Archive for ஜூன், 2021
அன்னையர் தினப் பதிவு—24
அம்மாவின் நினைவான பதிவுகளும் வேறு வழியாகத் திரும்புகிறது. பாருங்கள் படியுங்கள். அன்புடன்
பசங்களுக்கு படிப்பு சொல்லிக் கொடுத்ததே அவர்தானாம்.
பூராவுமே அவர்கள் பள்ளிக்கூடத்தில்தானாம் படித்தது..
இதெல்லாம் முன்னாடியே தெரிந்து கொள்ள வேண்டாமா?
நான் ஒரு அசடு. .
எப்படி என்னால் இப்படியெல்லாம் சொல்ல முடிந்தது?
அம்மா மனதில் இப்படியெல்லாம் நினைத்துக்கொண்டிருப்பாள்.
காட்மாண்டுவில் ஸெயின்ட் ஜேவியர்ஸ் பள்ளியை அடுத்து
எங்களின் வீடு.
இரண்டாவது மாடி நாங்கள் இருப்பது. அவர்கள் ஸ்கூலில் நடப்பது
ஒவ்வொன்றையும் பார்க்க முடியும்.
பிள்ளைகள் அவ்விடம் படித்ததால், அடிக்கடி அவர்களைப் பார்ப்பது,
பேசுவது,அவர்களும் நம் வீட்டிற்கு வந்து போவது,யாராவது
தமிழ் ஃபாதர்கள், பிரதர்கள் வந்தால் தமிழ்க்குடும்பம், நாம்
அவர்களுக்கு வேண்டியவர்கள், என்ற முறையில் அறிமுகப்
படுத்துவது, அவர்களைச் சாப்பிட அழைத்து வருவது என்ற முறையில்
யாவரும் வந்து போவது எல்லாம் வழக்கமானது.
இதெல்லாம் நேரில் சொல்ல, நினைத்தபோது போனில் சொல்ல
வசதிகளும் கிடையாது.
என்ன செய்யலாம் பசங்களிடம் அம்மாவின் கேள்வி.
நீ எதெல்லாம் செய்கிறாயோ அது போதும்.
நம்மாத்தில் சாப்பிட்டு அவர்களுக்கு வழக்கம்.
ரஸம் இரண்டு டம்ளர் வாங்கிக் குடிப்பார்கள். கவலையே வேண்டாம்.
எது செய்தாலும்,தோசை,இட்லி தெரியாதது ஒன்றுமே இல்லை.
ஃபாதரும் வந்தார். ஃபில்டர் காஃபி.
இட்லி,சட்னி,மிளகாப்பொடி எண்ணெய் எல்லோரும் சாப்பிட்டோம்.
ஒரு ரூம் வீட்டில் சேர்தான் உண்டு. மேஜை கிடையாது.
அவரும் விசேஷ ஸௌகரியங்கள் எதுவும் எதிர்பார்க்க மாட்டார்.
அவர்கள் தங்கும் இடத்தில் எல்லா ஸௌகரியங்களும் உண்டே தவிர
கையில் சிலவு செய்ய அதிக பணம் கிடையாது. கிடைக்காதோ என்னவோ?
எங்கு…
View original post 500 more words
கார சாரமான பூண்டுப் பொடி
என்ன காமாட்சியம்மா பூண்டு போட்டு ஒரு பொடியா? நம் தோசை மிளகாய்ப் பொடியுடனும்போட்டுச் செய்பவர்கள் இருக்கிறார்கள். இது வேறு ஒருவிதம்.என்னைப்பார் என்று அதுவும் வருகிறது . மிகவும் புராதனமான பொடி. அன்புடன்
இதைச் சின்ன அளவில் செய்து பாருங்கள். ஊறுகாய் போலவும்
சட்னிக்குப் பதிலாக அவசரத்திற்கும் உபயோகப்படும்.
இதுவும் கிராமங்களில் செய்யும் ஒரு ருசியான அவசர
தயாரிப்பு.
