அன்னையர் தினப்பதிவு 18
மே 17, 2021 at 11:21 முப பின்னூட்டமொன்றை இடுக
நான்குபேர்கள் கூடி விசாரிக்கிரார்கல் என்றால் நாம் என்ன தப்பு செய்திருப்போம்? நிலம்,நீர் எல்லாம் பசங்கள்தானே? மனுஷா எல்லோருடனும் இருக்கிறோம். ஒருவரும் இல்லை,என்று சொல்வார்களா? இல்லே கஷ்டப்படுவதைப் பிறரிடம் சொல்வதா? யோசனைகள் இந்தவிதம். படியுங்கள்.பதிவு 18. அன்புடன்
உங்களுக்கு எத்தனை வயது? ஸொந்த வீடு நிலம் உள்ளதா? இப்படி
சில கேள்விகள் கேட்பதற்குத் தயங்காமல் பதில் சொல்லுங்கள்.
கூட யார் இருக்காங்கோ?
வாங்க உக்காருங்க, எல்லாரும் புதுசா இருக்கீங்க எனக்கு யார்,என்ன
எதுவுமே புரியலே!
யாரைப் பாக்கணும் உங்களுக்கு?
தலைப்புடவையை ஸரிசெய்து கொண்டு,தலைப்பை இழுத்துப்
போர்த்திக் கொண்டு, நிக்கறதைப் பார்த்து,
அக்கம்பக்கம் வாசலில் துணி உலர்த்த, அது இது என்று வந்தவர்கள் கூட
என்ன யார் வந்திருப்பதுபோல் பார்வை!
பாட்டியாத்துக்கு யார்யாரோ வந்திருக்காயென்று நியூஸ் கொடுத்துக்
கொண்டே ஓடும் சிறுவர்கள்.
என்னைப் பற்றி கேக்கறீங்க இல்லையா?
ஸொந்த நிலம்நீர் எல்லாம் இருக்கு,வேறெ வடிவத்தில்.
கூடவா, இந்த ஊரிலிருக்கறவங்க எல்லார் கூடவும் நான் இருக்கேன்.
பேத்தி இருக்கு. கூட.
ஒரு நிமிஷம் இருங்க, வந்துட்டேன்.
கீழே இறங்கிப் பார்க்கிறாள்.
அருணாசலம், வாப்பா,நல்லஸமயம் நீ வந்துட்டே.
என்னென்னவோ கேட்கிறார்கள்.
வழிவசமா நீயும் வந்தே,
எல்லாம் நன்றாகத்தானே இருக்கிறேன்.
இவரு எங்க மனுஷரு.
மனுஷரு யார் தெரியுமா? ~ஒரு ஸ்கூல் வாத்தியார். உறவுகாரரும் கூட.
அம்மா மாதிரி ஒரு ஸோஷியல் ஒர்க்கரும் கூட.
நான் சொல்றேன் இப்போ இந்தப் பெயர். அவர்களுக்கு அந்த நாளில்
உபகாரி என்று சொல்லுவார்கள்.
எங்காவது பொதுக் கூட்டமா,ஆன்மீக பஜனையா? கோவில் ஸம்பந்த
வஸூலா, அவர் வருவார்.
ஓட்டுப்போட அழைத்துப் போகவும் வருவார்.
ரேஷன் காலத்தில் கவர்மென்ட் கட்டாய நெல் கொள் முதலா?
அதிகாரிகளுக்குஒத்தாசையாக நெல் வைத்திருப்பவர்களிடம்,
நியாயத்தைஎடுத்துச் சொல்லிஒரு …
View original post 384 more words
Entry filed under: Uncategorized.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed