காபூலி செனா சுண்டல்

வெள்ளை முழுக் கடலை—–1கப்

தேங்காய்த் துருவல்—கால்கப்

கறிப்பொடி—–2ஸ்பூன்

ஆம்சூர்—அரை டீஸ்பூன்

எண்ணெய்—–2 டேபிள் ஸ்பூன்

கடுகு—அரை டீஸ்பூன்

பெருங்காயம்—-சிறிது

பச்சை கறிவேப்பிலை—சிறிது

ருசிக்கு உப்பு

செய்முறை—–இதையும் பட்டாணி சுண்டல் மாதிரியே முதல்நாளே

ஊறவைத்து     மறுநாள் ப்ரஷர் குக்கரில் நன்றாக வேகவைத்து

 எடுத்துத்     தண்ணீரை    வடிக்கட்டவும்.

எண்ணெயில் கடுகு, பெருங்காயம்,கறிவேப்பிலை தாளித்து

தேங்காயையும், சற்று வதக்கி,வெந்த கடலையுடன் உப்பு

சேர்த்து  கறிப்பொடி,   ஆம்சூர் சேர்த்து வதக்கி இறக்கவும்.

சாதாரண   ப்ரவுன்கலர் கடலையானால் வேக சற்று அதிக

நேரம் வைக்க வேண்டும்.        சுண்டலின்

கடுகு தாளிப்பில்,   இஞ்சி பச்சைமிளகாய் கறிவேப்பிலை தாளித்து

உப்பு சேர்த்து   பல்லு,பல்லாக நறுக்கிய தேங்காயும் மாங்காயும்

சேர்த்து இறக்கி கொத்தமல்லியைத் தூவலாம்.

தாளித்துக் கொட்டும் போது பலதினுஸான சுவையும், மணமும்

கொண்ட பொருட்களைச் சேர்த்தால்  ருசி  தனிப்பட்டதாக இருக்கும்.

சாதாரண நாட்களாக இருந்தால்  வெங்காயம், பூண்டையும்,

அணிவகுக்கச் சொல்லலாம்.

செப்ரெம்பர் 16, 2010 at 1:07 பிப பின்னூட்டமொன்றை இடுக

காய்ந்த பட்டாணி சுண்டல்

இதை  வெள்ளைப் பட்டாணியிலும்,     பச்சை அல்லது பழுப்பு நிற

காய்ந்த பட்டாணியிலும்,  தயாரிக்கலாம்.

வேண்டியவைகள்—-பட்டாணி—1கப்

பச்சை மிளகாய்–2

தேங்காய்த் துருவல்—கால்கப்

இஞ்சி—-சிறு துண்டு

எண்ணெய்–4 டீஸ்பூன்

கடுகு–அரை டீஸ்பூன்

பெருங்காயப்பொடி—கால் டீஸ்பூன்

நறுக்கிய பச்சைக் கொத்தமல்லி—–விருப்பத்திற்கு

ருசிக்கு எலுமிச்சை சாறு

உப்பு—-ருசிக்கேற்ப

செய்முறை—–பட்டாணியை முதல் நாளே களைந்து தண்ணீரில்

ஊறவைக்கவும்.

மிளகாய் இஞ்சியை தேங்காயுடன் சேர்த்து   ஒன்றிரண்டாக

பொடித்துக் கொள்ளவும்.

ப்ரஷர் குக்கரில் பட்டாணி அமிழ  ஜலம் வைத்து நிதான

 தீயில் 5, 6 விஸில் வரை வைத்து இறக்கி ஆவி போனபின்

தண்ணீரை ஒட்ட வடிய வைக்கவும்.

வாணலியில் எண்ணெயில் கடுகு, பெருங்காயத்தைத் தாளித்து

தேங்காய்க் கலவையைச் சேர்த்து  சிறிது வதக்கி வெந்த

பட்டாணியை உப்பு சேர்த்து வதக்கவும்.

உப்பு காரம் கலந்தவுடன் இறக்கி,   ருசிக்கேற்ப, எலுமிச்சை

சாற்றைக் கலந்து,  கொதத்தமல்லியைத் தூவி த்      தயார்

செய்யவும்.

