தனி வெங்காயச் சட்னி.
மீள் பதிவிற்கு தனிவெங்காய சட்னி வருகிறது. சின்ன வெங்காயத்திலேயே செய்தால் ருசி மிகவும் கூடுதலாக இருக்கும். ருசியுங்கள். அன்புடன்
துவையல், சட்னி முதலானது வகைவகையாக அரைக்கும் போது
உடன் ஏதாவது பருப்புகளையும் வறுத்துச் சேர்த்து அரைக்கிறோம்.
ஆனால் இது தனி வெங்காய சட்னி என்ற பெயர் பெற்றது.
இதுவும் காரக்குழம்பு செய்யக் குறிப்பு கொடுத்தத் தெரிந்தவர்களின்
குறிப்புதான் . நான் இரண்டு வெங்காயத்தில்தான் செய்தேன்.
மிக்ஸி ஒத்துழைக்கவில்லை. ஆனாலும் சட்னி தரமாகத்தானிருந்தது.
இன்னும் சற்று அரைபட வேண்டும்.
வேண்டியவைகள்.
பெரிய வெங்காயம்—5
மிளகாய் வற்றல்—–5
புளி—–ஒரு சின்ன எலுமிச்சையளவு.
தேங்காய்த் துருவல்—கால்கப்
எண்ணெய்—-ஒரு டேபிள்ஸ்பூன்.
ருசிக்கு உப்பு.
கடுகு—சிறிது.
செய்முறை—-
இது நிறைய என்று தோன்றினால் ஸராஸரியாக யாவற்றையும்
சிறிய அளவில் எடுத்துச் செய்யவும்.
வெங்காயத்தை சுத்தம் செய்து தோல் நீக்கி சிறியதாக நறுக்கிக்
கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி,கடுகைத் தாளித்து,மிளகாயை
,வறுக்கவும். பின் வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
புளி, உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்.
தேங்காயும் சேர்த்து அரைக்கவும்.
அதிகம் தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக அரைத்து எடுக்கவும்.
நல்ல கரகரஎன்று தோசையுடன் பல சட்னிகளில் இதுவும் ஒரு
சட்னியாக விருந்தினருக்குக் கொடுத்து உபசரிக்கவும்.
பச்சை,வெளுப்பு சட்னிகளுடன் இதுவும் ஒரு கலரான கார சட்னி.
சாதத்துடனும் பிசைந்து சாப்பிடலாம்.
நல்லெண்ணெயுடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிடலாம்
இரண்டொருநாள் ஃபரிஜ்ஜில் வைத்தும் உபயோகிக்கலாம்.
தேங்காய் கட்டாயமில்லை. செய்து பார்த்து ருசியுங்கள்.
அதிகம் செய்வதானால் , நல்லெண்ணெயில் தொக்குமாதிரிக்
கிளறி வைத்தால் நாள்ப்பட உபயோகிக்கலாம்.
சின்ன வெங்காயம் சேர்த்தால் ருசி…
View original post 1 more word
அன்னையர் தினப்பதிவு குடும்பப் படம்

்அம்மா,அப்பா குடும்பப் போட்டோ. ஸுமார் எண்பத்தைந்து வருஷத்திற்கும் முன்னர் எடுத்த பொக்கிஷம். அந்த சின்னப்பெண் நான்தான். ஸமீபத்தில் கிடைத்த படம். அக்காக்கள்,அத்திம்பேர், அண்ணா, உறவினருடன். அம்மா,அப்பா சொல்லாமலேயே தெரிந்து கொண்டிருப்பீர்கள். நன்றி. அன்புடன் காமாட்சி மஹாலிங்கம்
அன்னையர் தினப்பதிவு. 22.
பதிவு 22 ம் அம்மாவைப் பற்றிய கதை தொடருகிறது. எனக்குச் சென்ற பதிவிற்கு பதிலெழுதக் கூட முடியவில்லை.வயதானவர்களுக்கு ஏற்றத்தாழ்வுகள் தொடர்கதைதான். படியுங்கள். தொடருங்கள். அன்புடன்
இவ்வளவு சொல்லிக் கொண்டு வருகிறேனே, ஆனால் நிச்சயம்
செய்யும் போது வந்த சென்னை அக்கா விவாகத்திற்கு வரவில்லை.
அவளுடைய இரண்டு பிள்ளைகள் சற்று வயதிற்கு வந்தவர்கள்
மாத்திரம் பிடிவாதம் பிடித்தோ என்னவோ வந்து விட்டனர்.
அம்மாவிற்கு உடல் நலம் ஸரியில்லை என்று சொன்னார்கள்.
கலியாணம் கழித்து இரண்டு நாட்களாகின்றது.
பெண்ணும் ,மாப்பிள்ளையும், நாளை,மறுநாள் வருவார்கள்.
தம்பதிகளாகப் பிறந்த வீடு வரும் பழக்கம் இருக்கிறதல்லவா?
எஙகள் ஊரில் காலை நேர வேலை பால் வாங்குவதுதான்.
விடியற்காலை. அவரவர்கள் ஸ்டோருக்குப் போய் பால் வாங்கி
வருவார்கள்.அப்படி
கதவைத் திறந்ததும் அம்மா பெயர் சொல்லி தந்திச் சேவகர் வந்து
நீங்கள்தானே அம்மா என்று கேட்கிறார்.
என்னவோ தந்தியாம் நீ வந்து பாரு. அம்மா பதைபதைக்கிராள்.
கையெழுத்துப் போட்டு வாங்கினாலும், யாருக்கு என்னவோ என்ற
பதைபதைப்பைத் , தந்தி எல்லோருக்கும் கொடுக்கும்தானே?
அம்மாவுடைய சென்னை மாப்பிள்ளையின் தந்தி.
உடனே புறப்படவும். ஆபத்து.
ஸரி அக்காவிற்குதான் ஏதோ,என்னவோ என்று தீர்மானித்து அடுத்த
இரண்டு மணி நேரத்தில் பஸ் பிடித்து விழுப்புரம் வந்து
அவ்விடமிருந்து சென்னை பஸ் பிடிக்க வேண்’டும்.
எல்லோரும் நல்லபடி இருக்கணும்,ஸாமி,பகவானே அம்மாவின்
புலம்பலும்,வேண்டுதல்களும்.
நீங்களெல்லாம் வேண்டாம். நான் போகிறேன். பஸ் ஏத்திட்டா போரும்.
எனக்கு வழியெல்லாம் நன்னா தெரியும். அம்மா.
இல்லை நாங்களும் வரோம். ஆச்சு விழுப்புரம் வந்து பஸ்ஸும்
பிடிச்சாச்சு.
அவளுக்குதான் உடம்பு ஸரியில்லையென்று பேரன் சொன்னான்.
பகவான் என்ன…
View original post 337 more words
அன்னையர்தினப்பதிவு—21
நீங்கள் நினைத்தமாதிரி இல்லாமல் வேறுதிசையில் போகிரதா. க்ஷணத்திற்குச் க்ஷணம் மனது சிந்தித்ததில் போட்ட கணக்குகள். சிரமங்கள் நம்முடன் பிறந்தவை. ஒருநாள் தாதமாகப் பதிவு. அன்புடன்
அவர்கள் ஸாதாரணமாகக் கூட கேட்டிருக்கலாம். வினாக்கள்
ஸுலபமானது. என்னுடைய சிலபஸ்ஸில் விடைகள் தெளிவில்லை.
அவர்கள் கேட்கக் கேட்க என் மனஸில் ஓடிய ஓட்டங்கள்.
ஒரு பெரிய பெட்டி நிறைய அடுக்கு ஸெட்டுகள்,ப்ளேட்டுகள்
,கிண்ணங்கள், இன்னும் பலவித பாத்திரங்கள் என வகைவகையாக
அடுக்கி வைத்து இருக்கிறேன்.
அந்தக்கால இந்தியாவின் சுங்க இலாகா , நேபாளத்திலிருந்து ஒரு
தூசி தும்புகூட உள்வர அனுமதிக்க மாட்டார்கள்.
நேபாளத்தில் ஜப்பான்,ரஷ்யா, சீனா என அயல்நாட்டு ஸாமான்கள்
எல்லாம் ஓரளவு மலிவாக இருக்கும்.
ஸாமான்கள் தரம் மிக நன்றாக இருக்கும். ஜப்பான் ஸ்டீல் வெகு
நன்றாக இருக்கும். வெள்ளிப்பாத்திரம் மாதிரி. துக்கர்,ஹுல்லாஸ்
என்று இரண்டு கம்பெனிகள், நேபாளத்திலேயே அவர்களுக்கு வேண்டிய
மாதிரி வடிவங்களில் போட்டி போட்டுக் கொண்டு செய்து கொடுத்துக்
கொண்டிருந்தது.
