Archive for ஒக்ரோபர் 20, 2020
தொட்டில்-5
இந்த ஐந்தாவது பகுதி வேறு விதமாக முடிகிறது. சில விஷயங்கள் முன்னேற்பாடாக செய்ததும் ஸரியாகவேப் படுகிறது. இன்னும் பதிவுகள் இருக்கிறதே! னான் என்ன சொல்லுகிறேன்? என் பதிவு பார்த்தவர்கள் பதில் எனக்கு ஸந்தோஷத்தைக் கொடுக்கிறது என்பதைத்தான்.அன்புடன்
ஸந்தோஷமாகவே வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது. ஈரல் குலைக்கட்டி. இப்போது இம்மாதிரி பெயரே கேள்விப்படவில்லை. ஒன்று இரண்டு குழந்தைகளில்லை. எங்கு பார்த்தாலும் இதே வியாதி. சோகமே சோகம் பேரன் போய்விட்டான். பட்ட காலிலே படும் என்பர். வாஸ்தவமாக ஏழை பணக்காரன் யாவரையும் எந்த நோயும் விட்டு வைக்கவில்லை. நல்ல ஆரோக்கியத்துடன் கூடிய அழகான, ஆதரவான பெரியவர் மாப்பிள்ளையும் ஃப்ளூவின் கைப்பிடியில் மீளவில்லை. என்ன இப்படி சோகமாகவே எழுதுகிறீர்கள் என்று நினைப்பது புரிகிறது. எங்கள் அப்பாவின் குடும்பத்திலும் எங்கள் பெரியம்மா வேறு ஊரிலும்,எங்கள் சித்தப்பா எங்கள் ஊரிலும் ஒரு வாரத்தில் போய்விட்டார்கள். ஊரில் இதற்கு குடும்பத்தில் ஒருவராவது இரையானார்கள். ஊர் எப்படி இருந்திருக்கும். வைத்தியமே கண்டு பிடிக்காத ஃப்ளூவின் காலம்.எப்போதோ நடந்த விஷயங்கள் ஆனாலும் படிக்கும்போது மனது நெகிழ்கிறது
யாருக்கு யார் ஆறுதல் சொல்வது. இதைப் படிப்பவர்கள்கூட ஸாதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். இதுவும் ஒரு சுனாமி மாதிரிதான். காலம் போகப்போக எல்லாவற்றிற்கும் மாற்று தேடிக்கொண்டும், விடிவுகள் அமைந்து கொண்டும் வாழ்க்கை ஓடிக் கொண்டும்தானிருக்கிறது. எதிர்பார்க்க முடியாத கஷ்டங்கள் வந்த பின் ஏற்றுக்கொண்டு ஓரளவு மாற்று கண்டுகொண்டிருப்பதுதான் வாழ்க்கை.
பெரியவருக்கு வயதாகிக்கொண்டு வருகிறது. பால்ய விதவைபெண். ஓரிரண்டு வயது பெரியவளாக இருக்கக் கூடிய மனைவி. யாருக்காக விசாரப்படுவது. பெண்ணைக் கண்ணின் இமைபோலக் காத்தும்.அன்பு காட்டியும் வருகிறார். தனக்குப்பின் இவர்களுக்கு ஆதரவு யார் கொடுப்பார்கள்? அதுவும் தன் பெண்ணிற்கு. தன்னைப்போல யார் அன்பு கொடுக்க முடியும். மனைவிக்காகிலும் …
View original post 410 more words