Archive for ஜூன் 21, 2021
அன்னையர் தினப்பதிவு—23
அம்மாவின் சென்னைக் குடும்பமும் பாதிரியார்களின் வருகையும்.பாருங்கள் அன்புடன்
அமெரிக்கன் ஃபாதர்கள்
எங்களுக்கு மிகவும் வேண்டியவர்களில் சிலர்.
rev father ஸுபோல், ரெ டௌனி, ரெ மோரன், ரெ காயின், ரெ மில்லர்,பிரதர் கெம்பன்ஸ்கி,
மற்றும் அவர்களுடன் வேலை செய்த ஆசிரியர்கள் முதலானவர்களின் படங்கள்.
மற்றபடி
நாங்கள் ஊர் வந்து சேர்ந்தோம். பேத்தியும்,மாப்பிள்ளையும்
வருவதற்கு முன்பே, அம்மாவும் வந்து விட்டாள்.
புத்தி சொல்லிவிட்டு வந்தேன்.
அடிக்கடி போய் பார்த்துவிட்டுவா என்று சொன்னேன். சென்னை
பெண்ணிற்கான புத்திமதி இது.
மற்றபடி யாவும் நல்லபடி நடந்தது. நாங்கள் காட்மாண்டு திரும்பும்
போது அம்மாவிடம் சென்னையில் சின்னதாக ஒரு இடம் பார்த்து
பேரன்களோடு இரேன். என்றேன். யோசனை செய் என்றேன்.
ஐயோ எனக்குப் புருஷக் குழந்தைகளே ஆவிவரவில்லை.
எங்காவது என் பெயர் சொல்லாமலேயே நன்றாக இருக்கட்டும்.
இங்கே ஊரையும்,மக்கமனுஷாளையும் விட்டு விட்டு பட்டின மாஸக்
குடித்தனம் எனக்கு ஸரிபட்டுவருமா?
அங்கே வீடுபார்க்கணும்,இங்கே எல்லாத்தையும் ஸெட்டில் பண்ணணும்
சட்டுனு ஆரகாரியமா.?
புருஷபசங்க நன்னா படிச்சு பேர் வாங்கணும். எனக்கு என்ன தெரியும்.
மனஸாலே கூட நினைக்காதே! நானும் என் வேஷமும். புடவையை
பாத்தாலே பாப்பாத்தின்னு திட்ர கூட்டம் ஒண்ணு.
அங்கெல்லாம் ஸரிப்பட்டு வராது.
எங்களுக்கும் அதிகம் வற்புறுத்த,இருந்து எல்லாம் செய்ய நேரமில்லை.
ஒருவழியாக பைரோடாகவே ஊர் போக நினைத்தும் பாட்னா,கங்கைப்
பிரவாகம் என ப்ளேன் சிலவு செய்தே காட்மாண்டு போய்ச் சேர்ந்தோம்.
வீட்டைக் கட்டிப்பார்,கல்யாணம் செய்து பார் என்று சொல்வார்களே
அதைக் கணக்குகள் பார்த்தால்தானே தெரியும்?
இந்தியன்…
View original post 375 more words