதக்கி
பீட்ரூட்டைச் சேர்த்து வதக்கவும். வேண்டிய உப்பு
சேர்த்து, சிறிது ஜலம் தெளித்து மூடியால் மூடிவைத்து,
நிதான தீயில் கிளறிவிட்டு நன்றாக வேகும்படி வதக்கவும்.
காய்வதங்கி நீர் வற்றியவுடன் கறிப் பொடியைத் தூவி
வதக்கி இறக்கவும்.
பொடிவகைகளில் கறிப்பொடி செய்யும் வகை கொடுக்கப்பட்டு
இருக்கிறது. அவசியமாயின் காரம் கூட்டிக் குறைப்பது
உங்கள் கையில்.
காரட் பருப்பு கோசுமல்லி
;வேண்டியவைகள்——பயத்தம் பருப்பு—-1கப
தேங்காய்த் துருவல்—-2 டேபிள் ஸ்பூன்
காரட் துருவல்—-2டேபிள் ஸ்பூன்
வெள்ளரித் துருவல்—-2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி பொடியாக நறுக்கியது—–1டேபிள்ஸ்பூன்
துருவிய இஞ்சி—-1டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய்——2
ருசிக்கு உப்பு
தாளிக்க—எணெணெய்—-2டீஸ்பூன்
கடுகு, சீரகம் சேர்த்து——1டீஸ்பூன்
எலுமிச்சம் பழம்—-1
செய்முறை
பருப்பைக் களைந்து ஒரு மணி நேரம் ஊறவைத்துத் தண்ணீரை
வடிக்கட்டவும்.
பிழிந்த வெள்ளரித் துருவல்,தேங்காய்த் துருவல்,கேரட்
துருவல், இஞ்சி,கொத்தமல்லி வகைகளைப் பருப்புடன்
சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
எண்ணெயில் கடுகு சீரகத்தைத் தாளித்து மிளகாயைவதக்கி
பருப்புடன் சேர்த்துக் கலக்கவும்.
சாப்பிடும் போதோ, பறிமாறும் போதோ உப்பு, எலுமிச்சை-
-சாறு கலந்து உபயோகிக்கவும்.
காப்ஸிகத் துண்டுகள் வதக்கியும், பச்சைப் பட்டாணி அப்படியே
சேர்த்தும், தக்காளி சேர்த்தும் ,செய்யலாம்.
வேண்டியவர்கள் வெங்காயம், பெருங்காயம் சேர்க்கலாம்.
வெல்லச்சீடை
வேண்டிய சாமான்கள்
சிவக்க வறுத்தரைத்த அரிசி மாவு—-1கப்
வறுத்தரைத்த உளுத்தமாவு—-3 டீஸ்பூன்
வெல்லத்தூள்—–அரை கப். [பாகு வெல்லமாக]
பொடியாக நறுக்கிய தேங்காய்த் துண்டுகள்—-2டேபிள்ஸ்பூன்
வெள்ளை எள்—-அரை டீஸ்பூன்
ஏலக்காய்ப் பொடி——சிறிது
நெய்—2 டீஸ்பூன். சீடையைப் போட்டெடுக்க எண்ணெய்
செய்முறை——ஒரு கப் ஜலத்தில் வெல்லத்தைச் சேர்த்துக் கொதிக்க
விடவும்.
தீயை நிதானப் படுத்தி அரிசி மாவைக் கொட்டிக் கிளறி இறக்கவும்.
ஆறியவுடன் தேங்காய், உளுத்தமாவு,நெய், எள், ஏலப்பொடி
சேர்த்துப் பிசையவும்.
பிசைந்த மாவை கோலிகளாக ஒரே அளவில் உருட்டி
சுத்தமான துணியில் பரப்பிப் போடவும்.
15,நிமிஷங்கழித்து சீடைகளை காயும் எணெணெயில்
சிறிது,சிறிதாகப் போட்டு கரகரப்பாக வேகவிட்டு எடுக்கவும்.
ஆறவிட்டு எடுத்து வைக்கவும்.
