Archive for நவம்பர், 2020
கார்த்திகை தீபம்
நாளை 29 நவம்பர் ஞாயிற்றுக் கிழமை அண்ணாமலையார் தீபத்தைக் கொண்டாடிமகிழும் யாவருக்கும் என்னுடைய அன்பு வாழ்த்துகள். உலகத்தினர் யாவருக்கும் நல் வாழ்வைத்தர உளமுருக வேண்டுவோம்

தொட்டில்—10
மூன்று குடும்பங்களின் போக்கைப் பின்னிக் கொடுத்ததொட்டிலின் ஸம்பவஙகள் நீண்டுமுடிந்தது. சோகங்கள் அதிகம். பிராப்தம் இப்படியும் இருந்தது
காலங்கள் வேகமாக இல்லாவிட்டாலும் அதன் போக்கில் சுழன்றுகொண்டுதானிருந்தது.
வயதாகிவிட்டது. யாருக்காக இன்னும் ஸொத்து சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் ஏற்படுவதில்லை. நான் என்ன எனக்காகவா சேர்க்கிறேன் உங்கள் எல்லோருக்கும்தானே என்ற சொல்தான் யாவரின் தாரக மந்திரமாகவும் இருந்தது.
மெள்ள மெள்ள நம் பையனில் ஒருவனை ஸ்வீகாரம் கொடுக்க நான் முடிவு பண்ணி விட்டேன். இதில் யாரும் ஆக்ஷேபணை சொல்ல நான் அனுமதிக்க மாட்டேன்.என்ற பாணியில் போர்க்கொடி உயரலாயிற்று.
நான் ஸம்மதிக்கவே மாட்டேன். நான் பெற்ற பிள்ளைகள் எனக்குதான். அவர்கள் முன்னுக்கு வந்திருக்கிரார்கள். இருப்பது போதும்.நான் ஸம்மதிக்கமாட்டேன். பதில் பேசியாயிற்று.
போ. இந்த வீட்டை விட்டு. எங்கு வேண்டுமானாலும்போ. என் பேச்சு கேளாது பதில் சொல்ல உனக்கு என்ன தைரியம். பேச்சு வலுத்து, அடி அமக்களத்துடன் வெளியே மனைவியைத் தள்ளும்படியான நிலைக்கு உச்ச கட்டங்கள் நடைபெற ஆரம்பித்து விட்டது.
வீட்டைவிட்டுப் போகும் வயதா? ஆக்கினைகளுக்குக் கட்டுப்பட்டே காலம் கடத்தியவள். ஊர் சிரிக்கும். நாலுபேர் இரண்டு பேருக்கும் நீ சொல்வதுதான்ஸரி என்பார்கள். மூன்று தலைமுறைகளை சபித்துக் கொண்டு ஒரு புருஷன். அழலாம் மனதோடு மருகலாம்.
அம்மா படும்பாட்டைப்பார்த்து பிள்ளை எங்காவது சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டால். அவனுக்கும் இஷ்டமில்லை. இரண்டாம் கெட்டான் வயது.
பிள்ளையை என்ன காக்காயா தூக்கிக் கொண்டு போய்விடும்? அவன் என்ன அவர்கள் வீட்டிற்கா போகப் போகிரான்? வாயடைப்பு.நிர்பந்தம். மௌனம்.
இன்னும் எட்டு நாட்கள் இருக்கு. நாள் பார்த்தாகி விட்டது. ஸ்வீகாரம்,பூணூல் இரண்டும்…
View original post 620 more words
தொட்டில்—9
இந்தத் தொட்டில் எவ்வெப்படி எந்தெந்த விதத்தில் போய்க்கொண்டு ஆடத்துவங்கியது? பாருங்கள் அன்புடன்
வேலைக்குப் போக ஆரம்பிக்கு முன்னர் வீட்டில் இந்த சண்டை சச்சரவுகள் எல்லாம் பூணூலை முன்னிறுத்தியே ஆரம்பமாகியுள்ளது. உண்மையில் பூணூலில் ஒருவருக்கும் அக்கறை இல்லை. சொத்து. நம் ஏழ்மை.
