காளன்

ஏப்ரல் 30, 2013 at 12:28 பிப 14 பின்னூட்டங்கள்

காளன்

காளன்

இதுவும் மோர்க் குழம்பு வகையைச்  சேர்ந்ததுதான். ஆனால் ருசி

சிறிது வித்தியாஸப்படும்  கேரள வகைச் சமையல்.

குறிப்பாக வாழைக்காய்,  சேனைக்கிழங்கு சேர்த்துச் செய்யப்படுவது.

அவர்கள் பாணி விருந்து  சமையலில் கட்டாயம் இது இடம் பெறும்.

இது மிகவும் வித்தியாஸமான  பாணியில் இருக்கும்

என்றுநினைத்திருந்தேன்.

அப்படி அதிகம் ஒன்றுமில்லை. அல்லது எனக்குத் தெரிந்த பாணி

இதுஎன்று நினைத்துக் கொள்ளுங்கள்.

அதிகம் ஸாமானில்லை. காயும் ஸிம்பிளாக  ஒரு வாழைக்காய்,

100 கிராம் சேனைக் கிழங்கு இருந்தால் போதும்.

மற்ற  வேண்டிய ஸாமான்கள் பார்க்கலாம்.

தயிர்—-2கப்.  அதிக புளிப்பு வேண்டாம்.

மிளகாய்—-வற்றல் ஒன்று

பச்சை மிளகாய்—2

மிளகுப்பொடி—கால் டீஸ்பூன் அல்லது மிளகாய்ப்பொடி

சீரகம்—அரை டீஸ்பூன்

தேங்காய்த் துருவல்—அரை கப்பிற்கு அதிகம்.

ருசிக்கு உப்பு

தாளித்துக் கொட்ட—கடுகு,வெந்தயம், கறிவேப்பிலை

தேங்காயெண்ணெய்—1 டீஸ்பூன்

பச்சை கறிவேப்பிலை சிறிது.

பச்சரிசி—கால் டீஸ்பூன்.

காய்களை, ஒரு அங்குல நீளத்திற்கு தோல் சீவி நறுக்கி

சுத்தப்படுத்தி வைக்கவும்.

தேங்காய்த் துருவலுடன் அரிசியைப் பிசரி வைக்கவும். அரைக்க

எளிதாக இருக்கும்.

சிறிது நேரம் கழித்து ,பச்சைமிளகாய்,சீரகம்சேர்த்து  தேங்காயை

நன்றாக அரைத்து வைக்கவும். மிக்ஸியில்தான்.

காயை தண்ணீர் விட்டு மிளகு, அல்லது மிளகாய்ப்பொடி,சிறிது,உப்பு

சேர்த்துவேக வைக்கவும்.

வேக வைத்த காயை வடிக்கட்டி வைக்கவும்.

தயிரைக் கடைந்து அரைத்த விழுதைச் சேர்த்துக் கலக்கவும்

காயில் சிறிது உப்பு போட்டிருப்பதால் தயிரில் திட்டமாக உப்பைப்

போடவும்.

காயுடன் சேர்த்து,   கடைந்த தயிரைத் திட்டமான தீயில் பால்

பொங்குவது போல ஒருகொதிவிட்டு இறக்கவும். அவசியமானால்

சிறிது தண்ணீர்   முதலிலேயே  சேர்க்கவும்.

தேங்காயெண்ணெயில் கடுகு,வெந்தயம்,மிளகாய் வற்றலை

தாளித்துக் கொட்டி, கறிவேப்பிலை சேர்க்கவும்.

காளன் ரெடி. ஒரு முறை நன்றாகக் கிளறிவிடவும்.

சாதத்துடனும்,   விருப்பமானவற்றுடனும்,  சேர்த்துச் சாப்பிடலாம்.

பாருங்கள். எப்படி என்று?

நான் வெண்டைக்காயை எண்ணெயில் வதக்கிப் போட்டு செய்தேன்.

ருசிதான்   அதுவும். மிளகுப்பொடிக்கு பதில் மிளகாய்ப்பொடி

சேர்த்தேன். கலர்  வந்திருக்கிரது.

Entry filed under: குழம்பு வகைகள்.