ஒருவழியாக அவ்விடத்தை விட்டு வருவதானால், பர்மிஷனுடன்
ஏதோ சிறிது எடுத்துவரலாமோ என்னவோ/?
வாங்கி வைத்தேன் என்று சொல்வதில் என்ன லாபம்?
யாராவது இந்தியன் கவர்மென்டின் ஆஸாமியாகப் பிடித்தால்தான் உண்டு.
இதைச் சொல்லிப் பிரயோஜனமில்லை.
பெண்களுக்கு நகை போடுவதற்கு அவர்களம்மாவின் நகைகள் ஸமயத்தில்
கைகொடுக்கும். ப்ராப்ளம் ஓவர்.
பசங்களின் அட்மிஷன்,ஹாஸ்டல் பீஸ் அது வொரு விசுவ ரூபம்..
அந்த நாட்களில் பிள்ளைவீட்டு குலதெய்வத்தைக்கூட கொண்டாடும்
அளவிற்கு அவர்களுக்கு கைவிட்டு சிலவாகாமல், பெண் வீட்டார்
கையில் கொடுப்பது என்ற வழக்கமிருந்த காலம்.
என்ன சொல்லலாம்?
இல்லை மாமி. அம்மாதிரி எல்லாம், மனஸில் எதுவுமே தயார் செய்து
யோசிக்கவே…
View original post 579 more words
குஷவ்ரத் ஸரோவர். நாஸிக் கும்பமேளா.
மீள் பதிவு செய்வதிலும் இப்படி ஒரு மாறுதலான விஷயமாக இருக்கட்டும் என்று தோன்றியது. 5,6 வருஷங்களுக்கு முந்தைய ஸமாசாரமானாலும் இதுவும் படிக்க நன்றாக இருக்கும் என்று மனதில் பட்டது.பாருங்கள் அன்புடன்
கோதாவரி நதியின் உற்பத்தி எனப்படும் இந்த குஷவ்ரத் ஸரோவர் மிகவும் பிரஸித்தமானது. தலைக்காவிரி நதியின் உற்பத்திஸ்தானம் போல் இதுவும் ஒரு குண்டமே. கும்ப மேளா ஸமயம் இந்த இடத்தில் ஸாது ஸன்னியாசிகள் விசேஷமாக நீராடும் புண்ணியம் பொருந்திய புராதனமான நீர்நிலை இது.
இதுவே கோதாவரி நதியின் உற்பத்திஸ்தானமும். தெய்வீகச் சக்தி வாய்ந்த நீர் நிலைகளுக்கு அமானுஷ்ய சக்தி உண்டு. இப்படிப்பட்ட நீர் நிலைகளில் நீராடுவதென்பது ஹிந்துக்களின் ஒரு புராதனப்பழக்கம். நீராடுவதோடில்லாமல், தங்களின் காலஞ்சென்ற மூதாதையர்களுக்குத் தர்ப்பணம் செய்து வழிபடுவதும் தொன்று தொட்டு அனுஸரிக்கும் ஒரு நல்ல பழக்கமாகவே இருந்து வருகிறது. மஹாராஷ்டிராவில் நாஸிக் என்ற திரயம்பகேசுவரர் கோயில் கொண்டுள்ள நகரின்எண்ணூரு மீட்டர் தொலைவிலேயே இந்த ஸரோவர் அமைந்துள்ளது. குஷவ்ருத் என்று அழைக்கப்படும் இந்த ஸரோவர் ஸம்பந்தமாக கௌதம ரிஷியின் கதை கூறப்படுகிறது. ஒரே இடத்தைப்பற்றிய பலவித கதைகளிருக்கலாம். கௌதமருக்கு சிவபெருமான் கொடுத்த வரத்தின் காரணமாய் இந்த நதி உண்டானது.