இனி இவர்கள் இதைப்பற்றி பேச விடாமல் நாம் அதிரடியாக ஏதாவது செய்ய வேண்டும். மஹா பெரியவாள் பிறந்த ஊர் அருகிலுள்ளது. அங்கும் ஒரு பெரியவர் ஏழைப் பையன்களுக்குப் பூணூல் போட்டு வைக்கிரார். அவ்விடம் போய் நாம் குடும்ப நிலவரத்தைச் சொல்லிக் கேட்போம்.
யாருமே வேண்டாம். அவர்களாகவே போட்டு விடட்டும். பிறகு இந்தப் பேச்சே வராது. முடிவெடுத்து விட்டனர்.
நிலம் நீச்சு மேற்பார்வை பார்க்க ஏதோ வேலையும் கிடைத்தது. வீட்டில் இரண்டு சமையலும். பெரிம்மாவை திட்டுதலுமாக எப்போதும் சச்சரவு நீடித்தது.
தியாகு ஒருநாள் பூணூல் போட்டு வைக்கும் பெரியவரைப் பார்த்து பேசிவிட்டு வந்தான். பெற்றவர்கள் வராமல் செய்வதற்கு மறுப்பு தெரிவித்தாலும் வயதையும் வீட்டு சூழ்நிலையையும் உத்தேசித்து நல்ல நாள் ஒன்று குறிப்பிட்டு சொல்லி விட்டார்.
விடியற்காலமே நிலத்தில் சில ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டுப் போன இரண்டு பிள்ளைகளும் புது வேஷ்டியும், பூணலும், மாலையும் கழுத்துமாக வீட்டிற்கு வந்து சாயங்காலம் அம்மாவிற்கு நமஸ்காரம் செய்கிரார்கள். என்னடா இது தாய் விக்கித்துப் போய் ஒரு கணம் அப்படியே நிற்கிறாள். அடக்க முடியவில்லை அழுகையை. என்ன அம்மாடா நான். இன்னும் என்ன வெல்லாம் ஆகப்போகிறதோ?
அந்த மனுஷன் கத்துவாரே. நன்னா இருங்கடா. காலம் விடியணும். கதறல்தான்.
View original post 364 more words
தீபாவளி வாழ்த்துகள்
கொரோனா அசுரன் நரகாசுரன் மாதிரி அடியோடு ஒழிய வேண்டும் என்று வேண்டி,சொல்லுகிறேன்,மற்றும் ஸக பதிவர்களின் குடும்பத்தினர்கள் மற்றும் அபிமானிகள் யாவருக்கும், நாளை 14–11-2020 அன்று கொண்டாடும் இனிய தீபாவளித் திருநாளின் இனிய வாழ்த்துகளை மனமுவந்து இன்றே சொல்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். உடன் குழந்தைகளின் தினத்திற்கும் எல்லாக் குழந்தைகளுக்கும் வாழ்த்துகள்.

அன்போடும் , ஆசிகளுடனும் உங்கள் சொல்லுகிறேன் காமாட்சி
நேபாளத்தில் தீபாவளி
எட்டு வருஷங்களுக்கு முன்னர் எழுதிய பதிவு இது. தீபாவளி ஸமயத்தில் ஞாபகம் வந்தது . ஸேல் ரொட்டியின் தீபாவளி இது. அன்புடன்
குளிர் ஆரம்பித்து விட்டாலும் கூட தீபாவளியை ஐந்து நாட்கள்
பலவித பெயர்களைச் சொல்லிக் கொண்டாடுவார்கள்.நேபாளத்தில்
கடவுள் பக்தி அதிகம். முன்பு அரசாட்சியாக இருந்த போது, நவராத்திரி
தொடங்கி, தீபாவளி முடிந்து நான்கந்து நாட்கள் வரை அதாவது ஒரு
மாதத்திற்கதிகமாக ஸ்கூலிற்கு விடுமுறை விட்டுவிடுவார்கள்.