வேண்டியவைகள்
வேர்க் கடலை—3 டேபிள்ஸ்பூன்
வெள்ளை எள்—3 டேபிள்ஸ்பூன்
மிளகாய் வற்றல்— 3, அல்லது 4.
உறித்த பூண்டு இதழ்கள்—கால் கப்
ருசிக்கு உப்பு
பெருங்காயம்—வாஸனைக்கு
ஆம்சூர்—ஒரு டீஸ்பூன் அல்லது துளி புளி
ஒரு துளி எண்ணெய்
செய்முறை.
வெறும்வாணலியில்தனித்தனியாகஎள்ளையும்,வேர்க்கடலையையும்
சிவக்க வறுக்கவும்.
வேர்க் கடலையை கையினால் தேய்த்து தோலை நீக்கவும்.
துளிஎண்ணெயில் மிளகாயையும் சிவக்க வறுக்கவும்.
இவைகளைப் பெருங்காயம்சேர்த்துமிக்ஸியில்கரகரப்பாகப்
பொடிக்கவும்.
உறித்த பூண்டைதுண்டுகளாக்கி அரைத்த சாமான்களுடன்
உப்பு சேர்த்து சற்று மசியும்படி 2 சுற்று சுற்றவும்.
சேர்ந்தாற் போல வரும்.
ஆம்சூர். சேர்த்து சிறிய உருண்டைகளாகச் செய்துசிறிதுநேரம்
வெளியில் வைத்து பாட்டிலில்எடுத்துவைத்துஉபயோகிக்கவும்.
புளிப்புக்காக புளியோ, ஆம்சூரோ உபயோகிக்கவும்.
எள், வேர்க் கடலை உபயோகிப்பதால், எண்ணெய்ப் பசையுடன்
சேர்ந்தாற்போல இருக்கும். ஜலம் உபயோகிப்பதில்லை.
நீண்ட நாட்கள் கெடாது.
எள்மட்டிலும் சேர்த்தும், செய்யலாம்.
அதேபோல் வேர்க்கடலை மட்டும் சேர்த்தும் செய்யலாம்..
லின் ஸீட் சேர்த்தும் செய்யலாம். நான் நினைத்துக்
கொண்டேன் அக்ரூட், பாதாம், முந்திரி, ஸன்ப்ளவர் ஸீட்
என ஏதாவது வீட்டிலிருப்பதையும் ஏதாவதொன்றை சிறிது
சேர்த்தும் செய்து பார்க்க வேண்டுமென்று.
பூண்டை பச்சையாகவே வதக்காமல் போட வேண்டும்.
சற்று ஊற,ஊற பொடி சற்று உதிர் பதத்தில் வரும்.
காரம் வேண்டிய அளவிற்கு கூட்டவும். நான்
செய்தது,எள்,வேர்க்கடலை…
View original post 9 more words
அன்னையர் தினப்பதிவு—23
அம்மாவின் சென்னைக் குடும்பமும் பாதிரியார்களின் வருகையும்.பாருங்கள் அன்புடன்
அமெரிக்கன் ஃபாதர்கள்
எங்களுக்கு மிகவும் வேண்டியவர்களில் சிலர்.
rev father ஸுபோல், ரெ டௌனி, ரெ மோரன், ரெ காயின், ரெ மில்லர்,பிரதர் கெம்பன்ஸ்கி,
மற்றும் அவர்களுடன் வேலை செய்த ஆசிரியர்கள் முதலானவர்களின் படங்கள்.
மற்றபடி
நாங்கள் ஊர் வந்து சேர்ந்தோம். பேத்தியும்,மாப்பிள்ளையும்
வருவதற்கு முன்பே, அம்மாவும் வந்து விட்டாள்.
புத்தி சொல்லிவிட்டு வந்தேன்.
அடிக்கடி போய் பார்த்துவிட்டுவா என்று சொன்னேன். சென்னை
பெண்ணிற்கான புத்திமதி இது.