நான்கு வயது முடிந்தது. அன்னையர் தினம்.

14 பின்னூட்டங்கள் Add your own

  • 1. VAI. GOPALAKRISHNAN's avatar VAI. GOPALAKRISHNAN  |  12:43 பிப இல் ஏப்ரல் 30, 2013

    சமையல் குறிப்பு அருமை.

    காளன் என்ற பெயர் வித்யாசமாக காளான் போல உள்ளது.

    கிழங்குகளில் உருளைக்கிழங்கு தவிர, சேனை, கருணை, சேம்பு போன்ற எதுவுமே எனக்கு ஏனோ பார்க்கவே கூட பிடிப்பதில்லை.

    மறுமொழி
    • 2. chollukireen's avatar chollukireen  |  5:51 பிப இல் மே 1, 2013

      காளன் என்ற பெயர் மலையாளத்து பெயர். நம்ம பாலக்காட்டு தமிழ்க்குடும்ப குறிப்பு இது. காளானை, காளான்னு யார் சொல்ரா? மஷ்ரூம்னு ஜம்பமா சொல்ரா இல்லையா? இது ஞாபகமே வரலை. உருளைக் கிழங்கு போட்டும் செஞ்ஜுட்டா போட்டு. காய் மாரினா என்ன. நானும் வெண்டைக்காய் வதக்கிப் போட்டுதான் செய்தேன். எல்லார் ஆத்திலும் பிடித்த,பிடிக்காத
      கிழங்குகள் இருக்கு. குறிப்பு அருமைன்னு எழுதினது போதும். வரவாளும் படிப்பா. உங்கள்
      கமென்டிற்கு மிகவும் நன்றி. அன்புடன்

      மறுமொழி
  • 3. திண்டுக்கல் தனபாலன்'s avatar திண்டுக்கல் தனபாலன்  |  2:02 பிப இல் ஏப்ரல் 30, 2013

    வித்தியாசமாக உள்ளது…

    செய்து பார்ப்போம்…

    செய்முறை குறிப்பிற்கு நன்றி…

    மறுமொழி
    • 4. chollukireen's avatar chollukireen  |  5:53 பிப இல் மே 1, 2013

      கொஞ்சம்தான் வித்தியாஸம். பாருங்கள். நன்றி. அன்புடன்

      மறுமொழி
  • 5. Angelin's avatar Angelin  |  3:20 பிப இல் ஏப்ரல் 30, 2013

    மிக அருமையாக இருக்கு ..நானும் செய்துவிட்டு சொல்கிறேன் .பகிர்வுக்கு நன்றிம்மா

    மறுமொழி
    • 6. chollukireen's avatar chollukireen  |  5:56 பிப இல் மே 1, 2013

      அஞ்சு நீ வந்தது, ரொம்பவே மனதுக்கு மகிழ்வு.
      கட்டாயம் நீ செய்வாய். பார்க்கலாம். அன்புடன்

      மறுமொழி
  • 7. ranjani135's avatar ranjani135  |  2:05 பிப இல் மே 1, 2013

    மோர் குழம்பு போலத்தான் என்றாலும் ருசி சற்று மாறும் என்று தோன்றுகிறது. கிழங்கு ஒதுக்குபவர்கள் வெண்டைக்காய் அல்லது வேறு காய்கறி சேர்த்து பண்ணலாம்.

    காளன் செய்துவிட்டு சொல்லுகிறேன்.

    மறுமொழி
    • 8. chollukireen's avatar chollukireen  |  6:04 பிப இல் மே 1, 2013

      பாலக்காட்டு சமையலில், வாழைக்காய்,சேனை,பூசணி,பரங்கி,முருங்கை,
      தேங்காய் இவைகள் விசேஷம். சுலபமானதுதானே.
      செய்து பார்ப்பதாகச் சொன்னது விசேஷம். எல்லோரும் எழுதியிருப்பதாலே கட்டாயம் ருசி வரவே செய்யும். என்ன பெருமை பாருங்கள்!!!!!!! மிக்க நன்றி. பின்னூட்டங்களும்
      சுவையாகவே வந்து கொண்டு இருக்கிரது. அன்புடன்

      மறுமொழி
  • 9. chitrasundar5's avatar chitrasundar5  |  4:05 முப இல் மே 2, 2013

    காமாக்ஷிமா,

    மோர் குழம்பே கொஞ்சம் மாறிப்போய் காளன் ஆகியிருக்கிறது போலும். மிளகு சேர்த்து காய் வேக வைப்பது வித்தியாசமாக உள்ளது.சிம்பிளான குறிப்புதான்,செய்து பார்க்கிறேன்.

