லெஸொதோ அனுபவமும் தென்னாப்ரிக்காவும்.3

திசெம்பர் 15, 2014 at 8:38 முப 12 பின்னூட்டங்கள்

திரும்புவோம்

திரும்புவோம்

பிரமாதமாக  இன்னும் சிறிதுதான்  பாக்கி வருகிறேன் என்று  ஆப்ரிக்க

பிரயாணத்தைப் பங்கு கொள்கிறேன் என்று  இவ்வருஷம் மே மாதம்,

எழுதினேன்.

சொன்ன சொல் தவறாமல்   டிஸம்பரிலாவது முடித்து விடலாம் என்று

வந்திருக்கிறேன்.

புதிய  பிரயாணம் இல்லையே தவிர , கணினியில் போட்டோக்கள்

என்னை அம்போ என்று விட்டுவிட்டாயே என்று கேட்காத குறைதான்.

லெஸொதோவிற்கு யாரும் போகாவிட்டாலும்,  தென் ஆப்பிரிக்காவிற்கு

நீங்கள் யாராவது போகும்போது   என்னையும் நினைவு கொள்ள வேண்டும்

என்று நான் நினைக்கிறேன் போலும்!!!!!!!!!!!!சிறிது மன வண்டியை பின்னோக்கி   போய் லயிக்க விட்டாற் போகிறது.

இருக்கவே இருக்கிறது நமது மன வர்ணனை.

இப்போது லெஸொதோவிலிருந்து   தென் ஆப்ரிக்க நேஷனல் பார்க்

கோல்டன்கேட் ஹைலேண்ட்ஸைப்பார்க்க   என் பிள்ளைக்கு சினேகிதர்கள்

குடும்பம் என  ஒரு மூன்று குடும்பங்கள் காரில் பிரயாணமாகிறோம்.

எல்லோரும் இளைஞர்கள்.

சாப்பாடெல்லாம்   அங்கங்கே கிடைப்பதைப் பார்த்துக் கொள்ளலாம்.

கொரிப்பதற்கு என்ன அவரவர்களிடம் உள்ளதோ அது போதும்.

ஒவ்வொரு குடும்பமும் அவரவர்கள் கார். அவர்கள்  இஷ்டத்திற்குப்

போதுமே இருப்பது.

கோல்டன் ஹைலேண்ட்ஸ் நோக்கி,பிரயாணம்

கோல்டன் ஹைலேண்ட்ஸ் நோக்கி,பிரயாணம்

கிராமங்கள் எப்படி இருக்கு பார்க்கணும்.  என்னுடைய வேண்டுகோள்.

இன்னும் பரம ஏழை. அதுதவிர என்ன பிரமாத வேற்றுமை?

அட வீடுகளைப் பார்க்கலாமா?

இல்லை. கற்களாலான  சுவர். மேலே ஆஸ்பெடாஸ் ஷீட்.

அது காற்றில் ஓடாதிருக்க மேலே பெரிய,பெரிய பாறாங்கற்கள்.

இப்படிதான் ஏழையின் வீடுகள்.

மற்றபடி,  உடுப்பு,  துணி என ஏழ்மை.

வீட்டைச் சுற்றிலும்    மக்கா சோளம் பயிர்.  அதுவும் செழுமையாக இல்லை.

வரண்ட பூமி.  மனிதர்கள் எங்கும் எந்த இடத்திலும்   தயக்கமில்லாமல் வீதிகளில்

நடக்கவில்லை. இன்னும் என்ன பார்க்க வேண்டும்.?

கூட வந்தவர்கள் கார் வேகமாகப்போக  அவ்வளவுதான்.  மனதில்ப்

பதிந்தது.

மலைகளைச் சுற்றியும்,  பிரிவுகளில் நுழைந்தும் பிரயாணம் தொடர்கிறது.

நம் ஊராக இருந்தால்  ஏதாவது இதிகாச புராணம் இருக்கும்.