கொத்தமல்லி கறிவேப்பிலை அவரவர்கள் சாய்ஸ்.

பட்டாணி குழையாமல் வேக வேண்டியது அவசியம்.

செப்ரெம்பர் 16, 2010 at 12:17 பிப பின்னூட்டமொன்றை இடுக

வாங்கி பாத்

வேண்டியவைகள்——

அரிசி மெல்லியவகை—-1கப்

சாம்பார் வெங்காயம் உறித்து நறுக்கியது—முக்கால் கப்

சிறியவகை   பிஞ்சு  குண்டு கத்தரிக்காய்—-6

தக்காளிப் பழம்—1

எண்ணெய்—-2 டேபிள்ஸ்பூன்

கறிப்பொடி—-3 டீஸ்பூன்

கொப்பறைத் துருவல்–3 டீஸ்பூன்

இஞ்சித் துருவல்—-அரை டீஸ்பூன்

கடுகு—அரைடீஸ்பூன்

முந்திரி–7,8

 டோபூ அல்லது,    பனீர் துண்டுகள்—15

நறுக்கிய கொத்தமல்லி இலைகள்–சிறிது

நெய்—1டீஸ்பூன்  

விருப்பத்திற்கிணங்க காப்ஸிகம்–1

பச்சைப் பட்டாணி——கால்கப்

ருசிக்கு உப்பு, நிறத்துக்குத் துளி மஞ்சள் பொடி,வாஸனைக்கு4கிராம்பு

செய்முறை—-அரிசியைக் களைந்து   உதிர் உதிரான சாதமாகச்

சமைத்து  தாம்பாளத்தில் கொட்டி ஆற விடவும்.

கத்தரிக்காயை மெல்லிய துண்டங்களாகச் செய்து தண்ணீரில்

அலம்பி வடிய வைக்கவும்.

வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகை வெடிக்க

விட்டு வெங்காயத்தை வதக்கி, இஞ்சி,  தக்காளி சேர்த்து பின்னும்

வதக்கவும்.    பட்டாணியைச் சேர்க்கவும்

 நறுக்கிய கத்தரிக்காய், காப்ஸிகம்,  சேர்த்து நிதானமான தீயில்

உப்பு, மஞ்சள் சேர்த்து வதக்கவும்.

வதக்கிய காயுடன் பனீர்த் துண்டங்களையும் சேர்த்து

வதக்கி,       கறிப்பொடி தூவி இறக்கவும்.

 நெய்யில் ஒடித்த முந்திரியை வறுத்து கிராம்பையும் சேர்க்கவும்.

யாவற்றையும்   சாதத்தில்  சேர்த்து உதிர்,உதிராகக் கலக்கவும்.

கொப்பறைத் துறுவல், கொத்தமல்லி தூவி உபயோகிக்கவும்.

 காய் அதிக மானால் எண்ணெய்,சற்று அதிகம் சேர்க்கவும்.

பொடி வகைகள்   குறிப்பில்    கறிப்பொடி செய்யும் விதம்

கொடுக்கப்பட்டு இருக்கிரது.

செப்ரெம்பர் 14, 2010 at 1:26 பிப பின்னூட்டமொன்றை இடுக

உப்புச் சீடை

வேண்டியவைகள்

பச்சரிசியை லேசாக  வறுத்தரைத்து சலித்த மாவு -2கப்

சிவக்க வறுத்தரைத்த உளுத்த மாவு. சலித்தது—கால்கப்

மெல்லியதாகத் துருவிய தேங்காய்த் துருவல்–1 கப்

ருசிக்கு உப்பு

ஊற வைத்து வடிக்கட்டிய கடலைப் பருப்பு—1டேபிள்ஸ்பூன்

வெண்ணெய்–3 டேபிள் ஸ்பூன்

பெருங்காயப்பொடி—அரை டீஸ்பூன்

சுத்தப் படுத்திய வெள்ளை எள்—1 டீஸ்பூன்

கறிவேப்பிலை இலைகள்—–10

வேண்டிய அளவு எண்ணெய்    —-சீடை வறுத்தெடுக்க

செய்முறை——-உப்பு பெருங்காயத்தைச் சிறிது ஜலத்தில்

கரைத்து வடிக்கட்டிக் கொள்ளவும்.

