Archive for மே 19, 2021
பனீர்பரோட்டா
இன்று முள்ளங்கி பரோட்டாவை மீள் பதிவு செய்ய நினைத்தேன். எதிரே வந்து விட்டது பனீர் பரோட்டா.பராட்டாவா,பரோட்டாவா? ஸந்தேகம் வந்து விட்டது. தமிழ்நாடுநான். எதுஸரியோ அப்படி நினைத்துக் கொள்ளுங்கள்.ருசி பாருங்கள் அன்புடன்
நீங்கள்யாவரும்,வெந்தயக்கீரை,உருளைக்கிழங்கு,, முள்ளங்கி ஆக பலவித பரோட்டாக்களைப் பார்த்து,செய்து, சுவைத்து இருக்கிறீர்கள். இந்தவரிசையில் பனீர் பரோட்டாவை ருசிக்க வேண்டாமா?
இதுவும் பரோட்டா செய்யத் தெரிந்தவர்களுக்கு மிகவும் சுலபம்தான். ஒரு முறை செய்து பழகிவிட்டால் பனீர் வீ ட்டில் வாங்கும் போதெல்லாம் செய்யத் தோன்றும்.அலுத்துச் சலித்து பசியோடு வரும் பிள்ளைகளுக்கு இதைச் செய்து கொடுத்தால் கொண்டாட்டமாக சாப்பிடுவார்கள். தயிர்,ஊறுகாய், டால் எது இருந்தாலும் ஜோடி சேரும்.
வேண்டியவைகள் —2கப் கோதுமைமாவு,ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய்
பனீர்—-100 கிராம். கடையில் வாங்குவது கிராம் கணக்கில்தானே கொடுக்கிரார்கள்
பச்சைமிளகாய்– ஒன்று அல்லது இரண்டு. காரத்திற்குத் தகுந்த அளவு.
பச்சைக் கொத்தமல்லி இலை மாத்திரம் சிறிதளவு.
வெங்காயம்–திட்டமான அளவில் ஒன்று.
ருசிக்கு உப்பு, எண்ணெய் வேண்டிய அளவு.
மாவை எப்போதும் போல சிறிது எண்ணெய் உப்பு சேர்த்து பிசைந்து ஊறவைக்கவும். ஸ்டஃப் செய்யும் பனீர்தான் உங்களுக்குப் புதிது.
பனீரை ஃபிரிஜ்ஜிலிருந்து எடுத்து கொப்பரைத்துருவலில் துருவிக் கொள்ளவும்.அல்லது கையினால் உதிர்த்துக் கொள்ளவும். மல்லி இலையை மெல்லியதாக நறுக்கவும். மிளகாயை இரண்டாகக் கீறி உள்ளிருக்கும் விதைகளை பூராவும் நீக்கி மிகவும் இழைபோல நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தையும் உரித்து கொப்பரைத் துருவலில் துருவவும். நீர்க்க வரும், நம் கண்ணிலும் ஜலம் வரும். வாஸனைக்கு எவ்வளவு கிடைக்கிறதோ அது போதும். யாவற்றையும் சேர்த்து பனீரை நன்கு பிசையவும். மிகவும் திட்டமாக உப்பையும் சேர்க்கவும். சீரகப்பொடியோ,துளி மஸாலாப் பொடியோ சேர்க்கலாம்.
அழுத்திப் பிசைந்த பன்னீரை சிறிது நேரம் …
View original post 57 more words