எல்லா பண்டிகைகளின் போதும் டீக்கா வாங்குவது, அதாவது பெறியவர்களிடம்
ஆசி வாங்கி அவர்கள் கொடுக்கும் ரக்ஷையை நெற்றியிலிட்டுக் கொள்வது
அவர்களாகவே நெற்றியிலிட்டு ஆசீர்வதிப்பது முக்கியமான நிகழ்ச்சியாகும்.
டீக்கா என்பது சிறிது தயிரில் அரிசியை ஊறவைத்து அதனுடன் செந்தூர்க்
குங்குமம் சேர்த்து கெட்டியாகக் கலந்த கலவை. நெற்றியிலிட்டால் நன்றாக
ஒட்டிக்கொண்டு பளிச்சென்று பார்வையாக இருக்கும்.
ஒரு ரூபாயளவிற்கு இதை நெற்றியிலிட்டு வயதில்ப் பெறியவர்கள்
சிறியவர்களுக்கு ஆசி வழங்குவார்கள். தசராவில் இந்த ஆசியை
வாங்க எங்கிருந்தாலும் வீட்டுப் பெறியவர்களிடம் வந்து சேர்ந்து
விடுவார்கள். திஹார் என்றால் நேபாலியில் பண்டிகை என்று அர்த்தம்.
தீபாவளியை ஐப்பசி அமாவாஸையன்று கொண்டாடுகிறார்கள்.
அன்று தீவாலி லக்ஷிம்பூஜாஎன்பார்கள், அன்றே காய் பூஜாஅதாவது
பசுமாட்டிற்கு பூஜையும் செய்வார்கள்.
அமாவாஸைக்கு முதன் வரும் மூன்று நாட்களில் முதல் நாள்
கௌவா பூஜா. காக்கையை கவுரவித்து அன்னமிட்டு பூஜை.
சுற்றுப்புற சூழலுக்கு நன்மை செய்வதைப் போற்றி நடக்கிறது.
மறுநாள் குகுர் அதாவது வீட்டைக் கார்க்கும்,நன்றியுள்ள நாயைக்
கவுரவித்து, பைரவர் எனப்போற்றி நாய்க்கு மாலை அணிவித்து,
திலகமிட்டு, நல்ல சாப்பாடு போட்டு அதைக் கவுரவிக்கிறார்கள்.
லக்ஷ்மி பூஜை பெறிய அளவில் …
View original post 295 more words
ஸேல் ரொட்டி
இந்த பக்ஷணம் நேபாலில் செய்யப் படுவது. தீபாவளி நேபாலத்தில் என்று எட்டு வருஷங்களுககு முன்பான என் பதிவினை மீள் பதிவு செய்யும் முன்னர், அந்த சிற்றுண்டியைப் பற்றி ஒரு குறிப்பு எழுத வேண்டும் என்று தோன்றியது.
நம்முடைய அப்பம் போன்ற ஒரு ருசியுடைய வேறு உருவத்தில் இந்த தின் பண்டம். இது அவர்களுக்கு மிகவும் முக்கியமானது. எவ்வளவு செய்வார்கள் தெரியுமா? நிறைய செய்து யாவருக்கும் கொடுப்பார்கள். லக்ஷ்மி பூஜைக்கு மிகவும் அவசியமாக இது வேண்டும். மாவைக் கையில் எடுத்தே இந்த வட்டத்தைச் சுற்றி விடுவார்கள்.
காலி பால்கவரில் ஒரு துளை போட்டும் ஜிலேபி சுற்றுவது போல மாவை அதில் நிரப்பியும் செய்யலாம். பார்க்கலாம்.