மலைமீது ஏதாவது,கடவுளோ, அடையாளங்களோ இருக்கும். இங்கெல்லாம்

அதொன்றுமில்லை.

எண்ணங்களும், நினைவுகளும் தேசத்திற்கேற்றவையல்ல என்று மனது

கூறியது.

எவ்வளவு வித்தியாஸமான காட்சிகள்.  ஏதோ யோசனை செய்யாதே.

நம் மன உணர்ச்சி  மகனாதலால் அவனுக்கும் எக்ஸ்ரே மாதிரி தெரிகிறது

போலும். நினைத்தது ஞாபகம் வருகிறது.

இது ஒரு இடப்பார்வை

இது ஒரு இடப்பார்வை

கொஞ்ச தூரம் போயாகிவிட்டது.  ஏதோ ஒரு இடம்.

கோக்குடிக்கிறார்கள் போலத் தோன்றுகிறது.

Lesotho 2007-08 108

அவரவர்கள் நடுநடுவில்   ஒரிடத்தில் கூடி சாப்பிட்டுக்கொண்டும்,பார்த்தவைகளைப்

பற்றி விமரிசனம் செய்து கொண்டும் பிரயாணம்   தொடர்கிறது.

அவரவர்கள் சவுகரியப்படி குடும்பத்தினருக்கு  விரிவுரை செய்யச்

ஸரியான இடங்கள்.

நாங்கள் ஒருவர்தான் அப்பா,அம்மா கூட பிரயாணம் பிள்ளைக் குடும்பத்துடன்.

எங்களுக்கெல்லாம் அப்புரம் வரக்கூட சான்ஸ் கிடைக்கலாம்.

ஸரியாக   கவனித்துப்பார். இம்மாதிரி இடங்கள் வருவோமென்று  நாங்கள் கூட நினைத்தது

இல்லை.  இடையே   பிள்ளையின் வாத்ஸல்யம்.

மருமகளின் கவனிப்பு.

இந்த மலைகளெல்லாம் எப்படி வெட்டிஎடுத்திருக்கிரார்கள்.

கலர்கலரா கல்லெல்லாம்   இந்த மலைகளின் பாறைகள் போலும்.

ஆச்சரியமாக  மனக் கற்பனை.

செதுக்கிய பாறைகளோ?மலைகளோ?

செதுக்கிய பாறைகளோ?மலைகளோ?

கார் போய்க்கொண்டே இருக்கிறது. சில படங்கள் எடுக்கவே இல்லை.

சில அதுவும் இது மாதிரிதான். சிறிது வித்தியாஸம்.

இப்போ பாரம்மா.   பாதை வளைகிறது.  குட்டி மலையொன்று நடுவில்.

கிரிப்பிரதக்ஷிணமா,திருவருணை,திருக்கழுக்குன்றம் இல்லை.

மேலே குட்டி குடவரைக்கோயிலிருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்.?

இதுவும் கிரிப்பிரதக்ஷிணம்தான். மனதுதானே காரணம்?

கிரிப்ரதக்ஷிணம்

கிரிப்ரதக்ஷிணம்

இன்னும் வேகமாகப் போகிறது. அடுத்து  வளைந்து,நெளிந்து,உயர்ந்து

படர்ந்து என்னைப்பார், என் அழகைப்பார் என்று ஓரிடம்.

ஏற வரீங்களா

ஏற வரீங்களா

குட்டி மலை என்று ஏறவா வந்தோம்?

அடுத்துப் பார்க்க வேண்டாமா?

பிரமிட்மதிரி சாயலில்,மேடும், முகடுகளும்,பக்கத்தில் ரோடும்

பிரமிட்மதிரி சாயலில்,மேடும், முகடுகளும்,பக்கத்தில் ரோடும்

போகிறோம்,போகிறோம் எங்கு சாலையில்

பள்ளத்தாக்காகப் பாருங்கள்

பள்ளத்தாக்காகப் பாருங்கள்

இன்னும் சற்று தூரம் பார்ப்போம்

அருமையான கட்டிங் செதுக்கல்கள்

அருமையான கட்டிங்
செதுக்கல்கள்

ரஸிக்கிறார்கள்.