இங்கு நடந்த ஷாஹிஸ்னான் அன்று ஏராளமான ஸாதுக்கள் நீராடிய பின்பு, தீர்த்த யாத்திரை செய்யும் பக்தர்களுக்கும் ஸ்னானம் செய்ய அனுமதிக்கப் படுகிறார்கள்.கோதாவரி தீரத்தில் எவ்வளவோ ஸ்னான கட்டங்கள் இருந்தாலும், உற்பத்திஸ்தானமாகிய இவ்விடம் மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. கௌதம ரிஷிக்கு விபத்தின் காரணமாய் எதிர்பாராத வகையில் ஒரு பசுவைக் கொன்ற பாவம் வந்து சேர்ந்து விட்டது. அ ந்த பாவத்தைப் போக்கக் கோதாவரியில் நீராடினால் பாவம் தீருமென்றபோது கோதாவரியில்நீராடமுடியாமற்போய்விட்டது…
View original post 233 more words
அன்னையர் தினப்பதிவு—20
பதிவு இருபதை எட்டி விட்டது. கையில் பணம் காசு எதுவும் ரெடி இல்லை. ஸம்ஸாரி.கல்யாணம் பேச வந்து, இப்போது எதிர் பார்ப்பு எது என்று தெரியாத நிலை. இப்படியும் எதிர்பார்ப்புகள்.ஸாமான்யகுடு்பத்தின் நிலை. அன்புடன்
நான் காட்மாண்டுவிலிருந்த பொழுது வழக்கமாக 2அல்லது மூன்று
வருடங்களுக்கு ஒரு முறைதான் இந்தியா வருவது வழக்கம்.
அதுவும் ராயல் விமான சேவையின் பிளேன்கள் ஏதாவது
ஸாமான்கள் கொண்டுவர தில்லியோ,கல்கத்தாவோ வரும்.
அம்மாதிரி ஸமயங்களில் இலவசமாகப் ப்ளேன் ஸவாரி கிடைக்கும்.
எந்த இடமோ இடமோ அங்கு வந்து அவ்விடமிருந்து இரயில் பிடித்து
எங்கு போக வேண்டுமோ அங்கு போகலாம். பிள்ளைகளின் விடுமுறை
ஸமயம் வந்தால் மட்டுமே நான் வருவேன்.
ஊரில் எல்லோரும் உறவுக்காரர்கள்.
அப்படி முன்பு எப்பொழுதோ போன ஸமயம், அம்மா எங்கள்
உறவினரைக் காட்டி அவர்கள் வந்தபோது, உன் பொண்ணுக்கு உடம்பு
கிடம்பு ஏதாவது வந்து விட்டால், மருந்து மாத்திரை சாப்பிட அப்படி ஒரு
படுத்தல். இவர்களைத்தான் கூப்பிடுவேன்.
சிவனேன்னு நல்ல வார்த்தைகள் சொல்லி இவ கொடுத்து விட்டால்
மாத்திரை மெள்ள உள்ளே போகும்.
அப்படியா மாமி ரொம்ப நன்றி மாமி என்றேன். இதெல்லாம்தான் பெரிய
உதவி என்றேன்.
இதெல்லாம் எப்போது? பெண்ணெல்லாம் சின்னப் பெண்ணாக இருந்த
போது. இதெல்லாம் அம்மா செய்வதைவிட என்ன பெரிசு.
ஒரு வேளை இவ என் மாட்டுப்பெண்ணாக வரப்போகிறாளோ
என்னவோ?
ப்ராப்தம் இருந்தால் அப்படிக்கூட நடக்கலாம் இல்லையா?
இப்போபிடிச்சு என்ன வார்த்தை மாமி!
நாங்களெல்லாம் ஜாஸ்தி படிக்கலே. இவதானே பெரியவோ?
இவளை நன்னா படிக்க வச்சு வேலைக்கு அனுப்பணும்.
கல்யாணம் என்பதெல்லாம் நான் யோசிக்கவே இல்லை.
அதற்குள் அம்மா குறுக்கிட்டு, இப்படியெல்லாம் பதில் சொல்லலாமா?
அதற்கென்ன…
View original post 503 more words
புடலங்காய்க் கறி.
தமிழ்நாட்டுக் காய்கறிகளே அலாதி ருசி.அப்படி எளிய முறையில் செய்த இந்தக் கறி சென்னை வந்தபோது செய்ததை மீள் பதிவு செய்திருக்கிறேன். ருசியுங்கள். அன்புடன்
இதுவும் சுலபமான தயாரிப்புதான். நல்ல பிஞ்சு காயாக இருந்தால் ,
கறி, கூட்டு,பச்சடி என பலவிதங்களில் தயார் செய்யலாம்.
பத்தியச் சாப்பாட்டில் கூட புடலங்காய் சேர்த்துக் கொள்ளலாம்.
துவையல்,வறுவல்,மோர்க்குழம்பு என விதவிதமாகத் தயார்
செய்யலாம்.
முதலில் கறி செய்வோம்.
வேண்டியவைகள்.
புடலங்காய்—அறை கிலோ
பயத்தம் பருப்பு—-கால் கப்.
தேங்காய்த் துருவல்—-கால்கப்
மிளகாய்—-காரம் வேண்டிய அளவிற்கு
இஞ்சி—-வாஸனைக்காக சிறிது
ருசிக்கு—உப்பு
மஞ்சள்ப் பொடி—சிறிது
தாளித்துக் கொட்ட –எண்ணெய்
கடுகு, உளுத்தம் பருப்பு—சிறிதளவு
செய்முறை
புடலங்காயை அலம்பி நறுக்கி, விதைகளிருந்தால் அகற்றிவிட்டு
பொடியாக நறுக்கவும். பிஞ்சு காயானால் அப்படியே
கூட நறுக்கலாம்.
பயத்தம் பருப்பைக் களைந்து தண்ணீரை ஒட்ட வடிய வைக்கவும்.
பருப்பையும், நறுக்கின காயையும் ஒன்று சேர்த்து உப்பு,
மஞ்சள்ப்பொடியைக் கலந்து கையினால் அழுத்தமாகப் பிசறி
ஊற வைக்கவும்.
அழுத்திப் பிசறுவதால் பருப்பு காய் விடும் தண்ணீரிலேயே
நன்றாக ஊறும். சற்று ஊறவைக்கவும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு உளுத்தம்
பருப்பைத் தாளித்துக் கொட்டி இஞ்சி, பச்சை மிளகாயை
வதக்கி, காய்,பருப்புக் கலவையைக் கொட்டி வதக்கவும்.
நிதான தீயில் மூடிவைத்து அடிக்கடி கிளறிக் கொடுத்து
காயை வதக்கவும்.
ஸிம்மில் வைத்தால் கூட ஸரியாக இருக்கும்.
காய்பருப்பு வதங்கியதும் தேங்காய்த் துருவலைச்
சேர்த்துக் கிளறி வதக்கி இறக்கவும்.
கொத்தமல்லி தூவி உபயோகிக்கவும்.
பத்தியச் சாப்பாட்டில் தேங்காய் போடுவதில்லை.
ஒரு சிட்டிகை சர்க்கரையும் சேர்க்கலாம்.
மிளகாய் ஸவுகரியம்போல காய்ந்ததோ, பச்சையோ
சேர்க்கலாம். …
View original post 5 more words
அன்னையர் தினப்பதிவு–19
பதிவு 19. அம்மாவின் வாழ்க்கையில் கிராமத்தில் ஒரு கால கட்டம் இது. விருந்தோம்பல்,ஸம்பிரதாயம், பங்கிடுதல், பேரன்,பேத்திகளுக்காக உபகாரங்கள் இப்படிச் சில நிகழ்வுகளுடன் வந்திருக்கிறேன். படியுங்கள். அன்புடன்
தொடருங்கள் எழுதுகிறேன் என்று சொன்னேனல்லவா?
வருஷா வருஷம் குப்பை மேட்டில் தானாக முளைத்துக் காய்க்கும்
சில கொடிகள். தப்பு முதல் என்று சொன்னாலும் காய்கள் அவ்வளவு
செழிப்பாகக் காய்த்து மகசூல் கொடுக்கும். பூசணி,பறங்கியைத்தான்
சொல்கிறேன்.
கிராமங்களில் அதிகம் ஓடு வேய்ந்த வீடுகளல்லவா? இப்படி முளைக்கும்
கொடிகளை மெள்ள ஓட்டின்மீது ஏற்றி விட்டு விட்டால்ப் போதும்.
பிறர் கண்ணுக்குத் தெரியாத அளவிற்குக் காய்களைக் காய்த்துத்
தள்ளும். பறங்கி,பூசணி எதுவானாலும் மார்கழிக்கோலங்களுக்கு அழகு
சேர்க்கஎனக்கு உனக்கென தேவை அதிகமாக இருக்கும்.கோலங்களின்
நடுவே, சிறிய பசுஞ்சாண உருண்டைகளின்மேல் மஞ்சள் நிற இப்பூவை
வைப்பதால் வீட்டிற்கும்,கன்னிப் பெண்களுக்கும் மிகவும் நல்லது என்ற
நம்பிக்கை.