வேண்டியவைகள்.1-
ஒரு டம்ளர் -பச்சரிசியை நன்றாக ஊறவைத்து வடிக்கட்டி கரகர பதத்தில் மாவாக பொடித்துக் கொள்ளவும் அடுத்து நான்கில் ஒரு பாகமாக கால் டம்ளர் சர்க்கரை எடுத்துக் கொள்ளவும்.ஒரு
டேபிள்ஸ்பூன் நெய்,ஒருசிட்டிகை ஏலப்பொடி ,ஒரு சிட்டிகை சமையல் ஸோடாஉப்பு ,துளி உப்பு சேர்த்து, அகன்ற பாத்திரத்தில் யாவையும் ஒன்றாகக் கலந்து, பாலை விட்டு நன்றாகப் பிசையவும் . ஒரு மணி நேரம் ஊறவிடவும் பிறகு இட்லி மாவு பதத்திற்கு அதை கறைத்துக் கொண்டு தயாரிக்க வேண்டியதுதான்.
வாயகன்ற வாணலியில் எண்ணெயைக் காயவைத்து டோனட் வடிவததில் மாவை எண்ணெயில் வேக வைத்து ,திருப்பிவிட்டு சிவப்பாக எடுபபார்கள். சும்மா ஓரளவு புரிந்தால் ஸரி . யாரும் செய்யப் போவதில்லை. நம்முடைய இனிப்புக்களை விடவா? இதைப் படித்து விட்டு என் மீள் பதிவையும் பாருங்கள்
.எல்லோருக்கும் வாழ்த்துகள். தீபாவளியன்று வாழ்த்த வருகிறேன். அன்புடன்.
தொட்டில்—8
ஸ்வீகார விஷயத்திற்காக எந்தெந்த குடும்பங்களில் விஷயங்கள் எவ்வெப்படி பயணிக்கிறது பாருங்கள். தொட்டில்கள் ஆடுகிறது. ஆனால் எதிர்பாராத விதத்தில்.
மும்முனைத் தொட்டிலாக ஆட ஒன்று வருகிறது. பாருங்கள்.
இவ்வளவு நாழி ஆயிற்று இன்னும் தியாகுவைக் காணோமே! என்ன பையன் இவன். வாசல்லேயும் கரிகாக் காரியைக் காணோம்.
வருவான் வருவான். எங்கு ஓடிப்போய் விடுகிறான் ? உங்களுக்கு விசாரமில்லே. கம்பத்து வீட்டிலிருந்து வயணமா சாப்பாடு வந்து விடுகிறது. எனக்கு சமைத்தால்தானே உண்டு. கோவில் கெணத்துக்குப் போய் ஜலம் கொண்டு வரணும். கணவன் மனைவி வாக்குவாதம்.
தோட்டத்து கிணத்து ஜலம் கொண்டு ரொப்பியாகி விட்டது. ஒரு குடம் தானே நல்ல ஜலம். அதையும் நானே கொண்டு கொடுத்து விட்டுப் போகட்டுமா?
சோம்பேறி மனைவியின் மீது கரிசனம். என்ன செய்றது. அவளுக்குத் தெரிந்தது அவ்வளவுதான். அவர் நிலச்சுவான்தார் நிலங்களை மேற்பார்வை செய்பவர்.கம்பத்தத்திலிருந்து நேராக சாப்பாடு வயல்வெளி பம்ப் கொட்டாய்க்கேவந்து விடும்.
வேண்டாம்,வேண்டாம் இதுவும் புருஷன்தான் செய்யறான் என்று மத்தவா வம்பளக்கவா, அவனே வந்து விட்டான்.
தியாகு யார் ராஜியுடைய தங்கை பையன். பதினைந்து வயதாவது இருக்கலாம். ஊரில் எட்டு வகுப்பு வரைதான் பள்ளிக்கூடம். அதுவும் கட்டணமில்லாத பள்ளி. அப்பா ஏதோ கடையில் கணக்கு வழக்கு எழுதுவார். எட்டோ,பத்தோ ரூபாய் சம்பளம். மலிந்தகாலத்தில் கஷ்ட ஜீவனம் செய்ய போதுமானது. குடும்பக் கட்டுப்பாடு என்றதெல்லாம் யாருக்குமே தெரியாத வார்த்தைகள். மரம் வைத்தவன் தண்ணீர் வார்க்கிறான். இந்த வார்த்தைகள்தான் பிராபல்யம்.