ரஸிப்பு

ரஸிப்பு

Lesotho 2007-08 120

உடன் வந்த இளம் தம்பதிகள்

Lesotho 2007-08 121 நாங்கள்

நாங்கள்

நாங்கள்

இன்னும்

இன்னும்

காரிலிருந்தே

காரிலிருந்தே பெரியவர்

வழிகளில் இறங்கினோம்,   சாப்பிட்டோம் என்பதெல்லாம் உங்களுக்கு வேண்டாதவைகள்.

இன்னும் ஏதாவது சிறிது அடுத்துப் பார்ப்போம். . பழைய நினைவுகள்தான்.

உங்களுக்குப் பிடித்ததா/  அன்புடன்

அதுவும் போட்டோக்களுடன் ஒரு சிறிய அணைக்கட்டு. பார்ப்போமா?

Entry filed under: சில நினைவுகள். Tags: .

கீரை வெல்லப் பச்சடி. அன்னையர் தினப்பதிவு–19

12 பின்னூட்டங்கள் Add your own

  • 1. mahalakshmivijayan  |  9:16 முப இல் திசெம்பர் 15, 2014

    அம்மா உங்க தமிழ் ரொம்ப அழகா இருக்கும் . நடை வித்தியாசமாக இருக்கும் . ஒவ்வொரு வரியிலும் மனம் லயித்து போகும் . நான் உங்கள் தமிழின் ரசிகை! ரொம்ப நாளாக மனதில் மனதில் இருந்ததை சொல்லி விட்டேன்.. நன்றி 🙂

    மறுமொழி
    • 2. chollukireen  |  8:53 முப இல் திசெம்பர் 18, 2014

      இப்படி சொல்லும் ரஸிகையா நீ. மிக்கஸந்தோஷமாக இருக்கு. கேட்கவா வேண்டும். இதை ரொம்ப நாளாக சொல்லவில்லை என்று வேறு எழுதுகிராய்.. நான் கூட மற்றவர்கள் எழுதும் பதிவினைப் படிக்கும் போது இப்படிக்கூட எழுதலாம் போலிருக்கு. என்று பலவிதங்களில் யோசிப்பேன். மிக்க நன்றி என் ரஸிகையே. பெருமைப் பட்டுக்கொள்ளலாம். அன்புடன்

      மறுமொழி
  • 3. ranjani135  |  2:19 பிப இல் திசெம்பர் 15, 2014

    மலைகளிலும், பாறைகளிலும் என்ன மாதிரியான டிசைன்கள்! ஒவ்வொன்றும் இயற்கை செதுக்கிய கவிதை மாதிரி இருக்கிறது. எல்லாவற்றையும் விட எனக்கு ரொம்பவும் பிடித்தது, உங்கள் மனதின் எண்ண ஓட்டங்கள் தான். எங்கு போனாலும் நம்மூரையும், நமது கோவில்களையும், நமது பழக்க வழக்கங்களையும் நீங்கள் நினைத்துக் கொள்வது ரசிக்க வைத்தது.
    பிள்ளைகள் நம்மை வாத்சல்யத்துடன் அழைத்துப் போவது மனத்திற்கு இதமான ஒன்று.