மற்றபடி யாவும் நல்லபடி நடந்தது. நாங்கள் காட்மாண்டு திரும்பும்
போது அம்மாவிடம் சென்னையில் சின்னதாக ஒரு இடம் பார்த்து
பேரன்களோடு இரேன். என்றேன். யோசனை செய் என்றேன்.
ஐயோ எனக்குப் புருஷக் குழந்தைகளே ஆவிவரவில்லை.
எங்காவது என் பெயர் சொல்லாமலேயே நன்றாக இருக்கட்டும்.
இங்கே ஊரையும்,மக்கமனுஷாளையும் விட்டு விட்டு பட்டின மாஸக்
குடித்தனம் எனக்கு ஸரிபட்டுவருமா?
அங்கே வீடுபார்க்கணும்,இங்கே எல்லாத்தையும் ஸெட்டில் பண்ணணும்
சட்டுனு ஆரகாரியமா.?
புருஷபசங்க நன்னா படிச்சு பேர் வாங்கணும். எனக்கு என்ன தெரியும்.
மனஸாலே கூட நினைக்காதே! நானும் என் வேஷமும். புடவையை
பாத்தாலே பாப்பாத்தின்னு திட்ர கூட்டம் ஒண்ணு.
அங்கெல்லாம் ஸரிப்பட்டு வராது.
எங்களுக்கும் அதிகம் வற்புறுத்த,இருந்து எல்லாம் செய்ய நேரமில்லை.
ஒருவழியாக பைரோடாகவே ஊர் போக நினைத்தும் பாட்னா,கங்கைப்
பிரவாகம் என ப்ளேன் சிலவு செய்தே காட்மாண்டு போய்ச் சேர்ந்தோம்.
வீட்டைக் கட்டிப்பார்,கல்யாணம் செய்து பார் என்று சொல்வார்களே
அதைக் கணக்குகள் பார்த்தால்தானே தெரியும்?
இந்தியன்…
View original post 375 more words
தனி வெங்காயச் சட்னி.
மீள் பதிவிற்கு தனிவெங்காய சட்னி வருகிறது. சின்ன வெங்காயத்திலேயே செய்தால் ருசி மிகவும் கூடுதலாக இருக்கும். ருசியுங்கள். அன்புடன்
துவையல், சட்னி முதலானது வகைவகையாக அரைக்கும் போது
உடன் ஏதாவது பருப்புகளையும் வறுத்துச் சேர்த்து அரைக்கிறோம்.
ஆனால் இது தனி வெங்காய சட்னி என்ற பெயர் பெற்றது.
இதுவும் காரக்குழம்பு செய்யக் குறிப்பு கொடுத்தத் தெரிந்தவர்களின்
குறிப்புதான் . நான் இரண்டு வெங்காயத்தில்தான் செய்தேன்.
மிக்ஸி ஒத்துழைக்கவில்லை. ஆனாலும் சட்னி தரமாகத்தானிருந்தது.
இன்னும் சற்று அரைபட வேண்டும்.
வேண்டியவைகள்.
பெரிய வெங்காயம்—5
மிளகாய் வற்றல்—–5
புளி—–ஒரு சின்ன எலுமிச்சையளவு.
தேங்காய்த் துருவல்—கால்கப்
எண்ணெய்—-ஒரு டேபிள்ஸ்பூன்.
ருசிக்கு உப்பு.
கடுகு—சிறிது.
செய்முறை—-
இது நிறைய என்று தோன்றினால் ஸராஸரியாக யாவற்றையும்
சிறிய அளவில் எடுத்துச் செய்யவும்.
வெங்காயத்தை சுத்தம் செய்து தோல் நீக்கி சிறியதாக நறுக்கிக்
கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி,கடுகைத் தாளித்து,மிளகாயை
,வறுக்கவும். பின் வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
புளி, உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்.