மணத்தக்காளிவற்றல் குழம்பு
வற்றல்கள் சேர்த்து பொதுவாக குழம்புகள் செய்யும் முறை.
Continue Reading செப்ரெம்பர் 19, 2010 at 2:52 பிப பின்னூட்டமொன்றை இடுக
அவல் கேஸரி
வேண்டியவைகள்
- அழுத்தமான கெட்டி அவல்—1கப்
- சர்க்கரை—-1கப்
- நெய்—கால்கப்
- பால்—அரைகப்
- ஏலப்பொடி,முந்திரி, திராட்சை (விருப்பத்திற்கிணங்க)
- கேஸரி பவுடர் ஒரு துளி
செய்முறை——அவலை நெய்விட்டு சற்று சிவக்க வறுத்தெடுத்து
ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளவும்.
பாலுடன் அரைகப் ஜலம் சேர்த்து கொதிக்க விடவும்.
தீயைக் குறைத்து அவலைக் கொட்டிக் கிளறவும்.
அவல் வெந்ததும் சர்க்கரையை சேர்க்கவும்.
துளி பாலில் கலரைக் கரைத்துவிடவும்..
கெட்டியாகும்வரைக் கிளறி நெய்யைச் சேர்க்கவும்.
ஏலப்பொடி, வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும்.
மெல்லிய அவலாக இருந்தால் தண்ணீரைக் குறைக்கவும்.
இனிப்பு, நெய் இரண்டும் வேண்டிய அளவு அதிகரிக்கவும்.
குஙு்குமப்பூ சேர்த்தால் கலர் வேண்டாம்.
பச்சைப் பயறு சுண்டல்
பச்சைப் பயறு—–1கப்
பச்சை மிளகாய்—-2
இஞ்சி—-சிறிது
காரட் துருவல்—-அரைகப்
எண்ணெய்—-4டீஸ்பூன்
சீரகப்பொடி—அரை டீஸ்பூன்
ருசிக்கு உப்பு
கடுகு—அரைடீஸ்பூன்
பச்சைக் கொத்தமல்லி—-விருப்பத்திற்கு
செய்முறை—-பயறை ஊறவைத்து ஜலம் சேர்த்து வேக வைத்து
வடிய வைக்கவும்.
இதற்கு கடலை, பட்டாணி போல அதிக விஸில் வைத்து
வேக வைக்க வேண்டாம்.
சீக்கிரம் வெந்து போகும்.
தாளிக்க வேண்டியவைகளைத் தாளித்து, காரட்துருவலை
வதக்கி சீரகப்பொடியுடன் வெந்த பயறையும் உப்பு சேர்த்து
சற்றே வதக்கி இறக்கவும். சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து
கொத்தமல்லியைத் தூவவும். மேலும் சுண்டல்களுக்கு
சீரகம், பெரு்ஞ்சீரகம், என,மசாலா பொடி, சாட்மஸாலா,
கறிப்பொடிஎன்று வாஸனைக்கு, சிறிது பொடிகளைச்
சேர்த்து, புளிப்பிற்கு அனார்தானா, ஆம்சூர்,பச்சைமாங்காய்,
எலுமிச்சை என வித்தியாஸமான வகைகளைச் சேர்க்கவும்.
கசகசாப்பொடி, புதிநாப்பொடிமுதலியனவும் ருசி கூட்டும்.
மொச்சை,நிலக்கடலை, வேர்க்கடலை, பட்டாணி, பெரும்பயறு,
காராமணி, பீன்ஸ் விதைகள், கொள்ளு ராஜ்மா
முதலானவற்றிலும், 2தினுஸுகள் சேர்த்தும் செய்யலாம்.
சிலவகை, பருப்புகளிலும் மிதமாக வேக வைத்தும் செய்யலாம்.
வெல்லம் சேர்த்தும் காராமணி, பயறு போன்றவைகளைச்
செய்யலாம். தேங்காய் எல்லாவற்றிறகும் ஜோடி சேரும்.
ஏதோ மனதிற்குப் பிடித்ததை ஜோடி சேர்த்து வித்தியாஸமான
சுண்டல்களைத் தயாரிக்கலாம்.