மார்கழிக் கோலமும் பறங்கிப்பூவும்.
நன்றி கூகல்.தினமலர்.
பிஞ்சுகாய், முற்றினது, என வேண்டியவர்கள் எல்லோருக்கும் ஸப்ளை
ஆகும். இது வருஷாவருஷம் நிகழும் நிகழ்ச்சி.
சாம்பல் பூசணிக்காய் என்றால் வெயில் நாளில் பொரிவடாம் இட, சமைக்க
என நிறைய காய்கள் முன் ரிஸர்வு செய்து விடுவார்கள்.
எங்கள் ஊர் பூசணிக்காய் போட்ட பொரிவடாம் மிகவும் பிரஸித்தி..
தனியாகத்தான் பதிவு செய்ய வேண்டும்.
இது எங்கள் வீட்டில் காய்ப்பதும் பிரஸித்தி.
கொடியிலேயே காம்பு காய்ந்து நன்றாக முற்றின காய்களாகப் பார்த்து
பிறகு அதனைப் பறித்து , கயிற்றினாலான உறிகளில் பிரிமணையைப் போட்டு
அதன்மேல் வைத்து விடுவார்கள்.
காய்கள் ஆடாது அசங்காது, கெட்.டும் போகாது.
பார்ப்பதற்கு அவைகள் ஊஞ்சல் ஆடுவது போல் தான் இருக்கும்..
காய்கள் காய்க்கும் போதே முக்கியநாட்களில் …
View original post 334 more words
பனீர்பரோட்டா
இன்று முள்ளங்கி பரோட்டாவை மீள் பதிவு செய்ய நினைத்தேன். எதிரே வந்து விட்டது பனீர் பரோட்டா.பராட்டாவா,பரோட்டாவா? ஸந்தேகம் வந்து விட்டது. தமிழ்நாடுநான். எதுஸரியோ அப்படி நினைத்துக் கொள்ளுங்கள்.ருசி பாருங்கள் அன்புடன்
நீங்கள்யாவரும்,வெந்தயக்கீரை,உருளைக்கிழங்கு,, முள்ளங்கி ஆக பலவித பரோட்டாக்களைப் பார்த்து,செய்து, சுவைத்து இருக்கிறீர்கள். இந்தவரிசையில் பனீர் பரோட்டாவை ருசிக்க வேண்டாமா?
இதுவும் பரோட்டா செய்யத் தெரிந்தவர்களுக்கு மிகவும் சுலபம்தான். ஒரு முறை செய்து பழகிவிட்டால் பனீர் வீ ட்டில் வாங்கும் போதெல்லாம் செய்யத் தோன்றும்.அலுத்துச் சலித்து பசியோடு வரும் பிள்ளைகளுக்கு இதைச் செய்து கொடுத்தால் கொண்டாட்டமாக சாப்பிடுவார்கள். தயிர்,ஊறுகாய், டால் எது இருந்தாலும் ஜோடி சேரும்.
வேண்டியவைகள் —2கப் கோதுமைமாவு,ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய்
பனீர்—-100 கிராம். கடையில் வாங்குவது கிராம் கணக்கில்தானே கொடுக்கிரார்கள்
பச்சைமிளகாய்– ஒன்று அல்லது இரண்டு. காரத்திற்குத் தகுந்த அளவு.
பச்சைக் கொத்தமல்லி இலை மாத்திரம் சிறிதளவு.
வெங்காயம்–திட்டமான அளவில் ஒன்று.
ருசிக்கு உப்பு, எண்ணெய் வேண்டிய அளவு.
மாவை எப்போதும் போல சிறிது எண்ணெய் உப்பு சேர்த்து பிசைந்து ஊறவைக்கவும். ஸ்டஃப் செய்யும் பனீர்தான் உங்களுக்குப் புதிது.