தேங்காயும் சேர்த்து அரைக்கவும்.
அதிகம் தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக அரைத்து எடுக்கவும்.
நல்ல கரகரஎன்று தோசையுடன் பல சட்னிகளில் இதுவும் ஒரு
சட்னியாக விருந்தினருக்குக் கொடுத்து உபசரிக்கவும்.
பச்சை,வெளுப்பு சட்னிகளுடன் இதுவும் ஒரு கலரான கார சட்னி.
சாதத்துடனும் பிசைந்து சாப்பிடலாம்.
நல்லெண்ணெயுடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிடலாம்
இரண்டொருநாள் ஃபரிஜ்ஜில் வைத்தும் உபயோகிக்கலாம்.
தேங்காய் கட்டாயமில்லை. செய்து பார்த்து ருசியுங்கள்.
அதிகம் செய்வதானால் , நல்லெண்ணெயில் தொக்குமாதிரிக்
கிளறி வைத்தால் நாள்ப்பட உபயோகிக்கலாம்.
சின்ன வெங்காயம் சேர்த்தால் ருசி…
View original post 1 more word
அன்னையர் தினப்பதிவு குடும்பப் படம்

்அம்மா,அப்பா குடும்பப் போட்டோ. ஸுமார் எண்பத்தைந்து வருஷத்திற்கும் முன்னர் எடுத்த பொக்கிஷம். அந்த சின்னப்பெண் நான்தான். ஸமீபத்தில் கிடைத்த படம். அக்காக்கள்,அத்திம்பேர், அண்ணா, உறவினருடன். அம்மா,அப்பா சொல்லாமலேயே தெரிந்து கொண்டிருப்பீர்கள். நன்றி. அன்புடன் காமாட்சி மஹாலிங்கம்
அன்னையர் தினப்பதிவு. 22.
பதிவு 22 ம் அம்மாவைப் பற்றிய கதை தொடருகிறது. எனக்குச் சென்ற பதிவிற்கு பதிலெழுதக் கூட முடியவில்லை.வயதானவர்களுக்கு ஏற்றத்தாழ்வுகள் தொடர்கதைதான். படியுங்கள். தொடருங்கள். அன்புடன்
இவ்வளவு சொல்லிக் கொண்டு வருகிறேனே, ஆனால் நிச்சயம்
செய்யும் போது வந்த சென்னை அக்கா விவாகத்திற்கு வரவில்லை.
அவளுடைய இரண்டு பிள்ளைகள் சற்று வயதிற்கு வந்தவர்கள்
மாத்திரம் பிடிவாதம் பிடித்தோ என்னவோ வந்து விட்டனர்.
அம்மாவிற்கு உடல் நலம் ஸரியில்லை என்று சொன்னார்கள்.
கலியாணம் கழித்து இரண்டு நாட்களாகின்றது.
பெண்ணும் ,மாப்பிள்ளையும், நாளை,மறுநாள் வருவார்கள்.
தம்பதிகளாகப் பிறந்த வீடு வரும் பழக்கம் இருக்கிறதல்லவா?
எஙகள் ஊரில் காலை நேர வேலை பால் வாங்குவதுதான்.
விடியற்காலை. அவரவர்கள் ஸ்டோருக்குப் போய் பால் வாங்கி
வருவார்கள்.அப்படி
கதவைத் திறந்ததும் அம்மா பெயர் சொல்லி தந்திச் சேவகர் வந்து
நீங்கள்தானே அம்மா என்று கேட்கிறார்.
என்னவோ தந்தியாம் நீ வந்து பாரு. அம்மா பதைபதைக்கிராள்.
கையெழுத்துப் போட்டு வாங்கினாலும், யாருக்கு என்னவோ என்ற
பதைபதைப்பைத் , தந்தி எல்லோருக்கும் கொடுக்கும்தானே?
அம்மாவுடைய சென்னை மாப்பிள்ளையின் தந்தி.
உடனே புறப்படவும். ஆபத்து.