அரிசி,  உளுத்தமாவைக் கலந்து தேங்காய்த் துருவல் சேர்த்து

அழுத்திப் பிசறவும்.கறி வேப்பிலையைச் சேர்க்கவும்.

வெண்ணெய்.கடலைப் பருப்பு எள் சேர்த்துக் கலக்கவும்.

உப்பு ஜலம் சேர்த்து சிறிது, சிறிதாக ஜலம் தெளித்து

கெட்டியான,     பூரி மாவைப்போல  மொத்தையாகக் கலந்து

பிசையவும்.

மாவு  கையில் ஒட்டாத பதத்தில் பிசைந்து ஒரே சீராக

,சிறிய கோலிகளாக மேலோடு உருட்டி,    ஒரு துணியில்

பரவலாகப் போடவும்.[வழவழ என்றிராமல் சொரசொரப்பாக]

 10 நிமிஷங்கள் கழித்து ,     வாணலியில்  எணெணெயைக் காய

வைத்து சீடைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு

கரகரப்பாக வேகவைத்து சட்டுவத்தால்  வடிக்கட்டி எடுக்கவும

 டிஷ்யூ பேப்பரில் பரப்பி வைத்து ஆறினவுடன எடுத்து   

டப்பாக்களில் வைத்து   உபயோகிக்கவும்.

ஓகஸ்ட் 29, 2010 at 9:15 பிப பின்னூட்டமொன்றை இடுக

காயரஸம்

நல்ல நாரத்தங்காய்——-ஒன்று

புளி—-ஒரு எலுமிச்சை அளவு

வறுப்பதற்கு     சாமான்கள்

மிளகாய் வற்றல்—-3

தனியா—-1 டீஸ்பூன்

கடலைப்பருப்பு    1டீஸ்பூன்

வெந்தயம்——அரை டீஸ்பூன்

கடுகு      அரை டீஸ்பூன்

பெருங்காயம்      சிறிது

எள்—-1 டீஸ்பூன்

தாளிக்க–நல்லெண்ணெய்——3டேபிள்ஸ்பூன்

கடுகு—சிறிது

பச்சைமிளகாய்–1  கீறியது

இஞ்சித்துண்டுகள்—1டீஸ்பூன்

கறிவேப்பிலை—-சிறிது

ருசிக்கு  —உப்பு,   2டீஸ்பூன் வெல்லப்பொடி

துளி மஞ்சள் பொடி

செய்முறை

புளியை ஊறவைத்து   2 ,  3  கப் அளவிற்கு ஜலம் விட்டு கரைத்து சாறெடுத்துக் கொள்ளவும்.

நாரத்தங்காயைச்   சிறிய துண்டங்களாக நறுக்கி கொட்டையை நீக்கி வைத்துக் கொள்ளவும்.

வறுக்கக் கொடுத்த ஸாமான்களைச் சிவக்கக் கருகாமல் வறுத்துப்    பொடித்துக்  கொள்ளவும்.

குழம்பு வைக்கும் பாத்திரத்தில் எண்ணெயைக்   காயவைத்து

கடுகை வெடிக்க விட்டு,   பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி

நாரத்தைத் துண்டுகள்,இஞ்சி, சேர்த்து நன்றாகச் சுருள வதக்கவும்.மஞ்சள் சேர்க்கவும்.

காய் வதங்கியதும்  உப்பு,  புளிஜலம்,, வெல்லம் சேர்க்கவும்.

பொடித்த பொடியையும் சேர்த்து  நன்றாகக் கொதிக்க விடவும்.

காய் வெந்து  குழம்பு சுண்டியவுடன் 1டீஸ்பூன்அரிசி மாவைச்

சிறிது ஜலத்தில்  கரைத்துவிட்டு   ஒரு கொதிவிட்டு கரி வேப்பிலை சேர்த்து இறக்கவும்.