பனீரை ஃபிரிஜ்ஜிலிருந்து எடுத்து கொப்பரைத்துருவலில் துருவிக் கொள்ளவும்.அல்லது கையினால் உதிர்த்துக் கொள்ளவும். மல்லி இலையை மெல்லியதாக நறுக்கவும். மிளகாயை இரண்டாகக் கீறி உள்ளிருக்கும் விதைகளை பூராவும் நீக்கி மிகவும் இழைபோல நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தையும் உரித்து கொப்பரைத் துருவலில் துருவவும். நீர்க்க வரும், நம் கண்ணிலும் ஜலம் வரும். வாஸனைக்கு எவ்வளவு கிடைக்கிறதோ அது போதும். யாவற்றையும் சேர்த்து பனீரை நன்கு பிசையவும். மிகவும் திட்டமாக உப்பையும் சேர்க்கவும். சீரகப்பொடியோ,துளி மஸாலாப் பொடியோ சேர்க்கலாம்.
அழுத்திப் பிசைந்த பன்னீரை சிறிது நேரம் …
View original post 57 more words
அன்னையர் தினப்பதிவு 18
நான்குபேர்கள் கூடி விசாரிக்கிரார்கல் என்றால் நாம் என்ன தப்பு செய்திருப்போம்? நிலம்,நீர் எல்லாம் பசங்கள்தானே? மனுஷா எல்லோருடனும் இருக்கிறோம். ஒருவரும் இல்லை,என்று சொல்வார்களா? இல்லே கஷ்டப்படுவதைப் பிறரிடம் சொல்வதா? யோசனைகள் இந்தவிதம். படியுங்கள்.பதிவு 18. அன்புடன்
உங்களுக்கு எத்தனை வயது? ஸொந்த வீடு நிலம் உள்ளதா? இப்படி
சில கேள்விகள் கேட்பதற்குத் தயங்காமல் பதில் சொல்லுங்கள்.
கூட யார் இருக்காங்கோ?
வாங்க உக்காருங்க, எல்லாரும் புதுசா இருக்கீங்க எனக்கு யார்,என்ன
எதுவுமே புரியலே!
யாரைப் பாக்கணும் உங்களுக்கு?
தலைப்புடவையை ஸரிசெய்து கொண்டு,தலைப்பை இழுத்துப்
போர்த்திக் கொண்டு, நிக்கறதைப் பார்த்து,
அக்கம்பக்கம் வாசலில் துணி உலர்த்த, அது இது என்று வந்தவர்கள் கூட
என்ன யார் வந்திருப்பதுபோல் பார்வை!
பாட்டியாத்துக்கு யார்யாரோ வந்திருக்காயென்று நியூஸ் கொடுத்துக்
கொண்டே ஓடும் சிறுவர்கள்.
என்னைப் பற்றி கேக்கறீங்க இல்லையா?
ஸொந்த நிலம்நீர் எல்லாம் இருக்கு,வேறெ வடிவத்தில்.
கூடவா, இந்த ஊரிலிருக்கறவங்க எல்லார் கூடவும் நான் இருக்கேன்.
பேத்தி இருக்கு. கூட.
ஒரு நிமிஷம் இருங்க, வந்துட்டேன்.
கீழே இறங்கிப் பார்க்கிறாள்.
அருணாசலம், வாப்பா,நல்லஸமயம் நீ வந்துட்டே.
என்னென்னவோ கேட்கிறார்கள்.
வழிவசமா நீயும் வந்தே,
எல்லாம் நன்றாகத்தானே இருக்கிறேன்.
இவரு எங்க மனுஷரு.
மனுஷரு யார் தெரியுமா? ~ஒரு ஸ்கூல் வாத்தியார். உறவுகாரரும் கூட.
அம்மா மாதிரி ஒரு ஸோஷியல் ஒர்க்கரும் கூட.
நான் சொல்றேன் இப்போ இந்தப் பெயர். அவர்களுக்கு அந்த நாளில்
உபகாரி என்று சொல்லுவார்கள்.
எங்காவது பொதுக் கூட்டமா,ஆன்மீக பஜனையா? கோவில் ஸம்பந்த
வஸூலா, அவர் வருவார்.
ஓட்டுப்போட அழைத்துப் போகவும் வருவார்.
ரேஷன் காலத்தில் கவர்மென்ட் கட்டாய நெல் கொள் முதலா?
அதிகாரிகளுக்குஒத்தாசையாக நெல் வைத்திருப்பவர்களிடம்,
நியாயத்தைஎடுத்துச் சொல்லிஒரு …
View original post 384 more words












