Archive for நவம்பர் 3, 2020
தொட்டில்–7
தொட்டில் ஏழு பாட்டியின் குணமும், அதன் மணமுமாக இருக்கும். ஆழ்ந்து பார்ப்போமாகில் எவ்வளவோ விஷயங்கள் மனதில்த் தோன்றும். முதியோர் இல்லங்கள் இல்லாதக் காலமது. வாங்கோ! பின்னூட்டத்தில்ப் பேசலாம். அன்புடன்
ஒரு குடும்பம் வறுமை. ஸரியானபடி நிரந்தர வேலை இல்லை. பாட்டி மாப்பிள்ளை தாசில்தார். இவர் நல்லபடி வேலை செய்து குடும்பம் நடத்தவில்லை என்று தம்பியைக் கோபிப்பார். ஒத்தாசைகள் எவ்வளவு செய்தாலும், யாரும் கோபிப்பதை ஏற்றுக் கொள்வது கஷ்டம். உறவு முறைகள் ஸரியானபடி இல்லை. இந்த வேளையில் தம்பி பிள்ளையை எங்கள் ஊரில் படிக்க அழைத்து வந்திருந்தார்.
இதனால்மனத்தாங்கல்கள்வரும்.ஸம்ஸாரி.தாய்மார்களுக்குத்தான் கஷ்டம் புரியும். ஆண்களுக்கு சற்று வீராப்புதான் ஏற்படும். சம்பாதிக்கும் கர்வம் நம்மைச் சொல்கிரார்கள் என்ற எண்ணம் மேலோங்கும். அப்படியும், இப்படியுமாக காலம் தன்போக்கில்ச் சென்று கொண்டிருந்தது.
பாட்டி ஒவ்வொரு முறை பெண்ணிற்குச் சாப்பாடு போடும் போதும் , அம்மா அந்தக் கோடியில் ஊறுகாய் போட்டிருக்கிறேன், பொரித்த அப்பளாம் சின்னத் தட்டில் பக்கத்தில் வைத்திருக்கிறேன். நெய்யும் குத்தியாச்சு சாதம் திட்டமாகப் போட்டிருக்கேன். கலந்து கொள். பிடிச்சா இன்னு கொஞ்ஜம் சாதம் போட்டு குழம்பு விடறேன்.
அம்மா நீ சாப்டியா? நான் என்னை கவனிச்சுப்பேன். உனக்கு ஒண்ணும் என்னால் செய்ய முடியலேன்னு கஷ்டமா இருக்கு. நான் என்ன பாவம் பண்ணியிருப்பேன்?
நீ ஒண்ணும் பண்ணலே. உன்னை இப்படி பார்க்கும் நான்தான் என்ன பண்ணினேனோ?சாப்பிடம்மா. இப்போ இன்ன மாதிரி பேசறதே தப்பு. பார்.இன்னும் கொஞ்ஜம் குழம்பு விடட்டா?
போரும்மா. அம்ருதமா இருக்கு உன் சாப்பாடு.கண்ணில் ஜலம் வந்துடறது. கொஞ்சம் காரம். அதான் கண்ணுலே தண்ணி.ஒருவருக்கொருவர் ஸமாளிப்பு.
நான் இருக்கேன் பரவாயில்லை.எனக்கப்புறம் இவள் தட்டை கவனித்து யார்சாப்பாடு போடப்போறா? மாப்பிள்ளைக்கும் ஒண்ணு…
View original post 508 more words