 வாய்க்கு ருசியும், ஆரோக்கியமுமான குழம்பிது.

உப்பு காரம் தேவைக்கேற்ப கூட்டிக் குறைக்கவும்.

ஓகஸ்ட் 24, 2010 at 4:20 பிப பின்னூட்டமொன்றை இடுக

ரஸஎலுமிச்சை

இது உப்பும் தித்திப்பும்   காரமும் சேர்ந்த ஊறுகாய் வகை.

எண்ணெய் இல்லாமல் தயாரிப்பது. சூரிய வெளிச்சம் தான்

முக்கிய ஆதாரம்.

எலுமிச்சம் பழம்  —–பழுத்ததாக 12

திட்டமாக ருசிக்கேற்ற  உப்பு

சர்க்கரை—–சாற்றின் அளவு

மஞ்சள் பொடி—-1 டீஸ்பூன்

மிளகாய்ப் பொடி——3 டீஸ்பூன்

செய்முறை—-நன்றாகப் பழுத்த 6 பழங்களைப் பிழிந்து

கொட்டை   நீக்கி  வாயகன்ற பாட்டிலில் போட்டு சிறிது உப்பு

சேர்க்கவும்.

மிகுதி ஆறு பழங்களை மெல்லிய கீற்றாக நீண்டவாக்கில்

நறுக்கி  கொட்டை நீக்கி எடுத்துக் கொள்ளவும்

எலுமிச்சை சாற்றை அளந்து   அதே அளவில் சர்க்கரையைச்

சேர்த்து      நறுக்கிய மெல்லிய துண்டங்களையும்   அதில்

கலந்து ஒரு   நாள் ஊறவைத்து நன்றாகக் குலுக்கி விடவும்.

பாட்டிலின் வாயை மெல்லிய வெள்ளைத் துணியினால்க்

கட்டி நல்ல வெய்யிலில் தினமும் வைத்து எடுக்கவும்.

வெய்யிலில் வைப்பதற்கு முன் கிளறிவிடவும்.

பழம் ஊறி சற்று கெட்டியாக பாகு பதத்தில் வறும் வரை

வெய்யிலில் வைத்து பிறகு மிளகாய்ப் பொடியும்,  மஞ்சள்

பொடியும் சேர்த்துக் கிளறி ஒரு நாள் வெய்யிலில் வைத்து

 எடுத்து உபயோகிக்கவும்.

இனிப்பும்,    காரமும், உப்பும் சேர்ந்த ஆரோக்கியமான

ஊறுகாய் இது. எண்ணெய் அவசியமில்லை.

ஊறும்  பழம் அளவிற்கு அதே எண்ணிக்கையின் பழச்சாறு

அவசியம்.

சாற்றின் அளவு சர்க்கரை.   குறைந்த அளவு உப்பு   காரம்

நம் விருப்ப அளவு.     முக்கியமான வஸ்து    தொடர்ந்த

வெய்யில்.    நீண்ட நாட்கள், ஏன் மாதங்கள் கூட கெடாது.

ஓகஸ்ட் 17, 2010 at 10:27 பிப 5 பின்னூட்டங்கள்

சுண்டைக்காய் வற்றல் குழம்பு

புளி—1 எலுமிச்சை அளவு

சுண்டை வற்றல்—-15

வறுக்க—நல்லெண்ணெய்—4 டேபில் ஸ்பூன்

வறுத்தரைக்க சாமான்கள்—

மிளகாய் வற்றல்—3

மிளகு—-1 டீஸ்பூன்

கடலைப்பருப்பு—1டீஸ்பூன்,    தனியா–2 டீஸ்பூன்

அரிசி—அரை டீஸ்பூன்

தேங்காய்த் துருவல்–2 டேபிள் ஸ்பூன்

தாளித்துக் கொட்ட-

1 டீஸ்பூன் கடுகு,

அரை டீஸ்பூன்—-வெந்தயம்

பெருங்காயம்—சிறிது

வேர்க்கடலை—–2 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை சிறிது

ருசிக்கு—உப்பு,     துளி வெல்லம்

மஞ்சள் பொடி—அரைடீஸ்பூன்

செய்முறை—–புளியை ஊற வைத்து, 2,  3  கப் அளவிற்கு

சாறு எடுத்துக் கொள்ளவும

சிறிது எண்ணெயில்  வறுக்கக் கொடுத்தவைகளை சிவக்க

வறுத்து , தேங்காயையும் போட்டுப் பிறட்டி  ஆறியவுடன்

மிக்ஸியிலிட்டு  சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து வைத்துக்

கொள்ளவும்.