ஸரி அக்காவிற்குதான் ஏதோ,என்னவோ என்று தீர்மானித்து அடுத்த
இரண்டு மணி நேரத்தில் பஸ் பிடித்து விழுப்புரம் வந்து
அவ்விடமிருந்து சென்னை பஸ் பிடிக்க வேண்’டும்.
எல்லோரும் நல்லபடி இருக்கணும்,ஸாமி,பகவானே அம்மாவின்
புலம்பலும்,வேண்டுதல்களும்.
நீங்களெல்லாம் வேண்டாம். நான் போகிறேன். பஸ் ஏத்திட்டா போரும்.
எனக்கு வழியெல்லாம் நன்னா தெரியும். அம்மா.
இல்லை நாங்களும் வரோம். ஆச்சு விழுப்புரம் வந்து பஸ்ஸும்
பிடிச்சாச்சு.
அவளுக்குதான் உடம்பு ஸரியில்லையென்று பேரன் சொன்னான்.
பகவான் என்ன…
View original post 337 more words
அன்னையர்தினப்பதிவு—21
நீங்கள் நினைத்தமாதிரி இல்லாமல் வேறுதிசையில் போகிரதா. க்ஷணத்திற்குச் க்ஷணம் மனது சிந்தித்ததில் போட்ட கணக்குகள். சிரமங்கள் நம்முடன் பிறந்தவை. ஒருநாள் தாதமாகப் பதிவு. அன்புடன்
அவர்கள் ஸாதாரணமாகக் கூட கேட்டிருக்கலாம். வினாக்கள்
ஸுலபமானது. என்னுடைய சிலபஸ்ஸில் விடைகள் தெளிவில்லை.
அவர்கள் கேட்கக் கேட்க என் மனஸில் ஓடிய ஓட்டங்கள்.
ஒரு பெரிய பெட்டி நிறைய அடுக்கு ஸெட்டுகள்,ப்ளேட்டுகள்
,கிண்ணங்கள், இன்னும் பலவித பாத்திரங்கள் என வகைவகையாக
அடுக்கி வைத்து இருக்கிறேன்.
அந்தக்கால இந்தியாவின் சுங்க இலாகா , நேபாளத்திலிருந்து ஒரு
தூசி தும்புகூட உள்வர அனுமதிக்க மாட்டார்கள்.
நேபாளத்தில் ஜப்பான்,ரஷ்யா, சீனா என அயல்நாட்டு ஸாமான்கள்
எல்லாம் ஓரளவு மலிவாக இருக்கும்.
ஸாமான்கள் தரம் மிக நன்றாக இருக்கும். ஜப்பான் ஸ்டீல் வெகு
நன்றாக இருக்கும். வெள்ளிப்பாத்திரம் மாதிரி. துக்கர்,ஹுல்லாஸ்
என்று இரண்டு கம்பெனிகள், நேபாளத்திலேயே அவர்களுக்கு வேண்டிய
மாதிரி வடிவங்களில் போட்டி போட்டுக் கொண்டு செய்து கொடுத்துக்
கொண்டிருந்தது.
ஒருவழியாக அவ்விடத்தை விட்டு வருவதானால், பர்மிஷனுடன்
ஏதோ சிறிது எடுத்துவரலாமோ என்னவோ/?
வாங்கி வைத்தேன் என்று சொல்வதில் என்ன லாபம்?
யாராவது இந்தியன் கவர்மென்டின் ஆஸாமியாகப் பிடித்தால்தான் உண்டு.
இதைச் சொல்லிப் பிரயோஜனமில்லை.
பெண்களுக்கு நகை போடுவதற்கு அவர்களம்மாவின் நகைகள் ஸமயத்தில்
கைகொடுக்கும். ப்ராப்ளம் ஓவர்.
பசங்களின் அட்மிஷன்,ஹாஸ்டல் பீஸ் அது வொரு விசுவ ரூபம்..
