Archive for நவம்பர் 10, 2020
தொட்டில்—8
ஸ்வீகார விஷயத்திற்காக எந்தெந்த குடும்பங்களில் விஷயங்கள் எவ்வெப்படி பயணிக்கிறது பாருங்கள். தொட்டில்கள் ஆடுகிறது. ஆனால் எதிர்பாராத விதத்தில்.
மும்முனைத் தொட்டிலாக ஆட ஒன்று வருகிறது. பாருங்கள்.
இவ்வளவு நாழி ஆயிற்று இன்னும் தியாகுவைக் காணோமே! என்ன பையன் இவன். வாசல்லேயும் கரிகாக் காரியைக் காணோம்.
வருவான் வருவான். எங்கு ஓடிப்போய் விடுகிறான் ? உங்களுக்கு விசாரமில்லே. கம்பத்து வீட்டிலிருந்து வயணமா சாப்பாடு வந்து விடுகிறது. எனக்கு சமைத்தால்தானே உண்டு. கோவில் கெணத்துக்குப் போய் ஜலம் கொண்டு வரணும். கணவன் மனைவி வாக்குவாதம்.
தோட்டத்து கிணத்து ஜலம் கொண்டு ரொப்பியாகி விட்டது. ஒரு குடம் தானே நல்ல ஜலம். அதையும் நானே கொண்டு கொடுத்து விட்டுப் போகட்டுமா?
சோம்பேறி மனைவியின் மீது கரிசனம். என்ன செய்றது. அவளுக்குத் தெரிந்தது அவ்வளவுதான். அவர் நிலச்சுவான்தார் நிலங்களை மேற்பார்வை செய்பவர்.கம்பத்தத்திலிருந்து நேராக சாப்பாடு வயல்வெளி பம்ப் கொட்டாய்க்கேவந்து விடும்.
வேண்டாம்,வேண்டாம் இதுவும் புருஷன்தான் செய்யறான் என்று மத்தவா வம்பளக்கவா, அவனே வந்து விட்டான்.
தியாகு யார் ராஜியுடைய தங்கை பையன். பதினைந்து வயதாவது இருக்கலாம். ஊரில் எட்டு வகுப்பு வரைதான் பள்ளிக்கூடம். அதுவும் கட்டணமில்லாத பள்ளி. அப்பா ஏதோ கடையில் கணக்கு வழக்கு எழுதுவார். எட்டோ,பத்தோ ரூபாய் சம்பளம். மலிந்தகாலத்தில் கஷ்ட ஜீவனம் செய்ய போதுமானது. குடும்பக் கட்டுப்பாடு என்றதெல்லாம் யாருக்குமே தெரியாத வார்த்தைகள். மரம் வைத்தவன் தண்ணீர் வார்க்கிறான். இந்த வார்த்தைகள்தான் பிராபல்யம்.
ஆனால் தியாகுவோடு ஐந்து,ஆறுபேர்கள் அப்பா,அம்மா என்ற எட்டுபேர் கொண்ட குடும்பத்தில் எட்டும்,பத்தும் எந்த மூலை. வரட்டு கவுரவம். பெண்டாட்டி வெளியில்…
View original post 440 more words