குழம்புப்    பாத்திரத்தில்   எண்ணெய் விட்டு   கடுகு,  வெந்தயம்

பெருங்காயம், நிலக்கடலை,  தாளித்து,  கறிவேப்பிலையை

வதக்கி புளி ஜலத்தைச் சேர்த்து கொதிக்க விடவும்.

உப்பு, வெல்லம் மஞ்சள் சேர்த்து புளிவாஸனை போனவுடன்

அரைத்த விழுதை திட்டமாகக் கரைத்துவிட்டுக் கொதிக்க விடவும்.

மிகுதி எண்ணெயில்   சுண்டைக்காய் வற்றலை நிதானமான

தீயில் நன்றாக வறுத்துக் கொதிக்கும் குழம்பில் கொட்டி

.இறக்கவும்.   காரம் அதிகம் வேண்டுமானால் மிளகாய்

அதிகம் சேர்க்கவும்.

ஓகஸ்ட் 12, 2010 at 7:54 பிப 3 பின்னூட்டங்கள்

புதினா பரோட்டா

வேண்டியவைகள் கோதுமை மாவு—–2கப் சுத்தம் செய்த பொதினா இலை–அரைகப் மாவில் கலக்க வெண்ணெய் அல்லது நெய்  –2 டீஸ்பூன் ருசிக்கு –உப்பு கடலைமாவு—-1 டேபிள் ஸ்பூன் பரோட்டா செய்ய   தேவையான    எண்ணெய் ருசிக்கு காரப்பொடி  சிறிது செய்முறை——தோசைக்கல்லை     நன்றாக சூடேற்றி காயவைத்து தீயை அணைத்து விட்டு, கல்லின் மீது பாதி புதினாவைப் போட்டு சூட்டில் காயவிடவும். மீதி புதினாவை நறுக்கியும்.   காய்ந்த புதினாவைப் பொடித்தும் ,மாவுடன் சேர்த்து   வெண்ணெய் உப்பு காரம் கலந்து      தண்ணீர்விட்டு   ரொட்டி மாவைப் […]

Continue Reading ஓகஸ்ட் 10, 2010 at 6:01 பிப பின்னூட்டமொன்றை இடுக

கோஸ் கறி

மிகவும் சுலபமாகச் செய்யக் கூடியது.

வேண்டியவைகள்–—-கோஸ்—அரைகிலோ

பச்சை மிளகாய்—–  2

காரட்–1

பச்சை பட்டாணி—–ஒரு கைப்பிடி

அல்லது—-பச்சை கேப்ஸிகம்—-1

நசுக்கிய இஞ்சி—அரை டீஸ்பூன்

கடுகு–1 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு—2 டீஸ்பூன்

தேங்காய்த் துருவல்–அரைகப் [விருப்பத்திற்கு]

எண்ணெய்——–2 டேபிள் ஸ்பூன்

ருசிக்கு—உப்பு

 செய்முறை——-கோஸைப் பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

தண்ணீரில் அலம்பி வடிக்கட்டியில் போட்டு நீரை வடிக்கவும்.

கேரட்டையும் தோல் சீவி நறுக்கவும்..

மிளகாயை நீளவாட்டில்  கீறிக் கொள்ளவும்.

அடி கனமான வாணலியில் எண்ணெய்விட்டு காய்ச்சி,கடுகு

உளுத்தம்பருப்பைத்  தாளித்து,     இஞ்சி பச்சை மிளகாயை

வதக்கி கோஸ்,கேரட்,பச்சைப் பட்டாணியைப் போட்டுக் கிளறி

வதக்கி மூடி நிதான தீயில் கிளறிவிட்டு வதக்கவும்.