    ஒருவேளை அவர்கள் ஊரில் மிளகாயைவிட மிளகு அதிக விளைச்சல் அல்லது குறைந்த விலையில் கிடைக்குமோ என்னவோ.அன்புடன் சித்ரா.

    மறுமொழி
  • 10. chollukireen's avatar chollukireen  |  2:32 பிப இல் மே 2, 2013

    கேரளா மிளகு விளைச்சலுக்குப் பெயர்போன இடம்.
    உடல் நலத்திற்கும் மிளகு மிகவும் உயர்வானது. எல்லாம் காரணமாக இருக்கலாம். உங்க வெளிநாட்டிலும். மிளகு பிட்ஸா,பாஸ்தா என்று கூடவே
    வருகிறது. பார் செய்து. பிரகு எப்படி என்று ஒரு முறையும் சொல்லவும். நன்றி அன்புடன்

    மறுமொழி
  • 11. மகிஅருண்'s avatar மகிஅருண்  |  3:13 பிப இல் மே 3, 2013

    பெயர் வித்யாசமாக இருக்கிறது. மிளகு சேர்த்து மோர்குழம்பு செய்ததில்லை, மிளகாய்ப்பொடி சேர்த்தும் செய்ததில்லை! அரிசியும் சேர்ப்பதில்லை…அப்ப என்னதான் பண்ணுவேன்னு கேக்கறீங்களா?! ஹிஹிஹ்..தேங்காய்+ப.மிளகாய்+சீரகம் இவைதான் அரைச்சு சேர்ப்பேன். ஒரு முறை சேனைக்கிழங்கு சேர்த்தும் மோர்குழம்பு செய்தேன். அடுத்த முறை உங்க காளன் செய்து பார்க்கிறேன்மா! எண்ணெய் மினுமினுங்க படம் சூப்பரா இருக்கு.

    மறுமொழி
  • 12. chollukireen's avatar chollukireen  |  1:28 பிப இல் மே 6, 2013

    மிளகு,விருவிருப்பானது. அரிசி தயிரை திக்காகச் செய்கிறது. வெகு துளி தானே? பச்சைமிளகாய் காரம் ருசி
    கொடுக்கும். மிளகாய்ப்பொடி அதுவும்,கலரும் காரமும் கொடுக்கும். கலவை மாற்றி சுவை கொடுக்கிரது. என்னுடைய வியாக்கியானம் இது. முக்கியமானது,தயிரும்,தேங்காயும், அதன் காய்கறியும்.
    உன்னுடைய கமென்ட் அழகானது. நன்றி அன்புடன்

    மறுமொழி
  • 13. jayanthi's avatar jayanthi  |  10:07 முப இல் ஜூலை 24, 2013

    intha mathiri samyal

    மறுமொழி
    • 14. chollukireen's avatar chollukireen  |  1:46 பிப இல் ஜூலை 26, 2013

      பிடித்திருக்கிரதா. நன்றி. வாருங்கள் அடிக்கடி. அன்புடன்

      மறுமொழி

chollukireen -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


ஏப்ரல் 2013
தி செ பு விய வெ ஞா
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 296 other subscribers

வருகையாளர்கள்

  • 557,014 hits

காப்பகம்

பிரிவுகள்

  • Unknown's avatar
  • Alien Poet's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • geethaksvkumar's avatar
  • முத்துசாமி இரா's avatar
  • Unknown's avatar
  • chitrasundar5's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Pandian Ramaiah's avatar
  • ranjani135's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • tamilelavarasi's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • gardenerat60's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Sudalai's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Great Foodies's avatar
  • SIVA - BARKAVI's avatar
  • Durgakarthik's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Preferred Travel's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar

சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com News

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.