ஆனால் தியாகுவோடு ஐந்து,ஆறுபேர்கள் அப்பா,அம்மா என்ற எட்டுபேர் கொண்ட குடும்பத்தில் எட்டும்,பத்தும் எந்த மூலை. வரட்டு கவுரவம். பெண்டாட்டி வெளியில்…
View original post 440 more words
தொட்டில்–7
தொட்டில் ஏழு பாட்டியின் குணமும், அதன் மணமுமாக இருக்கும். ஆழ்ந்து பார்ப்போமாகில் எவ்வளவோ விஷயங்கள் மனதில்த் தோன்றும். முதியோர் இல்லங்கள் இல்லாதக் காலமது. வாங்கோ! பின்னூட்டத்தில்ப் பேசலாம். அன்புடன்
ஒரு குடும்பம் வறுமை. ஸரியானபடி நிரந்தர வேலை இல்லை. பாட்டி மாப்பிள்ளை தாசில்தார். இவர் நல்லபடி வேலை செய்து குடும்பம் நடத்தவில்லை என்று தம்பியைக் கோபிப்பார். ஒத்தாசைகள் எவ்வளவு செய்தாலும், யாரும் கோபிப்பதை ஏற்றுக் கொள்வது கஷ்டம். உறவு முறைகள் ஸரியானபடி இல்லை. இந்த வேளையில் தம்பி பிள்ளையை எங்கள் ஊரில் படிக்க அழைத்து வந்திருந்தார்.
இதனால்மனத்தாங்கல்கள்வரும்.ஸம்ஸாரி.தாய்மார்களுக்குத்தான் கஷ்டம் புரியும். ஆண்களுக்கு சற்று வீராப்புதான் ஏற்படும். சம்பாதிக்கும் கர்வம் நம்மைச் சொல்கிரார்கள் என்ற எண்ணம் மேலோங்கும். அப்படியும், இப்படியுமாக காலம் தன்போக்கில்ச் சென்று கொண்டிருந்தது.
பாட்டி ஒவ்வொரு முறை பெண்ணிற்குச் சாப்பாடு போடும் போதும் , அம்மா அந்தக் கோடியில் ஊறுகாய் போட்டிருக்கிறேன், பொரித்த அப்பளாம் சின்னத் தட்டில் பக்கத்தில் வைத்திருக்கிறேன். நெய்யும் குத்தியாச்சு சாதம் திட்டமாகப் போட்டிருக்கேன். கலந்து கொள். பிடிச்சா இன்னு கொஞ்ஜம் சாதம் போட்டு குழம்பு விடறேன்.
அம்மா நீ சாப்டியா? நான் என்னை கவனிச்சுப்பேன். உனக்கு ஒண்ணும் என்னால் செய்ய முடியலேன்னு கஷ்டமா இருக்கு. நான் என்ன பாவம் பண்ணியிருப்பேன்?
நீ ஒண்ணும் பண்ணலே. உன்னை இப்படி பார்க்கும் நான்தான் என்ன பண்ணினேனோ?சாப்பிடம்மா. இப்போ இன்ன மாதிரி பேசறதே தப்பு. பார்.இன்னும் கொஞ்ஜம் குழம்பு விடட்டா?
போரும்மா. அம்ருதமா இருக்கு உன் சாப்பாடு.கண்ணில் ஜலம் வந்துடறது. கொஞ்சம் காரம். அதான் கண்ணுலே தண்ணி.ஒருவருக்கொருவர் ஸமாளிப்பு.
நான் இருக்கேன் பரவாயில்லை.எனக்கப்புறம் இவள் தட்டை கவனித்து யார்சாப்பாடு போடப்போறா? மாப்பிள்ளைக்கும் ஒண்ணு…
View original post 508 more words