அந்த நாட்களில் பிள்ளைவீட்டு குலதெய்வத்தைக்கூட கொண்டாடும்
அளவிற்கு அவர்களுக்கு கைவிட்டு சிலவாகாமல், பெண் வீட்டார்
கையில் கொடுப்பது என்ற வழக்கமிருந்த காலம்.
என்ன சொல்லலாம்?
இல்லை மாமி. அம்மாதிரி எல்லாம், மனஸில் எதுவுமே தயார் செய்து
யோசிக்கவே…
View original post 579 more words
குஷவ்ரத் ஸரோவர். நாஸிக் கும்பமேளா.
மீள் பதிவு செய்வதிலும் இப்படி ஒரு மாறுதலான விஷயமாக இருக்கட்டும் என்று தோன்றியது. 5,6 வருஷங்களுக்கு முந்தைய ஸமாசாரமானாலும் இதுவும் படிக்க நன்றாக இருக்கும் என்று மனதில் பட்டது.பாருங்கள் அன்புடன்
கோதாவரி நதியின் உற்பத்தி எனப்படும் இந்த குஷவ்ரத் ஸரோவர் மிகவும் பிரஸித்தமானது. தலைக்காவிரி நதியின் உற்பத்திஸ்தானம் போல் இதுவும் ஒரு குண்டமே. கும்ப மேளா ஸமயம் இந்த இடத்தில் ஸாது ஸன்னியாசிகள் விசேஷமாக நீராடும் புண்ணியம் பொருந்திய புராதனமான நீர்நிலை இது.
இதுவே கோதாவரி நதியின் உற்பத்திஸ்தானமும். தெய்வீகச் சக்தி வாய்ந்த நீர் நிலைகளுக்கு அமானுஷ்ய சக்தி உண்டு. இப்படிப்பட்ட நீர் நிலைகளில் நீராடுவதென்பது ஹிந்துக்களின் ஒரு புராதனப்பழக்கம். நீராடுவதோடில்லாமல், தங்களின் காலஞ்சென்ற மூதாதையர்களுக்குத் தர்ப்பணம் செய்து வழிபடுவதும் தொன்று தொட்டு அனுஸரிக்கும் ஒரு நல்ல பழக்கமாகவே இருந்து வருகிறது. மஹாராஷ்டிராவில் நாஸிக் என்ற திரயம்பகேசுவரர் கோயில் கொண்டுள்ள நகரின்எண்ணூரு மீட்டர் தொலைவிலேயே இந்த ஸரோவர் அமைந்துள்ளது. குஷவ்ருத் என்று அழைக்கப்படும் இந்த ஸரோவர் ஸம்பந்தமாக கௌதம ரிஷியின் கதை கூறப்படுகிறது. ஒரே இடத்தைப்பற்றிய பலவித கதைகளிருக்கலாம். கௌதமருக்கு சிவபெருமான் கொடுத்த வரத்தின் காரணமாய் இந்த நதி உண்டானது.
இங்கு நடந்த ஷாஹிஸ்னான் அன்று ஏராளமான ஸாதுக்கள் நீராடிய பின்பு, தீர்த்த யாத்திரை செய்யும் பக்தர்களுக்கும் ஸ்னானம் செய்ய அனுமதிக்கப் படுகிறார்கள்.கோதாவரி தீரத்தில் எவ்வளவோ ஸ்னான கட்டங்கள் இருந்தாலும், உற்பத்திஸ்தானமாகிய இவ்விடம் மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது. கௌதம ரிஷிக்கு விபத்தின் காரணமாய் எதிர்பாராத வகையில் ஒரு பசுவைக் கொன்ற பாவம் வந்து சேர்ந்து விட்டது. அ ந்த பாவத்தைப் போக்கக் கோதாவரியில் நீராடினால் பாவம் தீருமென்றபோது கோதாவரியில்நீராடமுடியாமற்போய்விட்டது…
View original post 233 more words