Archive for செப்ரெம்பர் 10, 2012
நன்றி தெறிவித்தல்.
அன்பார்ந்த சொல்லுகிறேனுடைய அன்பார்ந்த
அபிமானமுள்ள ஆதரவாளர்களுக்கு அன்பும், ஆசியும்
கலந்து, பெறியோர்களுக்கு வணக்கமும் கலந்துதெறிவித்து
இந்த சுருக்கமான என் ஸந்தோஷ வார்த்தைகளை
எழுதுகின்றேன்.
ஸெப்டம்பர் 2 ஆம் தேதி சொல்லுகிறேனைப் பற்றி
அறிமுகப்படுத்தி , பாராட்டியும், உள்ளதை உள்ளபடிச்
சொல்லி என்னை மிகவும் ஸந்தோஷத்தை அனுபவிக்கும்
பதிவாகப் பதிவிட்டு எனக்கு ஊக்கமளித்திருக்கிறார்
திரு ஸைபர்ஸிம்ஹன் அவர்கள்.
நம்முடைய வேர்ட்ப்ரஸ். டாட் காமின் பிரபல வலைப்
பதிவர். அவரைப் பற்றி அறியாதவர்களே இருக்க முடியாது.
அவரிடம் என்னைப் பற்றி அறிமுகப் படுத்தியது
திருமதி. ரஞ்ஜனி நாராயணன் அவர்கள். குறுகிய கால
மாகத்தான் எங்கள் இருவருக்கும் எங்களின் வலைப்பூவின்
வாயிலாக பின்னூட்டங்களின் மூலம் நட்பு ஏற்பட்டது.
என் நல்ல அதிருஷ்டம் அவர் மூலமாக திரு .ஸிம்மன்
அவர்கள் என்னைப் பற்றி எழுதும்படியான வாய்ப்பைப்
பெற்றதற்கு நான் இப் பதிவு மூலம் அவர்களிருவருக்கும்
என்னுடைய நன்றியையும், அன்பையும் தெறிவித்துக்
கொள்கிறேன்.
விசேஷமாக பதிவு செய்ததற்கு மிகவும் நன்றிகள்
திரு.ஸிம்ஹன் அவர்களே. எதுவும் நான் மிகைப்படுத்தவில்லை. என்னுடைய நன்றியை அன்புடன்
ஏற்றுக் கொள்ளுங்கள்.
திருமதி ரஞ்ஜனி உங்களுக்கும் இதையே சொல்லுகிறேன்.
திருமதி ரஞ்ஜனி நாராயணனும் நம்முடைய
வேர்ட்ப்ரஸ்டாட்காமின் பிரபலமான வலைப் பதிவர்.
என்னுடைய ஆதரவார்களே உங்களுக்கும்
ஸந்தோஷம்தான். எனக்குத் தெறியும். உங்கள் யாவருடனும்
இந்த வரைவு மூலம் என் ஸந்தோஷத்தைப் பகிர்ந்து
கொள்கிறேன். எல்லோருக்கும் அன்புடனும், ஆசிகளுடனும்
உங்கள் சொல்லுகிறேன்.
80 வயது பாட்டியின் வலைப்பதிவு.
கீழே லின்க் கொடுத்திருக்கிறேன்.