சற்று வதங்கியதும், வேண்டிய உப்பு சேர்த்துக் கிளறவும்..

நீர் வற்றியதும்  தேங்காயைச் சேர்த்து வதக்கவும். கீழிறக்கி

நறுக்கிய கொத்தமல்லியைத் தூவவும்,.    பட்டாணி இல்லாவிட்டால்

காப்ஸிகம் சேர்க்கவும்.

3 கலரில் பார்க்கவும். நன்றாக இருக்கும்.

ரொட்டிக்காக செய்யும் போது  தனியா,மிளகாய்ப்பொடிகள்,

சேர்த்து, உருளைக்கிழங்கு துண்டங்களையும் கலந்து   எண்ணெய்

அதிகம் விட்டு வதக்கலாம்.

ஜூலை 29, 2010 at 12:58 பிப பின்னூட்டமொன்றை இடுக

உருளைக்கிழங்கு காரக்கறி

வேண்டியவைகள்—-கால்கிலோ—-உருளைக் கிழங்கு

எண்ணெய்——5 டேபிள்ஸ்பூன்

மிளகாய்ப் பொடி——2 டீஸ்பூன்

சீரகப்பொடி——2 டீஸ்பூன்

மஞ்சள்பொடி—-1டீஸ்பூன்

ருசிக்கு—உப்பு

கடுகு—-1 டீஸ்பூன

பச்சை கறிவேப்பிலை—-கால்கப்

தோல் உறித்த  பூண்டு இதழ்கள்—–10

செய்முறை———கிழங்குகளைத்     தோலுடன் நன்றாக  வேக வைத்துத்

     தோலை உறித்து  திட்டமான துண்டங்களாகச் செய்து கொள்ளவும்.

பூண்டை மென்மையாக  நசுக்கிக் கொள்ளவும்.

கிழங்குடன் உப்பு, காரம், மஞ்சள் பொடியைக் கலக்கவும்.

அடி கனமான வாணலியில் எண்ணெயைக் காயவைத்துக்,

கடுகை வெடிக்க விட்டு ,கறிவேப்பிலையைச் சேர்த்து வறுக்கவும்.

தீயைக் குறைத்து பூண்டு விழுதைக் கூட்டி வதக்கவும்.

வதங்கியவுடன்    கிழங்கைச் சேர்த்து  நன்றாக திருப்பி விட்டு

வதக்கவும். சற்று ஈரப் பசைபோக வதங்கியவுடன் சீரகப்

பொடியைத் தூவிக்  கலந்து இறக்கவும்.

 பூண்டு வேண்டாமென்றால்  இஞ்சியைச் சேர்த்துத் தயாரிக்கலாம்.

காரப் பொடியுடன்,    தனியாப் பொடி,   கரம் மஸாலா,          சிறிது

மாங்காய்ப் பொடியும்  தேவையான அளவு சேர்த்துத் தயாரிக்கலாம்.

வறுத்த கறிவேப்பிலையும்,   பூண்டு, சீரகப் பொடியும் தனித்த

ருசியைக் கொடுக்கும்.

ஜூலை 28, 2010 at 3:02 பிப பின்னூட்டமொன்றை இடுக

Older Posts Newer Posts


ஏப்ரல் 2026
தி செ பு விய வெ ஞா
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 296 other subscribers

வருகையாளர்கள்

  • 561,034 hits

காப்பகம்

பிரிவுகள்

  • Unknown's avatar
  • Unknown's avatar
  • gardenerat60's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • tamilelavarasi's avatar
  • Unknown's avatar
  • shanumughavadhana's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Vijethkannan's avatar
  • முத்துசாமி இரா's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Pandian Ramaiah's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Alien Poet's avatar
  • chitrasundar5's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • பிரபுவின்'s avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • segarmd's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Preferred Travel's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Durgakarthik's avatar
  • Unknown's avatar
  • geethaksvkumar's avatar
  • yarlpavanan's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar

சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com News

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.