    மறுமொழி
    • 4. chollukireen  |  9:05 முப இல் திசெம்பர் 18, 2014

      ஆமாம் இப்பொழுதுகூட ரஞ்ஜனியைப் பற்றி யோசித்தபடியே பதில் கொடுக்கிறேன். நன்றாக இயற்கையழகை படத்தில் பார்த்து இருக்கிராய். ஆல்ப்ஸ்,ஹிமாலயாவெல்லாம் பார்த்தபொழுது
      எழுதக் குறிப்பு மனதில் பதிய வைத்துக் கொள்ளவில்லை.. படங்களும் வைத்துக் கொள்ளவில்லை.. திரும்பவும் ஒரு நடை போனால்
      பார்க்கலாம். மனம் அசைபோடுகிறது.. அவ்வளவுதான்.
      நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவள்தானே. அதனால் அந்த ஞாபகங்கள் மனதைவிட்டு அகலாது.அன்பு ஒன்றுதான்
      இப்பொழுதைய தேவை. உங்கள் அன்பிற்கும்,ரஸிகத்தன்மைக்கும் மிகவும் நன்றி. அன்புடன்

      மறுமொழி
  • 5. பிரபுவின்  |  4:55 முப இல் திசெம்பர் 17, 2014

    அழகான ஒளிப்படங்கள்.விபரித்த விதம் அருமை.
    நன்றி அம்மா.

    மறுமொழி
  • 6. chollukireen  |  9:07 முப இல் திசெம்பர் 18, 2014

    பரவாயில்லையே. விவரித்த விதம் பாராட்டியுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி. நன்றி அன்புடன்

    மறுமொழி
  • 7. adhi venkat  |  6:41 முப இல் திசெம்பர் 19, 2014

    இயற்கையின் கொள்ளை அழகும், உங்களது பிரயாண அனுபவங்களும் என எல்லாமே ஜோர் அம்மா.

    மறுமொழி
  • 8. marubadiyumpookkumm  |  8:27 முப இல் திசெம்பர் 19, 2014

    dear amma visit:www.thanigaihaiku.blogspot.com and http://www.dawnpages.wordpress.com also. thanks vanakkam.

    மறுமொழி
    • 9. chollukireen  |  4:22 முப இல் திசெம்பர் 20, 2014

      வந்து பார்க்கிறேன். நன்றி அன்புடன்

      மறுமொழி
  • 10. chollukireen  |  10:06 முப இல் திசெம்பர் 19, 2014

    ஆமாம் நீ சொல்லியமாதிரி மனதில் பதிந்த அநுபவங்களுக்குச் சான்றாக படம் உதவி செய்கின்றது.. அன்புடன்

    மறுமொழி
  • 11. chitrasundar  |  4:01 முப இல் திசெம்பர் 24, 2014

    காமாக்ஷிமா,

    இவ்வளவு பரந்து, விரிந்த பகுதிகளில் வீடுகளோ, ஆள் அரவமோ இல்லாமல் உள்ளதே !

    பல நாடுகளின் இயற்கையழகுப் படங்களை அடிக்கடி பார்க்கலாம். ஆனால் ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளைப் பற்றி அறிவது அரிதானது. அதையும் கண்களுக்கு விருந்தாக்கி, உங்களின் நடையால் நீங்களே உடன் வந்து சுற்றிக் காட்டுவதுபோல் உள்ளது அம்மா. அன்புடன் சித்ரா.

    மறுமொழி
  • 12. chollukireen  |  1:06 பிப இல் திசெம்பர் 26, 2014

    ஆமாம். நீர் ஓடும்,வாய்க்கால்களோ,அருவியோ எதுவும் பார்க்கவில்லை. வரண்ட பிரதேசம். மலைகளின் அணிவகுப்பு ஒன்றுதான். உன் பதில் அழகாக இருக்கிரது.
    மனதிற்கிதமான பின்னூட்டம். னன்றி. அன்புடன்

    மறுமொழி

adhi venkat -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


திசெம்பர் 2014
தி செ பு விய வெ ஞா
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 293 other subscribers

வருகையாளர்கள்

  • 551,243 hits

காப்பகம்

பிரிவுகள்


சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

Chitrasundar's Blog

நாங்களும் சமைப்போமில்ல!!!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com News

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.